Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > அக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ ! – தனி ஒருவன் (1)

அக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ ! – தனி ஒருவன் (1)

print
க்களுக்கு இன்று தெய்வ நம்பிக்கையைவிட தன்னம்பிக்கையே அதிகம் தேவைப்படுகிறது. தெய்வநம்பிக்கை இல்லாதவர்கள் கூட வாழ்க்கையில் ஜெயித்துவிடலாம். ஆனால், தன்னம்பிக்கை இல்லாதவர் வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாது. அவர்கள் முன்பு அந்த கடவுளே வந்து உதவிக்கு நின்றாலும் அவர்களால் முடியாது. எனவே தான், சமீபத்திய வேலூர் சொற்பொழிவின் தலைப்பை கூட, “சோதனைகளை சாதனைகளாக்குவோம்!” என்று தேர்ந்தெடுத்தோம்.

சொற்பொழிவின் முதலில் நாம் சொன்னது என்ன தெரியுமா?

“நீ என்ன பார்க்கிறாயோ அது விதி. அதை எப்படி பார்க்கிறாயோ அது மதி!” – ஆம்.. இது தான் வாழ்க்கையின் சூட்சுமம். இதை உணர்ந்துகொண்டால் எப்பேற்பட்ட சாதனையும் சாத்தியமே.

சமூகத்தில் ஏதேனும் ஒரு அவலத்தை பார்த்தால், சிறுமையை கண்டால், “இதை தடுத்து நிறுத்த ஏதேனும் செய்யவேண்டும்” என்கிற ஒரு சிறு பொறி பெரும்பாலான மக்களுக்கு எழும். ஆனால் எழும் வேகத்திலேயே அது அணைந்துவிடும் என்பது தான் சோகம். காரணம் “நாம் ஒருவர் நினைத்து என்ன ஆகப்போகிறது? இந்த சமூகம் மாறவேண்டும்” என்று மறுபடியும் குண்டு சட்டியில் குதிரை ஓட்ட போய்விடுவார்கள். அப்படிப்பட்ட சிந்தனை சரியா? உண்மையில் இந்த சமூகத்தில் தனிமனிதனால் எதுவும் சாதிக்க முடியாதா?

முடியும்! நிச்சயம் முடியும்!!

சமூகம் சார்ந்த முயற்சிகளில் மட்டுமல்ல, அவரவர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கும் இது பொருந்தும். இதை உணர்ந்தோர் பாக்கியசாலிகள். உணராதோர் கண்ணிருந்தும் குருடர் போலத் தான். சில முட்டாள்களுக்கு (கடுமையான வார்த்தைக்கு மன்னிக்கணும்!) அவர்கள் கண்களை அவர்கள் தான் மறைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று கடைசி வரை புரியவில்லையே… சரி விடுங்க… அவங்களை பத்தி பேசி பிரயோஜனம் இல்லை.

தனி ஒருவனின் முயற்சியை, எண்ணத்தின் வலிமையை ஒரு போதும் குறைத்து மதிப்பிடக்கூடாது.

ஒரு சிறு உதாரணம் பார்ப்போம்…

அக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ ! 

ந்த நெரிசலான நகரத்தில் சாலையின் குறுக்கே மிகப் பெரிய மரம் முறிந்து விழுந்துவிடுகிறது. தொடர்ந்து போக்குவரத்து முடங்கிவிடுகிறது. ஒரு அங்குலம் கூட வாகனங்கள் இரண்டு பக்கமும் நகரமுடியவில்லை. போக்குவரத்து காவலர் செய்வதறியாது திகைக்கிறார். வாகனங்கள் ஹாரன் சத்தத்தில் அந்த பிரதேசத்தையே அதிர வைக்கின்றன.

Lead-India-The-Tree 2

பணி முடித்து அவசர அவசரமாக வீடு திரும்பிக்கொண்டிருந்தவர்கள் இந்த எதிர்பாராத போக்குவரத்து முடக்கத்தால் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.

“சே… என்ன கன்ட்ரி இது? ஐ ஹேட் இந்தியா” என்று யாரிடமோ ஒரு இளம்பெண் அலைபேசியில் கூறுகிறாள்.

“போ… போன்னா எப்படி போறது? அங்கே பாரு மரம் குறுக்கே விழுந்துருக்கு…” என்று ஒரு ஆட்டோக்காரருக்கு பைக்கில் வந்தவருக்கும் வாக்குவாதம்.

நிலைமையை இன்னும் மோசமாக்குவதைப் போல திடீர் மழை வேறு பெய்கிறது. இது பற்றியெல்லாம் கவலைப்படாமல் ஒரு ஓரமாக தனது போலீஸ் ஜீப்பில் தூங்கிக்கொண்டிருக்கிறார் காவலர் ஒருவர்.

மற்றொருபக்கம் இது எதைப் பற்றியும் கவலையின்றி சேரிக் குழந்தைகள் சிலர் சந்தோஷமாக விளையாடிக்கொண்டிருக்கின்றனர்.

தனது பள்ளிக்கூட பேருந்தில் இருந்து ஒரு சிறுவன் வயது சுமார் ஏழு அல்லது எட்டு இருக்கும். எட்டிப் பார்க்கிறான். நிலைமையின் சீரியஸ்னஸ் அவனுக்கு புரிகிறது. மெதுவாக நடந்து மரம் விழுந்து கிடக்கும் இடத்திற்கு செல்கிறான். முறிந்து கிடக்கும் மரத்தை பார்வையால் அளக்கிறான்.

என்ன நினைத்தானோ, தனது முதுகில் மாட்டியிருந்த பையை அவிழ்த்து தரையில் போடுகிறான்.

பல டன்கள் எடையுள்ள அந்த மரத்தை, தனது பிஞ்சுக் கரங்களால் தள்ளுகிறான். மழை நீர் அவன் மீது பட்டு தெறிக்கிறது. மழையையும் பொருட்படுத்தாமல் அந்த பெரிய மரத்தை தனது முழு பலத்தையும் பிரயோகித்து தள்ள முற்படுகிறான். ம்…ஹும்… முடியவில்லை. தம் கட்டி தள்ளுகிறான்.

Lead-India-The-Tree 1

மக்கள் அனைவரும் கவனிக்கிறார்கள். அருகே பக்கத்தில் விளையாடிக்கொண்டிருந்த சேரிக் குழந்தைகள் இது ஏதோ மழை விளையாட்டு போல, நாமும் விளையாடலாம் என்று ஆளாளுக்கு தங்கள் பங்கிற்கு அந்த சிறுவனுடன் சேர்ந்து தள்ள, அவர்கள் முயற்சி வெற்றி பெறாததைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை. மழையில் நனைந்தபடி சிரித்துக்கொண்டே தள்ளுகிறார்கள். தற்போது அனைவரும் இதை கவனிக்கிறார்கள். நெரிசலில் சிக்கியிருக்கும் மக்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.

அந்த சிறுவனின் செயலில் உள்ள வீரியம் உறைக்கிறது. அனைவரும் ஆளாளுக்கு தத்தங்கள் கைகளில் இருந்தவற்றை போட்டுவிட்டு மரத்தை தங்கள் பங்குக்கு தள்ள மழையையும் பொருட்படுத்தாமல் மேலும் பலர் ஓடிவருகிறார்கள். விரைவில் அது ஒரு பெரிய மக்கள் சக்தியாகிவிடுகிறது. அடுத்த சில நிமிடங்களில் அந்த பெரிய மரம் அனைவராலும் சேர்ந்து நகரத்தப்பட்டு ஓரமாக போடப்படுகிறது.

அனைவரும் தங்கள் வெற்றியை கொண்டாடுகிறார்கள். அந்த சிறுவனும். அவன் முகத்தில் எதையோ சாதித்த மகிழ்ச்சி. திரும்பவும் தனது பையை மாட்டிக்கொண்டு நடந்து செல்கிறான்.

‘LEAD INDIA’ என்கிற தொலைகாட்சி நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்டு பல விருதுகளை வென்ற குறும்படம் இது. (காணொளி இணைக்கப்பட்டுள்ளது!)


இந்த காணொளி உணர்த்தும் பாடம் என்ன?

பிரச்சனை எத்தனை பெரியதாக இருந்தால் என்ன? யாராவது ஒருவர் முதலில் அடியெடுத்து வைக்கவேண்டும். அது தான் பிரச்னையை தீர்ப்பதற்கு வழி.

இந்த காணொளியை பொறுத்தவரை, மரத்தை முதலில் சென்று தள்ளும் அந்த எட்டு வயது சிறுவன் தான் அந்த துணிச்சலை பிரதிபலிக்கிறான்.

இத்தகைய தன்னலமற்ற துணிச்சலான தலைமைப் பண்புடையவர்களை இறைவன் தானே அடிக்கடி இந்த பூமிக்கு அனுப்புவான் என்று நாம் நம்புகிறோம். அதற்காக பிரார்த்திக்கிறோம். ஏன் அது நீங்களாக இருக்கக் கூடாது? நீங்களும் சமூகத்தின் மீது சிறிது அக்கறை மிகுந்த உங்கள் நண்பர்கள் சிலராகவும் அது ஏன் இருக்க்கக்கூடாது?

தனி மனிதனின் சக்தியை முயற்சியை எந்த காலத்திலும் குறைத்து மதிப்பிடக்கூடாது. (இது பற்றி நமது தளத்தில் ஏற்கனவே பல பதிவுகள் வந்துள்ளன.)

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ?
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்

பாரதியின் இந்த வரிகளில் தான் எத்தனை ஆழமான விசாலமான பொருள் தெரியுமா?

இந்த கடைசி வரியை வைத்தே முதல் வரிகள் பொருள் இப்போது மாறும். வீரம் எதற்கு வேண்டும்? அநியாயம், கொடுமை, பாதக செயல்கள், கொத்தடிமைத்தனம், அடிமைத்தனம், பெண்ணடிமை, சமூகத்தில் புறையோடி இருக்கும் அவலங்கள் என எதிர்க்கவே வீரம் வேண்டும். அதாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டியதில்லை. தனியாக கூப்பிட்டு சிலரிடம் சொன்னேன், தீ பரவியது! பணி முடிந்தது. பாரதியார் சின்ன வயசு. நானே இப்படி செய்திட முனைய இத்தனை வருசம் என்ன செஞ்சீங்க என குஞ்சென்று மூப்பென்று முண்டோ!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details: 

Name : Rightmantra Soul Solutions   A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account   Bank : Axis Bank, Poonamallee, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions, Room No.64, II Floor, Murugan Complex, (Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street, West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

நெருப்பு பொறி அதுவும் சிறிய ஒன்று… அதை காடெல்லாம் ஓடி ஓடி வைக்க வேண்டியதில்லை, ஒரு பொந்தில் வைக்கிறான். காடு எல்லாம் வெந்து சாம்பலாகி விட்டது. அவ்வளவுதான். ஆனால் அடுத்துச் சொல்கிறார், தழல் வீரத்திற் குஞ்சென்று மூப்பென்று முண்டோ? அதாவது தகதகவென எரியும் நெருப்பை போன்ற வீரம் கொள்ள சின்னவர் பெரியவர் என பேதம் உண்டா?

வீரம் எதற்கு வேண்டும்? அநியாயம், அவலம், சுயநலம் என சமூகத்தில் புறையோடி இருக்கும் அவலங்களை எதிர்க்கவே வீரம் வேண்டும். இங்கே அக்கினிகுஞ்சு என்பது சின்ன சிந்தனை நெருப்பு. அதை காடெல்லாம் ஓடி ஓடி வைக்க வேண்டியதில்லை. அதாவது எல்லோரிடமும் சொல்ல வேண்டியதில்லை. ஓரிடத்தில் வைத்தால் போதும் பணி முடிந்தது.

‘எல்லாம் சரி… காணொளி, குறும்படம் இதுக்கெல்லாம் வேணும்னா இது சரிப்பட்டு வரும். நிஜ வாழ்க்கையில் சாத்தியமா?’ என்று கேட்டால்….

“சாத்தியமே!”

அடுத்த அத்தியாயத்தில் வியக்கவைக்கும் உண்மை சம்பவம் ஒன்று!

==========================================================

Also check : மலையை பிளந்த ஒற்றை மனிதன் – ‘முடியாது’ என்கிற வார்த்தையை இனி நாம் சொல்லலாமா?

==========================================================

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

==========================================================

இன்று கண்ட அவமானம் வென்று தரும் வெகுமானம்!

உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

நான் புதைக்கப்படவில்லை… விதைக்கப்பட்டேன்!

நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா…

ஒரு கனவின் பயணம்!

வெற்றி நிச்சயம், இது வேத சத்தியம்!

‘நாளை’ என்பதில்லை நரசிம்மனிடத்தில்!

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் – நம் நரசிம்ம ஜெயந்தி அனுபவம்!

பேரெழில் கொஞ்சும் பேரம்பாக்கம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் – நரசிம்ம ஜெயந்தி ஸ்பெஷல்!

==========================================================

Motivational stories :

தெய்வத்தான் ஆகா தெனினும்….

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

==========================================================

[END]

 

2 thoughts on “அக்கினிக் குஞ்சு மூட்டிய காட்டுத் தீ ! – தனி ஒருவன் (1)

  1. இந்த குறும்படத்தின் நிகழ்வு நம் அனைவருக்கும் உத்வேகத்தை கொடுக்கும் மெசேஜ் ஆக உள்ளது. வீரமும் விவேகமும் இருந்தால் வாழ்கையில் எதையும் சாதிக்கலாம்,
    வாழ்க .,.. வளமுடன்
    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply to Narayanan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *