Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Tuesday, April 16, 2024
Please specify the group
Home > Featured > 99 பொற்காசுகள் வேண்டுமா?

99 பொற்காசுகள் வேண்டுமா?

print
ந்த நாட்டு மன்னனுக்கு எது இருந்தாலும் இல்லாவிட்டாலும் மனதில் ஏனோ நிம்மதி இல்லை. அதற்கு காரணமும் அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

ஒரு நாள் மாறுவேடத்தில் நகர்வலம் செல்லுகையில், ஒரு குயவனின் குடிசையை கடக்க நேர்ந்தது. ஒரு சிறு கோவணம் மட்டுமே கட்டிக்கொண்டு மிக மிக உற்சாகமாக ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டே பானையை செய்துகொண்டிருந்தான். அருகே அவன் குழந்தை உடைந்த மண் பொம்மைகளை வைத்து விளையாடிக்கொண்டிருந்தது.

குடிசையிலிருந்து வெளிவே வந்த அவன் மனைவி, “இன்றைக்கு மழை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்… நேத்தைக்கு மழையால நம்ம பொழைப்பு போச்சு!” என்று அங்கலாய்த்துக்கொண்டாள்.

அதைக் கேட்ட குயவன், “இருக்குற அரிசி இன்னும் ரெண்டு நாளைக்கு வரும்ல… ஏன் புள்ள கவலைப்படுதே?” என்றான்.

இதைக் கேட்ட மன்னனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. ‘மிகப் பெரிய ராஜ்ஜியத்தை ஆளும் சக்கரவர்த்தி நாம், நிம்மதியின்றி இருக்கிறோம். அடுத்த வேலை சோறே நிச்சயமில்லை என்ற நிலையில் வாழும் இந்த குயவன் இத்தனை மகிழ்ச்சியாக இருக்கிறானே… இது என்ன விந்தை’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டான்.

பேசாமல் அந்த குயவனிடமே சென்று காரணத்தை கேட்போமே என்று கருதி அவனிடம் சென்று, “ஐயா… நீங்கள் பேசிக்கிட்டுருந்ததை கேட்டேன்… அடுத்த வேளை சாப்பிடுறதே நிச்சயமில்லைங்குற நிலைமைல எப்படி உங்களால சந்தோஷமா இருக்க முடியுது? எனக்கு காசு பணத்துக்கு பஞ்சமில்லே… இருந்தாலும் நிம்மதியில்லை” என்றான்.

100 gold coins C3

“ஐயா… எனக்கு தேவைகள் எதுவும் பெருசா இல்லே… நாங்க மொத்தம் மூணு பேரு தான். ஒண்டுறதுக்கு குடிசையும், குடிக்க கூழும், மானத்தை மறைக்க துணியும் இருந்தா போதும். ரெண்டாவது என் பொஞ்சாதி இருக்குறதை வெச்சு குடும்பம் நடத்துறவ” என்றான்.

மன்னனுக்கு அந்த பதில் திருப்தியளிக்கவில்லை.

“சரி…சரி… நான் வர்றேன்” என்று சொல்லி விடைபெற்றுச் சென்றான்.

அந்த நேரம் பார்த்து மன்னனின் குலகுரு அவனை சந்திக்க அரண்மனை வந்தார்.

மன்னனின் முகத்தில் குழப்பத்தின் ரேகைகள் இருப்பதை கண்டுகொண்டவர் என்ன விஷயம் என்று விசாரித்தார். மன்னன் நடந்த அனைத்தையும் விவரித்தான்.

குரு சிரித்துக்கொண்டே “மன்னா அந்த குயவன் இன்னும் ’99 காசுகள்’ பட்டியலில்  சேரவில்லை. அதனால் தான் மகிழ்ச்சியாக இருக்கிறான். நீங்கள் ஏற்கனவே ’99 காசுகள்’ பட்டியலில் உறுப்பினர். அதனால் மகிழ்ச்சியாக இல்லை.” என்றார்.

மன்னன் குழப்பத்துடன்… “அது என்ன ’99 காசுகள்’ ?”

“மன்னா இன்றிரவு அந்த குயவனின் குடிசைக்கு என்னுடன் வா புரியவைக்கிறேன்…” என்று கூறி, அன்றிரவு மன்னனை அழைத்துக்கொண்டு இருவரும் மாறுவேடம் பூண்டு குயவனின் குடிசைக்கு சென்றனர்.

“மன்னா நான் அந்த குயவனை வைத்து சில பாடங்களை உனக்கு கற்றுத் தருவேன். அது முடிந்ததும் நடந்த அனைத்தும் அவனுக்கு  மறந்துவிடும்!” என்றார்.

இருவரும் அந்த குடிசைக்கு அருகில் சென்றவுடன் “மன்னா இந்த பொற்கிழியின் முடிச்சை அவிழ்த்து அந்த குயவனின் வீட்டுக்கு முன்பாக போட்டுவிட்டு வா” என்றார். மன்னனும் அப்படியே செய்தான்.

மறுநாள் காலை குடிசையின் கதவை திறந்த குயவன், தன் வீட்டுக்கு முன்னாள் ஒரு பொற்கிழி முடிச்சு அவிழ்க்கப்பட்ட நிலையில் கிடப்பதை பார்த்து, அதை ஆச்சரியத்துடன் கைகளில் எடுத்தான்.

ஆர்வம் மேலிட அவிழ்த்துப் பார்த்தான்… வாவ்… அத்தனையும் பொற்காசுகள். உற்சாகம் மேலிட தனது மனைவியை அழைத்தவன்… “புள்ள… ஓடிவாயேன்… வந்து இந்த அதிசயத்தை பாரேன்… நம்ம குடிசைக்கு முன்னால இது கிடக்கு…” என்றான்.

================================================

Also check…

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம் – MONDAY MORNING SPL 34

================================================

அவள் வந்து பொற்கிழியை பார்த்தாள். தனது விழிகள் மலர…. “ஆண்டவனா பார்த்து தான் நமக்கு இதை கொடுத்திருக்கான்….இனி பத்து பரம்பரைக்கு நாம உட்கார்ந்தே சாப்பிடலாம்….” என்றாள்.

மனைவியிடம் அதை வாங்கி, ‘எதற்கும் எத்தனை இருக்கிறது என்று எண்ணிப் பார்ப்போமே’ என்று கருதி, அத்தனையும் எண்ணினான்… அதனுள் 99 பொற்காசுகள் இருந்தன.

அவன் குழப்பமடைந்தான். “பொதுவா 100 தானே எல்லாரும் போட்டுவைப்பாங்க. 99 தானே இருக்கு. அந்த ஒண்ணு எங்கே போயிருக்கும்…???” இப்படியாக யோசித்தவன்… “அந்த காசு இங்கே தான் எங்கேயோ விழுந்திருக்கணும்” என்று முடிவு செய்து அதை தேட ஆரம்பித்தான்.

எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. உடனே கவலையில் ஆழ்ந்தான். அவன் சிந்தனை முழுக்க அந்த தொலைந்து போன ஒரு காசிலேயே இருந்தது.

மனைவியையும் தேடச் சொன்னான். பசி, தூக்கம், உழைப்பு என அனைத்தையும் மறந்தான். அவனிடம் மகிழ்ச்சி போய் கவலையின் ரேகை படிய ஆரம்பித்தது. மனைவி, குழந்தையிடம் எரிந்து விழ ஆரம்பித்தான்.

இரண்டு நாட்கள் சென்றது. குரு, மன்னனை அழைத்து “இப்போது சென்று அந்த குயவன் எப்படி இருக்கிறான் என்று பார்த்துவிட்டு வந்து சொல்” என்றார்.

மன்னன் சென்று பார்த்தபோது முன்பைப் போல பானை செய்யும் போது குயவன் பாடவில்லை…. அவன் முகம் பொலிவிழந்து காணப்படுவதையும், மனைவி அழுதழுது கண்ணம் சிவந்திருப்பதையும் பார்த்தான்.

திரும்பவும் குருவிடம் வந்து தான் பார்த்ததை சொன்னான்.

“மன்னா அவன் தற்போது ’99 காசுகள்’ பட்டியலில் அதிகாரப்பூர்வமாக இணைந்துவிட்டான். இனி அவன் அப்படித் தான் இருப்பான்!” என்றார்.

“அது என்ன ’99 காசுகள்’ பட்டியல் ? இப்போதாவது சொல்லுங்களேன் குருவே…” வியப்பு தாளாமல் மன்னன் கேட்டான்.

“தங்களிடம் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவையானவை இருந்தும் அதை உணராமல் எப்போதும் மனநிறைவின்றி வாழ்பவர்களுக்கு அளிக்கப்படும் பெயர் தான் ’99 காசுகள்’ பட்டியல். அவர்கள் எப்போதுமே அந்த கூடுதல் ஒன்றுக்காக ஏங்கித் தவிப்பவர்கள். “அந்த ஒன்று மட்டும் கிடைக்கட்டும்…. நான் சந்தோஷமாக இருப்பேன்” என்று கிடைக்கவே கிடைக்காத ஒன்றுக்காக தங்கள் மகிழ்ச்சியையும் நிகழ்காலத்தின் சந்தோஷங்களையும் தள்ளிப்போடுபவர்கள். இவர்களுக்கு ஒருபோதும் அந்த ஒன்று கிடைக்காது. இவர்களும் சந்தோஷமாக இருக்கமாட்டார்கள்!” என்றார்.

ஆம்… அவர் சொல்வது உண்மை. அந்த குயவன் தனக்கு கிடைத்த 99 காசுகளை வைத்தே முன்பைவிட நிம்மதியாக சந்தோஷமாக இருந்திருக்க முடியும். இருப்பினும் அவன் இழந்ததாக கருதிய அந்த ஒரு காசு அவன் நிம்மதியை பறித்தது.

குரு ஏற்கனவே சொன்னது போல, மன்னனுக்கு பாடம் விளங்கியதும், குயவனை முன்பிருந்த அதே நிலைக்கு திருப்ப வேண்டி சில சித்துக்களை செய்தார். அந்த பொற்கிழி திடீரென மறைந்துவிட்டது. அவனுக்கும் நடந்த அனைத்தும் மறந்துவிட்டது. முன்பைப் போலவே மகிழ்ச்சியுடன் வாழத் துவங்கினான்.

இந்த குயவனுக்கு ஏதாவது நன்மை செய்யவேண்டும்… அதே நேரம் அவனது மகிழ்ச்சியும் கெடக்கூடாது என்று கருதிய மன்னன், குருவிடம் ஆலோசித்து, அரசாங்க விருந்து, கோவில் அன்னதானம் மற்றும் இதர விஷயங்களில் மண் சட்டிகளையும் பானைகளையும் அதிகம் பயன்படுத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்தான். இதன்மூலம் குயவனின் பானைகள் அதிகளவு விற்றுத் தீர்ந்தனன். அவன் இல்லறமும் மகிழ்ச்சியுடன் நகர்ந்தது. குயவனைப் போல சோதனைகள் முடிவில் நிச்சயம் நல்லது நடக்கும். கவலை வேண்டாம்.

……………………………….

இருப்பதை வைத்து நம்மால் நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்கமுடியும். ஆனால், கத்தி போய் வாலு வந்த கதையாக பெரிதாக ஒன்றைப் பெறும்போது, நாம் அதற்கு விலையாக நமது நிம்மதியை மகிழ்ச்சியை தொலைத்துவிட்டு மீளமுடியாத சுழலில் சிக்கிக்கொள்கிறோம். அந்தப் போராட்டத்தில் நமது தூக்கம், மகிழ்ச்சி, குடும்ப ஒற்றுமை ஆகியவற்றை இழந்து நமக்கு எதாவது ஒன்று என்றால் ஓடிவரக்கூடிய நட்புகளையும் உறவுகளையும் கூட உதாசீனப்படுத்துகிறோம். இது தான் ‘ ’99 காசுகள்’ பட்டியல்’! ஒரு போதும் நாம் இதில் சேரவேண்டாம்.

நமது சௌகரியங்களை பெருக்கிகொள்ளவோ தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளவோ முயற்சிக்கக்கூடாது என்பது இதன் அர்த்தம் அல்ல. அதற்கு விலையாக நாம் என்ன கொடுக்கிறோம் என்பதை உணர்த்தவே இந்த கதை சொல்லப்படுகிறது. (கொடுத்தவங்களுக்கு தெரியும்!)

நாம் ஓயாமல் உழைப்பது, பொருளீட்டுவது, அனைத்தும் மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும், இனிமையான இல்லறத்திற்கும் தான். என்றும் எப்போதும் மனதை மகிழ்ச்சியாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கவேண்டும். “உலகிலேயே நான் தான் அதிகம் கஷ்டப்படுகிறேன்” என்கிற மனப்பான்மையே ஒரு நோய் தான். ஐம்புலன்கள் ஒழுங்காக அமையப் பெற்று, கூன், குருடு, செவிடு, பேடு நீங்கி பிறந்திருந்தாலே நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். அதற்கே நாம் இறைவனுக்கு நன்றி சொல்லவேண்டும். நமக்கு கிடைத்தவற்றுக்கு நாம் இறைவனுக்கு நன்றி சொல்வோம்.  “உனக்கும் கீழே உள்ளவர் கோடி” என்கிற மணிமொழியை எந்நாளும் மறக்கவேண்டாம்.

நாம் செய்யக்கூடியது ஒன்றே ஒன்று தான் : நமது சம்மட்டியை நிறுத்தவேண்டாம்!

================================================

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================

பிறருக்காக பிரார்த்திக்கிறீர்களா இல்லையா?

வாரந்தோறும் ஞாயிறு மாலை 5.30 – 5.45 மணிக்கு அவரவர் இடங்களில் நடைபெறும் நமது தளத்தின் கூட்டுப் பிரார்த்தனை கிளப்பில் பங்கேற்று ஒவ்வொரு வாசகரும் அவசியம் பிரார்த்தனை செய்யவேண்டும். நமது தளத்தின் எந்த பதிவுகளை படித்தாலும் படிக்காவிட்டாலும் அவசியம் பிரார்த்தனை கிளப் பதிவை படித்து கூட்டுப் பிரார்த்தனையில் பங்கேற்று பிரார்த்தனை செய்வது மிகவும் முக்கியம். அவர்களே நமது உண்மையான வாசகர்கள். பிரார்த்தனை கிளப் பதிவுகளை தவிர்க்கும் வாசகர்கள் தயவு செய்து தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும். மிக உன்னதமான ஒரு விஷயத்தை புறக்கணிக்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும். மற்றவர்களுக்காக ஒரு சில நிமிடங்கள் கூட உங்களால் ஒதுக்க முடியவில்லை என்றால், நீங்கள் ஆண்டவனின் அருளைப் பெறவே முடியாது.

மற்றவர்களுக்காக பிரார்த்திக்கும்போது எளிதில் இறைவனது கவனத்தை நீங்கள் ஈர்க்கிறீர்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.  பிறருக்காக பிரார்த்திப்பது என்பது சுயநலமற்ற செயல் என்பதால் அது சராசரி பிரார்த்தனையைவிட பன்மடங்கு மகத்துவம் மிக்கது.

உங்கள் மொபைலில் அந்த நேரத்தில் அலாரம் செட் செய்து வைத்துக்கொள்ளவும்.

பிரார்த்தனை பதிவை எந்தளவு பயனுள்ளதாக சுவாரஸ்யமாக தர முடியுமோ அந்தளவு தர நம் முயற்சிக்கிறோம். ஒரு வெள்ளி விட்டு ஒரு வெள்ளி நிச்சயம் பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறும். சில நேரங்களில் பதிவை தயாரிக்க தாமதம் ஏற்பட்டுவிடுகிறது. எப்படியிருப்பினும் வெள்ளிக் கிழமை கட்டாயம் அளிக்கப்படும்.

நம் பிரார்த்தனை கிளப்பில் பிரார்த்தனை சமர்பிக்கப்பட்டு அது வெற்றி பெற்ற செய்திகள் மேலும் இரண்டு நமக்கு கிடைத்துள்ளது. அடுத்த பிரார்த்தனை கிளப் பதிவில் அது இடம்பெறும்.

துன்பத்திலும் பிரச்னையிலும் சிக்கித் தவிக்கும் உங்கள் நட்பு மற்றும் சுற்றத்தினரை நமது கூட்டுப் பிரார்த்தனைக்குள் கொண்டு வரவும். கூட்டுப் பிரார்த்தனையின் வலிமை அளவிடற்கரியது.

நன்றி!

மேலும் விபரங்களுக்கு:

‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

================================================

Also check…

யார் மிகப் பெரிய திருடன் ?

எல்லோருக்கும் பொதுவான ஒரு மிகப் பெரிய சொத்து!

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

‘திரு’ உங்களை தேடி வரவேண்டுமா?

தெய்வத்தான் ஆகா தெனினும்….

செய்யும் தொழிலே தெய்வம்; அதில் திறமை தான் நமது செல்வம்!

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

=============================================================

[END]

7 thoughts on “99 பொற்காசுகள் வேண்டுமா?

  1. மிக பெரிய நீதியை கொண்டுள்ள கதை. பல இடங்களில் அடிக்கோடிட்டு காண்பித்திருபப்திலேயே புரிகிறது இவற்றை யாரும் கவனிக்க தவறிவிடக்கூடாது என்கிற உங்கள் அக்கறை.

    நம் தளத்தில் வரும் விஷயங்களை நீதிகளை கடைபிடித்தாலே போதும், மனநிறைவான மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.

    சோதனைக்காக குயவனை பயன்படுத்திய மன்னனும் குருவும் மறுபடியும் அவனை பழைய நிலைக்கே மாற்றியதோடல்லாமல் அவனது தொழில் சிறக்கவும் உதவியது மகிழ்ச்சி.

    நல்ல கதைக்கு நன்றி

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  2. இன்று ஒரு அருமையான நீதிகதையை தங்கள் தளத்தின் மூலம் படித்ததில் மட்டற்ற மகிழ்ச்சி. இருப்பதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசை படக் கூடாது. நானும் 99 காசுகள் பட்டியலில் கண்டிப்பாக சேர மாட்டேன்.

    கூட்டு பிரார்த்தனை இறைவனுக்கு பிடித்த ஒன்று. வார வாரம் அடுத்தவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்து இறைவனினின் பரிபூரண ஆசியை பெறுவோம்

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  3. உண்மை சார். இருப்பதை விட்டு விட்டு பறப்பதை பிடிக்க ஓடுகிறோம்

  4. சரியான NEETHI கதை இந்த காலத்திகேற்ற கதை .

    கட்டாயம் அனைவரும் படித்து உணரவேண்டிய பொக்கிஷம் .

    இதை தந்தமைக்கு மிக்க நன்றி சார்,

    தங்களின்
    சோ ரவிச்சந்திரன்

  5. இந்த கதை ஏற்கனவே படித்து இருந்தாலும், தாங்கள் 99 காசு பட்டியல் என்று புதுமையை புகுத்தி அழகு சேர்த்து இருக்கின்றீர்கள்.
    **
    அருமையான கதை. அதற்கு இறுதியில் தங்களின் விளக்கமும் அருமை.

    கதையின் நீதி சரியாக சென்றடைந்ததில் மிக்க மகிழ்ச்சி.
    **
    தளத்தை பார்ப்பதற்கே மிகவும் அருமையாக இருக்கின்றது. தங்களின் உழைப்பும் இதில் தெரிகின்றது.
    **
    தங்கள் மென்மேலும் வளர்ந்து, இலட்சியத்தை அடைந்து தங்களின் எண்ணம் போல் பலருக்கும் உதவிட எனது வாழ்த்துக்கள்.
    **
    சிட்டி.

  6. என்னை போல் எத்தனையோ பேர் தினமும் கடவுளிடம் எதாவது கேட்டுகொண்டே இருக்கிறோம். நாம் அடைந்த நன்மைகள் கண் முன்னே நின்றாலும் ஒரே ஒரு தீமை நம் கண்ணை மறைத்து விடும். நம்மை சுற்றிலும் எல்லோருமே எதையோ நோக்கி ஓடிக்கொண்டு இருப்பதால் நாங்களும் எதற்காக இந்த பந்தயம் என்று தெரியாமலே ஓடிக்கொண்டு தான் இருக்கிறோம். எதற்களையும் கழ்டதையுமே பார்த்து பார்த்து கசந்து போன என் போன்றோர் உள்ளங்களுக்கு கடவுளின் கருணையை புரிய வைக்க மற்றொரு சந்தர்ப்பமாகவே இந்த பதிவு அமைந்துள்ளது.

    தங்களின் பதிவுகள் எங்களை சிறு வயது பொர்காலதிர்கெ அழைத்து சென்று விட்டது. முன்பெல்லாம் நம்மை சுற்றி இருப்பவர்கள் பவம், பழி பார்த்து தான் எதையும் செய்வார்கள். தற்போதோ, யார் முந்தி கொண்டு செய்கிறோமோ அவர்கள் சமர்த்தர்கள், மற்றவர்கள் வாழ தெரியாதவர்கள்.

    நம் மனதை விசால படுத்தினால் தான் நமக்கு இயற்க்கை என்ன தந்து இருக்கிறது, எதை எல்லாம் நாம் தினமும் இழந்து கொண்டு இருக்கிறோம் என்று தெரியவரும்.மிக அறிய பாதுகாக்க வேண்டிய பதிவு.

Leave a Reply to sravichandran Cancel reply

Your email address will not be published. Required fields are marked *