கல்வி, செல்வம், ஆற்றல் இந்த மூன்றும் மனிதர்களின் அத்தியாவசியத் தேவைகளாகும். இதில் ஒன்று இருந்து மற்றவை இல்லாவிட்டால் அதில் பயன் எதுவும் இல்லை. கல்வியைத் தரும்போது சரஸ்வதியாகவும், செல்வத்தைத் தரும்போது லக்ஷ்மியாகவும், ஆற்றலைத் தரும்போது துர்கையாகவும், விளங்கி வருவதை “துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி” என்று கூறி வருகிறோம். இந்த மூன்று சக்திகளையும்மூன்று மூன்று தினங்கள் வழிபடுவதாலே நவராத்திரியென்று கூறுகிறோம்.
நவராத்திரி ஒன்பது நாளும், அகிலத்தை காக்கும் அன்னை நமக்காக தவமிருக்கிறாள் என்பது தெரியுமா? ஜகன்மாதாவான அன்னை தவமிருந்து, குழந்தைகளான நாம் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ, முதன் மூன்று நாள் துர்கா தேவியாக இருந்து நல்ல ஆற்றலையும் வீரத்தையும் அருள்பாலிக்கிறாள். அடுத்த மூன்று தினங்கள் லக்ஷ்மி தேவியாக இருந்து நல்ல அழகையும், செல்வத்தையும் அருள்பாலிக்கிறாள். அடுத்து மூன்றாவது மூன்று நாள்கள் சரஸ்வதியாக இருந்து இனிமையான குரலையும் கல்வியையும் தந்து அருள் பாலிக்கிறாள்.
வளர்பிறை பிரதமை முதல் நவமி வரை நவராத்திரியாக, தேவியை பூஜீத்தால் மறுநாள் பத்தாவதுதினம் விஜயதசமியன்று அக்ஷராப்யாசம் (கல்வி கற்றல்) தொடங்கினால் கல்வியில் மேன்மையும், புதுக் கணக்கு போட்டு வரவு வைப்பதால் மிகுந்த லாபமும், ஆயுதங்களையும், வண்டிகளையும் பூஜித்து உபயோகப்படுத்துவதால் செய்தொழிலில் நல்ல வெற்றிகளும் கிடைக்கச் செய்வதால் “விஜயதசமி” என்று அழைக்கப்படுகிறது.
இந்த ஆண்டு விஜயதசமி நமது தளத்தை பொறுத்தவரை அடுத்த பரிமாணத்திற்கு செல்கிறது.
புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுநாள் பிரதமை முதல் ஒன்பது நாள்கள் கொண்டாடிவருவது “சாரதா நவராத்திரி” என்றும், பங்குனி மாத அமாவாசைக்குப் பிறகு பிரதமை முதல் ஒன்பது நாள்கள், “வசந்த நவராத்திரி” என்றும், இதையே ஸ்ரீஇராம நவமியென்றும் அழைக்ககிறார்கள்.
தாய்மார்கள் நவராத்திரி கொலு வைத்து சுமங்கலிகளை அழைத்து ஜகன்மாதாவாக பாவித்து சௌபாக்ய திரவியங்களைக் கொடுத்து மகிழ்வார்கள். ஸ்ரீதேவி உபாசகர்கள் நவராத்திரி விழாவை மிக அரியதொரு வரப்பிரசாதமாகக் கருதி, ஸ்ரீதேவிக்கு பூஜை ஜப பாராயணங்கள் செய்து மகிழ்வார்கள்.
ஸ்ரீராமர், ராஜ்யத்தையும் மனைவியையும் ஒரு சேர இழந்து துன்புற்று ஆரண்யத்தில் தவித்த காலத்தில் நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்து, தேவியின் திருவருள் கைகூடி, பின்னரே சேதுபந்தனம் செய்தார் என்பது தெரியுமா?
தசாவதாரங்களில் மிக மிக சிறப்பானது உயர்வானது ராமவதாரமே. ஏனென்றால், மகாவிஷ்ணு தன் இறைத்தன்மையை பராக்கிரமத்தை எங்குமே காட்டாமல் மனிதனாகவே வாழ்ந்து, வேத நெறிகள் கூறியபடி நடந்து காட்டினார். இது, மனிதனுக்கு கடவுள் சொன்ன பதில். “உன்னால் சாஸ்திர சம்பிரதாயங்கள் கூறும் வாழ்க்கையை வாழமுடியும்!”
கானகத்தில் அத்தனை துயருக்கிடையிலும் இராமர் இந்த விரதங்களை அநுஷ்டித்தார் என்றால், சுகபோக வாழ்க்கையை துய்த்து வரும் நம்மால் அனுஷ்டிக்க முடியாதா என்ன?
==============================================================
Also check : நவராத்திரி — புண்ணியம் தரும் கதை, எளிமையான ஸ்லோகங்கள் & தமிழ் துதிகள் – A FULL PACKAGE!
==============================================================
இராமர் அனுஷ்டித்த நவராத்திரி!
ராமர் சீதையை பிரிந்து தவித்த காலம் மழைக்காலம். இதனால் இராமர் சம்சாரிக்கே உரிய கஷ்டங்களில் தவித்தார். சீதையை பிரிந்ததை எண்ணி பலவாறாக வருந்தினார்.
“லக்ஷ்மணா, சீதை மற்ற பெண்களை போல அல்லவே. அவள் பேரழகி. ஆச்சார குணங்களை கொண்டவள். இராவணனால் அவள் என்னென்ன துன்பத்திற்கு ஆளாகியிருக்கிறாளோ? சீதைக்கு என்னிடம் கொள்ளை பிரியமும் அன்பும் உண்டு என்பதால் இராவணன் அவளை எத்தனை பலவந்தப்படுத்தினாலும் தனது கற்பு நெறி தவறமாட்டாள். ஒருவேளை இராவணனிடம் தன்னை காத்துக்கொள்ள முடியாது சீதை உயிரை விட்டால், நானும் அந்தக் கணமே என் உயிரை போக்கிக் கொள்வேன்” என்றார் மனம் வெதும்பி.
இதற்கிடையே ராமர் படும் துயரை கயிலையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த பரமேஸ்வரன், இராமருக்கு தைரியமும் ஆறுதலும் கூற நாரதரை கிஷ்கிந்தை அனுப்பினார்.
“இராமா… இராவணனுக்கு கேடு காலம் நெருங்கிவிட்டது. அவனை சம்ஹரிக்கவே நீ அவதரித்திருக்கிராய். மேலும் இது பூர்வ ஜென்மம் தொடர்புடையது. அதனால் தான் அவன் சீதையை கவர்ந்து சென்றிருக்கிறான்.
முந்தைய ஜென்மத்தில் சீதை ஒரு முனிவரின் புதல்வியாக பிறந்திருந்தபோது வனத்தில் தவம் செய்துகொண்டிருந்தாள். அவளது அழகில் மயங்கிய இராவணன் அவளை திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால், அவள் மறுத்துவிட்டாள். அவளது விருப்பத்தையும் மீறி அவளை பலவந்தமாக அடைய அவன் முற்பட்டபோது, “ஏ… மதிகேட்டவனே… விருப்பமில்லாத பெண்களை அடியாத் துடிக்கும் உன்னை கொல்வதற்காகவே நான் மீண்டும் பூமியில் பிறப்பேன். நீ தீண்டிய இந்த உடல் இனி எனக்கு வேண்டாம்” என்று கூறி தீயில் பாய்ந்து உயிரை விட்டுவிட்டாள். அடுத்த ஜென்மத்தில் சீதையாக பிறந்த அவளைத் தான் இராவணன் கவர்ந்து சென்றிருக்கிறான். எனவே இதன் மூலம் அவனே அவனது முடிவுரையை எழுதத் தொடங்கிவிட்டான்”
“நீயும் தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இராவணனை சம்ஹரிப்பதற்காக மஹா விஷ்ணுவின் அம்சத்தோடு அவதரித்திருக்கிறாய். அங்கே அசோகவனத்தில் சீதை உன் நினைவாகவே இருக்கிறாள்.”
Join our Voluntary Subscription Scheme
Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.
Our A/c Details:
Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!
You can also Cheques / DD drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.
Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215
“நாரத மகரிஷியே உங்கள் வார்த்தைகளை கேட்டவுடன் எனக்கு சற்று ஆறுதலும் நம்பிக்கையும் ஏற்படுகிறது. என் நினைவாக உள்ள சீதை, சாப்பிட்டாளா, தூங்கினாளா எதுவும் புரியவில்லையே. எனக்கு உணவளிக்காமல் தான் சாப்பிடும் வழக்கம் அவளிடம் கிடையாது. எனவே கவலையாக இருக்கிறது” என்றார் இராமர்.
நாரதர், “இராமா, கவலைவேண்டாம். தேவலோகத்திலிருந்து தேவேந்திரன் கொடுத்தனுப்பிய காமேதேனுவின் பாலை அவள் அருந்தி, பசி, தூக்கம் பற்றிய சிந்தனையின்றி இருக்கிறாள். இராவணனை கொல்வதற்கு நானொரு உபாயத்தை உன்னிடம் சொல்கிறேன். அதன்படி நடப்பாயேயானால் இராவணனின் வீழ்ச்சி உறுதி!”
“என்ன சொல்லுங்கள் மகரிஷியே… செய்ய காத்திருக்கிறேன்”
“தற்போது புரட்டாசி மாதம். இந்த மாதத்தில் அம்பிகையின் நவராத்திரி வைபவத்தை ஒன்பது நாட்களும் விரதம் இருந்து அனுஷ்டித்து ஹோமமும் செய்து வந்தால் எல்லா சித்திகளையும் அடையலாம். சத்ருக்களை வெல்லலாம்.”
தொடர்ந்து தேவியின் சக்தியையும், பிரபாவத்தையும், நவராத்திரி விரதத்தின் வழிமுறைகளையும், விதிமுறைகளையும், மகிமையையும் எடுத்துக்கூறினார்.
உற்சாகத்துடனும் பக்தியுடனும் அதைக் கேட்ட இராமர் நாரதரையே குருவாக கொண்டு, ஒன்பது நாட்கள் விரதத்திற்க்குரிய திரவியங்கள் அனைத்தையும் சேகரித்து மால்யவான் பர்வதத்தில் விதிமுறைப்படி அம்பிகைக்கு பூஜைகள் செய்து நவராத்திரி விரதத்தை அனுஷ்டித்தார்.
இறுதியில், ஒரு நாள் மலையுச்சியில் நள்ளிரவில், தேவி சிம்ம வாகனத்தில் தோன்றினாள்.
இராமர் முன்பு எடுத்து பல்வேறு அவதாரங்களை பற்றி கூறி மெச்சியவள், “உன்னுடன் வானரங்களாக துணைக்கு இருப்பவர்கள் யாவரும் தேவர்களின் அம்சங்களே. உனக்கு உதவியாக இருக்க எனது சக்தி அம்சத்தையும் வழங்குகிறேன். உன் தம்பி, ஆதிசேஷனின் அம்சமாகையல், அவன் இந்திரஜித்தையும் நீ இராவணனையும் வசந்த காலத்தில் வென்று, சீதையை மீட்டு, மீண்டும் இராஜ்ஜியத்தை அடைவீர்களாக!” என்று அருள் புரிந்தாள்.
தொடர்ந்து இராமர் நவராத்திரி விரதத்திற்குரிய பல்வேறு தான தருமங்களை செய்து அதை பூர்த்தி செய்தார்.
நாரதரும், மிகவும் மகிழ்ந்து “உனக்கு வெற்றியும் மங்களமும் கிடைக்கட்டும்” என்று ஆசி வழங்கிவிட்டு சென்றார்.
தொடர்ந்து விஜயதசமி நாளன்று இராமர் சேது பந்தனம் செய்து, இலங்கையை அடைந்து, இராவணனுடன் போரிட்டு அவனை வீழ்த்தி, சீதையை மீட்டு மீண்டும் அயோத்தியை அடைந்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்துவந்தார்.
ஆக, இராமபிரானது வெற்றிச் சரித்திரத்தில் நவராத்திரி முக்கிய பங்காற்றியிருக்கிறது என்பது இதன் மூலம் புலனாகிறது.
நவராத்திரியை போற்றுவோம். அம்பிகையின் அருளை பெறுவோம்!
==============================================================
* மத்தூர் மகிஷாசுர மர்த்தனி அம்மன் கோவில் உழவாரப்பணி மிக மிக சிறப்பாக இனிமையாக நடந்தேறியது. அது பற்றி ஒரு பதிவில் விவரிப்பது கடினம். அந்தளவு ஒரு அருமையான ஆத்மானுபவமாக திகழ்ந்தது. விரைவில் அது பற்றிய சிறப்பு பதிவு இந்த நவராத்திரி ஸ்பெஷல் தொடரில் இடம்பெறும்!
==============================================================
நல்வாழ்வுக்கு ஒரு டிப்ஸ் – 17
கொலுவுக்கு பொம்மை வாங்கி கொடுங்கள்
நவராத்திரியை முன்னிட்டு கோவில்களில் வைக்கப்படும் கொலுவுக்கு பொம்மைகள் வாங்கித் தருவது மிகவும் விசேஷம். நன்மை பயக்கும் ஒன்று.
இன்றே உங்களால் முடிந்த பொம்மைகள் வாங்கி உங்கள் பகுதியில் உள்ள கோவிலில் வைக்கப்படும் கொலுவுக்கு அளித்திடுங்கள். அம்பிகையின் அருளை பெற்றிடுங்கள்.
அவரவர் பிரார்த்தனைக்கு ஏற்ப அந்தந்த பொம்மைகள் வாங்கித் தரலாம். உதாரணத்திற்கு புத்திர பாக்கியம் வேண்டுவோர், குழந்தையை கணவன் மனைவி தொட்டிலில் ஆட்டும் பொம்மை, திருமண வரம் வேண்டுவோர் திருமண செட், நாதஸ்வர செட், வேலை வேண்டுவோர் வயலில் விவசாயிகள் வேலை செய்யும் செட் இப்படி..!
* வாசகர்கள் தங்கள் இல்லங்களில் எடுத்த கொலு புகைப்படங்களை, தங்கள் பெயர் மற்றும் அலைபேசி எண்ணை குறிப்பிட்டு நமக்கு editor@rightmantra.com என்ற முகவரிக்கு அனுப்பினால் அது இங்கு வெளியிடப்படும். (பதிவில் கொலு புகைப்படத்துடன் சம்பந்தப்பட்டவர்களின் பெயர், ஊர் மட்டும் வெளியிடப்படும்.)
** வாட்ஸ் ஆப்பில் அனுப்ப விரும்புகிறவர்கள் பெயர், மற்றும் ஊரை குறிப்பிட்டு 9840169215 என்ற எண்ணிற்கு அனுப்பலாம்.
டிப்ஸ் தொடரும்…
==============================================================
Also check :
அமிழ்தினும் உயர்ந்த அன்னையின் ‘வாயூறுநீர்’ நிகழ்த்திய அற்புதம்!
இனிதே நடைபெற்ற நம் நவராத்திரி (ஆண்டு) விழா!
உங்கள் கணக்கை பதிக்க வேண்டிய ஏடு எது தெரியுமா?
சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!
“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”
ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?
பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!
முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!
அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்!
ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!
ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!
சபரியின் பக்தியும் இழந்த பொலிவை பெற்ற பம்பை நதியும்! இராமநாம மகிமை (4)
அனுமனுடன் யுத்தம் செய்த இராமர்! எங்கே? ஏன்? – இராமநாம மகிமை (3)
ராம்சுரத்குமார் விளக்கிய ராமநாம மகிமை – (2)
கருடனின் கர்வத்தை அழித்த சிவபெருமான் – இராமநாம மகிமை (1)
உங்களை ரீசார்ஜ் செய்துகொள்ள உதவும் ஒரு பவர் ஹவுஸ் — பார்க்க வேண்டிய திரைப் பொக்கிஷம் — (1 )
கண்ணை திறந்தால் பாண்டுரங்கன்; மூடினால் சிவபெருமான்!
==============================================================
Also check :
ஜகந்நாதன் சாப்பிட்ட மாம்பழங்கள் – உண்மை சம்பவம்! திருமால் திருவிளையாடல் (3)
பக்தனுக்காக தேரோட்டத்தை நிறுத்திய ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (2)
விரட்டப்பட்ட பக்தர், தடுத்தாட்கொண்ட பூரி ஜகந்நாதர் – திருமால் திருவிளையாடல் (1)
==============================================================
பூவிருந்தவல்லி to சுருட்டப்பள்ளி – அடியார்களின் அடியொற்றி ஒரு பயணம்!
மகா பெரியவாவும் மத்தூர் மஹிஷாசுரமர்த்தனி அம்மனும் !
திருமலை பாதயாத்திரை; அம்மன் நிகழ்த்திய அற்புதம்! ஆடி ஸ்பெஷல் (2)
ஆடியின் சிறப்பு & துர்முகனை வதைத்த சதாக்ஷி – ஆடி ஸ்பெஷல் (1)
ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!
==============================================================
[END]
நவராத்திரி ஸ்பெஷல் முதல் பதிவே அமர்க்களம். ராமருக்கும் நவராத்திரி யுடன் தொடர்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி
இந்த அருமையான நவராத்ரியை பயன்படுத்தி நாமும் அம்பிகையை வழிபட்டு எல்லா வளமும் பெறுவோம்
நம் தளம் விஜய தசமி அன்று அடுத்த பரிமானத்திற்ற்கு செல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி. தங்கள் தளத்துடன் நாங்களும் வளர்ந்து வருகிறோம். அதாவது நல்ல பல தகவல்களை கற்று அறிந்து வருகிறோம்.
மத்தூர் பதிவை எதிர்பார்க்கிறோம்
வாழ்க .. வளமுடன்
நன்றி
நவராத்திரிக்கு இதைவிட சிறப்பான பதிவு இருக்கமுடியாது. புதிய நம்பிக்கை தரும் அருமையான விஷயங்கள் கொண்டுள்ள இந்த பதிவு நம் தள நண்பர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.
இராமபிரான் நவராத்திரி விரதம் அனுஷ்டித்து இராவணனை வென்று இழந்த ராஜ்ஜியத்தை மீட்டு சீதா பிராட்டியுடன் இணைந்த புராணம் இப்போதுதான் எனக்கு நம் தளம் மூலம் தெரியும்.
சுந்தருக்கு நன்றி.
நவராத்திரி சிறப்பு மிகவும் நன்றாக இருக்குது சார்,
நாரதரால் ராமனும் , ராமனால் நவராத்திரியும் நவராத்திரியால் எல்லோரும் உங்களால் நாங்களும் நன்றாக இருக்க துர்கா , லஷ்மி , சரஸ்வதி நம் எல்லோருக்கும் அருள் தருவாள் .
வாழ்த்துக்கள் மற்றும்
வணக்கத்துடன்
தங்களின்
சோ ரவிச்சந்திரன்.
நல்ல பதிப்பு சார்.
இன்றைய பதிவை படித்த பின்பு…நவராத்திரி கொண்டாட்டத்திற்கு தயாராகிவிட்டேன்.
ராம பிரான் வாழ்வியல் நமக்கு நவராத்திரியின் முக்கியதுவத்தை எடுத்து சொல்கிறது.ராம அவதார மகிமையையும் ஒரே வரியில் சொன்னது சிறப்பு. ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் போன்ற பதிவு. பதிவின் கடைசியில் உள்ள டிப்ஸ் சூப்பர். கொலு பொம்மை வாங்கி தர முயல்கிறேன் அண்ணா..நவராத்திரி ஸ்பெஷல் பதிவில் மத்தூர் உழவாரபணி பதிவும் இடம்பெறும் என்ற அறிவிப்பு தற்போதே – மகிழ்ச்சி ஊட்டுகிறது.
முதல் சிறப்பு பதிவு- மிகவும் முத்தான சிறப்பு பதிவே.
நவராத்திரி சிறப்பு பதிவு அருமையாக இருந்தது நன்றி .