Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

print
சுமார் நூறு நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீரங்கம் பெரிய கோவிலுக்கு அரங்கனின் பக்தர் ஒருவர் யானையையும் பசுவையும் தானமாக வழங்கினார். கோவிலுக்கு கஜம், கோ இரண்டும் ஒரே நேரத்தில் கிடைத்ததையடுத்து ஊர் மக்களும், ஆலய ஊழியர்களும் பெருமகிழ்ச்சி அடைந்தனர்.

Srirangam Temple Elephantஇந்நிலையில் யானைக்கு அலங்காரம் செய்வித்து முறைப்படி கோவிலில் ஒப்படைக்க ஏற்பாடுகள் நடந்தது. அனைத்தும் முடிந்த நிலையில், யானைக்கு வடகலை திருமண் சாற்றுவதா (நாமம்) அல்லது தென்கலை திருமண் சாற்றுவதா என்று குழப்பம் எழுந்தது. அவரவர் தங்களின் பிரிவு திருமண்ணே சாற்ற வேண்டும் என்று குரல் எழுப்ப அது இருபிரிவினருக்கு இடையே பூசலாக வெடித்தது.

யானைக்கு தங்கள் சம்பிரதாயப்படியே திருமண் அணிவிக்கவேண்டும் என்று இரு தரப்பினரும் விடாப்பிடியாக இருக்க, வழக்கு மாவட்ட முன்சீப் கோர்ட்டுக்கு சென்றது. பல முறை வழக்கு விசாரிக்கப்பட்டும் தீர்வு எட்டப்படவில்லை. பின்னர் அங்கேயிருந்து சென்னை உயர்நீதிமன்றத்துக்கு வந்தது. அப்போது தென்னிந்தியா முழுக்க மதராஸ் ராஜதானி என்றே அழைக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்திலும் தீர்வு எட்டப்படவில்லை. பின்னர் வழக்கு அப்போது நாட்டின் தலைநகராக இருந்த கொல்கத்தாவுக்கு சென்றது. பின்னர் அங்கேயிருந்து இங்கிலாந்து நாட்டு உச்சமன்றத்துக்கு சென்றது. இப்படியே அலைகழிக்கப்பட்ட வழக்கில் பல ஆண்டுகள் கழித்து இறுதியில் தீர்ப்பு வந்தது. ஆனால்…. யானை தான் உயிரோடு இல்லை!!!

ஆம்… தீர்ப்பு வந்த போது அந்த யானை பரமபதம் அடைந்து பல ஆண்டுகள் ஆகியிருந்தன.

நமது நீதிமன்றங்களின் நடைமுறை குறித்து இன்றும் வேடிக்கையாக இது கூறப்படுவதுண்டு.

* இது ஒரு செவிவழிக் கதை என்றும் கூறப்படுகிறது. சம்பவம் உண்மையா இல்லையா என்பதைவிட இந்த கதை கூறும் நீதியே முக்கியம்.

==========================================================

Please check… 

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

==========================================================

ழக்கு கோர்ட் கேஸ் என்கிற சுழலுக்குள் ஒருவர் சிக்கக் கூடாது. அப்படியே சிக்கிக்கொண்டாலும் அதிலிருந்து வெளியே எத்தனை சீக்கிரம் வரமுடியுமோ அத்தனை சீக்கிரம் வந்துவிடவேண்டும்.

ஆனால் நம் விருப்பம் போல நடக்கும் விஷயமா அது?

நியாயம் ஒருவர் பக்கம் இருந்தாலும் அது உடனே கிடைத்துவிடுவதில்லை. பெரும்பாலான தீர்ப்புக்கள் மேற்படி யானைக்கு திருமண் சாத்துவது தொடர்பாக வந்த தீர்ப்பை போல, காலம் கடந்து வருகிறது.

“தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்பட்ட நீதி” என்று சொல்வதுண்டு.

நியாயவான் தட்டுத் தடுமாறி எப்படியோ நம் நீதிமன்றத்தில் கடைசியாக ஜெயிக்கிறான். ஆனால், அதற்குள் அதர்மி நன்றாக வாழ்ந்துவிட்டு போய்விடுகிறான்.

நியாயம் தங்கள் பக்கம் இருந்தும் – சொத்து வழக்குகள், குற்றவியல் வழக்குகள், விவாகரத்து வழக்குகள், வரதட்சனை மற்றும் ஜீவனாம்ச வழக்குகள், உத்தியோகம் தொடர்பான வழக்குகள் மற்றும் இதர பல்வேறு வழக்குகளில் சிக்கி, நம் நாட்டிற்கே உரித்த நீதிமன்ற நடைமுறைகள் காரணமாக அலைகழிக்கப்பட்டு நிம்மதியின்றி தவிப்போர் பலர் பலர் உண்டு. நமக்கு தெரிந்தே நிறைய பேர் அப்படி இருக்கிறார்கள்.

வழக்குகளில் சிக்கி வறுபடுபவர்கள் அதிலிருந்து விடுபட கடைசியில் தஞ்சமடைவது இறைவனைத்தான். அத்தகையோர் அனைவருக்கும் வரப்பிரசாதமாய் இருப்பவர் தான் காஞ்சி மருகுவார்குழலி சமேத வழக்கறுத்தீஸ்வரர். இவர் தீர்க்காத வழக்குகளே இல்லை. துதிப்பவன் துதிக்காதவன் என்கிற பேதமெல்லாம் இவர் பார்ப்பதே இல்லை. சரணடைபவனின் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் இவர் ஒரு ஆபத்பாந்தவன்.

அதே சமயம், “திருந்திய வாழ்க்கை மருந்தினும் இனிது” என்னும் வாக்கிற்கு ஏற்ப, தவறுக்கு மனம்திருந்தி சரணடைபவர்களையும் அவரவர் செய்த தவறுகளின் தன்மைக்கேற்ப வழக்கறுத்தீஸ்வரர் மன்னிப்பார் என நம்பலாம். தவறி செய்வது தான் தவறு என்பதை இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும்.

“TO ERR IS HUMAN; TO FORGIVE IS DIVINE” என்று சொல்வார்கள். தவறு செய்வது மனித இயல்பு. எனவே தான் பரிகாரங்கள் என்ற வழக்கமே தோன்றியது. செய்த தவறுக்காக மனம் வருந்தி பிராயச்சித்தம் தேடுபவர்களுக்கே பரிகாரங்கள் பொருந்தும். பரிகாரம் என்ற ஒன்று மட்டும் இல்லையேல் இந்த பூமியே ஒரு நரகமாகிவிடும். பணமும், அந்தஸ்தும், பதவியும் இருக்கிறது என்கிற திமிரில் தப்பு செய்பவர்கள் – கவனிக்க தப்பு செய்பவர்களுக்கு – மன்னிப்பு என்பது இங்கு மட்டுமல்ல எங்கு சென்றாலும் கடினம் தான்.

இந்த ஈஸ்வரனை வலம் வந்து வழிபட்டால் தீராத வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தமிழகம் மட்டும் இன்றி வெளி மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிகளவில் இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்கின்றனர். சோமவார பூஜையின் போது இந்த கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

வழக்குகளில் இருந்து மீண்டு வர அரசியல், சினிமா பிரமுகர்கள் உட்பட பலரும் இங்குள்ள சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்வது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. (சமீபத்தில் பிரபல நடிகர் திரு.டி.ராஜேந்தர் தனது மகன் சிம்பு மீது தொடுக்கப்பட்டுள்ள பல்வேறு வழக்குகளுக்கு நிவாரணம் வேண்டி வழக்கறுத்தீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் செய்தார்!)

அப்படி சரணாகதி அடையும் முக்கிய பிரமுகர்களை, காப்பதும் கைவிடுவதும் அவரவர் பக்கம் உள்ள நியாயத்தை பொறுத்து வழக்கறுத்தீஸ்வரர் பார்த்துக்கொள்வார். நாம் நீதிபதிகளாக மாறவேண்டாமே…!

ஆத்திகர்களோ நாத்திகர்களோ நல்லவர்களோ கெட்டவர்களோ – “எனது பிரச்சனையை நீ தான் தீர்க்கவேண்டும்” – என்று இறைவனிடம் சரணடையும் ஒருவரை கேலி, கிண்டல் செய்வது தவிர்க்கப்படவேண்டிய ஒன்று. சந்தர்ப்ப சூழ்நிலைகள் எப்பேற்பட்ட நாத்திகனையும் ஆத்திகனாக்கும். ஆத்திகனையும் நாத்திகனாக்கும். இதற்கு யாரும் விதிவிலக்கில்லை. அது நம் கையில் இல்லை.

“இறைவனின் மகிமை இப்போதாவது இவர்களுக்கு தெரிந்ததே அதுவரையில் நல்லது” என்று கருதி, சம்பந்தப்பட்டவர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து ஒருக்கால் அவர்கள் தவறு செய்திருந்தால் அதனை மன்னித்து நல்லருள் புரியும்படி இறைவனிடம் பிரார்த்திப்பதே உத்தம குணம். அதைவிட்டுவிட்டு கேலி, கிண்டல் செய்பவர்களை காலம் குறித்துவைத்துகொள்ளும் நினைவிருக்கட்டும்.

மற்றவர்களின் குற்றங்களை பட்டியலிடுவதால் நாம் ஒரு நாளும் புனிதமடைந்து விடமுடியாது. எனவே எப்போதும் அடக்கத்துடன் இருக்கவேண்டும்.

Vazhakkarutheeswarar temple 4

தொண்டை நாட்டின் தலைநகரமாக விளங்கியதும் முக்திதரும் நகரங்கள் ஏழினுள் முதன்மையானதாக விளங்குவதும், சான்றோர்களைத் தன்னித்தே கொண்டு இருப்பதும், கல்வியில் கரையில்லாததும், வேறு பல்வகை சிறப்புகளை உடையதுமான பழம்பதி காஞ்சிபுரம் ஆகும். இத்திருநகரில் நடுநாயகமாக விளங்கும் ஆடிசன்பேட்டை பகுதியில் மூங்கில் மண்டபம் என்னுமிடத்திற்கு பக்கத்தில் காந்திசாலையில் வீதியின் தெற்கில், வடக்கு நோக்கிய நுழைவு வாயிலுடன் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. பக்தர்களால் பெரிதும் விரும்பப்படும் அபிமானத் தலமாகவும், பழமையானதாகவும் இத்திருகோயில் விளங்குகிறது.

Vazhakkarutheeswarar temple 5

இந்த கோவிலில் ராஜகோபுரம் இல்லை. பிரம்மோற்சவம் பல ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. இதனால் கோவிலை சீரமைத்து, திருப்பணி முடிந்த பிறகு மீண்டும் பிரம்மோற்சவம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி, மூலவர் சன்னிதானம் தவிர, நவகிரகம், கொடிமரம், அன்னதான கூடம், தெப்பக்குளம், சுற்றுச்சுவர் போன்ற பணிகளுக்கான பாலாலயம், சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்றது.

Vazhakkarutheeswarar temple 3

கோயிலின் உள்ளே நுழைந்ததும் எதிரே மண்டபத்தில் காட்சியளிப்பவர் விநாயகப் பெருமான். (இந்த மண்டபத்தில் திருப்பாதிரிபுலியூர் ஞானியார் சுவாமிகள் பலகாலம் ஆன்மீக பேருரை நிகழ்த்தி கேட்டு பயன்பெற்றவர்கள் மிகப் பலராவர்.) வலப்பக்கம் கொடிமரம் பலிபீடம் நந்தி தேவர் இருக்க, கிழக்கு நோக்கி மூலவர் வழக்கறுத்தீசர் திருவருள்புரிகிறார். அவருக்கு வலப்புறத்தில் பராசரேசுவரர் சந்நிதி, நுழைவாயிலின் இடப்புறம் அலுவலகம், அழகிய உட்பிரகாரம்; அமைதியான சூழல் நிலவுகிறது.

Vazhakkarutheeswarar temple 2

ஒரு காலத்தில் முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே, வேததத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சொல்லான, “ஸத்’, “அஸத்’, ஆகியவற்றுக்கு பொருள் காண்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

பொதுவாக “ஸத்’ எனப்படுவது, அருள் ஞானத்திற்கும், பரம்பொருளுக்கும் பெயர் என, அறிஞர்கள் கூறுவர்.

“அஸத்’ என்பது சூனியத்தை குறிப்பதாகக் கூறுவர்.

அவற்றின் உண்மையான பொருளை அறியவும், தேவர்களும், முனிவர்களும், காஞ்சிபுரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டனர்.

Vazhakkarutheeswararஅவர்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவர்கள் முன் தோன்றி, அவர்கள் பிரச்னையை தீர்த்து வைத்தார்.

இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், வழக்கறுத்தீஸ்வரர் என, அழைக்கப்படுகிறார்.

இறைவன் தம்மிடம் வந்து குறையிரந்து வேண்டும் அன்பர்களின் வழக்குகளைத் தீர்ப்பதுடன் வழக்கிற்கு மூல காரணமாக பொருளைக் கண்டறிந்து அதனை அவர்கள் மனத்திலிருந்து நீக்கி அருள் பாலிக்கின்றான். நடுநிலையாளர் ஒருவரால் தீர்ப்பு மட்டுமே வழங்க முடியும். ஆனால் யாவருக்கும் மேலாம் இறைவன் வழக்கின் மூலத்தையே அறுத்து எறிவதனால் ”வழக்கறுத்தீசன்” எனப்படுகிறான் என்பர் நிறை மொழி மாந்தர்.

இந்த ஆலயத்தில் 16 வாரங்கள் 16 விளக்கேற்றி வைத்து, இறைவனை வலம் வந்து வழிபட்டால், தீராத வழக்குகளும் தீர்ந்து வெற்றி கிடைக்கிறது என்பது பக்தர்களின் உறுதியான எண்ணமாகும். வழக்குகள், பிரார்த்தனைகள், கோரிக்கைகள், மற்றும் தடைகள் அனைத்தும் நீங்கி வாழ்வில் வளம் பெற ஸ்ரீ வழக்கறுத்தீசுவரர் பெருமானுக்கு 16 வாரம், 16 நெய் தீபமும் அர்ச்சனையும் செய்து வரவேண்டும். 16 வார கடைசியில் அன்னதானமும், அபிஷேகமும் செய்ய வேண்டும்.

முகவரி : அருள்மிகு மருகுவார்குழலி சமேத வழக்கறுத்தீஸ்வரர் திருக்கோவில், காந்தி ரோடு, ஏனைக்காரன், காஞ்சிபுரம் – 631501

சென்ற மாதம் நாம் மஹா பெரியவாளின் அதிஷ்டானம் சென்றபோது, நமது தளத்தின் ஆலய தரிசன பதிவுக்காக வழக்கறுத்தீஸ்வரரையும் சென்று தரிசித்தோம். திரு.நாகராஜ குருக்களிடம் நமது தளத்தை அறிமுகப்படுத்தி நமது பிரார்த்தனை கிளப் பற்றியும் இதற்கு முன்பு தலைமை ஏற்ற அருளாளர்கள் பற்றியும் எடுத்துக்கூறினோம். நமது பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை ஏற்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தபோது மிக பரபரப்பானதொரு சூழ்நிலையிலும் பெருந்தன்மையுடன் ஒப்புக்கொண்டார். அவருக்கு நம் நன்றி.

Nagaraja Gurukkal

இம்மாத இறுதியில் இடம்பெறக்கூடிய பிரார்த்தனைக்கு வழக்கறுத்தீஸ்வரர் கோவில் திரு.நாகராஜ குருக்கள் தலைமை ஏற்கவுள்ளார். (பிரார்த்தனை தேதி பின்னர் அறிவிக்கப்படும்).

எனவே வழக்கு மற்றும் இதர சட்டப் பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் வாசகர்களும் அன்பர்களும் தங்கள் பிரார்த்தனைகளை நமக்கு மின்னஞ்சல் அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம். தங்கள் பிரார்த்தனைகளுடன் இறுதியில் அவரவர் அலைபேசி எண், பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை அவசியம் குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.

பிரார்த்தனை கோரிக்கை மட்டும் அவரவர் பெயர் மற்றும் ஊருடன் தளத்தில் அளிக்கப்படும். பெயர், ராசி, நட்சத்திரம் வழக்கறுத்தீஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய பயன்படுத்தப்படும். ராசி, நட்சத்திர விபரங்கள் தளத்தில் வெளியிடப்படாது!

துவக்கத்தில் சிறப்பு வழிபாடும் 16 ஆம் வார இறுதியில் அபிஷேக ஆராதனைகளையும் வழக்கறுத்தீஸ்வரருக்கு செய்யவிருக்கிறோம். அது சமயம் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களுக்கு சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யப்படும்.

சந்தேகங்களுக்கு நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளவும்! பெயரோ ஊரோ வெளியிட விரும்பவில்லை என்றால் அதையும் குறிப்பிட்டு அனுப்பவும். அவர்கள் பெயர்கள் இல்லாமல் பிரார்த்தனை வெளியிடப்படும்.

ரைட்மந்த்ரா சுந்தர் | M : 9840169215 | E : editor@rightmantra.com

==========================================================

சந்தான பாக்கியம், ருண விமோசனம், உத்தியோக ப்ராப்தி குறித்த கோரிக்கைகள் நமது பிரார்த்தனை கிளப்பில் இடம்பெற்று நிறைவேறிய சம்பவங்களுக்கு…

Success stories of our Rightmantra Prayer Club : ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions | A/c No. : 9120 2005 8482 135 | Account type : Current Account | Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056 | IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033. | Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

பிரார்த்தனை கிளப்பிற்கு கோரிக்கை அனுப்பியுள்ள மற்றவர்கள் கவனத்திற்கு:

உங்கள் கோரிக்கைகள் அடுத்தடுத்து இடம்பெறும். கோரிக்கை இடம்பெறும் வரையிலும் அதற்கு பிறகும் கூட நீங்கள் தவறாமல் வாரா வாரம் நடைபெறும் இந்த பிரார்த்தனையில் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள்  வேண்டுதலை பிரார்த்தித்துவிட்டு கூடவே இங்கு கோரிக்கை அனுப்பும் பிறர் நலனுக்காகவும் சில நிமிடங்கள் பிரார்த்தனை செய்யுங்கள். பிறருக்காக பிரார்த்தனை செய்வது மிகவும் உன்னதமான விஷயம்.  இறைவனுக்கு மிகவும் ப்ரீதியான ஒன்று.

==========================================================

Rightmantra Prayer Club

==========================================================

உங்கள் கோரிக்கை பிரார்த்தனை கிளப்பில் இடம் பெற…

உங்கள் கோரிக்கைகள் இந்த பகுதியில் வெளியிடப்பட்டு பிரார்த்தனை செய்யப்படவேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதை எங்களுக்கு மின்னஞ்சல் செய்யவும்.

உங்கள் வேண்டுதல்கள் குடும்பப் பிரச்னை, நோயிலிருந்து விடுதலை, நல்வாழ்வு, அறுவை சிகிச்சையில் வெற்றி, வழக்குகளில் நல்ல தீர்ப்பு (நியாயம் உங்கள் பக்கம் இருப்பின்), வேலைவாய்ப்பு மற்றும் இதர நியாயமான கோரிக்கைகளை அடிப்படையாக வைத்து இருக்கலாம். பிரார்த்தனையால் தீர்க்க முடியாத பிரச்சனைகளே இல்லை!

உங்கள் பெயரையும் சூழ்நிலையும் வெளியிட விரும்பாவிட்டால் வேறு ஒரு பெயரை நீங்களே குறிப்பிட்டு நமக்கு மின்னஞ்சல் அனுப்பவும். பொதுவாக உங்கள் பிரச்னை நீங்க குறிப்பிடும் புனைப் பெயருடன் அறிவிக்கப்பட்டு பிரார்த்தனை நடைபெறும்.

E : editor@rightmantra.com  |   M : 9840169215  | W:www.rightmantra.com

=========================================================

பிரார்த்தனையின் மகத்துவத்தை போற்றும் வகையிலும் இறையருளின் தன்மைகளை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு பிரார்த்தனை பதிவிலும் ஒரு கதை இடம்பெறுகிறது. அந்த கதைகளை படிக்க, வாசச்கர்கள் கீழ்கண்ட முகவரியை செக் செய்யும்படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

இதற்கு முன்பு பிரார்த்தனை கிளப் பகுதியில் இடம் பெற்ற பதிவுகளை படிக்க: http://rightmantra.com/?cat=131

==========================================================

சென்ற பிரார்த்தனைக்கு தலைமை தாங்கியவர் : கோவிந்தபுரம் ஸ்ரீ போதேந்திராள் வேத பாடசாலையில் வேதம் (கிரமம்) படித்து வரும் திரு.வேங்கட நரசிம்மன்

[END]

3 thoughts on “ஸ்ரீரங்கம் யானையும் வழக்கறுத்தீஸ்வரரும் – வழக்குகளில் சிக்கித் தவிப்பவர்களுக்கு ஒரு அருமருந்து!

  1. நம் தானை தலைவர் சிம்பு அப்பா கூட இங்கே வந்து வணங்கி இப்போ விடுதலைக்கு முயற்சி செய்கிறார். இனிமேல் பணம் இருந்தால் யாரும் யாரையும் தூற்றிவிட்டு இங்கே வந்து வணங்கி தப்பிக்கலாம். சினிமாகாரர்கள் இந்த சமூகத்தை கண்டபடி கெடுத்து கோடிகளை அள்ளிவிட்டு இங்கே வந்து அர்ச்சனை யாகம் செய்து தப்பிக்கலாம். அரசியல்வாதிகள், கொள்ளை அடித்துவிட்டு அதுபோல அர்ச்சனை செய்து தப்பிக்கலாம். இது கலியுகம். பணம் படைத்தவன் செய்யும் காரியங்களை கடவுள் கூட தட்டிக் கேட்க மாட்டார் போலிருக்கிறது. அவர்களுக்கு அவர்கள் வயதான காலத்தில் கிடைக்கும் (கிடைத்தால்) தண்டனை ஒன்றும் பெரிய விஷயமில்லை, அதற்குள் இந்த சமூகத்தை கெடுத்து அடுத்தடுத்து தலைமுறைகளுக்கு சொத்து சேர்த்து வைத்து விடுவார்கள், அவர்களுக்கும் சமூக அந்தஸ்து கிடைத்துவிடுகிறது. பாதிக்கப்பட்ட்டவர்களுக்கு?????

    1. உங்கள் ஆதங்கம் புரிகிறது. உங்கள் குமுறலில் நியாயம் உள்ளது. உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதிவில் அதற்கேற்றவாறு சிற்சில மாற்றங்களை செய்திருக்கிறேன்.

      “அரசியல் பிழைத்தோருக்கு அறம் கூற்றாகும்” என்னும் சிலப்பதிகார வரிகள் எந்தக் காலத்துக்கும் பொருந்தும்.

      நன்றி!

  2. இன்றைய உலகிற்கு மிகவும் தேவையான பதிவு. நீங்கள் கூறியுள்ளது போல, நியாயம் தங்கள் பக்கமிருந்தும் தீர்ப்புக்காக காத்திருப்போர் பலர் உள்ளனர். அவர்களுக்கெல்லாம் இந்த பதிவு வரப் பிரசாதமாய் விளங்கும் என்பதில் ஐயமில்லை.

    ஸ்ரீரங்கம் யானைக்கு நாமம் சாத்துவது தொடர்பாக நீங்கள் அளித்துள்ள கதை சிந்திக்க வைக்கும் ஒன்று.

    பதிவின் புகைப்படங்கள் குறிப்பாக முகப்பில் உள்ள படம் உள்ளம் கொள்ளை கொள்ளும் ஒன்று. என் வட்டத்தில் இந்த பதிவைப் பற்றி சொல்லி, வழக்குகளால் பாதிக்கப்பட்டுள்ளோர் யாரேனும் இருந்தால் பிரார்த்தனை கோரிக்கை அனுப்பச் சொல்லியிருக்கிறேன்.

    தங்கள் சேவைக்கு நன்றி

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply to Right Mantra Sundar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *