Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > விவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்!

விவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்!

print
பாரதி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அப்துல் கலாம், இப்படி நம் தேசம் வியக்கும் ஆளுமைகள் பலர் விவேகானந்தரை கொண்டாடியிருக்கிறார்கள். இவர்களை போன்றவர்கள் மனதில் விவேகானந்தர் மிகப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமல்ல.

Swami Vivekananda copy

சித்துக்களை செய்தால் தான் ஒருவரை மகான் என்றே சாமானிய மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் சித்துக்கள் புரியாமலே விவேகானந்தர் பலர் தன்னை பின்பற்ற வைத்தார் என்பது தான் விஷயமே. 39 ஆண்டுகளே வாழ்ந்தாலும் 3,000 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சேவையை, சமுதாய சீர்திருத்தப் பணியை, சமுதாய மாற்றத்துக்கு வழிகாட்டும் பணியைத் தமது வாழ்க்கையின் கடைசிப் பத்தே ஆண்டுகளில் விவேகானந்தர் செய்து முடித்தார். இந்தச் சாதனையைச் சாதாரண மனிதனால் செய்ய முடியாது. இறையருள் பெற்ற ஒருவரால் தான் செய்ய முடியும்.

விவேகானந்தருக்கு சித்துக்கள் தெரியும். ஆனால் மிக மிக அரிதாகவே அவற்றை அவர் பிரயோகித்திருக்கிறார். காரணம், தமது நோக்கத்திலிருந்து அவை தன்னை தடம் மாற்றி இட்டுச் சென்றுவிடும் என்று கருதியதால் சித்துக்களை இழிவானதாக கருதி அவர் ஒதுக்கி வைத்தார். அப்படி ஒரு வேலை மந்திர தந்திரங்கள் செய்தால் அவற்றுக்காக தன்னை மதிப்பார்களேயன்றி தனது உபதேசங்களை பொருட்படுத்தமாட்டார்கள் அது பிறகு பலனற்று போய்விடும் என்பதை அவர் அறிந்திருந்தார்.

சுவாமிஜிக்கு சித்திகள் எதற்காக?

ஸ்ரீராமகிருஷ்ணர், ”இந்த சித்திகள் பிற்காலத்தில் நீ இறைபணி செய்யும்போது தேவைப்படும். நீ விரும்பினால் அவற்றைத் தருகிறேன்” என்றார் விவேகானந்தரிடம்.

”இறை தரிசனத்திற்கு ஒத்துழைக்காத, எனது கடமையில் தடங்கல்கள் ஏற்படுத்தக்கூடிய சித்திகள் எனக்கு வேண்டாம்” என்று சுவாமிஜி கூறிவிட்டார்.

ஆனால் வைரத்தின் ஒளியையும், தீயின் உஷ்ணத்தையும், தேனின் சுவையையும் யாரால் மறைக்க முடியும்? உலக மக்களின் வேதனைக்கண்டு உள்ளம் உருகிய விவேகானந்தரிடம் சித்திகள் தாமாக வெளிப்பட்டன. சுவாமிஜி எந்த சித்திகளையும் விரும்பாதிருந்தும் சில சமயங்களில் தம்மை அறியாமலேயே அவரிடமிருந்து அவை வெளிப்பட்டன. உண்பது, உறங்குவது, செயல்புரிவது, போன்ற எல்லா நிலைகளிலும் சுவாமி விவேகானந்தரது மனம் இறை தியானத்திலேயே ஆழ்ந்திருந்தது. அதனால்தான் ”நரேந்திரன் தியான சித்தன்” என்பார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

மிக மிக அரிதாக சித்துக்களை விவேகானந்தர் பயன்படுத்திய தருணங்களுள் ஒன்றை பார்ப்போம்.

Radhekrishna

கண்ணுக்கு தெரிகிறானா கண்ணன்?

ஜெய்ப்பூரின் படைத்தளபதியான சர்தார் ஹரிசிங்கின் வீட்டில் ஸ்வாமிஜி சில நாட்கள் தங்கினார். ஹரிசிங் ஒரு தீவிர வேதாந்தி. உருவ வழிபாடு போன்றவற்றில் நம்பிக்கை இல்லை. இது விஷயமாக ஸ்வாமிஜி பலமணி நேரம் விளக்கியும் அவர் அதனை ஏற்கவில்லை.

ஒரு நாள் மாலை இருவரும் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே கண்ணனின் திருவுருவை தாங்கியபடி பஜனை ஊர்வலம் ஒன்று வந்துகொண்டிருந்தது. இருவரும் சிறிதுநேரம் நின்று ஊர்வலத்தைப் பார்த்தனர்.

திடீரென்று ஸ்வாமி ஹரிசிங்கைத் தொட்டு, ”ஹரிஜி, அதோ பாருங்கள், உயிருணர்வுடன் நிற்கின்ற கண்ணனைப் பாருங்கள்” என்றார். ஹரிசிங் அங்கு பார்த்தபோது சிலைக்கு பதிலாக உண்மையாகவே கண்ணன் நின்று கொண்டிருந்தான்! அவரால் நம்பவே முடியவில்லை. ஆழ்ந்த பரவசத்தில் அவரது கண்கள் நிலைக்குத்தி நின்றன! கண்ணீர் வழிந்தோடியது.

அந்த நிலையிலிருந்து மீண்டபின் ஹரிசிங் ஸ்வாமிஜியிடம், ”சுவாமிஜி, பலமணிநேர விளக்கங்கள் சாதிக்க முடியாததை உங்களது ஒரு ஸ்பரிசம் சாதித்துவிட்டது. நான் கண்ணனை தரிசித்தேன்” என்று நாக்குழறக் கூறினார்.

swamiமரணத்தை நேசிக்க கற்றுத் தரட்டுமா?

சுவாமி விவேகானந்தர் பிரான்ஸ் சென்றிருந்தபோது அவரால் ஈர்க்கப்பட்டவர்களில் ரிச்சலியு இளவரசர் ஒருவர். (DUKE OF RICHELIEU). அவர் அப்போது சிறுவராக இருந்தார். சுவாமிஜி அங்கிருந்து புறப்படத் தயாரானபோது ஒரு நாள் அந்த இளவரசரிடம், “நீங்கள் ஏன் உலகை துறக்கக் கூடாது? ஏன் என்னுடன் உங்கள் வாழ்க்கையைத் தொடரக் கூடாது? என்று கேட்டார். அதற்கு அந்த இளவரசர், “சுவாமிஜி உலகை துறப்பதால் எனக்கு என்ன கிடைக்கும்?” என்று கேட்டார்.

“நீங்கள் அதனால் மரணத்தை நேசிக்க வல்லவர் ஆகலாம்” என்றார் சுவாமிஜி. இளவரசருக்கு அது புரியவில்லை.

சுவாமிஜி தொடர்ந்தார்: “இதன் பொருள் என்னவென்றால் நீங்கள் மரணத்தைக் கண்டு அஞ்சாத நிலையை உங்களுக்கு என்னால் தரமுடியும். மரணம் உங்கள் முன்னால் நிற்கும்போது, அதைப் பார்த்து நீங்கள் சிரிக்க வல்லவர்கள் ஆவீர்கள்!”

ஆனால் ஏனோ அப்போது அந்த இளவரசர் சுவாமிஜி கூறியதை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர் உலக வாழ்வையே நாடினார்.

பின்னாளில் இந்த இளவரசர் போர்க்களத்திற்கு செல்ல நேர்ந்தது. சுற்றிலும் ரத்த வெள்ளமும், பிணங்களுமாக மரணத்தின் நிழல் படிந்த அந்த சூழ்நிலையில் திடீரென்று சுவாமிஜி தோன்றி, “இளவரசே! என்ன மரணத்தை நேசிக்கக் கற்றுத் தரட்டுமா?” என்று கேட்டுவிட்டு மறைந்தார். அதன் பிறகு படிப்படியாக மேலை நாட்டு வேதாந்த மையங்களுடன் தொடர்பு கொண்டார் அந்த இளவரசர்.

================================================

பிறருக்காக பிரார்த்திக்கிறீர்களா இல்லையா?

வாரந்தோறும் ஞாயிறு மாலை 5.30 PM  – 5.45 PM மணிக்கு அவரவர் இடங்களில் நடைபெறும் நமது தளத்தின் கூட்டுப் பிரார்த்தனை கிளப்பில் பங்கேற்று ஒவ்வொரு வாசகரும் அவசியம் பிரார்த்தனை செய்யவேண்டும். நமது தளத்தின் எந்த பதிவுகளை படித்தாலும் படிக்காவிட்டாலும் அவசியம் பிரார்த்தனை கிளப் பதிவை படித்து கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று பிரார்த்தனை செய்வது மிகவும் முக்கியம். அவர்களே நமது உண்மையான வாசகர்கள். பிரார்த்தனை கிளப் பதிவுகளை தவிர்க்கும் வாசகர்கள் தயவு செய்து தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். மிக உன்னதமான ஒரு விஷயத்தை புறக்கணிக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். மற்றவர்களுக்காக ஒரு சில நிமிடங்கள் கூட உங்களால் ஒதுக்க முடியவில்லை என்றால், நீங்கள் ஆண்டவனின் அருளைப் பெறவே முடியாது.

மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும்போது எளிதில் இறைவனது கவனத்தை நீங்கள் ஈர்க்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  பிறருக்காக பிரார்த்திப்பது என்பது சுயநலமற்ற செயல் என்பதால் அது சராசரி பிரார்த்தனையைவிட பன்மடங்கு மகத்துவம் மிக்கது.

உங்கள் மொபைலில் அந்த நேரத்தில் அலாரம் செட் செய்து வைத்துக்கொள்ளவும்.

பிரார்த்தனை பதிவை எந்தளவு பயனுள்ளதாக சுவாரஸ்யமாக தர முடியுமோ அந்தளவு தர நம் முயற்சிக்கிறோம். ஒரு வெள்ளி விட்டு ஒரு வெள்ளி நிச்சயம் பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறும். சில நேரங்களில் பதிவை தயாரிக்க தாமதம் ஏற்பட்டுவிடுகிறது. எப்படியிருப்பினும் வெள்ளிக் கிழமை கட்டாயம் அளிக்கப்படும்.

நம் பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டு அது வெற்றி பெற்ற செய்திகள் மேலும் இரண்டு நமக்கு கிடைத்துள்ளது. அடுத்த பிரார்த்தனை கிளப் பதிவில் அது இடம்பெறும்.

துன்பத்திலும் பிரச்னையிலும் சிக்கித் தவிக்கும் உங்கள் நட்பு மற்றும் சுற்றத்தினரை நமது கூட்டுப் பிரார்த்தனைக்குள் கொண்டு வரவும். கூட்டுப் பிரார்த்தனையின் வலிமை அளவிடற்கரியது.

நன்றி!

மேலும் விபரங்களுக்கு:

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

==========================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் -19

நவக்கிரகங்களின் கடுமையை குறைக்கும் தசாவதார சுலோகம்

நவக்கிரக சன்னதிகள் சிவாலயங்களிலும் நவக்கிரக வழிபாடு சைவத்தில் மட்டுமே காணப்படுகின்றனவே… வைணவ ஆலயங்களில் இல்லையே… எனவே வைணவம் நவக்கிரகங்களை ஏற்றுக்கொள்ளவில்லையா ? என்று நண்பர் ஒருவர் நம்மிடம் கேட்டிருந்தார்.

Dasavatarநவக்கிரங்கள் தங்கள் ஆட்சியை செலுத்தாதவர்கள் மண்ணுலகிலும் சரி விண்ணுலகிலும் சரி யாருமே இல்லை எனலாம். (சனீஸ்வரன் மட்டும் விநாயகப் பெருமான், அனுமன் இருவரையும் பீடிக்க மாட்டார்!). நமது முன்ஜென்ம வினைகளின் படியே நமக்கு ஜாதக கட்டங்கள் அமைகின்றன. பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் அவர்கள் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் நவக்கிரகங்களுக்கு கட்டுப்பட்டேயாகவேண்டும்.

நவக்கிரகங்களின் கடுமையை குறைக்கும் தசாவதார சுலோகம் ஒன்று உண்டு. ஸ்ரீ வேதாந்த தேசிகன் இயற்றிய இந்த ஸ்லோகத்தை படித்து வந்தால் நவக்கிரகங்களின் கடுமை குறைந்து இன்பம் உண்டாகும்.

‘ராமாவதாரஹ் சூர்யஸ்ய சந்த்ரஸ்ய யதுநாயகஹ்
ந்ருசிம்ஹோ பூமிபுத்ரஸ்ய சௌம்யஹ் சோமசீதஸ்சய
வாமநோ விபுதேந்த்ரஸ்ய பார்கவோ பார்கவஸ்ய ச
கூர்மோ  பாஸ்கரபுத்ரஸ்ய சைம்ஹிகேயஸ்ய ஸீகர
கேதுர் மீநாவதாராஸ்ய யே கே சாந்யேபீ கேசராஹ்.

* நவக்கிரங்களின் கோச்சாரப் பலன்கள் கடுமையாக இருக்கும்போது ஆலய தரிசனம், இறை வழிபாடு, அறப்பணிகள், விரதம் முதலானவற்றை செய்து அதன் கடுமையை குறைத்துக்கொள்ள முயற்சிப்பதே புத்திசாலித்தனம். அதை விடுத்து நாம் செய்யும் தவறுகளுக்கும் இயலாமைக்கும் கிரகங்களான தங்கள் மீது பழி போடுவதை நவக்கிரகங்கள் விரும்பமாட்டார்கள். இது பற்றி ஒரு கதை உண்டு. அது பின்னர் பகிர்கிறோம்.

எனவே என்றும் நல்லசிந்தனையுடன் எது வந்தபோதும் கலங்காது இறைவனை கெட்டியாக பற்றிக்கொண்டால்… நாளென்ன செய்யும்? கோளென்ன செய்யும்??

டிப்ஸ் தொடரும்…

==========================================================

Also check…

சேவைக்கு சுவாமி விவேகானந்தர் கொடுத்த பரிசு!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

ஒரே ஷாட் – பந்தயத்தில் வென்ற சுவாமி விவேகானந்தர் – Must Read!

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

“பிச்சையிடும் பணத்தை அவர்கள் தவறாக பயன்படுத்தினால் என்ன செய்வது?” – விவேகானந்தர் கூறிய பதில்!

பசியோடிருந்த சுவாமி விவேகானந்தர் – உணவு அனுப்பிய ஸ்ரீ ராமபிரான் !

அமெரிக்காவிலிருந்து திரும்பியவுடன் சுவாமி விவேகானந்தர் இந்தியா பற்றி கூறியது என்ன?

ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70

யார் உங்கள் தலைவர்?

வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67

யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? — ரைட் மந்த்ரா பிரார்த்தனை கிளப்!

இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை..!

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஆறறிவு மனிதனுக்கு மரம் கற்றுத் தரும் குறள்

நிலம், கடல், வானம் இவற்றை விட பெரியது எது தெரியுமா ?

=============================================================

[END]

5 thoughts on “விவேகானந்தர் செய்த சித்திகள் & நவக்கிரகங்களை குளிர்விக்கும் தசாவதார சுலோகம்!

  1. ஒரே சிப்பிக்குள் மூன்று அழகான முத்துக்களை போல ஒரே பதிவுக்குள் மூன்று அருமையான கருத்துக்கள்.

    விவேகானந்தர் தொடர்புடைய ஒவ்வொன்றும் படிக்க படிக்க சுவாரஸ்யம்தான். என்னவோ தெரியவில்லை அவர் பெயரை கேட்டாலே ஒரு வித நம்பிக்கையும் தைரியமும் பிறக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் போது பள்ளியில் விவேகானந்தர் பற்றிய கட்டுரைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது மறக்க முடியாத ஒரு அனுபவம்.

    இந்த பதிவில் கூறியுள்ள இரண்டு சம்பவங்களும் முற்றிலும் புதியவை. சுவாமிஜியின் மற்றொருமொரு பரிமாணத்தை நமக்கு காட்டுபவை.

    டிப்ஸ் பகுதியில் தசாவதார சுலோகம் எதிர்பாராத பரிசு. நிச்சயம் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    நவக்கிரகங்கள் பற்றிய கதை இப்போதே எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டது. தங்களுடைய வேலைப் பளு தெரியும் என்றாலும் விரைவில் அதை எங்களுக்காக அளிக்கவும்.

    வாழ்த்துக்கள்

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  2. नमस्ते ……

    விவேகானந்தரை பற்றிய இரண்டு நிகழ்வுகளும் அருமை. சுவாமிஜியை பற்றி தொடராக எழுதவும், மகாபெரியவா தொடர் போல். அவரைப் பற்றி படிக்கும் அனைவருக்கும் மனதில் ஒரு உத்வேகம் குடிகொள்ளும்.தங்களை தளத்தின் வாசகியாக ஆன பிறகு தான் அவரைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.

    நவக்ரக சுலோகம் நன்றாக உள்ளது. அனைவரும் படித்து பயன் பெறுவோம்

    धन्यवाथ
    उमा वेंकट

  3. விவேகானந்தரின் சித்துகள் எனபது ஒரு புதிய செய்தி. மேலும் அருமையான சுலோகம் தந்திருக்கிறீர்கள்! பெருமாள் பக்தர்களுக்கு இது ஒரு வரபிரசாதம்! பொருள் புரிந்தால் ஞாபகம் வைத்துகொள்ள எளிதாக இருக்கும் என்பது நமது தாழ்மையான கருத்து. நன்றி

  4. திருமதி உமா வெங்கட் அவர்கள் கூறியதை போலே, ஒரு நல்ல தொடர் SWAMIJI விவேகானந்தரைப்பற்றி தாங்கள் எழுதினால் மிக மிக நன்றாக மனதில் பதியும் சார்.//

    இன்று எல்லோருக்கும் தேவையான ஒன்று.

    சொல்வது ரொம்ப ஈஸி, ஆனால், ஆனால் .

    தங்களின்

    சோ. RAVICHANDRAN

  5. தளம் புதிய பொலிவுடன் மிகவும் அருமையாக உள்ளது. மிக்க மகிழ்ச்சி. (பதிவிடும் போதும் வரவேற்க்கத்தக்க மாற்றங்கள்.)
    **
    தாங்கள் மேலும் மேலும் வளர்ந்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி.
    **
    விவேகானந்தரை பற்றிய இரு பதிவுகளும் மிக அருமை.

    தங்களால் தான் விவேகானந்தரிடம் பற்று அதிகமாயிற்று. அதற்கு மிக்க நன்றி.
    **
    சிட்டி.

Leave a Reply to பிரேமலதா Cancel reply

Your email address will not be published. Required fields are marked *