Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 16, 2024
Please specify the group
Home > Featured > மார்கழியில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ?

மார்கழியில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ?

print
நாளை மறுநாள் அதாவது 17/12/2015 வியாழக்கிழமை மார்கழி மாதம் துவங்குகிறது. மாதங்களில் தனிச்சிறப்பு மிக்கது மார்கழி. மார்கழி மாதம் திருக்கோவில் சென்று சுவாமியை தரிசனம் செய்தால் அந்த ஆண்டு முழுதும் தரிசனம் செய்ததற்கான பலன் கிடைத்துவிடும். காரணம் நமக்கு ஒருவருடம் தேவர்களுக்கு ஒரு நாள் என்கிற கணக்கில் தேவலோகத்தில் சுப்ரபாதம் கேட்கும் நேரம் மார்கழி மாதம் ஆகும். ஆடி முதல் நாளிலிருந்து மார்கழி முடிய தேவலோகத்தில் இராத்ரிகாலமாகும். ஆகையால் தை மாதப்பிறப்பு என்பது மார்கழிக்குப் பிறகு ஆவதால் மார்கழி மாதம் தேவலோகத்தில் விடியற்காலை.

Thirukkovilur

மார்கழி என்றாலே, கச்சேரிகள், பஜனைகள், விடியற்காலை குடும்பங்களிலும் திருக்கோவில்களிலும் பூஜைகள் என அமர்க்களப்படும். தேவலோகத்தின் கதவுகள் திறக்கும் சமயத்தில் நாம் மிகவும் சுத்தமாகவும், சிரத்தையுடனும் பூஜைகளும் ஸ்தோத்ரங்களும் செய்ய வேண்டும். ஸ்வாமிக்குச் செய்யும் ஸுப்ரபாத ஸேவைதான் நாம் செய்யும் பூஜைகள், ஸ்தோத்ரங்கள் முதலியவை.

மார்கழி மாதத்தில் வைணவ ஆலயங்களில் விஸ்வரூப தரிசனம் என்பது மிகவும் பிரசித்தம். (விஸ்வரூப தரிசனம் என்றால் என்ன? ஏன் அவசியம் விஸ்வரூப தரிசனத்தை பார்க்கவேண்டும் என்பது பற்றி முன்னரே பதிவளித்திருக்கிறோம்.)

மார்கழியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் இரண்டு விசேஷங்கள் வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆருத்ரா தரிசனம். மார்கழி மாதம் சுக்லபக்ஷத்தில் வரும் ஏகாதசி நாளுக்கு பரமபத வாசல் என்றும் பெயர். ஸ்ரீரங்கம் முதலான வைஷ்ணவ தேவாலயங்களில் பரமபதவாசல் திறப்பு என்பது ஓர் உத்சவமாகவே கொண்டாடப்படுகிறது. அதே போல மார்கழி மாதத்தில் வரும் திருவாதிரை திருவாதிரை நட்சத்திரத்தன்று மிகமிகச் சிறப்பாக திருவாதிரை உத்சவம் நடைபெறுகிறது. அன்று கயிலாய வாசல் திறப்பு விழாவாகவும் நடராஜ ஸ்வாமி எழுந்தருள்வதாகவும் ப்ரார்த்தனை செய்து விசேஷபூஜைகள், அபிஷேகங்கள் ஸ்வாமி புறப்பாடு முதலானவை நடைபெறுகின்றன.

இப்படி சைவ, வைஷ்ணவ ஆலயங்களில் நடக்கும் விசேஷங்களும், பஜனைகளும், பூஜைகளும் தேவலோகத் திறப்பு விழாவாகக் கொண்டாடும் மார்கழி மாதம் “தை பிறந்தால் நமக்கும் நல்ல வழி பிறக்க வேண்டும்” என்று ப்ரார்த்தனை செய்யும் மாதமாக அமைகிறது.

margazhi

விடியற்காலை நேரம் உஷத் காலம் எனப்படுகிறது. இந்த தேவதையின் செழிப்பான கிரணங்கள் விடியற்காலையில் பூமியை நோக்கிப்பாய்வதால் தான் அந்த வேளையில் நீரில் மூழ்கி நீராடுதல் விசேசமாக சொல்லப்படுகிறது. அதிகாலையில் பிரம்ம முகூர்த்தத்தில் எழுந்திருக்க வேண்டும் என்று நம் சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன. (பிரம்ம முகூர்த்தம் என்பது காலை 3 மணி முதல் 5 மணிவரை.)

மாதங்களிலே மிகவும் மகத்துவம் மிக்கது மார்கழி மாதம். இதை பீடை மாதம் என்று சொல்வார்கள். அதன் அர்த்தத்தை பலர் தவறாக புரிந்துகொண்டுள்ளனர். ‘பீடுடைய மாதம்’ என்பதே நாளடைவில் மருவி பீடை மாதம் என்றாகிவிட்டது. பீடுடைய என்றால் செல்வம் பொருந்திய, சிறப்புக்கள் நிரம்பிய என்று அர்த்தம். ‘மாதங்களில் நான் மார்கழி’ என்று கீதையில் கிருஷ்ண பரமாத்மா கூறியிருக்கிறார் என்றால் அதன் சிறப்பை புரிந்துகொள்ளுங்கள்.

நமக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள். மார்கழி மாதம் என்பது தேவர்களது ஒரு நாளில் விடியற்காலை பொழுதாகும். விடியற்காலை என்றாலே மங்களகரமானது தானே? எனவே இந்த பெருமை பொருந்திய மாதம் முழுதும் இறை வழிபாட்டுக்கு என்றே பெரியோர்கள் ஒதுக்கிவைத்துள்ளனர். இம்மாதங்களில், சுபநிகழ்ச்சி நடத்தினால், வழிபாடு பாதிக்கும் என்பதாலேயே, இம்மாதங்களில் அவற்றை நடத்தாமல் தவிர்த்தனர். மார்கழி மாதத்தை, “மார்கசீர்ஷம்” என்று வட மொழியில் சொல்வர். “மார்கம்” என்றால், வழி- “சீர்ஷம்” என்றால், உயர்ந்த- “வழிகளுக்குள் தலைசிறந்தது” என்பது பொருள். இறைவனை அடையும் வழிக்கு இது உயர்ந்த மாதமாக உள்ளது. இதற்கும் காரணமிருக்கிறது.

Sriperumbudur-Swami-Ramanujar

இந்த காரணத்தால்தான் தேவர்களை வரவேற்கின்ற விதமாக மார்கழி மாதத்தில் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் வீட்டு வாசலில் பெண்கள்  வண்ணக்  கோலமிடுவதை வழக்கமாகக் கொண்டனர். ஆனால், இன்றைய காலத்தில் அதிகாலையில் எழுவதை சிரமமாகக் கருதும் சில பெண்கள்  முதல் நாள் இரவே  கோலம் போட்டு வைத்துவிட்டு பின்னர் உறங்கச் செல்கின்றனர். இது முற்றிலும் தவறான ஒன்று என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியம்.  மார்கழியின் தனிச்சிறப்பே அதி காலையில் எழுந்து கோலமிடுவதுதான். அந்த நேரத்தில் கோலமிட்டு கோலத்தின் நடுவே  விளக்கேற்றி வைத்துப் பாருங்கள்,  மனதினில் மட்டற்ற மகிழ்ச்சி பொங்கும். மகாலட்சுமியின் அருள் பூரணமாகக் கிட்டும்.

இறை வழிப்பட்டுக்கென்றே முழுமையாக ஒதுக்க வேண்டிய இந்த புனிதமான மாதத்தில் நமது சொந்தக் காரியங்களையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு இறைவனின் மேல் நமது முழு சிந்தனையையும் செலுத்த வேண்டும்  என்ற காரணத்தினால்தான் மார்கழியில் திருமணம் முதலான சுபநிகழ்ச்சிகளைத் தவிர்த்தார்கள் நம் முன்னோர்கள்.

maha-periya-at-sri-madamகாஞ்சி மகா ஸ்வாமிகள் மார்கழி பற்றி கூறும்போது….

நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா ஸ்வாமிகள் மார்கழி பற்றி கூறும்போது : “இந்த மாதத்தில் சிவபெருமான், அம்பாள், பெருமாள் என்ற மூன்று ஜோதிகளாய் பிரிந்த பரம்பொருளை வழிபட வேண்டும்.  அதி காலையில் இவர்களுக்கு பொங்கல் நைவேத்யம் செய்ய வேண்டும். இதனால் மன சுத்தம் ஏற்படும். திருப்பாவையும் திருவெம்பாவையும் ஓதுவது பலவித நலன்களை நல்கும்!”

ஆலயம் தொழுவது சாலவும் நன்று. ஹிந்துக்கள் அனைவரும் நிச்சயம் தினசரி ஆலய தரிசனம் செய்யவேண்டும். அப்படி செய்ய இயலாதவர்கள் வாரம் ஒரு முறையேனும் ஆலயம் செல்லவேண்டும். அப்படி வாரம் ஒரு முறையேனும் செல்ல முடியாதவர்கள், முக்கிய விரத, பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் செல்லவேண்டும். அப்படியும் இயலாதவர்களுக்கு இன்னும் கூட கிரேஸ் பீரியட் இருக்கிறது. அது தான் இந்த மார்கழி மாதம். இந்த ஒரு மாதம் தினமும் விடியற்காலை ஆலயத்திற்கு சென்றால் வருடம் முழுதும் ஆலயம் சென்ற பலன் கிடைக்கும். கிரகத்தில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகும்.

காற்று சாதகமாக வீசும் போது இலக்கை நோக்கி படகை வேகமாக செலுத்தி கரைசேரும் படகோட்டியைப் போல இந்த மாதத்தை பயன்படுத்திக்கொண்டு பரம்பொருளின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும்.

மார்கழி அதிகாலைப் பொழுதில் எழுந்து நீராடி அவரவருக்குரிய சின்னங்களைத் தரித்துக்கொண்டு அருகாமையில் உள்ள ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டு, இறைவன் நாமாக்களைச் சொல்லி நற்பலன்கள் பெறுவோமாக!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details: 

Name : Rightmantra Soul Solutions   A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account   Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

நாம் கடந்த சில ஆண்டுகளாக மார்கழி அதிகாலை விஸ்வரூப தரிசனத்திற்கு சென்று வருவது நீங்கள் அறிந்ததே. முதல் ஆண்டு நந்தம்பாக்கம் கோதண்ட ராமர் ஆலயம். அடுத்த ஆண்டு போரூர் இராமநாதீஸ்வரர். சென்ற ஆண்டு பூவிருந்தவல்லி வைத்தியநாத சுவாமி கோவில் துவங்கி நம் சுற்றுபுறத்தில் உள்ள அனைத்து ஆலயங்களையும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாக சென்று தரிசித்ததது நினைவிருக்கலாம்.

மார்கழி அதிகாலை துயிலெழுந்து நீராடி ஆலயத்திற்கு செல்லும்போது மனதில் தோன்றும் அந்த பரவசம்… வார்த்தைகளால் வர்ணிக்க இயலாது. அதை அனுபவித்தால் தான் புரியும். (அனுபவித்தவர்கள் சொல்லுங்களேன்!) ஓரிரு நாள் காலை குளிரில் கண்விழிப்பது சிரமமாக இருக்கும். அதற்கு பிறகு அது ஒரு இனிமையான அனுபவமாக மாறிவிடும்.

Kundrathur Nageswarar

அதிகாலையில் எழுந்து நீராடி திருநீறணிந்து சிவன் சன்னதியில் அமர்ந்து மேள தாள மங்கள முழங்க சிவபெருமானுக்கு நடக்கும் அந்த அபிஷேகத்தை காண கண் கோடி வேண்டும்.

நீண்டநாள் தீர்க்கமுடியாத பிரச்சனை, வேண்டுதல், சுமை இப்படி ஏதாவது உங்களை வருத்துகிறதா? இந்த மார்கழி மாதத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள். விடியற்காலை எழுந்து நீராடி தூய்மையான ஆடைகளை உடுத்தி, சமயச் சின்னங்கள் அணிந்து அருகில் உள்ள தொன்மையான ஆலயம் ஏதாவது ஒன்றுக்கு சென்று திருப்பாவை, திருவெம்பாவை, கந்த சஷ்டி கவசம், வேல்மாறல், இப்படி ஏதேனும் ஒன்றை படித்து வாருங்கள். நீங்கள் விஸ்வரூப தரிசனம் செய்வது மிகவும் முக்கியம். அதாவது சன்னதி திறந்தவுடன் முதல் தரிசனம். (பெண்கள் வீட்டுக்கு அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வந்தாலே போதும்.) தொடர்ந்து நம்பிக்கையுடன் செய்து வாருங்கள். எப்பேற்ப்பட்ட பிரச்சனைகளும் பஞ்சாய் பறந்து போகும். இது நிதர்சனமான உண்மை. பலன்பெற்றுவிட்டு சொல்லுங்களேன்…!

margazhi bhajan

மார்கழி மாதம் என்ன செய்யலாம் ?

1) சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட ஆண்டுநிறைவு
2) பெண் பார்த்தல்

என்ன செய்யக்கூடாது ?

1) கிரகப்பிரவேசம்
2) திருமணம்
3) தம்பதிகள் தாம்பத்திய உறவு. (ஜீவாதார சக்தி குறைவாக இருக்கும் என்பதால் கருவுறுவதற்கு இது ஏற்ற சமயம் அல்ல!)

==========================================================

Also check :

விஸ்வரூப தரிசனம் என்றால் உண்மையில் என்ன? 

சாதனையாளர்கள் அனைவரிடமும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா?

அடேங்கப்பா…..மார்கழி மாசத்துக்கு இவ்வளவு சிறப்பு இருக்கா? MUST READ

மிளகளவு கைங்கரியமும் மலையளவு புண்ணியமும்! மார்கழி முதல் நாள் தரிசனம்!!

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

எதை தவற விட்டாலும் மார்கழியை தவற விடவேண்டாம்!

மார்கழி முதல் நாள் : பெருமாளின் விஸ்வரூப தரிசனமும் கோ-பூஜையும் காணக்கிடைத்த அனுபவம்!

==========================================================

[END]

5 thoughts on “மார்கழியில் என்ன செய்யலாம் ? என்ன செய்யக்கூடாது ?

  1. மார்கழியில் ஒரு முத்தான கட்டுரை. கண்டிப்பாக தாங்கள் சொன்னது போல் விஸ்வரூப தரிசனம் செய்ய சித்தமாக உள்ளேன். சூரியனை கண்ட பனி போல் எங்கள் துயர் தீர்க்க தங்களின் பதிவு காண கிடைத்தது ஆண்டவன் கருணை.

  2. டியர் சார்,

    மார்கழி மாதம் பீட மாதம் யென்றும் சொல்வார்கள். வருஷம் பூரா திறக்காத கோவில் கூட எந்த மார்கழி மாதத்தில் திறப்பதால்/பூஜா செய்வதால் பீட மாதம் என்பார்கள் . வாரியார் சொல்ல கேட்டது,
    மிக மிக அருமையான தகவல்கள் . போடோஸ் மிக அருமை.
    மிக்க நன்றி சார்,

    தங்களின்
    S. ரவிச்சந்திரன்

    1. பீடுடைய மாதம் என்பது தான் பீடை மாதம் என்று மருவியிருக்கிறது. பீடு என்றால் செல்வம் என்று பொருள்.

  3. அருமை !!!

    மேலும் நமது மூதாதையர் மிகவும் புத்திசாலிகள். ஏன் எனில் மார்கழி மாத காலையில் ozone -அடுக்கு சற்று கீழ் இறங்கும். இது உடலுக்கு மிகவும் நல்லது. அதனால்தான் நம்மை இந்த மாதம் முழுமையும் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு பஜனை செய்துவர அறிவுறுத்தினார்கள்.

    உடலுக்கு வலுவூட்ட ozone !!
    மனதுக்கு வலுவூட்ட பஜனை!!

    என்னே தொலைநோக்கு !!

    நெ வீ வாசுதேவன்

Leave a Reply to sravichandran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *