Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, April 18, 2024
Please specify the group
Home > Featured > வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

print
மது தளத்தின் மிகப் பெரிய பணிகளுள் ஒன்று வாராந்திர பிரார்த்தனை கிளப். ஒவ்வொரு வாரமும் நாம் பிறருக்காக, இந்த நாட்டுக்காக, இந்த சமூகத்துக்காக பிரார்த்திக்கும் ஒரு நல்ல வாய்ப்பை இறைவன் நமக்கு ஏற்படுத்தித் தந்திருக்கிறான். ஆனால இதை சரியாக பயன்படுத்திக்கொண்டு எத்தனை பேர் அவனுடைய அருளுக்கு பாத்திரமாகி வருகிறார்கள் என்று தான் தெரியவில்லை.

ஒரு சில வாசகர்கள் தவிர்க்க இயலாத காரணங்களினால் அந்த வாரத்து பிரார்த்தனை பதிவை படிக்க இயலாமல் போகும்போது, நம்மை அலைபேசியில் தொடர்புகொண்டு யாருக்கு பிரார்த்தனை செய்யவேண்டும், அவர்கள் பிரச்னை என்ன என்ற விபரத்தை கேட்டு தெரிந்துகொள்கிறார்கள். எத்தனை பெரிய பண்பு…! இந்த அவசர யுகத்தில் இப்படியெல்லாம் கூட ஒரு சிலர் இருக்கிறார்கள் என்பது நமக்கு மிகப் பெரிய ஆறுதல். அவர்களைப் போன்றவர்கள் ரைட்மந்த்ராவுக்கு வாசகர்கள் என்பதில் நமக்கு தான் பெருமிதம்.

Perambakkam Narasimmar

ஆனால் சிலர் இதையெல்லாம் சட்டை செயவதேயில்லை. MONDAY MORNING SPECIAL உள்ளிட்ட சில பதிவுகளை படிப்பதோடு அவர்கள் கடமை முடிந்துவிடுகிறது. அவர்களுக்கு அவர்களை பற்றியும் அவர்கள் குடும்பத்தை பற்றியும் மட்டுமே கவலை. அதையும் தாண்டி அவர்களை நம்மால் சிந்திக்க வைக்க முடியவில்லை. எத்தனை எழுதியும் அதுபோன்றவர்களை மாற்ற முடியாதது நமக்கு ஒரு வகையில் தோல்வி தான். அவர்களை பொருத்தவரை துன்பம், பிரச்னை, சோதனை என்றால் அது அவர்களுக்கு வருவது மட்டுமே. மற்றபடி யார் எப்படி போனால் எனக்கென்ன, யார் என்ன கஷ்டப்பட்டால் நமக்கு என்ன என்கிற மனோபாவம் தான் அவர்களுக்கு. இந்த மனோபாவம் மாறினால் அவர்கள் வாழ்க்கை மேலும் சிறக்கும், இறைவனின் பரிபூரண அருளுக்கு அவர்கள் பாத்திரமாவார்கள் என்பது உறுதி.

நாம் கேட்டுக்கொள்வதெல்லாம் ஒன்று தான். வாசகர்கள் ஒவ்வொரு ஞாயிறு மாலையும் தவறாமல் பிரார்த்தனை செய்துவாருங்கள். உங்கள் மொபைலில் ஞாயிறு மாலை 5.35 மணியை அலாரம் செட் செய்துகொள்ளவும். ஒருவேளை அந்த வார பிரார்த்தனை கிளப் பதிவை நீங்கள் படிக்கவில்லையென்றால் பரவாயில்லை. அந்த நேரம் உங்களுக்கு தோன்றும் விஷயங்களுக்காக பிரார்த்தனை செய்யவும். உங்கள் மனதை பாதித்த எதற்காகவும் நீங்கள் பிரார்த்தனை செய்யலாம். செய்தித் தாளில் நீங்கள் படித்த அல்லது தொலைக்காட்சியில் நீங்கள் பார்த்த ஏதாவதாக அது இருக்கலாம்.

அடுத்து ஒரு முக்கிய விஷயம்…

இனி பிரார்த்தனை கிளப் பதிவுகள் ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் அளிக்கப்படும். காரணம் பிரார்த்தனை கிளப் பதிவுகள் தயார் செய்வது மிகவும் சவாலாக இருக்கிறது. ஒரு பக்திக் கதை, பிரார்த்தனைக்கு தலைமை தாங்குபவரைப் பற்றிய செய்தி, பிரார்த்தனை விபரங்கள் + ஒரு பொதுப் பிரார்த்தனை என இதில் பல விஷயங்கள் உள்ளன. மேலும் ஒவ்வொரு வாரமும் பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பவரை தேர்ந்தெடுத்தபின்னர், அவர் பிரார்த்தனை செய்யும் வரை FOLLOW-UP செய்யவேண்டியுள்ளது. பிரார்த்தனைக்கு தலைமை ஏற்கும் சான்றோர்களில் சரி பாதி பேருக்கு இணையம் பார்க்கவோ, மொபைலில் இணையத்தை பார்த்து பதிவை படிக்கவோ தெரியாத நிலை இருக்கிறது. அப்படிப்பட்டவர்களுக்கு நாம் அலைபேசியில் தகவல் தெரிவிக்கவேண்டியுள்ளது. பிரார்த்தனை பதிவு வெளியிடுவதற்கு முன்பு அனுமதி பெற ஒரு முறை, பதிவு வெளியிட்ட பின்னர் ஒரு முறை, ஞாயிறு மதியத்துக்கு மேல் நினைவூட்ட ஒரு முறை என மூன்று முறை அவர்களை தொடர்புகொள்ளவேண்டியுள்ளது. சற்று பிஸியாக இருந்து இதில் ஒன்றை மறந்துவிட்டால் கூட கஷ்டம் தான். சிலரிடம் அலைபேசி கூட இருப்பதில்லை. உதாரணத்திற்கு இந்த வார பிரார்த்தனைக்கு திரு.போதகுரு அவர்களை தலைமை ஏற்க செய்ய ஆசை. அவர் எந்தளவு ஒரு புண்ணியாத்மா என்று உங்களுக்கு தெரியும். ஆனால் அவரிடம் அலைபேசி கிடையாது. இணைய வசதி கிடையாது. எனவே பிரார்த்தனை பதிவை அளித்துவிட்டு அதை ஒரு நகல் எடுத்துக்கொண்டு குன்றத்தூரில் உள்ள அவர் வீட்டுக்கு நேரில் செல்லவேண்டும். அப்போது தான் அவரால் பிரார்த்தனை நேரத்தில் நினைவில் வைத்திருந்து பிரார்த்தனை செய்ய முடியும். இது போன்ற நடைமுறைச் சிக்கல்கள் நிறைய உள்ளன.

Thiruvooragap perumal kovil
* இந்தப் படத்தில் ஒரு விசேஷம் உண்டு. திருஊரகப் பெருமாள் கோவில், சற்று தள்ளி குன்றத்தூர் முருகன் கோவில் கோபுரம் தெரிகிறது. திருவூரகப் பெருமாள் கோவிலின் அடிவாரத்தில் பசு ஒன்று நடந்து வருவதை கவனியுங்கள்…! சைவ வைணவ கோபுரங்கள் + சகல தேவதாக்கள் அடங்கிய பசு என இந்தப் படம் ஒரு அற்புதங்களின் சங்கமம்!

Thiruvooragap perumal kovil 2மேலும் ஒரு பிரார்த்தனை பதிவு மூன்று சராசரி பதிவுகளுக்குரிய நேரத்தை எடுத்துக்கொள்கிறது. தவிர நமது பிரார்த்தனைக்கு தலைமை ஏற்பதர்க்குரிய தகுதியை கொண்ட சான்றோர்களை தேர்வு செய்வது என்பது மற்றொரு சவால். ஒவ்வொரு வாரமும் ஒரு சான்றோரை தேடிக் கண்டுபிடிப்பது சாதாரண விஷயம் அல்லவே. அவர்கள் இல்லாமல் பிரார்த்தனை பதிவை அளிக்க நமக்கு விருப்பமில்லை. பசுவை நாமே வளர்த்தால் கூட, அதனிடம் பாலை பெறவேண்டும் என்றால் கன்றுக்குட்டியின் துணையுடன் தான் அதை பெறமுடியும். இறையருள் எங்கும் பரவி விரவியிருந்தாலும் சான்றோர்களை கொண்டு நமது பிரார்த்தனைகளை அளிக்கும்போது, அவனருள் சீக்கிரமே கிடைக்கிறது. ஏனெனில், சிலரது பிரார்த்தனையை கோரிக்கையை இறைவன் தட்டவே முடியாது. குறைந்த பட்சம் செவிமெடுத்தாவது கேட்டே ஆகவேண்டும். அதுவே நமக்கு வெற்றி தானே!!!

இறையருள் எங்கும் பரவி விரவியிருந்தாலும் சான்றோர்களை கொண்டு நமது பிரார்த்தனைகளை அளிக்கும்போது, அவனருள் சீக்கிரமே கிடைக்கிறது. ஏனெனில், சிலரது பிரார்த்தனையை கோரிக்கையை இறைவன் தட்டவே முடியாது.

எனவே பிரார்த்தனை கிளப் பதிவுகளை சுலபமாக சிரமமின்றி தயார் செய்யும் விதமாக இனி ஒரு வாரம் விட்டு ஒரு வாரம் (வெள்ளி விட்டு வெள்ளி) பிரார்த்தனை கிளப் பதிவு அளிக்கப்படும். (ALTERNATIVE FRIDAYS). எனவே ஒவ்வொரு பிரார்த்தனையையும் சம்பந்தப்பட்டவர்களின் பெயர்களை நினைவில் வைத்திருந்து இரண்டு முறை செய்ய நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

வாசகர்கள் தவறாமல் பிரார்த்தனை பதிவில் வெளியிடப்படும் பிரார்த்தனையை அந்த ஞாயிறு செய்வது மட்டுமல்லாமல் அடுத்து வரும் ஞாயிறும் செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். அதற்கு அடுத்து வரும் வாரம் புதிய பிரார்த்தனை பதிவு அளிக்கப்பட்டுவிடும்.

பிரார்த்தனை என்பது என்ன? அது எப்படி இருக்கவேண்டும் என்பது பற்றி நாம பல பதிவுகள் அளித்திருந்தாலும், அனைத்து பதிவுகளின் மையக்கருத்தை கொண்டு கீழ்காணும் ஒரு PRAYER GUIDE உருவாக்கியுள்ளோம். இதன்படி நீங்கள் பிரார்த்தனை செய்தால், உங்கள் பிரார்த்தனைகள் ஒவ்வொன்றும் தவறாமல் நிறைவேறும்.

வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

உடலுக்கு உணவு எத்தனை அவசியமோ, உள்ளத்துக்கு தியானம் என்பது எத்தனை முக்கியமோ, அதே போலத் தான் ஆன்மாவுக்கு பிரார்த்தனை என்பதும். பிரார்த்தனை என்பது இறைவனுடன் நாம் ஏற்படுத்திக்கொள்ளும் நேரடி தொடர்பு. பிரார்த்தனையின் மூலம் நம்பமுடியாத, பல மகத்தான காரியங்களை சாதிக்க முடியும். வெற்றிகரமான பிரார்த்தனைக்கு வழிகாட்டியாக நாம் சில குறிப்புக்களை இத்துடன் அளித்திருக்கிறோம். பின்பற்றி பலன் பெறுங்கள்.

* நமது வாரந்திர பிரார்த்தனை கிளப்பில் பங்கேற்று பிரார்த்தனை செய்வது போக, தினசரி சாப்பிட, குளிக்க, பல் தேய்க்க நேரம் ஒதுக்குவது போல சில நிமிடங்கள் பிரார்த்தனைக்கு அவசியம் ஒதுக்குங்கள். அது காலையோ, மாலையோ இரவோ எப்போதுவேண்டுமானாலும் இருக்கலாம். குறைந்தது 5 – 10 நிமிடம் ஒதுக்குங்கள் போதும்.

Natarajar

* அந்த பத்து நிமிடமும் கண்களை மூடிக்கொண்டு உங்களுக்கு மிகவும் பிடித்த, நீங்கள் நெருக்கமாக உணரும் உங்கள் இறைவனிடம் மனம்விட்டுப் பேசுங்கள். ஒரு நண்பனிடம், தோழியிடம், பேசுவது போல பேசுங்கள்.

* உங்கள் பிரார்த்தனை எளிமையாக இருக்கட்டும். நீங்கள் மனதுக்குள் என்ன நினைக்கிறீர்களோ அதை கடவுளிடம் கூறுங்கள். பிரார்த்தனையின் போது காலங்காலமாக கூறப்படும் ஒரே விதமான வார்த்தைகளை தான் பயன்படுத்தவேண்டும் என்று நினைக்காதீர்கள். உங்கள் மொழியிலேயே உங்கள் பாணியிலேயே கடவுளிடம் பேசுங்கள். அவருக்கு அது புரியும்.

* பிரார்த்தனை செய்யும் ஒவ்வொரு முறையும் ஏதாவது கேட்கவேண்டும் என்றில்லை. இதுவரை நீங்கள் அனுபவித்து வரும் விஷயங்களுக்கு நன்றி கூறுங்கள்.(அப்பா, அம்மா, வேலை, வாகனம், வீடு, ஆரோக்கியம், நன்கு வேலை செய்யும் உடலுறுப்புக்கள் etc. etc.). அடிக்கடி நன்றி கூறுங்கள. ஏனெனில், இவைகள் கிடைக்காமல் அவதிப்படுவோர் கோடிக்கணக்கில் இந்த உலகில் உண்டு.

* உங்கள் பிரார்த்தனையால் உங்களுக்கும் சரி… உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் சரி நிச்சயம் நல்லது நடக்கும், கடவுளின் ஆசீர்வாதம் கிடைக்கும் என்று மனதார நம்புங்கள். அது தான் உண்மை. நிறைவேற்றப்படாத பிரார்த்தனை என்ற ஒன்று இல்லவே இல்லை.

* பிரார்த்தனையில் எதிர்மறையான சிந்தனைகளை ஒரு போதும் வைக்கவேண்டாம். நேர்மறையான சிந்தனைகளுக்கு மட்டுமே பிரார்த்தனையில் பதில் கிடைக்கும்.

* இறைவன் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதை கேளுங்கள். ஆனால், இறைவன் என்ன கொடுக்கிறானோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு எது நன்மை தரும் என்பதை அவன் மட்டுமே அறிவான். ஒருவேளை நீங்கள் கேட்பதைவிட சிறந்த ஒன்றை அவன் தரக்கூடும்.

இறைவன் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதை கேளுங்கள். ஆனால், இறைவன் என்ன கொடுக்கிறானோ அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் உங்களுக்கு எது நன்மை தரும் என்பதை அவன் மட்டுமே அறிவான். ஒருவேளை நீங்கள் கேட்பதைவிட சிறந்த ஒன்றை அவன் தரக்கூடும்.

* பிரார்த்தனை என்பது கடவுளின் பிடிவாதத்தை கரைப்பது அல்ல. அவன் விருப்பத்திற்கு ஒத்துழைப்பது என்பதை என்றும் நினைவில் வைத்திருங்கள்.

* நம்மால் என்ன சிறப்பாக செய்யமுடியுமோ அதை செய்வதற்குரிய சக்தியையும் ஆற்றலையும் அவனிடம் கேளுங்கள். ஆனால் அதன் முடிவுகளை அவனிடம் ஒப்படைத்துவிடுங்கள்.

* உங்களை தவறாக நடத்தியவர்கள், அவமதித்தவர்கள், உங்களுக்கு பிடிக்காதவர்கள் இப்படி யாரேனும் இருந்தால் அவர்களுக்காகவும் பிரார்த்தியுங்கள். இறைவனின் அருளை நாம் பெற நமக்கு பெரிதும் தடையாக இருப்பது நமது மனதில் தோன்றும் கசப்புணர்வே.

* யார் யாருக்காக பிரார்த்திக்கவேண்டும் என்று ஒரு பட்டியல் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் எந்தளவு முன் பின் தெரியாதவர்களுக்காக மற்றவர்களுக்காக பிரார்த்திக்கிறீர்களோ அந்தளவு உங்களுக்கு நல்லது நடக்கும். கடவுளின் அன்புக்கு பாத்திரமாக மாறுவீர்கள். பிறருக்காக பிரார்த்திக்கும் உள்ளமே, இறைவன் விரும்பும் உள்ளமாகும்.

================================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

================================================================================

Also check :

உங்கள் பிரார்த்தனைகள் சுலபமாக நிறைவேற வேண்டுமா?

ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப் – வாருங்கள் விதியை மாற்றுவோம்!

================================================================================

 

9 thoughts on “வெற்றிகரமான பிரார்த்தனைக்கு ஒரு வழிகாட்டி!

  1. ஒவ்வொரு வாரமும் வெள்ளிக் கிழமை என்றாலே பிரார்த்தனை கிளப் நினைவு தான் எங்களுக்கு வரும். பிரார்த்தனை பதிவில் தாங்கள் அளிக்கும் ஒவ்வொரு கதையையும் மிகவும் அழகாக தொகுத்து அளிப்பதை படிப்பதில் அவ்வளவு ஆர்வம் எங்களுக்கு, அதுவும் மற்றவர்களுக்காகவும் , நம் தள வாசகர்களுக்காவும் பிரார்த்தனை செய்ய இறைவன் நமக்கு ஒரு சான்ஸ் கொடுத்து இருக்கிறாரே என்று நினைப்பது உண்டு.

    வரும் வெள்ளி விட்டு வெள்ளி இந்த பதிவை அளியுங்கள். நமக்கும் இரண்டு வாரம் பிரார்த்தனை செய்யும் வாய்ப்பு கிடைக்கிறது

    வெற்றிகரமான பிரார்த்தனைக்கு வழிகாட்டி பாயிண்ட் பை பாயிண்ட் ஆக தொகுத்து அளித்தது அற்புதம்.

    நாம் மற்றவர்களுக்காக பிரார்த்தனை செய்தால் இறைவன் நம் கோரிக்கையை கண்டிப்பாக நிறைவேற்றுவான். ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்பது போல் ”

    மாலை 5.30 மணி ஆனால் ஆட்டோமாடிக் ஆக மனம் பிரார்த்தனை செய்யும் நேரம் நினைவுக்கு வந்து விடும். ஏனெனில் மனதிலேயே நான் டைம் செட் பண்ணி விட்டேன். அது என்றைக்கும் மறக்காது நாங்கள் கடவுளின் அன்புக்கு கண்டிப்பாக பாத்திரமாவோம்

    வாழ்க … வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. அழகிய பசுமையான சூழ்நிலையில் பேரம்பாக்கம் கோவில் கோபுரத்தை பார்க்கும் பொழுது நாம் போன வருடம் ஜூன் மாதம் உழவாரப் பணி செய்த ஞாபகம் வருகிறது. இன்னும் பதிவு வரவில்லை

    சைவ வைணவ கோவிலுக்கு இடையில் சாத்வீகமாக நிற்கும் பசு கொள்ளை அழகு.

    வாழ்க ….வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  3. பிரார்த்தனை பற்றி A to Z அறிந்து கொண்டோம்..தாங்கள் சொன்னது போல் ஞாயிறு மாலை 5.35 அலாரம் வைத்து விட்டேன். இந்த பதிவின் மூலம் பிரார்த்தனையின் ஆழம் மற்றும் அவசியம் என பல பரிமாணங்களில் சிந்திக்க முடிகிறது.. தாங்கள் கூறிய வழிமுறைகளை கையாண்டால் உள்ளொளி பெருகும்..உள்ளொளி பெருக..பெருக..இறையொளி கிடைத்துவிடும் என்பது உறுதி..

    தாங்கள் எடுத்த முடிவு மிகவும் சரியானதே..இரு வாரங்களுக்கு ஒரு பிரார்த்தனை பதிவு என்பது மிக மிக சரியே..தங்களோடு இணைத்து, 2 அல்லது 3 முறை பயணித்த ஆன்மிக பயணத்தில் ..தாங்கள் படும் பாடு ? எங்களுக்கு புரிந்து..பிரார்த்தனை பதிவு ஒன்று எடுக்கும் நேரம் மற்ற பதிவுகளின் நேரத்தை விட அதிகம்..என பல செய்திகள் உள..

    கடைசியாக ஒன்றே ஒன்று – பிரார்த்தனை என்பது கடவுளின் மொழி. உள் கடந்து கடவுளிடம் பேசி ..இறை அருள் பெறுவோம்..

    சென்ற வாரம் பிரார்த்தனைக்கு உரிய அன்பர்கள் வாழ்வில் வளம் பெற குரு அருளும், இறை அருளும் துணை புரியுமாக..

    குருவே சரணம்..

    நன்றி அண்ணா..

  4. அன்புள்ள சுந்தர்,

    //நம்மால் என்ன சிறப்பாக செய்ய முடியுமோ, அதை செய்வதற்குரிய சக்தியையும், ஆற்றலையும் அவனிடம் கேளுங்கள். ஆனால், அதன் முடிவுகளை அவனிடம் விட்டுவிடுங்கள்.//

    இந்த வரிகள், இப்போது என் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது.

    இதை படித்ததும், உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    மணிவண்ணன்
    தினமலர்

  5. நம் தளத்திற்கு நான் வந்த நாள் முதல், எதை படிக்கிறேனோ இல்லையோ பிரார்த்தனை பதிவை மட்டும் தவறவிடுவதில்லை. இதுவரை ஒரு வாரம் கூட விடாமல் பிரார்த்தனை செய்து வருவேன். சில சமயம், பிரார்த்தனை பதிவை படிக்க முடியாமல் போனால், நீங்கள இதற்கு முன் வைத்த பொதுப் பிரார்த்தனை ஏதேனும் ஒன்றுக்காக பிரார்த்தனை செய்வேன்.

    திருவூரகப் பெருமாள் கோவில் மற்றும் குன்றத்தூர் முருகன் கோவில் மற்றும் பசு என மூன்றும் இருக்கும் அந்த புகைப்படம் கொள்ளை அழகும். நல்ல விஷயங்கள் உங்கள் கண்களில் பட தவறுவதில்லை.

    பிரார்த்தனைக்கு வழிக்காட்டியாக நீங்கள் கொடுத்திருக்கும் பாயிண்ட்டுகள் ஒவ்வொன்றும் கல்வெட்டில் பொறிக்க வேண்டிய வைர வரிகள்.

    தொடரட்டும் உங்கள் தொண்டு

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  6. ‘வெற்றிகரமான பிரார்த்தனைக்கான வழிகாட்டி’ நமது பிரார்த்தனையை மேலும் மெருகு ஊட்டும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

    பசுமையான பின்னணியில் கோவில் கோபுரம், இரண்டு கோவில் கோபுரங்கள் பின்னணியில் கோமாதா, ஆடலழகன் என்று பின்னி விட்டீர்கள்.

    நன்றி

Leave a Reply to sampathkumar.j Cancel reply

Your email address will not be published. Required fields are marked *