Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Wednesday, April 17, 2024
Please specify the group
Home > Featured > ‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்!

‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்!

print
தாங்க முடியாத துன்பமா? ஏதாவது பிரச்னையா ? நம்பியவர்கள் எல்லாரும் கைவிட்டுவிட்டார்களா?

“யானைக்கு தும்பிக்கை, மனிதனுக்கு நம்பிக்கை” என்று சொல்வார்கள். நம்பிக்கையே பாதி பலம்.  இருந்தாலும் அதையும் தாண்டி  விஷயங்கள் இந்த உலகில் இருக்கின்றன. நமது அறிவுக்கு புலப்படாத விஷயங்கள் அவை.

இப்போது நாம் சொல்லப்போவது ஒரு சூட்சும ரகசியம். படிப்பவர்கள் பாக்கியசாலிகள்.

Lord muruga

பிரச்சனைகளால் நிலைகுலைந்து தடுமாறி, விழப்போகும் நிலை வந்தால், அடுத்த நொடி, யாரிடமாவது ஒரு ஐந்து நிமிடங்கள் முருகனின் பெருமையை பேசுங்கள். உங்களுக்கு உடனடியாக எங்கிருந்தோ ஒரு உதவிக்கரம் நீளும். இல்லை அதை சமாளிப்பதற்குரிய சக்தியோ சூழலோ கிடைக்கும்.

"

ஒருவேளை இறைவனின் பெருமையை ஒரு சில நிமிடங்கள் பேசுவதற்கு கூட உங்களுக்கு யாரும் இல்லையென்றால் மிகவும் அர்த்தமற்றதொரு வாழ்க்கையை இதுவரை வாழ்ந்திருக்கிறீர்கள் என்று அர்த்தம்!

சரி விடுங்கள்… பேச யாரும் இல்லையென்றால் என்ன… முருகனின் பெருமையை ஒரு ஐந்து நிமிடம் படியுங்கள். நமது தளத்தில் முருகனின் பெருமை குறித்து மட்டும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகள் வெளியாகியிருக்கின்றன.

கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான முருகனின் பெருமையை பேசுவதும் படிப்பதும் உங்கள் வினையையே மாற்றிவிடும். காசா பணமா? சும்மா பரீட்சித்து பாருங்களேன்.

தன்னை துதிக்காதவர்களுக்கு கூட தண்டபாணி அருள் செய்த கதைகள் பல இருக்கின்றன.  (Check : துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி!) எனவே முருகனை கூப்பிட்டு முறையிடுங்கள். முற்றிய வினை தீரும்.

இதோ ஒரு உண்மை சம்பவம்….

Kannadasan-With-Devar copyகண்ணனை கூப்பிட்டால் முருகன் வந்து நின்ற அதிசயம்!

தேவரின் ‘தெய்வம்’ திரைப்படம் வளர்ந்த விதத்தை பற்றியும், கவியரசு கண்ணதாசன் அப்படத்திற்கு பாடல்கள் புனைந்த சம்பவங்களையும் பற்றி பல பதிவுகளை தளத்தில் அளித்திருக்கிறோம்.

டைட்டில் ஸாங்கான “மருதமலை மாமணியே” துவங்கி அனைத்து பாடல்களும் பட்டையை கிளப்பியிருப்பார்கள்.

அப்படத்தில் இடம்பெற்ற பாடல்களுள் ஒன்று….

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் – அங்கேகுவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்

தெய்வயானை திருமணமாம் திருப்பரங்குன்றம்
தெருமுழுதும் பக்தர்கள் ஆனந்த மன்றம்
தங்கம் வைரம் பவளம் முத்து தவளும் தெய்வானை
தாங்கிக் கொண்டாள் வாங்கிக் கொண்டாள் முருகப் பெம்மானை

குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம் – அங்கே
குவிந்ததம்மா பெண்களெல்லாம் வண்டாட்டம் கொண்டாட்டம்

உருகிச் சொல்லுங்கள் முருகனின் பேரை
நெருங்கிச் செல்லுங்கள் குமரனின் ஊரை
வேல் முருகா! வெற்றி வேல் முருகா!
சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்
கந்தனுக்கு வேல் வேல்! முருகனுக்கு வேல் வேல்!

திருப்பரங்குன்றம் தலத்தில் பெங்களூர் ரமணியம்மாள் பாடிய பாடல் இது. கேட்டாலே உடலும் உள்ளமும் புத்துணர்ச்சி பெறும் அளவுக்கு அத்தனை மங்களகரமான பாடல் இது.

தங்கம் வெள்ளி பவழம் முத்து தவழும் தெய்வானை
வாங்கிக் கொண்டாள் தாங்கிக் கொண்டாள் முருகப் பெருமானை

குடும்ப வாழ்க்கையை இதைவிட யாரும் அழகாக கவித்துவமாக விளக்கமுடியுமா என்ன? கவியரசர்… கவியரசர் தான்!

அதில் ஒரு வரியை கவனியுங்கள்…

சந்தனம் பூசுங்கள் குங்குமம் சூடுங்கள்
ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்

இந்த வரிகளுக்கு பின்னே நெகிழ வைக்கும் ஒரு சம்பவம் உண்டு.

கவியரசர் தனது மகளுக்கு திருமணம்  நிச்சயித்துவிட்டார். நல்ல இடத்தில வரன் வரவே, யோசிக்காது ஏற்பாடுகளை துவக்கிவிட்டார். ஏற்கனவே சொந்தப் படங்கள் எடுத்ததால் கடும் பொருளாதார நெருக்கடி. பணமுடை. இந்த நிலையில் மகளின் திருமணம் வேறு. தவித்துப்போய்விட்டார்.

அந்த நேரம் பார்த்து முருகன் வந்து நின்றான் சாண்டோ சின்னப்பா தேவரின் உருவத்தில். ஆம்… ‘தெய்வம்’ படத்திற்கு பாடல்கள் எழுதிக்கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார் தேவர். கையில் அட்வான்ஸாக ஒரு பெரும் தொகையை கொடுத்து!

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

முருகன் பாடல்களின் மூலம் எதிர்பாராமல் இந்த தொகை கிடைக்கவே உருகிவிட்டாராம் கண்ணதாசன். எனவே “ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்” என்று எழுதினார் மேற்படி பாடலில்.

“கண்ணதாசனுக்கு ஒரு அவசரத் தேவை என்றால் கண்ணன் தான் வருவான் என நினைத்தேன்… ஆனால் முருகன் வந்து என் மகளின் திருமணத்தை நடத்தி வைத்து விட்டான். அதுவும் தமிழை வாங்கிக் கொண்டு…” என்றாராம் தனது நண்பர்களிடம் நெகிழ்ந்துபோய்.

மேற்படி சம்பவம் கொடுத்த பக்குவத்தில் பிற்காலத்தில் “கண்ணா என்றாள் முருகன் வந்தான் முருகா என்றாள் கண்ணன் வந்தான்” என்றும் கவியரசரை ‘அவர்கள்’ படத்தில் எழுத வைத்தது என்று சொல்லவும் வேண்டுமா என்ன?

முருகன் நமது வாழ்வில் பல திருவிளையாடல்களை புரிந்திருந்தாலும் குறிப்பிடத்தக்க ஒரு சம்பவம் பற்றி கீழ்காணும் பதிவில் விளக்கியிருக்கிறோம். படியுங்கள்… எப்படிப்பட்டதொரு சூழலில் நாம் இருந்தோம்…. முருகன் எப்படி திருவருள் புரிந்தான் என்பதை விளக்கியிருப்போம். படியுங்கள்… நம்பினோர் கெடுவதில்லை! இது நான்மறை தீர்ப்பு!!

==============================================================

Also check :

மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!

“முருகா! முட்டாளே, மவனே, உன்னைச் சும்மா விடமாட்டேன்!!”

சின்னப்பா தேவரை முருகன் தடுத்தாட்கொண்ட முதல் சம்பவம் எது தெரியுமா?

“முருகன் அடிமையா நான் வாழ்ந்தது சத்தியம்னா இப்போ மழை பெய்யும்டா!”

மருதமலைக்கு நீங்க வந்து பாருங்க… ஈசன் மகனோடு மனம் விட்டுப் பேசிப் பாருங்க…

‘கோடிகள் குவிந்தாலும் கோமகனை மறவேன்’ என்று வாழ்ந்த ஒரு உத்தமர்!

==============================================================

‘யாமிருக்க பயமேன்’ தொடருக்கு….

துதிக்காதவரையும் தடுத்தாட்கொள்ளும் தண்டாயுதபாணி!

தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)

தேர்வை புறக்கணித்த சிறுவன் சேதுராமன் அருட்கவி ஸாதுராம் ஆன கதை – யாமிருக்க பயமேன் ? (9)

நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)

‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)

‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)

நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

==============================================================

கந்தரந்தாதியைப் பாராதே, கழுக்குன்றத்து மலையை நினையாதே!

சித்தர்கள் இன்றும் தவம் செய்யும் ஒரு அதிசய மண்டபம் – வள்ளிமலை அற்புதங்கள் (2)

புத்தாண்டு அன்று பார்க்கவேண்டியது யாரைத் தெரியுமா? வள்ளிமலை அற்புதங்கள் (1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!!

அடியார் பசி தீர்க்க ஓடிவந்த முருகன் !

 மணிகண்டனை தேடி வந்த முருகன்! ஒரு உண்மை சம்பவம்!!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

“நான் உன்னை மறவேன். நீ என்னை மறக்காதே!”

==============================================================

[END]

4 thoughts on “‘ஹரஹரா பாடுங்கள் வருவதைப் பாருங்கள்’ – வரிகளின் பின்னே ஒரு உண்மை சம்பவம்!

  1. என்ன இருந்தாலும் நாம் ஹர ஹர மகாதேவா என்றழைக்கும் நமசிவாயத்தின் மைந்தன் அல்லவா ! அவரின் கருணை இவருக்கும் உண்டு. அதனால்தான் யார் அவரை மனதார நினைத்து கூப்பிட்டாலும் உடனே ஓடோடி வருவார் என்பதற்கு சற்றும் ஐயமில்லை.

    முருகனை கும்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே !
    பற்றிய பிணி ஆறுமே !

    ஓம் முருகா.

  2. முருகா என்று ஓதுவார் மும்மை நலன்கள் யாவையும் பெற்று வையத்தில் வாழ்வாங்கு வாழ்வார்கள். முருகா என்னும் திரு நாமம் சகல வினைகளையும் நீக்கும் அரு மருந்து. ஆதலால் கண்கண்ட தெய்வமாம் கலியுகவரதன் எம் முருகனின் திரு நாமத்தை உள்ளம் உருக உச்சரித்து பெற்ற பிறவியின் பயனைப் பெற்று இனிப் பிறவா நிலையை அடைவோம்

    அஞ்சு முகம் தோன்றி ஆறு முகம் தோன்றும்
    வெஞ்சமரன் தோன்றில் வேல் தோன்றும்
    ஒரு கால் நினைக்கின் இரு காலும் தோன்றும்
    முருகா என்று ஓதுவோர் முன்

    சேவற்கொடியோன் with வள்ளி , தெய்வானை படம் அமர்க்களம் படத்தை பதிவிறக்கம் செய்ய லிங்க் தரவும்

    திருசெந்தூர் முருகன் துணை

    நன்றி
    உமா வெங்கட்

  3. சுந்தர் சார்,
    மிக்க மகிழ்ச்சி. மன வலியோடு இருந்தேன். அருமையான பதிவு.
    மிக்க நன்றி.

  4. வரலாற்று சம்பவம் குறித்த பதிவு – உண்மையிலே மெய் சிலிர்க்க வைக்கும் பதிவு . என்னே! முருகனின் கருணை. வள்ளி,தெய்வானையுடன் கூடிய முருகனை தரிசிக்க கண்கள் கோடி வேண்டும். எனக்கு பின்வரும் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது.

    தணிகைமலை மேல் அமர்ந்தான்
    தத்துவமே பேசு கின்றான்
    பழனிமலை தேடி வந்தான்
    பரம்பொருளாய்க் காட்சி தந்தான்..

    செந்தூரில் கோயில் கொண்டான்
    சிங்கார வேலைக் கண்டான்
    அழகர்மலை சோலை நின்றான்
    ஆடும்மயில் ஏறி வந்தான்..

    பரங்குன்றில் ஆட்சி செய்தான்
    பாமாலை சூடிக் கொண்டான்
    சாமிமலை வாசல் வந்தான்
    காவடிகள் கோடி கண்டான்..

    நன்றி அண்ணா.

Leave a Reply to mano Cancel reply

Your email address will not be published. Required fields are marked *