Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

print
ந்த ஊரில் தீபக் என்னும் ஒரு குறும்புக்கார சிறுவன் இருந்தான். சிறுவர்களுக்கே உரிய துறுதுறுப்பு அவனிடம் நிறையவே இருந்தது. எப்போது பார்த்தாலும் மரத்தில் ஏறி விளையாடுவதும் உயரமான கம்பங்களை பார்த்தால் அதில் ஏறுவதும், வீட்டு உத்திரத்தில் தலைகீழாக தொங்குவதும் என குறும்பு செய்வான்.

ஒரு முறை சுமார் 40 அடி உயரத்தில் இருந்த மரத்தின் கிளை ஒன்றில் தொங்கி விளையாடிக் கொண்டிருந்தான். அந்நேரம் பார்த்து மிக பலமாக காற்று வீசியது. மரமே அந்த பேய்க் காற்றில் ஆடியது கிளை மட்டும் ஆடாமல் இருக்குமா? ஏற்கனவே இவனது பாரம்… கூடவே காற்று… கிளை பலமாக ஆடியது. கிளை ஒடிந்துகீழே விழுந்துவிடும் என்றோ அல்லது நமக்கு அடிப்பட்டுவிடும் என்றோ அந்த குழந்தையின் புத்திக்கு எட்டவில்லை. சிறுவன் அவன் பாட்டுக்கு இன்னும் வேகமாக கிளையை பிடித்து ஆட்டியபடி இருந்தான்.

image_tn

இதை அவன் தந்தை பார்த்துவிட்டார். ஒரு கணம் பதறிப்போனார். மகனின் இத்தகைய வானர சேட்டைகள் அவருக்கு பழகியவை தான் என்றாலும்… இத்தனை உயரமான மரத்தில் ஏறி, அதுவும் பலவீனமான ஒரு கிளையில் காற்று வேறு அடிக்கிறது… ‘இது ரொம்ப ஓவர்’ என்று தோன்றியது.

அவனுக்கு சுமார் பத்தடிகள் கீழே, அவன் பக்கத்துவீட்டு சிறுவன் சஞ்சய் என்பவன் வேறொரு கிளையில் தொங்கியபடி இருந்தான். தீபக்கின் அப்பா, தீபக் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்த அதே கணம், சஞ்சயின் அம்மாவும் சஞ்சய் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்துவிட்டாள். ஆபத்தை உணர்ந்துகொண்டாள்.

இவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, மிக பலமான காற்று ஒன்று வீசியது. கிளைகள் ஆடத் துவங்கின. கீழே உள்ள சருகுகள் எல்லாம் பறப்பதையும் மரமே ஆடுவதையும் சிறுவர்கள் உணர்ந்துகொண்டார்கள்.

“தீபக் கிளையை கெட்டியா பிடிச்சுக்கோ” – கீழேயிருந்து தந்தை சொல்வது அவன் காதுகளில் விழுந்தது. கிளையை கெட்டியாக பிடித்துக்கொண்டான்.

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

அடுத்தநொடி, “வீல்” என்று மிக பெரிய அலறல் சத்தம் ஒன்று கேட்டது. இவனுக்கு பத்தடி கீழே வேறொரு கிளையில் தொங்கிக்கொண்டிருந்த சஞ்சய் கீழே விழுந்துவிட்டான்.

இவன் மெதுவாக மரத்திலிருந்து ஜாக்கிரதையாக கீழே இறங்கினான்.

மிக உயரத்தில் இருந்த இவன் கீழே விழாமல் தப்பித்துக்கொண்ட நிலையில், இவனுக்கு பல அடிகள் கீழே தொங்கிக்கொண்டிருந்த சஞ்சய் மட்டும் எப்படி கீழே விழுந்தான்?

அவன் தந்தை விளக்கினார் : காற்று பலமாக வீசியபோது சஞ்சயின் அம்மா, “சஞ்சய் கீழே விழுந்துடாதே” என்று கத்தினாள். சஞ்சய் கீழே விழுந்துவிட்டான். நான் “நீ கிளையை பலமாக பிடித்துக்கொள்” என்றேன். நீ தப்பித்துவிட்டாய்.”

Losers and winnersமனித மூளைக்கு எதிர்மறையான விஷயங்களை கற்பனை செய்வது சற்று பிடிக்காத, ஸ்ட்ரெயின் எடுக்கக்கூடிய வேலை. சஞ்சய்க்கு அவன் தாய் கூறிய, “கீழே விழுந்துடாதே” என்னும் கட்டளையை ப்ராசஸ் செய்ய, அவன் எட்டு வயது மூளை, முதலில் கீழே விழுவது என்றால் என்ன என்பதை விசுவலைஸ் செய்யவேண்டும். பின்னர் ஆழ்மனதிற்கு தான் தற்போது விசுவலைஸ் செய்து பார்த்ததை ‘செய்யக்கூடாது’ என்று கட்டளையிடவேண்டும். ஆனால் இவ்வளவுக்கும் அந்த சூழ்நிலையில் அவகாசம் இல்லை. தீபக்கை பொருத்தவரை இந்த பிரச்சனை இல்லை. “கிளையை கெட்டியாக பிடித்துக்கொள்” என்ற கட்டளை மட்டுமே அவனுக்கு கிடைத்ததால், அவன் மூளை கிளையை பிடித்துக்கொள்வதில் மட்டுமே கவனம் செலுத்தியது. எனவே அவன் தப்பிவிட்டான்.

இக்கட்டான நேரங்களில் முக்கிய கட்டளைகளை பிறப்பிக்கும்போது இதை மனதில் கொள்ளவேண்டும்.

இதே கான்செப்ட் நமக்குள்ள தீய பழக்கங்களில் இருந்து நாம் விடுபடுவதற்கும், இலக்குகளை நிர்ணயிப்பதற்கும் கூட பயன்படுத்திக்கொள்ளலாம். நாம் விரும்பாத ஒன்றை செய்யாத ஒன்றை நம் மூளையால் VISUALIZE செய்ய முடியாது. செய்யவும் கூடாது.

**************

சொல்லக்கூடாதது : பாசி வழுக்கும் ஜாக்கிரதை.

என்ன நடக்கும் : வழுக்கி விழுந்து விடுவார்கள்.

சொல்லவேண்டியது : பாசி இருக்கு. ஜாக்கிரதையா காலை வை.

**************

சொல்லக்கூடாதது : மொபலை அதிகம் நோண்டாதே. கேம்ஸ் விளையாடாதே.

என்ன நடக்கும் : மொபலை அதிகம் நோண்டுவார்கள். அதிகம் விளையாடுவார்கள்.

சொல்லவேண்டியது : ஸ்மார்ட்போன்ல கேம்ஸ் விளையாடுறது மூளையை மந்தமாக்கிடுமாம். நீ எவ்ளோ இண்டெலிஜெண்ட். உனக்கு போரடிக்கும்போதெல்லாம் நல்லா ஓடிப் பிடிச்சு விளையாடு. நல்ல நல்ல புக்ஸ், காமிக்ஸ் படிடா செல்லம்.

**************

இது குழந்தைகளுக்கு மட்டுமல்ல நமக்கும் பொருந்தும். நல்ல நல்ல விஷயங்களை பார்க்க மனதை பழக்கபடுத்தினால் உலகம் எத்தனை அழகாக மாறும் தெரியுமா? பாலைவனமாய் இருந்த வாழ்க்கை வாய்ப்புக்கள் கொட்டிகிடக்கும் சோலைவனமாகிவிடும். சொன்னால்லாம் இது புரியாதுங்க. ஜஸ்ட் ஒரு வாரம் ப்ராக்டீஸ் செஞ்சி பாருங்களேன். புரியும்.

எந்த சூழ்நிலையிலும் எந்த ஒரு விஷயத்திலயும் நெகட்டிவ் என்பது உங்கள் மனதிற்குள் நுழையவே கூடாது. எல்லாவற்றையும் பாஸிட்டிவாக பார்க்க மனதை பழக்கப்படுத்த துவங்குங்கள். அது தான் இந்த பயிற்சியின் முதல் படி.

================================================================

* இந்த தளத்தின் பதிவுகள் ரைட்மந்த்ரா வாசகர்களுக்கு என்றே பிரத்யேகமாக எழுதப்படுவது. பதிவை உங்கள் நட்பு வட்டத்தில் முகநூலிலும், மின்னஞ்சலிலும் பகிர வசதிகள் பதிவின் துவக்கத்திலும் இறுதியிலும் தரப்பட்டுள்ளது. அதைக் கொண்டே பதிவை பகிரவேண்டும். ஒத்துழைப்புக்கு நன்றி. – ஆசிரியர்

================================================================

Also check for more motivational stories :

இறைநம்பிக்கை Vs தன்னம்பிக்கை!

ஒரு ‘பாஸ்வேர்ட்’ எப்படி வாழ்க்கையை மாற்றியது ?

விதியை வெல்லக்கூடிய ஒரே ஆயுதம் எது தெரியுமா?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

================================================================

[END]

8 thoughts on “பாலைவனமாய் இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா?

  1. Good Morning Sundar,

    The Stort is Good. We have to Use Positive Words always. This also Like Monday Morning Special.

    To all Right Mantra Viewers, I Great You all an Happy and Successful Week Starting From this Monday.

    Narayanan.

  2. வணக்கம்
    திங்கள் அன்று காலை நல்லதொரு புத்துணர்வு தரும் பதிவு.
    positive thinging எல்லோருக்கும் எப்போதும் இருப்பது நல்லது.
    அர்த்தம் ஒன்றாக இருந்தாலும் நம் பேசும் வார்த்தைகளுக்குள் உள்ள வித்தியாசம் நன்றாக புரியும் படி விளக்கயுள்ளது நன்றாக உள்ளது.
    என்றும் அன்புடன்
    நன்றி

  3. சுந்தர் அவர்களே. சிறிய பதிப்பனாலும், நச்சென்று இருக்கிறது. நான் தங்கள் பதிவுகளை அவப்போது மொபைல் இல் படித்து விடுகிறேன், ஆனால் கமெண்ட் பண்ண முடியவில்லை. தமிழில் கமெண்ட் செய்ய முடிவதில்லை. மன்னிக்கவும். தங்கள் அறிவுரை படி இந்த வாரம் முயற்சி செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். பாபா கவுன்ட் டோவ்ன் ஸ்டார்ட்ஸ்.

  4. வணக்கம் சுந்தர். மற்றும் ஒரு அழகான பதிவுக்கு நன்றி.பாசிடிவாக யோசிக்கவேண்டும் என்று முன்பே தெரியும் என்றாலும் அதை உதரானதுடன் (கவனமாக காலை வை பாசி இருக்கு) சொன்து அருமை.மீண்டும் ஒரு முறை நன்றி.

  5. Nice article on Positive Thinking & Positive Approach…

    This reminds me of the book “Power of Positive thinking”… Always expect the best & get it…

  6. பாலைவனமாக இருக்கும் வாழ்க்கை சோலைவனமாக வேண்டுமா? தலைப்பே வித்தியாசமாய் இருந்தது..பதிவின் உட்கருத்து அதனினும் அருமை. தேனில் பலாச்சுளையை ஊற வைத்து சாபிட்டால் எப்படி இருக்குமோ,அதுபோல் தான் இந்த பதிவு.

    நேர்மறை சிந்தனையோடு நாம் வாழ தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை வித்தாக பதிய வைத்ததே உண்மை.இது போன்ற பதிவுகளே, நம்மை நடைமுறை வாழ்வில் இன்னும் மேம்படுத்த உதவும்.

    நன்றி அண்ணா..

Leave a Reply to viji Cancel reply

Your email address will not be published. Required fields are marked *