Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

print
கா பெரியவாவின் பதிவுகளை பொருத்தவரை என்னென்ன பதிவுகளை அளிக்க வேண்டும் என்று நாம் முன்கூட்டியே தீர்மானிப்பதில்லை. நம்பினால் நம்புங்கள். அது தானாக நடக்கும் ஒன்று. எங்கோ யாரோ ஒரு ஜீவனின் அபயக்குரலுக்கும் தேடுதலுக்கும் பிரார்த்தனைக்கும் நம் பதிவுகள் பதிலாக அமைவதுண்டு. இது பல முறை நடந்திருக்கிறது.

இன்று நாம் அளிக்க நினைத்த பதிவு ஒன்று அளிப்பதோ வேறு ஒன்று. பெரியவாவின் விருப்பம் இது தான் போல! சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் இது ஒரு வரப்பிரசாதம்!!

காலம் கடந்து நிற்கும் அரிய விஷயங்களுள் பெரியவா கூறும் பரிகாரங்களும் ஒன்று. கெட்டியாக பற்றிக்கொள்ளுங்கள்! சுபம்!!!

Maha Periyava Kumbam 2
* எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படம் இது. ஒரு பக்கம் கோபுரங்கள். மறுபக்கம் தூக்கிய பாதத்துடன் படியேறும் பெரியவா. அருகே கல்வெட்டு. கூடவே மலர்ச் சரத்துடன் அணுக்கத் தொண்டர் (குழாம்). எதிர்புறம் இருகரமும் கூப்பி வணங்கும் ஒரு சிறுமி! ஆஹா… எத்தனை அழகு! எத்தனை கனிவு!!

நமக்கும் நல்ல காலம் பிறக்குமா ?

1959 -ம் ஆண்டு. மகா பெரியவா சென்னையை அடுத்த வானகரம் என்னுமிடத்தில் வியாஸ பூஜையை செய்து, சாதுர்மாஸ்ய விரதத்தை அநுஷ்டித்து வந்தார்கள். அப்போது நான் தினந்தோறும் வில்லிவாக்கதிலிருந்து சென்று பெரியவர்களை தரிசித்து வருவேன்.

ஒரு நாள் மாலை வேளை. பெரியவர்கள் சந்நிதியில் ஒரு பெண் தள்ளி நின்று தோத்திரம் சொல்லி கொண்டிருந்தாள். அப்போது பெரியவர்கள் என்னை கூப்பிட்டு ,”அந்த பெண் யாத்திரா பிரபந்தம் [சியாமளா தண்டகம் போன்று தோத்திர நூல்] சொல்லிக் கொண்டு இருக்கிறாளா என்று கேள்!” என்றார்கள். அங்கே சென்று கேட்ட பொழுது “ஆமாம்” என்றாள். அந்த தோத்திரத்தை சொல்லி முடித்ததும், ”சுவாமி சந்நிதிக்கு சென்று அங்கே சௌந்தர்யலஹரி சொல்ல சொல்” என்று உத்தரவிட்டார்கள். அவளும் அப்படியே செய்தாள்.

மாலை ஆறு மணிக்கு மேல் பெரியவர்கள் பூஜைக்கு வந்தார்கள். பூஜை ஆரம்பிக்குமுன் அந்த பெண்ணை ”யாரோடு வந்திருக்கிறாய் ?” என்று கேட்டார்கள்.

”பக்கத்துக்கு வீட்டுக்காரர்களோடு வந்தேன்!”

”அவர்கள் இப்போது இருக்கிறார்களா ?”

“நாழிகையாகிவிட்டது என்று அவர்கள் சென்று விட்டார்கள்”.

அதை கேட்டுகொண்டே பூஜைக்கு சென்று விட்டார்கள். பூஜை முடிந்து விட்டது.தீபாராதனை ஆனதும் எல்லோருக்கும் வெளியே வந்து தரிசனம் கொடுத்தார்கள். அப்போது அந்த பெண்ணை அழைத்து, ”நாற்பத்தைந்து நாளைக்கு துளசி மாடத்துக்கு நெய்விளக்கு ஏற்றி பிரதட்சிணம் செய்துகொண்டு வா!” என்று உத்தரவிட்டார்கள்.

பிறகு அங்கே தரிசனத்துக்கு வந்திருந்த கன்னிவாடி ஜமீன் ராம்ஜி அவர்களை அழைத்து, ”இந்தப்பெண்னை அழைத்து போய் வீட்டில் விட்டு விடு”என்றார்கள். தரிசனம் முடிந்ததும் அவரும் அதன்படியே செய்தார்.

அதன் பின்னர் ஒன்றரை மாதம் கழிந்திருக்கும். அந்த பெண் கணவனுடன் மடத்துக்கு வந்தாள்.

அப்போதும் அங்கே நான் இருந்தேன். என்னை பார்த்ததும், ”இந்த மாமாதான் ! இதே மாமாதான்!” என்று என்னை தன் கணவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். பிறகு அவள் கேட்டு கொண்டதன் பேரில், நான் அன்று நடந்ததை அவருக்கு எடுத்து சொன்னேன்.

கடைசியில் தான் அந்தப்பெண் (வயது சுமார் 25 இருக்கும் ) சொன்னாள். ”நாங்கள் இத்தனை நாளும் பிரிந்துதான் இருந்தோம். நமக்கும் நல்ல காலம் பிறக்குமா என்று தான் மனசுக்குள் ஏங்கி கொண்டு பெரியவர்களிடம் வந்து தரிசித்து செல்வேன். அவர்கள் அனுகிரகம்தான் இன்று அவரோடு சேர்ந்து வந்திருக்கிறேன்.”

இன்றைக்கு அவள் குழந்தைகளுடன் சௌக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்று கேள்விப்பட்டேன்.

இப்படி பெரியவா ஒவ்வொரு குடும்பத்திற்கும் செய்துள்ள அனுக்கிரகத்தை சொல்லி கொண்டே போனால் நாள் போதாது. இன்றைக்கு அவர்கள் நம்மிடையே இல்லாவிட்டாலும் ஒவ்வொருவர் இதயத்திலும் குடி கொண்டிருக்கிறார் என்றே நினைக்கத் தோன்றுகிறது.

[நன்றி : தில்லைநாதன் | மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்]

================================================

* துளசியை வைத்து நாம் கூறியிருக்கும் பரிகாரம் ஒன்று இன்று காலை அளித்த பதிவில் இடம்பெற்றுள்ளது. அதையும் பார்க்கவும். Check : இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

Also check : Success Stories of Rightmantra Prayer Club – சந்தான ப்ராப்தி, உத்தியோக ப்ராப்தி, ருண விமோசனம் ‘வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்’ – பிரார்த்தனை நிறைவேறிய அனுபவங்கள்!

================================================

பெரியவா உத்தரவு – குழந்தையில்லா தம்பதிகள் செய்த பாலபிஷேகம்!

Maha Periyava Kumbam`செல்லையா முதலியார் தம்பதிகளுக்கு குழந்தைகள் இல்லை .

பெரியவாளிடம் வந்து பிரார்தித்துக் கொண்டார்கள்.

“ரெண்டு பேரும் பிரதோஷ விரதம் இருங்கோ. அன்னிக்கு சாயரட்சை சிவ தரிசனம் பண்ணிட்டுப் பலகாரம் பண்ணலாம். சுவாமி அபிஷேகத்துக்கு ஒரு குடம் நிறைய பால் கொடுக்கணும். குடத்தை கோயில்லேயே வெச்சுட்டு வந்துடு – யார் வேண்டுமானாலும் எடுத்துட்டு போகட்டும்.”

தம்பதிகளுக்கு குழந்தை பிறந்தது. பெயர் வைக்கணுமே ?

பெரியவாளிடம் வந்தார்கள். “நீ குடம் குடமா பாலாபிஷேகம் பண்ணியிருக்கே. குடம்னா கும்பம். கும்பத்தினாலே ஈஸ்வரனுக்கு அபிஷேகம்! கும்பேஸ்வரன்னு பேர் வை …”

முதலியார் தம்பதிகள் ஆட்சேபிக்கவில்லை. ‘எங்கள் குடும்பத்தில் இந்த பெயர் சூட்டுவதில்லை’ என்று முணுமுணுக்க கூட இல்லை !

கும்பேஸ்வரனை அப்படியே ஏற்று கொண்டார்கள் . !

[நன்றி : ஸ்ரீமடம் பாலு | மகா பெரியவாள் தரிசன அனுபவங்கள்]

================================================

Also check :  பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

எதுக்கு இத்தனை பதிகங்கள்? ஒரே பதிகம் / ஸ்லோகம் அத்தனை பலனையும் தராதா??

================================================

Support Rightmantra in it’s mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

நவராத்திரி & கொலு – ஏழ்மையில் வாடிய குடும்பத்தில் பெரியவா போட்ட ‘ஆனந்த’ குண்டுகள்!

நடமாடும் தெய்வத்தின் மாசற்ற மகிமை!

புடவை முதல் கோலம் வரை – மகா பெரியவா பெண்களுக்கு சொல்லும் டிப்ஸ்!

மஹா பெரியவாவின் ஜட்ஜ்மெண்ட்டும் அனுக்ரஹ தெரபியும்!

அலகிலா விளையாட்டுடையான் ஒரு தாயுடன் விளையாடிய விளையாட்டு!

‘சில சமயம் பகவான் மீதே கோபம் வருகிறதே?’ – தெய்வத்திடம் சில கேள்விகள்! (Part II)

“தினமும் நமக்கு நாமே கேட்டுக்கொள்ள வேண்டியது எதை ஸ்வாமி?” தெய்வத்திடம் சில கேள்விகள்!

தெய்வத்தின் குரலில் தெய்வக் குழந்தையின் வரலாறு!

தர்மம் தழைக்க தோன்றிய தயாபரன் – மகா பெரியவா ஜயந்தி Spl & Excl.Pics!

எது நிஜமான பக்தி?

“கேட்டால் கொடுக்கும் தெய்வம். கேளாமலே கொடுப்பவர் குரு!” – குரு தரிசனம் (37)

தாயுமானவளை அனுப்பிய தாயுமானவன் – குரு தரிசனம் (36)

மடத்துக்கு சென்றால் மகா பெரியவா கேட்கும் முதல் கேள்வி என்ன தெரியுமா? – குரு தரிசனம் (35)

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!  குரு தரிசனம் (33)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

================================================

[END]

3 thoughts on “அபலையின் கண்ணீரை துடைத்த ஆபத்பாந்தவன்!

  1. சிறப்பான பதிவு சுந்தர்ஜி. காலத்திற்கு ஏற்ற பதிவு. எத்தனையோ தம்பதிகள் பிரிந்தும், மக்கட்பேறு இல்லாமலும் இருக்கும் காலகட்டத்தில் வந்திருக்கும் இப்பதிவால் பல பிரார்த்தனைகள் பெரியவா அனுக்ரஹத்தால் நிறைவேறும் என்பது உறுதி.

    நன்றி,
    வெங்கட் சுப்ரமணியம் K.S.
    முகலிவாக்கம், சென்னை – 125

  2. உருகியே வேண்டி நின்றால் உருகிடும் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவர் உள்ளமே!
    எம் அன்பிற்கு வசப்பட்டு அருள் புரியும் ஸ்ரீ காஞ்சி மஹாபெரியவரே!
    எம் மனமதை திறந்து வைத்தால் நீர் அங்கு வருவீரே!
    கும்பிட்டு வேண்டி நின்றால் உயர் குணம் தருவீரே!
    அனைவருக்கும் நலம் மட்டும் வழங்குகின்ற ஸ்ரீ காஞ்சி பரமாச்சாரியாரே!
    எம் சங்கடங்கள் தீர்க்கின்ற சஞ்சீவியே ஓம் சிவகுரு நாதரே!
    எம் சஞ்சலங்கள் மாற்றுகின்ற நிவாரணியே ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு நாதரே!
    பெருகிடும் பாக்கியங்கள் பெரிதாய்த் தருவீரே! ஸ்ரீ காஞ்சி ஜகத்குரு நாதரே!
    எம் நடமாடும் தெய்வமே! எம் கண் கண்ட தெய்வமே!

    என்று கொண்டாடி கொண்டிருக்க தோன்றுகிறது.

    சரியான நேரத்தில், சரியான பதிவு.

    நன்றி அண்ணா…

  3. அருமை சார். நீங்கள் சொன்னது போல இந்த பதிவு யாரோ ஒரு ஜீவனுக்கு அல்ல… பல ஜீவன்களுக்கு கலங்கரை விளக்கமாகும். அதுவும் பெரியவாவே வழி காட்டுகிறார் என்றால் அதன் மகத்துவம் தான் என்ன.

    இந்த புகைப்படத்தை நான் இதற்கு முன்பு பார்த்திருக்கிறேன். ஆனால், இத்தனை உன்னிப்பாக ஆழமாக பார்த்தது கிடையாது. பெரியவா தூக்கிய பாதத்தை பார்க்கும்போது, நடராஜர் ஞாபகம் தான் வருகிறது. பெரியவாவை வணங்கும் அந்த குட்டிப் பெண் அத்தனை அழகு. இது யாரும் சொல்லிக்கொடுக்காமல் தானே வந்த பக்தி என்பது புகைப்படத்தை பார்க்கும்போதே புரிகிறது.

    கும்பத்துடன் பெரியவா நிற்கும் காட்சி கொள்ளை அழகும். இரண்டு புகைபப்டங்க்லாயும் என் மொபைலில் சேமித்துவிட்டேன். நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

Leave a Reply to mano Cancel reply

Your email address will not be published. Required fields are marked *