Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 17, 2024
Please specify the group
Home > Featured > ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

print
அக்டோபர் 5. “உயிர்களை நேசியுங்கள்! ஜீவகாருண்யமே மோட்சத்தின் திறவுகோல்!!” என்று முழங்கிய திருவருட்பிரகாச வள்ளலாரின் பிறந்த நாள் இன்று. ஏழைகளின் பசிப்பிணியை போக்குவதற்காக வடலூரில் சத்திய தருமச்சாலையை நிறுவி அணையா அடுப்பை ஏற்றி வைத்து தினமும் பல்லாயிரம் ஏழைகளின் பசிப்பிணியை போக்கி வருபவர்.

அவர் தனது வாழ்க்கையில் நிகழ்த்திய எண்ணற்ற அற்புதங்களுள் இரண்டினைப் பார்ப்போம். இரண்டிலும் நமக்கு எண்ணற்ற செய்திகள் ஒளிந்துள்ளன.

பிள்ளைகளுக்கு படிப்பு ஏறலை சாமீ….

ள்ளலார் ஒரு முறை வேங்கட ரெட்டியார் என்னும் அடியவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது ஒரு நடுத்தர வயது தம்பதியினர் வள்ளலாரைக் காண வந்தனர்.

அவர்கள் வள்ளலாரை பணிந்து நின்று வணக்கம் தெரிவித்தனர்.

Vallalar 1வந்தவர்களுக்கு தமது நல்லாசிகளை வழங்கிய அடிகளார் அவர்கள் வந்த காரணத்தை வினவினார்.

அப்போது அவர்கள் தாங்கள் அழைத்து வந்த தங்கள் இரண்டு பிள்ளைகளை காண்பித்து, “இவர்கள் எங்கள் பிள்ளைகள். படிப்பில் துளியும் நாட்டமில்லை. சுட்டுப்போட்டாலும் இவர்களுக்கு படிப்பு வராது போலிருக்கிறது. நீங்கள் தான் கொஞ்சம் ஏதாவது ஒரு வழி சொல்லவேண்டும் சுவாமி” என்று கண்ணீர் மல்க வேண்டுகோள் விடுத்தனர்.

தங்கள் பிள்ளைகள் மீதும் அவர்கள் கல்வி மீதும் அவர்கள் கொண்டுள்ள ஈடுபாடும் அக்கறையும் வள்ளலாரை நெகிழச் செய்தது.

“உங்கள் பிள்ளைகளின் படிப்பை பற்றி இனி கவலைப்படவேண்டாம். அதற்கொரு வழி செய்வோம்” என்று கூறி வீட்டுக்குள் போனார்.

சுவாமிகள் வீட்டுக்குள் சென்றதும் இங்கே காத்திருந்த பெற்றோர் இருவரும் ஒருவருக்கொருவர் பலவாறு பேசிக்கொண்டனர்.

“சுவாமி மந்திரம் போட போயிருப்பார் போல!”

“அதெப்படி அத்தனை சரியாக கூறுகிறாய்??”

“அவருக்கு தான் மந்திரம் தந்திரம் சித்துவேலை எல்லாம் தெரியுமே”

“இல்லே… நீ நினைக்கிறது தப்பு. இது போல சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் சாமி அதை செய்யமாட்டாரு”

“அதெப்படி நாம சொல்றது? சாமி எதைச் செய்வாரு எதைச் செய்யமாட்டாருன்னு யாருக்கு தெரியும்”

“அதுவும் சரி தான்!”

“ஒருவேளை தாயத்து கீயத்து மந்திரிச்சு பிள்ளைகள் கையில கட்டிவிடுவாரோ?”

“இருக்கலாம்… எதுவா இருந்தாலும் அவர் வெளியே வந்தாத் தான் தெரியும்”

– இப்படியாக போய்கொண்டிருந்தது அவர்களின் சம்பாஷனை.

"

சற்று நேரத்திற்கெல்லாம் வள்ளலார் அறையிலிருந்து வெளியே வந்தார். வந்தவர் கையில் ஒரு காகிதம் இருந்தது.

வள்ளலார் வருவதைப் பார்த்தவுடன் தம்பதிகள் தங்கள் பேச்சை உடனே நிறுத்திக்கொண்டு, மற்றவர்களை அமைதியாக இருக்கும்படி ஜாடை காட்டினர்.

“உங்கள் பிள்ளைகளின் படிப்புக்கு மந்திரம், தந்திரம் செய்வதெல்லாம் வீண் வேலை!”

தம்பதிகளுக்கு உடனே ஜன்னியே வந்துவிடும் போலிருந்தது.

“சாமீ… ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சுடுங்க…. உங்களை எதுவும் சொல்லலை… ஒரு ஆர்வத்துல பேசிக்கிட்டுந்தோம்” என்றனர் தம்பதியினர் நா குழறியபடி.

“பரவாயில்லை… குற்றமில்லை… இதில் கலைவாணியை துதித்து மூன்று பாடல்களை எழுதியிருக்கிறேன். பிள்ளைகள் தினசரி இதைப் படித்து வந்தாலே போதும்… படிப்பில் அவர்களுக்கு தானாக ஆர்வம் வந்துவிடும்”

“அப்படியே செய்கிறோம் சாமி”

அவர்களிடம் ஒரு பாடலை தான் பாடிக்காட்டி எப்படி படிக்கவேண்டும் என்பதை உணர்த்தினார்.

கலைமகளார் திருப்பதிகம்

தவளமலர்க் கமலமிசை வீற்றிருக்கும் அம்மனையைச் சாந்தம் பூத்த
குவளைமலர்க் கண்ணாளைப் பெண்ணாளும் பெண்ணமுதைக் கோதி லாத
பவளஇதழ்ப் பசுங்கொடியை நான்முகனார் நாஓங்கும் பாவை தன்னைக்
கவளமத கயக்கொம்பின் முலையாளைக் கலைமாதைக் கருது வோமே.

சங்கம்வளர்ந் திடவளர்ந்த தமிழ்க்கொடியைச் சரச்சுவதி தன்னை அன்பர்
துங்கமுறக் கலைபயிற்றி உணர்வளிக்கும் கலைஞானத் தோகை தன்னைத்
திங்கணுதல் திருவைஅருட் குருவைமலர் ஓங்கியபெண் தெய்வந் தன்னைத்
தங்கமலை முலையாளைக் கலையாளைத் தொழுதுபுகழ் சாற்று கிற்பாம்.

கலைபயின்ற உளத்தினிக்குங் கரும்பினைமுக் கனியைஅருட் கடலை ஓங்கும்
நிலைபயின்ற முனிவரரும் தொழுதேத்த நான்முகனார் நீண்ட நாவின்
தலைபயின்ற மறைபயின்று மூவுலகும் காக்கின்ற தாயை வாகைச்
சிலைபயின்ற நுதலாளைக் கலைவாணி அம்மையைநாம் சிந்திப் போமே.

இந்த பாடல் தான் அது.

படிப்பில் ஆர்வம் இல்லாத பிள்ளைகள் இந்த பாடலை படிக்கச் செய்து வர, அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் வரும். நன்றாக படித்து முன்னேறுவார்கள். பிள்ளைகள் இதை படிக்க கூட ஆர்வம் காட்டவில்லை என்றால் அவர்களுக்காக பெற்றோர்கள் படித்து வரவேண்டும்.

To download the above slokam, please check :
http://rightmantra.com/wp-content/uploads/2015/10/Saraswathi-Padhigam2.pdf

==============================================================

Please check : ஒரு பாவமும் அறியாத எனக்கு மட்டும் ஏன் இப்படி? கேள்வியும் பதிலும்!

==============================================================

அடுத்து மற்றொரு சம்பவம்…!

field

ஜீவகாருண்யம் செய்த அறுவடை!  

ள்ளலார் தனது சத்திய தருமச் சாலையில் வேலாயுத முதலியார் என்னும் நண்பருடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தார்.

சுவாமிகள் தனது அன்பர்கள் யாவர்க்கும் “கொல்லா நெறியே குவலயம் போற்றும் நெறி” என்பதை அறிவுறுத்தி, ஊன்சுவைக்காக பிற உயிர்களை கொன்று புசிக்கவேண்டாம் என்பதை அறிவுறுத்தியிருந்தார். தம்மை பின்பற்றுவதாக கூறுபவர்களிடம் இதை சத்தியம் கூட செய்து வாங்கிக்கொள்வார்.

அப்போது வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றி வரும் அருணாச்சலம் மற்றும் வெங்கடாச்சலம் என்னும் இரண்டு அன்பர்கள் அவரை காண வந்தனர்.

இரு அன்பர்களும் ஒரே நேரடித்தில் தன்னை காண வந்தது வள்ளலாருக்கு வியப்பை தந்தது.

“எது சேதி… இருவரும் ஒன்றாக வந்திருக்கிறீர்களே…” என்றார் மகிழ்ச்சியுடன்.

அப்போது இருவரும், “சுவாமிகளுக்கு நாங்கள் செய்து கொடுத்த சத்தியத்தை இதுவரை காப்பாற்றி வருகிறோம். இனியும் காப்பாற்றுவோம்.” என்றனர்.

“ஜீவகாருண்யமே மோட்சத்தின் திறவுகோல்”

அருணாச்சலம் சொன்னார்…. “ஆம்… சுவாமி… அது மட்டுமல்ல… ஜீவகாருண்யமே நல்வாழ்வுக்கும் திறவுகோல் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டோம் சுவாமி”

"

“உங்கள் பேச்சை கேட்டு உங்கள் அருளுரைக்கு செவிமெடுத்து அப்படியே நடந்துகொண்டோம். அதற்குரிய பலனை கண்கூடாக கண்டோம் சுவாமி!”

வள்ளலாருக்கு அனைத்தும் தெரியும் என்றாலும், அவர்கள் தங்கள் வாயாலேயே அனைத்தும் சொல்லட்டும் என்று அமைதியாக இருந்தார்.

“சுத்த சன்மார்க்கத்திற்கு திரும்பி புலால் உணவை மறுத்து சைவத்துக்கு மாறி விட்டோம். போன போகத்தைவிட இந்த போகத்தில் ஐந்து மடங்கு வயல் விளைச்சலை தந்திருக்கிறது சுவாமி…!”

“அப்படியா மகிழ்ச்சி…! எல்லாம் அருட்பெருஞ்சோதியின் தனிப்பெருங்கருணை!” என்றார் அடிகளார் சிரித்துக்கொண்டே.

“அதுமட்டுமல்ல சுவாமி… நாங்கள் ஒப்புக்கொண்டபடி விளைச்சலில் விளைந்த மொத்த நெல்லில் கால் பகுதி சத்திய தருமச்சாலைக்கு தந்துவிடுகிறோம் சுவாமி!”

“புலாலை மறுப்பதே பெரிய அறம். நீங்களோ பசிப் பிணி தீர்க்கும் அறத்திலும் பங்கெடுப்பதாக சொல்கிறீர்கள்! நன்று நன்று!!” என்று உவகையடைந்தார் வள்ளலார்.

வந்த அடியார்களும் வள்ளலாரிடம் விடைபெற்று மகிழ்ச்சியுடன் சென்றார்கள்.

மன்னுயிர் ஓம்பி அருளாள்வார்க்கு இல்லென்ப
தன்னுயிர் அஞ்சும் வினை. (குறள் 244)

Join our Voluntary Subscription Scheme

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. Support Rightmantra by becoming Voluntary Subscriber.

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

You can also Cheques / DD  drawn in favour of ‘Rightmantra Soul Solutions’ and send it to our office address mentioned below through courier or registered post.

Rightmantra Soul Solutions
Room No.64, II Floor, Murugan Complex,
(Opp.to Data Udupi Hotel), 82, Brindavan Street,
West Mambalam, Chennai-600033.
Phone : 044-43536170 | Mobile : 9840169215

சுவை தெய்வமாக வணங்கும் நம் தாய்த்திருநாட்டில், தற்போது முற்போக்குவாதிகள் (?!) “பசுமாமிசத்தை சாப்பிடுவோம். என்ன செய்யமுடியுமோ செய்துகொள்ளுங்கள்” என்று சவால் விடுகின்றனர். ஊன் சுவை உண்டு உயிர் வளர்ப்பவர்களும் அதை எந்த விதத்திலாவது நியாயப்படுத்தவே முனைகின்றனரே தவிர அது தவறு என்று உணர்வதில்லை.

“அவர் சாப்பிடுகிறாரே…? நான் மட்டும் சாப்பிட்டால் தவறா??” என்று தான் வாதங்கள் நீள்கிறது.

இதற்கு பதில் என்ன? அடுத்த பதிவில்…!

==============================================================

Also check :

வள்ளலாரின் கடுக்கணை திருடிய திருடன் – கண்டதும் கேட்டதும் (4)

தண்ணீரில் விளக்கெரிந்த அதிசயம்!

வாரியார் நினைத்தார்; வள்ளலார் நடத்தி வைத்தார்!

அது என்ன ‘அனுபவ வாஸ்து’ ?

வள்ளலாரின் சத்திய பூமியில் சில மணித்துளிகள் – வடலூர் தைப்பூசம் SPL

பல்வேறு தானங்களும் அவற்றின் பலன்களும் – A COMPLETE GUIDE

ஆதரவற்றவர்களின் ஆலமரம் – இதோ வடலூரில் ஒரு வாழும் வள்ளலார்!

வடலூரின் வாழும் வள்ளலாரின் கருணை இல்லம்! ஒரு ரவுண்ட்-அப்!!

இளநீர் வியாபாரி செய்த தானம்!

எது உண்மையான தர்மம்?

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மனித குலம் அவசியம் செய்ய வேண்டிய அறங்கள்!

மனமிருந்தால் மார்க்கமுண்டு!

“எனக்கு வசதியில்லே. வசதியிருந்தா நான் நிறைய தர்ம காரியங்கள் செய்வேன்” என்று சொல்பவரா நீங்கள்?- MUST READ

ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல்….

இறைவனுக்கு மிக அருகில் நம்மை கொண்டு செல்வது எது ?

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

“எல்லாம் அவ பாத்துப்பா!”

==============================================================

[END]

 

3 thoughts on “ஜீவகாருண்யம் செய்த அறுவடை!

  1. வாடிய பையிரை கண்டதும் வாடியவரல்லவா/..

    வள்ளலாரின் பிறந்த நாள் இன்று/.
    பசி பிணியை போக்கிய மகான் . அவர் புகழ் வளரட்டும்/

    தங்களின் நினைவாற்றலுக்கு கடவுள் அருள் எப்போதும் உண்டு சார் .

    வாழ்க நீங்கள்.

    தங்களின்

    சோ. ரவிச்சந்திரன்
    கைகா,
    கார்வார், கர்நாடகா

  2. குழந்தைகள் படிக்கவில்லை என்று கவலைப் படும் தாய்மார்களுக்கு வள்ளலாரின் பாடல் ஒரு அரு மருந்து என்றே சொல்ல வேண்டாம். எல்லா மாணவச் செல்வங்களும் இந்த பாடலை படித்து இன்புற வேண்டும்.

    இந்த பாடலை பிரிண்ட் எடுத்து ஸ்கூல் படிக்கும் படிப்பில் ஆர்வமில்லாத குழந்தைகளுக்கு கொடுக்கிறேன்.

    இரண்டாவது நிகழ்வான அருட்பெரும் சோதியின் கருணையை நினைத்து மெய் சிலிர்த்தேன்.

    //யாரிடத்தில் தயவு அதிகரிக்கப் பட்டு இருக்கிறதோ அவரிடத்தில் கடவுள் இருக்கிறார். பகை இல்லாத ஒருவனே அமைதியாக வாழ முடியும். அன்பு வாழ வைக்கும். ஆசை தாழ வைக்கும். எல்லா உயிர்களும் இறைவனுடைய கோயில்கள். அருள், அறம், அன்பு, உண்மை உடையவனே வாழ்க்கையில் இன்பம் பெறுகிறான்// —வள்ளலார்

    நாமும் வள்ளலாரின் ஜீவகாருண்ய கொள்கைகளை பின்பற்றுவோம்

    வாழ்க …. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  3. அரு மருந்து என்றே சொல்ல ” வேண்டும். ” வேண்டாம்’ என்று பிழையாக தட்டச்சு செய்து விட்டேன்

Leave a Reply to S. RAVICHANDRAN Cancel reply

Your email address will not be published. Required fields are marked *