Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

print
றைவனின் அருளைப் பெற நாம் செய்யும் பக்திகளில் ஒன்பது வகை உண்டு. ‘நவபக்தி’ என்று இதற்கு பெயர். இவற்றில் பூஜை என்பது ஒரு வழி. அதிலும் மானஸ பூஜை என்று ஒன்று உண்டு.

இந்த நவபக்தியின் பெருமையை உலகிற்கு எடுத்துக் காட்டியவர் பக்த பிரகலாதர். அதற்கு பிறகு ஆதி சங்கரர். அதிலும் மானஸ பூஜை செய்வது ஆதி சங்கரருக்கும் பிடிக்கும். அந்த சங்கரனுக்கும் பிடிக்கும்.

சாதாரணமாக நாம் பூஜை செய்யும்போது கடவுளின் விக்ரகமோ, அல்லது படமோ எதிரில் வைத்து நாம் அதனருகில் அமர்ந்து கொண்டு பூஜைக்குகந்த மலர்களைக் கொண்டு, அந்த அந்த தெய்வங்களுக்குரிய மந்திரங்கள், நாமாவளிகளைச் சொல்லிப் பூஜை செய்து பிறகு ஆரத்தி, நிவேதனம் முதலியவற்றைச் செய்வோம். இவை ஒன்றும் இல்லாமல் மனத்தாலேயே இறைவனை குறித்துப் பல ஷோடச உபசாரங்களும் செய்து பூசிப்பது தான் மானஸ பூஜை.

மற்ற பூஜையயைவிட மானஸ பூஜை மிக உயர்ந்தது. பூசலார் நாயனார் செய்த மானஸ பூஜைக்கு மகிழ்ந்து தான் சிவபெருமான் மன்னனின் கோவிலை விடுத்து அவர் எழுப்பிய மனக்கோவிலில் எழுந்தருளியதோடு நாயனமார்களில் ஒருவராகவும் அவரை உயர்த்தினார்.

பரமேஸ்வரன் மட்டுமல்ல பரந்தாமனும் மானஸ பூஜைக்கு முதலிடம் கொடுப்பவர் தான்.

அது தொடர்பாக கோவிந்தன் நடத்திய லீலை ஒன்றை பார்ப்போம்.

==========================================================

Also check : எத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்?

==========================================================

இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் முந்தைய அவதாரமான ஸ்ரீ வியாசராஜா தீர்த்தர் (கி.பி.1447-1548) ஒரு முறை பல்லக்கில் உடுப்பியை நோக்கி யாத்திரை சென்று கொண்டிருந்தார். ஒரு கிராமத்தின் வழியாக செல்லும் போது பாதையின் இரண்டு பக்கமும் துளசிச் செடிகள் மண்டிக்கிடந்தன. கிருஷ்ணருக்கு ப்ரீதியான துளசியை பார்த்தவுடனேயே வியாசராஜருக்கு உடனே பூஜை செய்யவேண்டும் என்று தோன்றியது.

உடனே மானசீகமாக துளசியை பறித்து, அதை அதை மானசீகமாகவே ஒரு அழகிய மாலை போல தொடுத்து தனது இஷ்ட தெய்வமான உடுப்பி கிருஷ்ணருக்கு சூட்டினார். ஆனால், மாலை சரியாக அமையவில்லை. ஏற்றம் இறக்கமாக இருந்தது. மறுபடியும் மாலையை கழற்றி சுருக்கம் ஏதாவது இருக்கிறதா என்று பார்த்து மீண்டும் சூட்டினார். இந்த முறையும் மாலை பகவான் திருவுருவில் சரியாக அமரவில்லை. ஏற்றம் இறக்கமாக இருந்தது.

Udupi

வியாசராஜருக்கு காரணம் விளங்கவில்லை. ஒரு வேளை தனது மானச பூஜையில் ஏதேனும் தவறு நிகழ்ந்திருக்குமோ? பகவான் அதனால் தான் ஏற்றுக்கொள்ளவில்லையோ என்றெல்லாம் விசனப்பட்டார். பல்லக்கு அது பாட்டுக்கு போய்கொண்டிருந்தது.

திடீரென்று, பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது.

“சாமி… நில்லுங்க… சாமி…. நில்லுங்க….” குரல் கேட்டு பல்லக்கிலிருந்து எட்டிப் பார்த்தார் வியாசராஜர். யாரோ ஒரு இடையன் கத்திக்கொண்டே இவர்களை நோக்கி ஓடி வந்துகொண்டிருந்தான்.

பல்லக்கை நிறுத்துமாறு கூறியவர், மூச்சிறைக்க தன்னிடம் வந்து நின்ற ஆட்டிடையனை நோக்கில், “யாரப்பா நீ ? என்ன வேண்டும் உனக்கு?” என்று வினவினார்.

“சாமி… மன்னிக்கணும். நீங்க பெரியவரு. அதுவும் மடாதிபதி. நானோ ஆடு, மாடு மேய்க்கிறவன். உங்க முன்னால நிக்க கூட எனக்கு தகுதி கிடையாது சாமி…. இருந்தாலும் உங்க கிட்டே ரெண்டு வார்த்தை பேச அனுமதி வேணும்” என்றான்.

வியாசராஜர், “அந்த கிருஷ்ணரே மாடு மேய்த்தவர் தானேப்பா…. நீ சொல்ல விரும்புவதை சொல்லுப்பா” என்றார் கனிவுடன்.

“சாமி… உடுப்பி கிருஷ்ணருக்கு நீங்க துளசி மாலை போட முயற்சி பண்ணிக்கிட்டுருக்கீங்க. அது சரியாக பகவான் மீது அமராததால் மனசஞ்சலத்தொடு இருக்கீங்க. நீங்க போடுற மாலைல ஒரு பக்கம் பகவான் கையில இருக்குற மத்துல இடிக்குது. அதுனால தான் ரெண்டு பக்கமும் மாலை சரிசமமா இல்லை. மாலை மத்துல மாட்டிக்காம போட்டீங்கன்னா சரிசமமா உட்காரும்” என்றான்.

வியாசாராஜர் திடுக்கிட்டார். “நாம் செய்வதோ மானஸ பூஜை. அது இவனுக்கு எப்படி தெரிந்தது?” என்று ஆச்சரியப்பட்டவர், “அது எப்படிப்பா உனக்கு தெரியும்?” என்று கேட்டார்.

“சாமி… நானும் பகவானுக்கு மானச பூஜை பண்ணிக்கிட்டுருக்கேன். உடுப்பி போகணும்னு நினைச்சேன். போகமுடியலே. அதுனால துளசியை பறிச்சு மாலை கட்டி மானசீகமா பகவானோட பாதாதரவிந்தத்துல சமர்பிச்சேன். அப்போ தான் நீங்க மாலை போட கஷ்டப்பட்டுகிட்டுருக்கிறது எனக்கு தெரிஞ்சுது. உடனே விஷயத்தை உங்க கிட்டே சொல்ல ஓடிவந்தேன்.” என்றான்.

வியாசராஜர்… “கோவிந்தா உன் கருணையே கருணை” என்று மெய்சிலிர்த்தார்.

Radhe Krishna

மேற்கூறிய சம்பவத்தில் வியாசராஜர் பெருமைக்குரியவரா அல்லது அந்த இடையன் பெருமைக்குரியவனா என்று யோசிப்பதைவிட, இருவரையும் ஒரே தராசில் வைத்து அவர்களது மானஸ பூஜையையும் ஏற்றுக்கொண்டு அருள் பாலித்தானே அச்சுதன், அவனே பெருமைக்குரியவன்!

‘இருவரும் சமமே என்றால் ஏன் வியாசராஜர் பூஜை செய்தபோது மாலை மத்தில் இடித்து பூஜை தடைபட்டது?’ – என்பது தானே உங்கள் சந்தேகம்.

அப்படி நடக்கவில்லை என்றால், மானஸ பூஜையின் மகத்துவத்தை புரியவைக்கும் இந்த நிகழ்வு நமக்கு தெரியாமலே போயிருக்கும். மானஸ பூஜையின் மகத்துவம் காலம் கடந்தும் நமக்கு நினைவில் நிற்கவேண்டியே கோவிந்தன் இப்படி ஒரு லீலையை நிகழ்த்தினான்.

உங்கள் வழிபாட்டில் காதலாகி கசிந்துருகும் அன்பு இருக்கட்டும். உண்மை இருக்கட்டும். ஆடம்பரத்தை விட ஆத்மார்த்தமான பக்தியே இறைவனுக்கு என்றும் பிரியமானது!

எங்கிருந்தோ வந்தான் இடைச்சாதி நான் என்றான்
இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்….

கண்ணன்…. எங்கிருந்தோ வந்தான்…..

==========================================================

ஒரு வேண்டுகோள்!

அடுத்தடுத்த அறப்பணிகள் மற்றும் செலவினங்களால் தளம் தற்போது கடும் நிதிச்சுமையில் இருக்கிறது. வாசகர்கள் மனமுவந்து நன்கொடை அளித்து, தளம் தொய்வின்றி தொடரவும் நம் பணி சிறக்கவும் உதவ வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். சில வாசகர்கள் நமக்கு உதவ விருப்பம் தெரிவித்திருந்தும் அதை செய்ய அவர்களுக்கு சந்தர்ப்பம் அமையவில்லை. அப்படிப்பட்டவர்கள் இப்போது செய்தால் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

உங்கள் உதவிக்கரத்தை எதிர்நோக்கும்…

அன்பன்,
ரைட்மந்த்ரா சுந்தர்

Support Rightmantra in its mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will ?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

==========================================================

நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 18

வீட்டில் அடிக்கடி குழந்தைகள் நோய்வாய்ப்படுகின்றனவா?

tulsiவீட்டில் அடிக்கடி குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் உடல் உபாதைகள் நோய்கள் வந்து அவதிப்படுபவர்கள் துளசிச் செடியை வளர்ப்பதன் மூலம் அதிலிருந்து விடுபடலாம். சூரியனைக் கண்டதும் இருள் மறைவது போல் துளசியின் காற்றுப்பட்டாலே பாவங்களும் நோய்களும் விலகி விடும். துளசி இலையைத் தெய்வப் பிரசாதமாக உண்பவர்க்கு சகல பாவங்களும் தொலையும்.

எவரது இல்லத்தில் துளசிசெடிகள் நிறைய இருக்கிறதோ அந்த இடம் புண்ணியமான திருத்தலம். துளசி செடியில் அஸ்வினி தேவர்கள் வசிப்பதால் அங்கு அகால மரணம், வியாதி முதலியன ஏற்படாது. துளசி தளத்தால் விஷ்ணுவை அர்ச்சனை செய்து பூசிப்பவருக்கு மறுபிறவி கிடையாது.

துளசிச் செடி ஏற்கனவே வீட்டில் வளர்ப்பவர்கள், அதை முறைப்படி பராமரித்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மற்றும் விசேஷ நாட்களில் துளசி மாடத்திற்கு விளக்கேற்றி துளசி ஸ்தோத்திரம் சொல்லி வாருங்கள் நிச்சயம் முன்னேற்றம் தெரியும்.

டிப்ஸ் தொடரும்…

==========================================================

Also check :

உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?

சூளைக்குள் சிக்கிய பூனைக்குட்டிகள் – பாண்டுரங்கன் புரிந்த அதிசயம்! கிருஷ்ண ஜெயந்தி SPL

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)

அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)

ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)

கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)

உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )

கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!

பாண்டுரங்கன் சுமந்த மூட்டை!

==========================================================

Also check :

ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)

பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)

விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)

==========================================================

பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!

மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !

திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)

ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

==========================================================

[END]

6 thoughts on “இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன்!

  1. குருமகிமையை எதிர்பார்த்து தளத்தை ஒப்பன் செய்தால் கோவிந்தனின் மகிமையை கண்டு பரவசமடைந்தேன்.

    கேள்விப்பட்டிராத கதை. கதை கூறும் கருத்து நம் அனைவருக்கும் மிகப் பெரியதொரு மெசேஜை சொல்கிறது.

    உடுப்பி கிருஷணர் படம் அற்புதம். துளசி பற்றிய டிப்ஸ் மிகவும் பயனுள்ளது.

    மேலும் மேலும் இது போன்ற நல்ல கதைகளை எதிர்பார்க்கிறேன். என் குழந்தைகளுக்கு நம் தளத்தில் வெளியாகும் கதைகளை அடிக்கடி சொல்லி வருகிறேன். தற்போது மிக மிக ஆர்வத்துடன் கேட்டு வருகிறார்கள்.

    நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  2. அருமை !!!
    எனக்கு இன்னும் ஒரு பரிமானம் தோன்றுகிறது. அந்த மாடு மேய்த்தவன் மாநசீகமாக சமர்பித்தது பகவானின் பாதாரவிந்தங்களில் அதனாலதான் அவனுக்கு வ்யசராஜரர் சமர்பித்த மாலை மத்தில் இடிபட்டது புலப்பட்டது. இதை உணர்த்தவே இந்த திருவிளையாடல் போலும். அவன் அருளாலே அவன்தாள் வணங்குவோம்!!!!

    மேலும் துளசி செடி மட்டுமே வீட்டில் வளர்க்கும் தாவரங்களில் நிறைய ப்ராண வாயுவை வெளிப்படுதுகிறது எனவே வீட்டுக்கு ஒரு துளசி செடி நாட்டுக்கு ஆரோக்கியமான காற்று!!!!

    சகோதரி பிரேமலதா போன்றவர்களின் செயல் மூலம் நாளைய பாரதத்தின் மீது நம்பிக்கை வருகிறது. வாழ்த்துக்கள் சகோதரி !!!

    நே வீ வாசுதேவன்

  3. சார், நல்ல அருமையான பதிவு.
    எங்கள் வீட்டில் துளசி செடி உள்ளது/ தினமும் பூஜை எனது மனைவி செய்கிறார்கள்.//.

    இந்த மனசார பூஜை நான் என் மனைவிக்கும் குழந்தைகளுக்கும் என்னை அறியாமலே கிட்டதட்ட பல வருஷங்கள் சொல்லிருக்கிறேன் . எங்கள் திருவாரூர் கோவில் நுழைவில் இருந்து வெளியே வருவது வரை ஒரு ஒரு சாமியின் வரலாருவை சொல்ல்லிக்கொண்டே, மற்றும் முசுகொந்த அர்ச்சனை செய்துகொண்டே இரவில் தூங்கும்போது செய்வேன் //. இப்போ குழந்தைகள் வளர்ந்ததும் , நானும் என் மனைவியும் வெளியில்/கோவிலுக்கு செல்லும்போதும் பார்க்கும் பூக்கள் எல்லாம் ஒவ்வொரு கடவுள் பெயரை சொல்லி சமர்ப்பணம் ஆகட்டும் என்றே செல்வோம்.

    பிறகு நானே சொல்லிகிவேன்? கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பது போலே இருக்கே.என்று //
    இது சரியா தவறா என்று தெரியமாலே இன்றும் செய்து வருகிறோம . பஸ்சில்/ட்ரெயினில் எங்கு பயணம் சென்றாலும் இது தொடரும் .
    இப்போ உங்கள் பதிவை பார்த்ததும் மகிழ்வாக இருக்குது.

    தங்களின்

    சோ. ரவிச்சந்திரன்.

      1. நன்றி சார், நங்கள் தினமும் வீட்டில் காலை மற்றும் மாலை வேளையில் பூஜை ரூமில் பூஜை செய்து வருகிறோம்.

        தங்களின்

        சோ. RAVICHANDRAN

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *