Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > Featured > பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

print
பாரதியின் வீட்டில் வறுமை தாண்டவமாடிக்கொண்டிருந்தது. அவரோ அந்த நிலையிலும் ‘”எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா..!” என்று  பாடிக்கொண்டிருந்தார்.

Bharathi Chellamma“வீட்டில் குண்டுமணி அரிசி கூட இல்லை. இந்த மனிதர் இப்படி பாடிக்கொண்டு கவிதை எழுதிக்கொண்டிருக்கிறாரே…” என்று மிகவும் ஆதங்கப்பட்டார் அவர் மனைவி செல்லம்மா.

செல்லம்மா மாதர்குல திலகம் அல்லவா? இதை எப்படி அவரிடம் போய் சொல்வது என்று தவித்துக்கொண்டிருந்தாள்.

மனைவியின் தவிப்பை உணர்ந்த பாரதி, “என்ன செல்லம்மா…. எதையோ சொல்ல விரும்புகிறாய் போல… ஆனால் சொல்ல முடியாமல் தவிப்பது போல தெரிகிறது? என்ன வேண்டும்??” என்று கேட்டார்.

“என்ன வேண்டுமா? எது வேண்டாம் என்று கேளுங்கள். மதியம் சாப்பாட்டுக்கு சாதம் வடிக்க அரிசி இல்லை. கவிதை எழுதிக்கொண்டிருக்கும் உங்களிடம் எப்படி சொல்வது என்று தவித்துக்கொண்டிருந்தேன்!” என்றார்.

அதை கேட்டு பாரதி தனக்கே உரிய பாணியில் கடகடவென அந்த வீடே அதிரும்படி சிரித்தார்.

“அரிசி இல்லை என்று எப்படி சொல்வது என்று தவிக்கிறாயா? நீ திருமகள். இந்த வீட்டு மகாலக்ஷ்மி. உன் நாவிலிருந்து ‘இல்லை’ என்கிற சொல் வரலாமோ? ‘அகரம் இகரம்’ என்று சொன்னால் புரிந்துகொள்ளப்போகிறேன். அதற்கு ஏன் இத்தனை தவிப்பு?” என்றார்.

(அகரம் இகரம் – அதாவது ‘அ’ரிசி ‘இ’ல்லை)

"

உடனே பாரதி நண்பர் ஒருவரிடம் சென்று கடன் வாங்கி அரிசியும் கொஞ்சம் பருப்பும் வாங்கி செல்லம்மாவிடம் கொடுத்தார். அவர் ஒரு நொடிக் கூட தாமதிக்காது சமையற்கட்டுக்குள் போய்விட்டார் செல்லம்மா. ஏனெனில், பாரதி காக்கை குருவி எங்கள் ஜாதி என்று பாடியவர் அல்லவா? ஏதேனும் காகம் இரைந்தால் காக்காய்க்கு பசி போலருக்கு என்று வீட்டில் உள்ள தானியங்களை கொண்டு போட்டுவிடுவது வழக்கமாயிருந்தது.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. :
9120 2005 8482 135
Account type :
Current Account
Bank :
Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code :
UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

நம் தளம் மேலும் மேலும் வளர, தொய்வின்றி தொடர் உங்கள் பங்களிப்பு அவசியம்!

==================================================

அரிசி பருப்பு எல்லாம் வீட்டில் நிறைஞ்சிருக்கு!

Rice grainஇன்றும் வீட்டில் என் அம்மா, மளிகை பொருட்கள் எல்லாம் தீரும் நிலை வந்துவிட்டால், “அரிசி பருப்பு எல்லாம் வீட்டில் நிறைஞ்சிருக்கு. சீக்கிரம் மளிகை சாமான்கள் வாங்கிப் போடுப்பா..!” என்று தான் சொல்வாரே தவிர, ‘இல்லை’ என்கிற வார்த்தையை என் தாயார் பயன்படுத்தமாட்டார்.

ஆனால் சில வசதியானவர்கள் வீட்டில் கூட இந்த “இல்லை” என்பது சர்வ சாதாரணமாக கேட்கும். “அது இல்லை… இது இல்லை…” என்று எப்போது பார்த்தாலும் இவர்கள் கிரகத்தில் இல்லை பாட்டு தான். இப்படி இருக்கும் வீட்டில் இல்லை இல்லை என்றால் இல்லாமலே போய்விடும்.

எனவே ஒரு போதும் வீட்டில் எதிர்மறையான சொற்கள், அமங்கலமான சொற்களை பேசவேண்டாம்.

இது குறித்து ஏற்கனவே ஒரு பதிவு வெளியிட்டுள்ளோம். அதையும் பார்க்கவும்!

நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ

==================================================

நல்வாழ்வுக்கு சில டிப்ஸ் – 4

மளிகை லிஸ்ட்டில் முதலில் எழுத வேண்டிய பொருள்…

TurmericJ

வீட்டில் மளிகை சாமான் வாங்க லிஸ்ட் போடும்போது, பிள்ளையார் சுழியை போட்டு முதலில் மஞ்சள், வெல்லம், தேன் அல்லது சர்க்கரை ஆகிய மங்கள பொருட்களை தான் எழுதவேண்டும்.

சூப்பர் மார்க்கெட்டில் நீங்களே ஷாப்பிங் செய்து வாங்குவதாக இருந்தால் முதலில் இந்த பொருட்களில் ஏதேனும் ஒன்றைத் தான் எடுக்கவேண்டும். பில் போடும்போது இதைத் தான் முதலில் பில் போடச் சொல்லவேண்டும்.

டிப்ஸ் தொடரும்…

==================================================

Also Check :

நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ

மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்?

கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து குடுகுடுப்பைக்காரனுக்கு தந்த பாரதி – ஏன் தெரியுமா???

“விநோதங்கள் என் வாழ்க்கையில் அதிகம்!” – பாரதியின் மனைவி செல்லம்மாளின் வானொலி உரை!

பாரதி விழாவும் எறும்புகளும் – MONDAY MORNING SPL 23

பாரதி கண்ட புதுமைப் பெண் – பாஸிட்டிவ் கௌசல்யா!

அக்கினிக் குஞ்சுகளின் சங்கமத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்!

சிறப்பாக நடைபெற்ற நமது பாரதி பிறந்த நாள் விழா!

நெகடிவ்வான வார்த்தைகளை விளையாட்டுக்கு கூட பயன்படுத்தவேண்டாமே – MUST READ

==================================================

[END]

4 thoughts on “பாரதி சொன்ன ‘அகரம் இகரம்’ !

  1. அருமையான பகிர்வு. அற்புதமான கருத்து.

    பாரதிக்கு மட்டும் செல்லம்மா என்ற ஒருவர் கிடைக்கவில்லையென்றால் அவரால் இப்படி ஒரு இடத்தை சரித்திரத்தில் இடம்பிடித்திருக்க முடியுமா என்பதே சந்தேகம் தான். மங்கையர் குலத்துக்கே வழிகாட்டி செல்லம்மா.

    உண்மை தான் அத்தனை வறுமையிலும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று பாடுகிறார் என்றால் அவரது பாஸிடிவ்வான மனப்பான்மையை எப்படி பாராட்டுவது?

    நல்வாழ்வுக்கொரு டிப்ஸ் அருமை.

    தேனியாய் தேடித் தேடி எங்களுக்காக நல்ல நல்ல கருத்துள்ள பதிவுகளை அளிக்கும் உங்களுக்கு நாங்கள் மிகவும் கடன்பட்டுள்ளோம்.

    நன்றி.

    பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  2. செல்லம்மா கதையும் சரி, உங்கள் வீட்டு அடுப்படியாகட்டும் இரண்டுமே மறுபடியும் நம் தளத்தில் படிக்கும் போது இனிமை.
    டிப்ஸ் நன்றாக உள்ளது.

  3. பாரதி தனது மனைவி செல்லம்மாவிடம் அகரம் இகரம் என்ற வார்த்தை மூலம் இல்லை என்ற சொல் தனது மனைவியிடமிருந்து வரக்கூடாது என்பதை புரிய வைக்கும் இடம் ‘காதல் கவிதை ”

    மனைவி என்பதற்கு ”இல்லாள் ” என்ற ஒரு பெயர் உண்டு. இல்லை என்ற சொல் அவள் நாவிலிருந்து வரக் கூடாது என்பதற்காகத்தான். // இல்லை என்ற சொல் இல்லாத நிலை வேண்டும் இறைவா…//

    தங்கள் வீட்டு டிச்சனரியிலிருந்து ”இல்லை ” என்ற வார்த்தையை தங்கள் அம்மா எடுத்து விட்டார்.

    தெரிந்த டிப்ஸ் ….. தங்கள் தளத்தின் மூலம் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  4. சுந்தர் அண்ணா..

    மிக மிக உன்னதமான பதிவு. இலக்கிய நிகழ்வில், வாழ்வியலுக்கான செய்தியும் சேர்த்தது தான் இந்த பதிவின் சுவை கூட்டியது.

    பாரதியும் செல்லமாள் அம்மையும் – வரலாற்றின் வெளிச்சங்கள். பார(தீ)யால் மட்டும் தான் இப்படி சிந்திக்க முடிந்தது. அதற்கு செல்லம்மாள் மட்டும் தான் உறுதுணையாய் இருக்க முடிந்தது. வறுமையிலும் இன்பம் தேடிய வாழ்க்கை கவி நம் பாரதி. அவன் நெருப்பல்லவா? அப்படி தான் சிந்திப்பான். எனக்கு கீழ்க்கண்ட வரிகள் நினைவிற்கு வருகின்றது.

    அது எப்படி சாத்தியம்
    எட்டயபுரத்தில் மட்டும் ஒருத்திக்கு
    நெருப்பை சுமந்த கருப்பை !

    இலக்கிய சுவை கொடுத்த நம் தளத்திற்கு நன்றிகள்.

Leave a Reply to mano Cancel reply

Your email address will not be published. Required fields are marked *