Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > அகத்தியர் தேவாரத் திரட்டு!

அகத்தியர் தேவாரத் திரட்டு!

print
நமது தளம் சார்பாக நாம் செய்து வரும் சைவத் தொண்டை பொருத்தவரை பல நிலைகள் உள்ளது.

1) ஏற்கனவே சைவத் தொண்டில் புகழ் பெற்று விளங்குபவர்களை சந்தித்து அவர்களுடன் உரையாடி மகிழ்ந்து அவர்களை அவர்தம் சேவையை உங்களிடம் அறிமுகப்படுத்துவது.

(இவர்கள் பிரபலமானவர்கள். தொண்டில் / சைவப் பணியில் சிறந்தவர்கள் )

2) அவரவர் சக்திக்கு ஏற்றவகையில் எளிமையாக சைவத் தொண்டு செய்து வருபவர்களை சந்தித்து அவர்களை பேட்டி கண்டு அவர்கள் புகழை மேலும் பரவச் செய்வது. இவர்கள் தொண்டிற்கு பிரபல்யம் தேவை இல்லை. அவர்களும் அதை எதிர்பார்ப்பவர்கள் அல்ல. இருப்பினும் நமது மகிழ்ச்சிக்கு இவர்களை சந்திக்கிறோம்.

(இவர்கள் பிரபலமானவர்கள் அல்ல. ஆனாலும் தொண்டில் சைவப் பணியில் சிறந்தவர்கள். இவர்களுக்கு அளிக்கக்கூடிய பிரபல்யம் இவர்களுக்கு எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது. அதை அவர்கள் எதிர்பார்ப்பதுமில்லை. இவர்கள் பாட்டுக்கு இவர்கள் தொண்டை செய்துகொண்டே இருப்பார்கள்.)

3) புகழும் அங்கீகாரமும் அவசியம் தேவை என்ற நிலையில் இருப்பவர்களை அடையாளம் கண்டு அதற்கு நம் தளம் மூலம் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தருவது. அவர்கள் இதை விரும்புகிறார்களோ இல்லையோ நமது கடமை அது.

(இவர்கள் பிரபல்யம், சமூக அங்கீகாரம் தேவைப்படுகிறவர்கள். எனவே இவர்கள் புகழை பரப்புவது நமது கடமை!)

மூன்றுக்கும் உள்ள வேறுபாடு புரிகிறதா?

Lord Siva

குன்றத்தூரில் சேக்கிழார் விழா நடந்தபோது, பாடியை சேர்ந்த திருவலிதாய சகோதரிகள் என்ற இருவர், அருமையாக பாடல்களை பாடினார்கள் எதிர்காலத்தில் சூலமங்கலம் சகோதரிகளை போல வருவார்கள் என்றும் நாம் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம். (Check : நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!)

திருவலிதாய சகோதரிகள் எளிமையான குடும்பப் பின்னணியை உடையவர்கள். திருமுறைக்கென்றே இவர்களை இவர்களின் தந்தை அற்பணித்துவிட்டார். இவர்கள் திருமுறை கற்ற கதையை கேட்டீர்கள் என்றால் நெகிழ்ந்து போய் விடுவீர்கள். (இவர்களுடனான சந்திப்பு தனி பதிவாக தருகிறோம்).அவர்களை போன்றவர்களை ஊக்குவிப்பது நம் முழுமுதற்க் கடமை. அவர்களை அவசியம் சந்தித்து நமது தளத்தில் அதுபற்றி பதிவளிக்கவேண்டும் என்று கருதி, சென்ற மாதம் ஒரு நாள் ஞாயிறு மதியம் அவர்களை சந்திக்க வேண்டி அவர்களின் தந்தையை தொடர்புகொண்டோம்.

பேசும்போது திருவலிதாயத்தில் (பாடி) அவர்கள் வீட்டில் அடிக்கடி திருமுறை முற்றோதல் நடைபெறும் என்று நாம் தெரிந்துகொண்டோம். “முற்றோதல் நடைபெறும் ஒரு நாளன்று சொன்னீர்கள் என்றால் என் சந்திப்புக்கு வசதியாக இருக்கும். பதிவுக்கும் அது நன்றாக இருக்கும்” என்றோம்.

Thiruvalidhaya Sisters

அடுத்த சில நாட்களில் நம்மை தொடர்புகொண்டவர் அந்த ஞாயிறு மதியம் முற்றோதல் இருப்பதாகவும் நாம் சந்திப்புக்கு வரலாம் என்றும் கூறினார். இதையடுத்து நண்பர் மனோவை உதவிக்கு அழைத்துக்கொண்டு சந்திப்புக்கு சென்றோம்.

அப்போது அவர்கள் ஓதியது தான் ‘அகத்தியர் தேவாரத் திரட்டு’.

தேவாரம் தெரியும். அதென்ன அகத்தியர் தேவாரத் திரட்டு? அகத்தியர் எப்போது தேவாரத்திற்குள் வந்தார்? ‘அகத்தியர் தேவாரத் திரட்டு’ – அந்த பெயரையே அப்போது தான் அதைப் பற்றி கேள்விப்படுகிறோம்.

Agasthiyar Thevara Thirattu 1அகத்தியர் தேவாரத் திரட்டு

தேவாரம் ஒரு இலட்சத்து மூவாயிரம் திருப்பதிகங்களை உடையதாம். இப்போது கிடைத்தவை 797 தான். (சமயக் குரவர்கள் நால்வர் எழுதிய தேவாரத்தில் மொத்தமாக 8262 பாடல்கள் உள்ளன.) மற்றவை மறைந்து போயின. எஞ்சியவை திருவாரூர் அரசன் அபய குலசேகரன் என்று அழைக்கப்பட்ட ராஜ ராஜ சோழன் வேண்டுகோளின்படி நம்பியாண்டார் நம்பி ஏழு திருமுறைகளாகத் தொகுத்தவை.

இப்பாடல்களின் தொகுதி ‘அடங்கன் முறை’ எனப்படுகிறது. சிவாலய முனிவர் என்பவர் தினமும் தேவாரப் பாடல்களை பாராயணம் செய்யும் பயிற்சியை மேற்கொண்டார். பல காலம் கடுமையாக பயிற்சி செய்தும், ஒரேநாளில் அனைத்துப் பாடல்களையும் பாராயணம் செய்து முடிக்க முடியவில்லை. இதனால் மிகவும் கவலை அடைந்த சிவாலய முனிவர், சிதம்பரம் நடராசப் பெருமான் முன் நின்று தனது இயலாமையைச் சொல்லி வேதனைப்பட்டார்.

மனம் இரங்கிய மகாதேவர், “பொதிகைமலை சென்று அகத்திய முனிவரைக் கண்டால், உன் விருப்பம் நிறைவேறும்” என்று அசரீரி வாக்கால் உணர்த்தினார். பொதிகை மலை சென்றடைந்த முனிவர், மூன்று ஆண்டுகள் அகத்திய முனிவரை நினைத்து கடும் தவம் புரிந்தார்.

Agasthiyar copyஉரிய காலத்தில் அவருக்குக் காட்சியளித்த அகத்தியர் அவர் தினமும் பாராயணம் செய்வதற்கு ஏதுவாக அடங்கன்முறை தேவாரப் பதிகங்களிலிருந்து 25 பதிகங்களை தேர்ந்தெடுத்து 263 பாடல்களைத் தேர்வு செய்து ஒரு நூலாக தொகுத்தருளினார். அகத்திய முனிவர் தேவாரத்திலிருந்து திரட்டி எடுத்து வழங்கியதால், அதற்கு அகத்தியர் தேவாரத் திரட்டு என்று பெயர் வந்தது. அகத்தியர் தேவாரத் திரட்டினை தினமும் சொல்வோர்க்குத் தீவினை இல்லாத தேனான வாழ்வும் நிறைவில் இறைவன் திருவடி நிழலும் கிட்டும் என்பது நிச்சயம்!

இந்த முறை அகத்தியருக்கு எப்படி கிடைத்தது?

அகத்திய மாமுனி ஒருமுறை ஈசனிடம் “கலியுகத்தில் இன்று வாழும் மனிதன் தன் சாதாரண கடமையான பொருள் ஈட்டுதல், உணவு தேடுதல், குடும்பத்தை பாதுகாத்தல் போன்றவற்றிலேயே பெரும்பான்மையான நேரத்தை செலவிடுகிறான். தன் உண்மையான கடமையான இறை வழிபாட்டை மறந்து அலைகிறான். பன்னிரு திருமுறைப்பாக்களை தினமும் ஓதி வந்தாலே கலியுக மனிதன் வேதம் ஓதிய பலனை அடைய வழி காட்டும் என்று அருளியிருக்கிறீர்கள். இன்றைய மனிதன் பன்னிரு திருமுறை பாடல்களைக்கூட தினமும் ஓத முடியாத நிலையில் உள்ளான். தாங்கள் பெருங்கருணை கொண்டு இந்த நியதிக்கு சற்று விலக்கு அளிக்க வேண்டும்” என்று வேண்டியதாகவும், எம்பெருமான் “சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் ஓதினாலே யுக தர்ம நியதியால் அவனுக்கு அனைத்து பாடல்களையும் ஓதிய பலன் கிடைக்க யாம் வழி செய்வோம்” என்று கருணை கொண்டு நமக்கு அளித்த பாடல்களே “ஸ்ரீ அகத்தியர் பன்னிரு முறைத் திரட்டு” என்னும் இறைப்பாக்கள் ஆகும்.

இத்திரட்டு திருஞானசம்பந்தரின் 10 பதிகங்கள், திருநாவுக்கரசரின் 8 பதிகங்கள் மற்றும் சுந்தரருடைய 7 பதிகங்களை உள்ளடக்கியதாகும்.

திருஞானசம்பந்தர்

திருபிரமபுரம்
திருநீற்றுப்பதிகம்
பஞ்சாக்கர திருப்பதிகம்
நமசிவாய திருப்பதிகம்
திருஷேத்திர கோவை
திருவெழுகூற்றிருக்கை
திருக்கடவூர் மயானம்
திருவாழ்கொளிபுத்தூர்
திருப்பூந்திராய்
கோளறு பதிகம்

திருநாவுக்கரசர்

திருவதிகை வீரட்டானம்
நமசிவாய திருப்பதிகம்
திருஷேத்திர கோவை
கோயிற்றிறு விருத்தம்
திருப்பூவணம்
திருவதிகை வீரட்டானம்
திரு கயிலாயம்
திருவாரூர் திருவிருத்தம்

சுந்தரர்

திருவென்னைய்நல்லூர்
திருப்பாண்டிகொடுமுடி
ஊர்த்தொகை
திருக்கடவூர் மயானம்
திருப்புன்கூர்
திருக்கழுக்குன்றம்
திருத்தொண்டத்தொகை

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

இதை முதன்முதலில் பரிசோதித்து நூல்வடிவமாக தொகுத்து தந்தவர் யாழ்பாணம் ஆறுமுக நாவலர் அவர்கள்.

ஆறுமுக நாவலர் தமிழுக்கும் சைவத்துக்கும் செய்த தொண்டு அளப்பரியது. தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். பல தமிழ் நூல்களை முதன் முறையாகச் சிறப்பான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர் இவர் தான்.

=========================================================

நமது தளம் சார்பாக ‘அகத்தியர் தேவார திரட்டு’ முற்றோதல்

மேற்படி ‘அகத்தியர் தேவார திரட்டு’ முற்றோதல் நமது தளம் சார்பாக வரும் ஆகஸ்ட் 2, ஞாயிறு காலை 9.00 – 1.00 வரை குன்றத்தூரில், எளிமையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சைவப் பணியில் சிறந்து விளங்கும் பெரியோர் ஒருவர் கலந்துகொண்டு தலைமையேற்று நடத்தவுள்ளார். குன்றத்தூரில் திரு.சங்கர் அவர்களிடம் திருமுறை கற்றும் வரும் மாணவர்கள் சுமார் 60 பேர் இந்த முற்றோதலில் கலந்துகொள்ளவுள்ளார்கள். அது சமயம், அம்மாணவர்களுக்கு நம் தளம் சார்பாக நோட்டு புத்தகங்கள், ஜியாமெட்ரி பாக்ஸ்கள், ஸ்கெட்ச் பேனாக்கள் இன்னும் பிற ஸ்டேஷனரி பொருட்கள் பரிசாக வழங்கப்படவுள்ளது.

Kundrathur Devara pada salai
முற்றோதல் நடைபெறவுள்ள வளாகம்

முற்றோதலில் கலந்துகொள்ளும் திருவலிதாய சகோதரிகள் மற்றும் இதர சைவத் தொண்டர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர். (இவர்கள் பாடி நீங்கள் கேட்டதில்லையே… கண்களை மூடிக்கொண்டு கேட்டால், மூவர் காலத்திற்கே உங்களை அழைத்துச் சென்றுவிடுவார்கள். மிகையல்ல… உண்மை!!! கேட்டுவிட்டு சொல்லுங்கள். எந்த வாத்தியமும், பின்னணி இசையும் இல்லாமலேயே மிக மிக சிறப்பாக பாடும் வல்லமை இவர்களுக்கு இருக்கிறது. இது சாதாரண விஷயம் அல்ல.)

மேற்படி முற்றோதலில் நம் வாசகர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறோம். அனைவருக்கும் காலை சிற்றுண்டியும் மதியம் உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து வசதிகளும் உள்ள இடமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. .

ஸ்டேஷனரி பொருட்கள், உணவு ஏற்பாடு, அகத்திய தேவார திரட்டு – (100 நூல்கள்) என பல செலவுகள் உள்ளன. இந்த எளிய இறைபணியில் உதவிக்கரம் நீட்ட விரும்பும் வாசகர்கள் நம்மை தொடர்புகொள்ளவும். (ஏற்கனவே இரண்டு வாசகர்கள் இது தொடர்பாக உதவிக்கரம் நீட்டியுள்ளனர். அந்த தொகை இதனுடன் சேர்க்கப்படும்.)

நாள் : ஆகஸ்ட் 2, 2015 ஞாயிறு

நேரம் : காலை 8.45 முதல் மதியம் 1.00 வரை.

முகவரி : திருமுறை தேவார பாடசாலை, எண் : 29, துரைசாமி தெரு, வட திருநாகேஸ்வரம், குன்றத்தூர் – சென்னை 600 069. (Landmark  : குன்றத்தூர் பேருந்து நிலையம் – தேரடி அருகே)

அனைவரும் வருக!

வரவிரும்பும் வாசகர்கள் நமக்கு தகவல் தெரிவிக்கவும்

(குறிப்பு : முற்றோதலில் கலந்துகொள்ளும் வாசகர்களுக்கு மேற்படி ‘அகத்தியர் தேவார திரட்டு’ நூல் நமது தளம் சார்பாக அன்பளிப்பாக வழங்கப்படும்.)

=========================================================

Also check :

நண்பர் வீட்டு திருமண விருந்து vs தெய்வச் சேக்கிழார் குருபூஜை விருந்து!

மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – மழலைகள் போதிக்கும் ஒரு பாடம்!

பள்ளி மாணவர்களுக்கு இலவச திருமுறை வகுப்பு – சங்கர் அவர்களின் அயராத சிவத்தொண்டு!

திருமுறை பெற்றுத் தந்த வேலை – உண்மை சம்பவம்!!

பன்னிரு திருமுறைகளின் பெருமையும் அதை மீட்டுத் தந்த நம்பியாண்டார் நம்பியும்!

இதை ஓதின் எல்லா பதிகங்களையும் ஓதிய பேறு உண்டாகும்!

ஐந்து மாதங்களாக வராத சம்பளத்தை ஒரே நாளில் பெற்றுத் தந்த பதிகம்!

எது நிஜமான பக்தி?

Thalaivar is always great!

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

பணத்தை தேடி வரவழைத்த பதிகம்! மெய்சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

அகத்தியரின் ‘திருமகள் துதி’ – இது வீட்டில் இருந்தாலே திருமகளின் அருள்மழை நிச்சயம்!

மாற்றுக் குறைந்த பொற்காசு மூலம் வாழ்வு செழிக்க ஒரு பாடலை தந்த இறைவன்!

வாழ்க அந்தணர் வானவர் ஆனினம், வீழ்க தண்புனல் வேந்தனும் ஓங்குக!

ஆஞ்சநேய பக்தர்களுக்கு ஓர் வரப்பிரசாதம் – கிடைப்பதர்க்கரிய ஸ்ரீஹநுமத் சுப்ரபாதம்!!

வறுமையை விரட்டி, பொன் பொருள் சேர்க்க எளிய தமிழில் ஒரு அழகிய ஸ்லோகம்!

களவு போனது திரும்ப கிடைத்த அதிசயம் – இழந்த பொருளை மீட்டுத் தரும் பாடல்!

‘திருவாசகம்’ என்னும் LIFESTYLE MANTRA – கருவுற்றிருக்கும் பெண்கள் கவனத்திற்கு!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

அன்னையின் அருளால் விளைந்த ‘ஆனந்தக் கடல்’ – உண்மை சம்பவம்!

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

செல்ஃபோன் ‘காலர் டியூன்’ தேடித் தந்த அதிர்ஷ்டம் – உண்மை சம்பவம்!!

‘பாதத்தால் சுழலும் மாந்தர்கள் தொல்வினை’ – பன்னிரு திருமுறை இசைவிழாவில் ஒரு அரிய செய்தி!

நான்கு யுகங்களில் சிறந்தது எது? ஏன்? MUST READ!

இறைவனையே குருவாக பெற்ற மாணிக்கவாசகர் தன்னை நாயேன் என்று கூறிக்கொண்டது ஏன் ?

கடவுள் என்ற ஒருவர் இருந்தால் ஏன் இத்தனை துன்பங்கள்?

=========================================================

[END]

6 thoughts on “அகத்தியர் தேவாரத் திரட்டு!

  1. மிகவும் உபயோகமுள்ள அருமையான பதிவு. இது நாள் வரை தேவாரம், திருவாசகம் என்று தான் கேள்விப்பட்டேன்,. இப்பொழுதான் முதன் முறையாக அகத்தியர் தேவாரதிரட்டு பற்றி நம் தளம் வாயிலாக கேள்விபடுகிறேன்.

    சிவாலய முனிவர் பற்றி படிக்கும் பொழுது எனக்கு ஞானக் குழந்தையின் தந்தை சிவபாத இருதயர் பற்றி ஞாபகம் வருகிறது. அவர் தனது மகனிடம் அனைத்து பதிகத்தையும் ஓதிய பலன் உள்ள பாடலை இயற்றும் படி வேண்ட ‘ஓரிருவாயினை ” பாடல் பிறந்தது. அதைப் பற்றிய பதிவும் தங்கள் தளம் மூலம் படித்து விட்டேன்.

    திருவாலிதய சகோதரிகளின் பாடல்களை முற்றோதலில் கேட்பதற்கு ஆவல் . தங்கள் தளம் சார்பாக முற்றோதல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது அறிய மிக்க மகிழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் பாக்கியசாலிகள் . கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ஆடலரசன் படம் கண்ணைக் கவர்கிறது

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

    1. முற்றோதல் நடைபெறும் விலாசத்தை தெரிவு படுத்தவும்

      வாழ்க … வளமுடன்

      நன்றி
      உமா வெங்கட்

      1. படத்துல தெளிவா இருக்கே?

        இருப்பினும் முகவரியை தனியாக அளித்திருக்கிறேன்.

  2. சென்ற வருடம் “அகத்தியர் தேவாரத்திரட்டு” தேடி சில கடைகளில் விசாரித்தும் கிடைக்கவில்லை… இப்போது தேடி வருகிறது…

    அகத்திய மாமுனி ஈசனிடம் “கலியுகத்தில் இன்று வாழும் மனிதன் தன் சாதாரண கடமையான பொருள் ஈட்டுதல், உணவு தேடுதல், குடும்பத்தை பாதுகாத்தல் போன்றவற்றிலேயே பெரும்பான்மையான நேரத்தை செலவிடுகிறான். தன் உண்மையான கடமையான இறை வழிபாட்டை மறந்து அலைகிறான். பன்னிரு திருமுறைப்பாக்களை தினமும் ஓதி வந்தாலே கலியுக மனிதன் வேதம் ஓதிய பலனை அடைய வழி காட்டும் என்று அருளியிருக்கிறீர்கள். இன்றைய மனிதன் பன்னிரு திருமுறை பாடல்களைக்கூட தினமும் ஓத முடியாத நிலையில் உள்ளான். தாங்கள் பெருங்கருணை கொண்டு இந்த நியதிக்கு சற்று விலக்கு அளிக்க வேண்டும்” என்று வேண்டியதாகவும், எம்பெருமான் “சில குறிப்பிட்ட பாடல்களை மட்டும் ஓதினாலே யுக தர்ம நியதியால் அவனுக்கு அனைத்து பாடல்களையும் ஓதிய பலன் கிடைக்க யாம் வழி செய்வோம்” என்று கருணை கொண்டு நமக்கு அளித்த பாடல்களே “ஸ்ரீ அகத்தியர் பன்னிரு முறைத் திரட்டு” என்னும் இறைப்பாக்கள் ஆகும் என்று முன்னர் வாசித்திருக்கிறேன்.

    நன்றி

    1. உண்மை தான். பதிவில் மேலும் மேலும் தகவல்களை சேர்த்து பெரிதாக ஆக்கவேண்டாம் சற்று சுருக்கமாகவே இருக்கட்டும் என்று கருதினேன். ஆனால் உங்கள் பின்னூட்டம் அந்த தகவலை சிறப்பாக சொல்லியதால் பதிவில் சேர்த்துவிட்டேன்.
      நன்றி.

  3. வாழ்க வளமுடன்

    திருநெல்வேலி மாவட்டத்தில் அகத்தியர் தேவரா திரட்டு மிக மிக பிரபலமானது , எங்களுடைய சொந்த ஊர் அம்பாசமுத்திரம் வருடா வருடம் அங்கு நடைபெறும் பங்குனி திருவிழாவிற்கு செல்லும் போது 10 நாள் திருவிழாவிலும் இதனை 100 பேர் வரை பாராயணம் செய்வோம், திருமுறைகளின் ஒரு கலவையாகவும், பிரபலமான ராக , தாளத்தில் பாடும் போது கேட்பதிற்க்கு மிக மிக இனிமையாகவும் இருக்கும் .

    நன்றி

Leave a Reply to Kavitha Nagarajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *