Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Saturday, April 20, 2024
Please specify the group
Home > Featured > அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!

அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!

print
யர் கல்வி படிக்க வசதியின்றி, தெரிந்தவர் ஒருவர் 1200 ரூபாய் சம்பளத்துடன் வேலை வாங்கி தருவதாக கூறியதை நம்பி, 1990 ல் மும்பைக்கு வேலை தேடி சென்றார் 17 வயது பிரேம் கணபதி. மும்பை சென்று சேர்ந்த உடன்,  ரயில் நிலையத்திலேயே தான் வைத்திருந்த 200 ரூபாயையும் பிக்பாக்கெட் திருடனிடம் பறிக்கொடுத்து விட்டு நின்றார்.

Dosa Plaza 2தன்னம்பிக்கையை தவிர வேறு எதுவும் கையில் இல்லாமல் அன்று உதவியற்று நின்ற பிரேம் கணபதி, இன்று 30 கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தை கட்டி வளர்த்திருப்பது, முன்னேற நினைப்போருக்கெல்லாம் ஒரு தன்னம்பிக்கை டானிக்.

ஹிந்தியும் புரியாமல், கையில் காசும் இல்லாமல் அன்று ரயில் நிலையத்தில் நின்ற அவருக்கு உதவும் வகையில், ஒரு தமிழர் அவரை அருகில் இருந்த கோவிலுக்கு அழைத்து சென்று, வந்து போவோரிடம் பணம் கேட்டு, சென்னைக்கு ஒரு டிக்கெட் எடுத்து கொடுக்க ஏற்பாடு செய்தார். ஆனால் தமிழ் நாடு திரும்பி வர பிரேமுக்கு மனம் இல்லை. வாழ முயன்றுதான் பார்ப்போமே என்ற உந்துதலோடு வேலை தேடினார். ஒரு பேக்கரியில் பாத்திரங்கள் கழுவும் வேலை கிடைத்தது. மாதம் 150 சம்பாதித்தார். அதன் கூடவே பல உணவகங்களில் வேலை பார்த்தார்.

இரண்டு வருடங்களில் ஒரு தள்ளு வண்டியில் இட்லி வியாபாரம் செய்யும் அளவுக்கு பணம் சேர்த்தார். 150 ரூபாய் வாடகைக்கு ஒரு தள்ளு வண்டியையும், 1500 ரூபாய்க்கு சமைக்க தேவையான பாத்திரங்களையும் வாங்கி, தன் வியாபாரத்தை வாஷி ரயில் நிலையம் முன் 1992 ல் தொடங்கினார். தன சகோதரர்களையும் மும்பைக்கு அழைத்துக் கொண்டார். சாலையோர தள்ளு வண்டி கடைகள் என்றால் சுத்தத்தை எதிர்பார்க்க முடியாது என்ற பொதுவான கருத்தை மாற்றினார்.

Dosa Plaza1

தொப்பிகள் அணிந்து சுத்தமான முறையில் சமைத்து வியாபாரம் செய்தார்கள். சாலையோர கடைக்கு லைசென்ஸ்  தேவை என்பதால், அவ்வப்போது போலீசிடம் சிக்கி அபராதம்  கட்ட வேண்டிய சூழல் இருந்தது. 5000 ரூபாய் மொத்தமாக சேர்ந்த பின், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து சின்ன ரெஸ்டாரெண்ட் ஒன்று திறந்தார். கடைக்கு சாப்பிட வரும் கல்லூரி மாணவர்களின் உதவியோடு இணையதளங்களில் தேடி, பல புதிய உணவு வகைகளை செய்து, பரிசோதனை செய்து பார்த்தார். வெவ்வேறு வகையான தோசைகள் செய்ய கற்றுக் கொண்டார். பனீர் தோசை, ஸ்ப்ரிங் ரோல் தோசை என முதல் கட்டமாக 26 வகை தோசைகளை அறிமுகப்படுத்தினார். 2002 ல் 105 வகையான தோசைகள் தயாரிக்கும் அளவுக்கு உயர்ந்தார்.

Dosa Plaza 3

பிரம்மாண்ட கார்ப்பரேட் கம்பெனிகளின் போட்டிகளை எல்லாம் தாக்கு பிடித்து ஒரு மாலிலும் தனது ரெஸ்டாரெண்ட்டை திறந்தார். வற்றாத தன்னம்பிக்கைக்கும், விடா முயற்சிக்கும் கிடைத்த பலனாக இன்று “தோசா பிளாஸா” என்ற பெயரிலான நிறுவனம், உலகெங்கும்  45 கிளைகள்,  பல கோடி ரூபாய் டர்ன் ஓவரோடு இவர் கீழ் இயங்கி வருகிறது.

Dosa Plaza 5

ஒரே பாட்டில் ஹீரோ கோடீஸ்வரனாகும் கதையெல்லாம் சினிமாக்களில் மட்டும்தான் போல. நிஜ வாழ்கையில் வெற்றி கனியை சுவைத்தவர்களை எல்லாம் பார்க்கும் போது, “முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்” என்ற வள்ளுவரின் கூற்று தான் கண் முன்னே தோன்றுகிறது.

புதிதான விஷயங்களை தேடி தேடிச் சென்று கற்று கொள்வதும், எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பதும் இந்த தமிழனிடம் நாம் அவசியம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.

நன்றி : கோ. ராகவிஜயா | விகடன்.காம்

================================================================

Also check for more motivational stories :

50 காசுகள் to லட்சங்களை புரட்டும் சங்கிலி தொடர் உணவகங்கள் – ஒரு மெழுகுவர்த்தியின் பயணம்!

ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 1

ஒரு நிஜ ஹீரோவின் கதையை கேளுங்கள்! Part 2

சோதனைகளை சாதனைகளாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள அருணிமா சின்ஹா வாழ்க்கை கூறும் பாடம்!

அருணிமாவை தேடிச் சென்ற அருணாச்சலேஸ்வரர்!

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் என உணர்த்தும் தன்னம்பிக்கை சிகரம் கண்ணப்பன்!

ராதாபாய் – விழியிழந்தும் பிறருக்கு வழிகாட்டும் பாரதி கண்ட புதுமைப் பெண்!

ஒரு கவர்ச்சி நடிகையின் மறுப்பக்கம்!

“வறுமை நிலைக்கு பயந்துவிடாதே; திறமை இருக்கு மறந்துவிடாதே” – C.A. 1st Rank Holder Ms.Prema’s excl. interview to our website!

“அக்கா… அக்கா… எங்களுக்கெல்லாம் நீங்க தான் ரோல் மாடல்” – பிரேமாவை மொய்த்த பள்ளி மாணவிகள்!

ஒரு முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால் அந்த வானம் வசமாகும் – மகளிர் தின சிறப்பு பதிவு!

================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================================

Also check for more motivational stories :

வியாபாரத்திலும் சரி வெற்றியிலும் சரி நிலைத்து நிற்க ஆசையா?

எது உண்மையான வெற்றி? எது உண்மையான தோல்வி?

What is the real meaning of PRECIOUS ? மதிப்புமிக்கது என்றால் என்ன ?

இன்று கிடைக்கும் தேன்துளி Vs நாளை கிடைக்கக்கூடிய வெகுமதி!

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================================

[END]

5 thoughts on “அன்று எடுபிடி – இன்று பல கோடிகளுக்கு அதிபதி – மும்பையை கலக்கும் ஒரு சாதனைத் தமிழன்!

  1. தன்னம்பிக்கை நாயகன் பிரேம் கணபதி, சாதிப்பதற்கு மன பலமும் , தன்னம்பிக்கையும், விடா முயற்சியுமே முக்கியம் என்பதை நிரூபித்து விட்டார். இவரைப் பற்றி படிக்கும் பொழுது தாங்கள் நம் தளம் மூலமாக அறிமுகப் படுத்திய திருமதி பெட்ரிசியாவும், திரு பாலனுமே நினைவுக்கு வருகிறார்கள்.

    கைக்கு எட்டிய தூரத்தில் கிடைப்பதில்லை வெற்றி. வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் என்பது போல் நாம் தன்னபிக்கையுடன் வாழ்க்கையில் சாதனை புரிய போராட வேண்டும்.

    வாழ்க ……….. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. சுந்தர் சார்,

    வெற்றி பெற்ற சாதனை கணபதி என்றே சொல்வோம். பலனை எதிர் பாராமல் கடின உழைப்பு ஒன்றே வழி. இதற்கு உதாரணம் இந்த பிரேம் கணபதி. உற்சாகம் ஊட்டும் அருமையான பதிவு.

    நன்றி.

    1. மிருத்திஞ்ஜயேஸ்வரர் கோவில், கம்மாள தெரு, புதிய ரயில் நிலையம் செல்லும் வழி, காஞ்சிபுரம்

Leave a Reply to UMA VENKAT Cancel reply

Your email address will not be published. Required fields are marked *