Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > கண்ணனுடன் கொண்டாடிய குரு பெயர்ச்சி!

கண்ணனுடன் கொண்டாடிய குரு பெயர்ச்சி!

print
மேற்கு மாம்பலம் காசி விஸ்வநாதர் ஆலயத்தில் நாம் கடந்த மூன்றாண்டுகளாக கோ-சம்ரட்சணம் செய்து வருவது நீங்கள் அறிந்ததே. அங்கு உள்ள கோ-சாலைக்கு நம் தளம் சார்பாக பிரதி மாதம் தீவனம் வாங்கித் தருவதுடன், அந்த கோ-சாலையை சிறந்த முறையில் நிர்வகித்து வரும் ஊழியர்களை பண்டிகை மற்றும் விஷேட நாட்களில் கௌரவித்து அவர்களுக்கு துணிமணிகள், இனிப்புக்கள் தந்து உற்சாகப்படுத்துவது நமது வழக்கம். அதே போல, அங்குள்ள பசுக்கள் கன்று ஈனும்போதெல்லாம், நம் வீட்டு விசேஷம் போல அதை கொண்டாடுவது நமது வழக்கம்.

Kasi Viswanadhar temple

Kasi Ko 1

Kasi Ko 21
கண்ணன் என்கிற காசி!

சமீபத்தில் அங்குள்ள காமாக்ஷி என்கிற பசு, ஆண் கன்று ஒன்றை ஈன்றது நினைவிருக்கலாம். சென்ற மாத இறுதியில் பசுவையும் கன்றையும் சென்று நேரில் பார்த்து அது பற்றிய ஒரு பதிவை கூட அளித்திருந்தோம். அந்த நேரம் நாம் வைத்தீஸ்வரன் கோவில், திருபாம்பரம் உள்ளிட்ட திருத்தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவிருந்தபடியால், பயணம் முடித்துவிட்டு வந்து பின்னர் ‘கண்ணன்’ பிறந்ததை கொண்டாடும் வகையில் விசேஷ கோ-சம்ரட்சணம் செய்ய முடிவு செய்திருந்தோம்.

ஆனால், எதிபாராத விதமாக அப்பாவுக்கு உடல்நலம் சரியில்லாமல் போய் மருத்துவமனையில் சேர்க்க நேர்ந்ததால், கோ-சம்ரட்சணம் ஒத்திவைக்கப்பட்டது. கோ-சாலை ஊழியர் பாலாஜியும் “முதல்ல அப்பாவை கவனிங்க சார்… அப்புறம் இதை வெச்சுக்கலாம்” என்றார்.

ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்ற பின்னர், சென்ற திங்கள் மாலை அப்பா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதையடுத்து, இரண்டு முறை நாள் குறிக்கப்பட்டு தவிர்க்க இயலாத காரணங்களால் பல்வேறு தடைகளால் ஒத்திவைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 05/07/2015 ஞாயிறன்று மாலை கோ-சம்ரட்சணத்திற்கு நாள் குறிக்கப்பட்டது. அந்நாளை சிறப்பு சேர்க்கும் விதமாக அன்று குரு பெயர்ச்சி வேறு அமைந்துவிட்டது.

Kasi Ko 2

DSC02268

Kasi Ko 6

Kasi Ko 3

குரு பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி உள்ளிட்ட கிரக பெயர்ச்சிகளின் போது கோ-சம்ரட்சணம் செய்வது நமது வழக்கம் என்பதால், இந்த முறை டபுள் டிலைட்டாக கண்ணன் பிறந்ததுடன் சேர்த்து குரு பெயர்ச்சியையும் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இந்த சிறப்பு கோ-சம்ரட்சணத்துக்கு தேவையான பொருட்களை வாங்க, துணைக்கு யாராவது இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்ற, நண்பர் ராகேஷ் அவர்களை கேட்டபோது அவர் வருவதாக ஒப்புக்கொண்டார். (அனைத்தையும் பைக்கில் எடுத்து வருவது சிரமம். துணைக்கு ஒருவர் இருந்தால் நன்றாக இருக்கும். மற்றபடி வேறொன்றுமில்லை.) ஞாயிறு மதியம் அலுவலகத்துக்கு வருமாறு கேட்டுக்கொண்டோம். நிச்சயம் வருவதாக சொன்னார். ஆனால், திடீரென அவரால் வரவியலாத ஒரு சூழ்நிலை. வேறு யாரையாவது அழைக்கலாம் என்றால், கடைசி நேரம் என்பதால் அதுவும் முடியவில்லை. கடைசியில் நாமே களமிறங்கி, ஒவ்வொரு பொருளாக வாங்கி பத்திரமாக பொறுமையாக ஆலயத்திற்கு கொண்டு வந்து சேர்த்தோம். எப்படியோ நல்லபடியாக முடிந்ததில் சந்தோஷம்.

பசுக்களுக்கு நெய், பால் சேர்க்காத விசேஷ சர்க்கரைப் பொங்கலும், பக்தர்களுக்கு பிரசாதமாக அளிக்க நெய், பால் சேர்த்த பொங்கலும் தனித் தனியாக தயாரிக்க ஆர்டர் செய்யப்பட்டது. மேலும் கோ-சாலை ஊழியர்களுக்கு வழங்க நான்கு செட் வஸ்திரம், துண்டு, ரெடிமேட் சட்டை, தாம்பூலம், ஒரு சுவீட் பாக்ஸ் ஆகியவையும் வாங்கப்பட்டது.

இந்த முறை குரு பெயர்ச்சியும் சேர்ந்து வந்ததால், குரு பகவானுக்கு சர்க்கரைப் பொங்கலுடன் சேர்த்து படைக்க ஒரு டஜன் ரஸ்தாளி வாழை வாங்கிக்கொண்டோம். (மஞ்சள் நிற பழங்கள் குருவுக்கு மிகவும் ப்ரீதி).

ஞாயிறு மாலை 6.30 மணிக்கு அனைத்தும் தயார் நிலையில் இருந்தது. அந்தப் பகுதியில் வசிக்கும் நம் நண்பர்களுக்கும் வாசகர்களுக்கும் மேற்படி கோ-சம்ரட்சணம் பற்றிய தகவலை தெரிவித்து கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டோம். நண்பர் ராஜா குடும்பத்துடன் கலந்துகொண்டார். அதே பகுதியில் உள்ள வாசகி திருமதி.விஜயஸ்ரீ என்பவரும் கலந்துகொண்டார்.

Kasi Ko 7

Kasi Ko 8Kasi Ko 9முதலில் காசி விஸ்வநாதர் சன்னதியில் காசி விஸ்வநாதருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது. பின்னர் நவக்கிரக சன்னதியில் குரு பகவானுக்கு விசேஷ அர்ச்சனை செய்யப்பட்டது. கோ-சமரட்சணத்தில் கலந்துகொண்ட அன்பர்கள் சங்கல்பம் செய்த பின்னர், மற்றும் நமது டைரியை எடுத்து அதில் இருந்த மூன்று வாசகர்களின் குடும்பத்திற்கு சங்கல்பம் செய்து அர்ச்சனை செய்யப்பட்டது. தவிர வாசகர்கள் அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தோம். தொடர்ந்து குரு பகவானுக்கு சர்க்கரைப் பொங்கலும், வாழைப்பழமும் நைவேத்தியம் செய்யப்பட்டது. (குரு பெயர்ச்சிக்கு எதுவும் செய்யமுடியவில்லையே என்று யாரும் வருந்த வேண்டாம். நிச்சயம் உங்களுக்கும் இந்த பிரார்த்தனை + கோ-சம்ரட்சணத்தின் பலன் உண்டு.)

அர்ச்சனை முடிந்ததும் இதர சன்னதிகளை தரிசித்து முடித்த பின்னர், முதலில் பசுக்களுக்கு சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. வெல்லமும் அரிசியும் அவைகள் மிகவும் விரும்பி உண்ணும் ஒன்று. அதுவே பொங்கலாக செய்யும்போது இன்னும் பிரியம் ஜாஸ்தி. முதலில் கோவிலின் மூத்த பசுவுக்கு பிரசாதம் படைக்கப்பட்டது. பின்னர் கன்றை ஈன்ற காமாக்ஷி அடுத்து புதிய குழந்தை கண்ணன் (எ) காசி. (காசி ஆலயத்தின் குருக்கள் வைத்த பெயர்!) பின்னர் தேவகி, நந்தினி உள்ளிட்ட இதர கோ-சாலை பசுக்களுக்கு பொங்கல் படைக்கப்பட்டது. அனைத்து பசுக்களுக்கும் நைவேத்தியம் செய்யப்பட பழங்களில் ஒன்று வைத்து தரப்பட்டது. சர்க்கரைப் பொங்கல் + பழம்… கேட்கவேண்டுமா? மிக மிக ஆர்வமாக புசித்தனர். கடைசியாக கோவிலில் உள்ள ரிஷபங்களுக்கு தனியாக பிரசாதம் வைக்கப்பட்டது. இவை கோவிலின் மற்றொரு பகுதியில் தனியாக பராமரிக்கப்படுகின்றன.

Kasi Ko 10

Kasi Ko 11Kasi Ko 12Kasi Ko 15நண்பர் ராஜா அவர்களின் ஐந்து வயது மகன் ஹரிஹரன் ஆர்வமுடன் இதில் பங்கேற்று பசுக்களுக்கு தன் கையால் உணவு படைத்தது கண்கொள்ளா காட்சி.

இது முடிந்ததும், கோ-சாலை ஊழியர் திரு.பாலாஜி மற்றும் அவருக்கு கோ-சாலையை பராமரிப்பதில் உதவியாக இருக்கும் கீர்த்தி, பத்ரி ஆகியோர் கௌரவிக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. (திருமலை என்பவர் தவிர்க்க இயலாத காரணத்தால் வரையலவில்லை. எனவே அவருடைய பொருட்கள் பாலாஜி அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரிடம் அது சேர்க்கப்பட்டுவிடும்.)

Kasi Ko 16

Kasi Ko 17Kasi Ko 18Kasi Ko 20பணியாளர்களை கௌரவிப்பது முடிந்ததும் தொடர்ந்து பக்தர்களுக்கு தொன்னைகளில் சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. நண்பர் ராஜாவின் குழந்தை ஹரிஹரனை கொண்டு இந்த கைங்கரியம் துவங்கப்பட்டது. அனைவரும் வரிசையில் நின்று ஆர்வமாக வாங்கிச் சென்றனர். கோவில் கோ-சாலையில் புதிய கன்று பிறந்துள்ளமைக்காகவும், குரு பெயர்ச்சியை முன்னிட்டும் இந்த பிரசாதம் வழங்கப்படுவதாக கூறியபடி பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை சிறப்பாக்கிய அனிருத்

அந்நேரம் ஆலயத்தில் இருந்த பல குழந்தைகள் பிரசாதத்தை வாங்கி சாப்பிட்டது கண்கொள்ளா காட்சி. அதுவும் அனிருத் என்கிற இந்த குழந்தை கொள்ளை அழகு. பிரசாதம் பெற்றுக்கொண்டவுடன் மழலைக்குரலில் அவன் சொன்ன ‘தேங் யூ’ கொள்ளை அழகு. குழந்தைகள் பங்கேற்காத வழிபாடு எந்த வகையிலும் நிறைவு பெறுவதில்லை. அந்த வகையில், இந்த கோ-சம்ரட்சணமும் குரு பெயர்ச்சி சிறப்பு வழிபாடும் மிக மிக சிறப்பாக நடந்தேறியது என்பதை இக்குழந்தையின் கள்ளங்கபடமற்ற புன்னகையை பார்த்தாலே புரியுமே…!

மேலும் மேலும் இது போன்ற கைங்கரியங்கள் தொடரவேண்டும், விரிவடைய வேண்டும் என்பதே நமது அவா. நமது பணிகளுக்கு துணை நிற்கும் அனைத்து வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

ஆவாகி ஆவினில் ஐந்து மாகி அறிவாகி அழலாகி அவியு மாகி
நாவாகி நாவுக்கோர் உரையு மாகி நாதனாய் வேதத்தி னுள்ளோ னாகிப்
பூவாகிப் பூவுக்கோர் நாற்ற மாகிப் பூக்குளால் வாசமாய் நின்றா னாகித்
தேவாகித் தேவர் முதலு மாகிச் செழுஞ்சுடராய்ச் சென்றடிகள் நின்ற வாறே.

– திருநாவுக்கரசர்

===============================================================================

ஒரு முக்கிய விஷயத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்!

நம் தளத்தில் பதிவுகளின் இறுதியில் விருப்ப சந்தா குறித்த கோரிக்கை அளிக்கப்படுவது நீங்கள் அறிந்ததே. அது தவிர அவ்வப்போது நாம் செய்யக்கூடிய அறப்பணிகளுக்கும் உதவி கோரி அறிவிப்பு வெளியிடுகிறோம். அது குறித்து ஒரு சிறு விளக்கம்.

1) விருப்ப சந்தா

இது தான் நமது வாழ்வாதாரம். தளம் நடப்பது இதைக் கொண்டு தான். இதன் மூலம் தான் தளத்தின் நிர்வாக செலவுகள் செய்யப்படுகிறது. இதை அனைத்து வாசகர்களிடம் இருந்தும் – அவரவர் சக்திக்கு ஏற்ப – எதிர்பார்க்கிறோம். ஆனால் இதைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. பெயரைப் போலவே இது விருப்ப சந்தா. (VOLUNTARY SUBSCRIPTION).

நம் தளத்தின் நிர்வாகப் பணிகளில் உதவுவதே சிறந்த புண்ணிய காரியம் தான் என்றாலும் ‘விருப்ப சந்தா’ செலுத்தும் வாசகர்களுக்கு பிரதியுபகாரம் செய்யவேண்டி அதில் கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை நூம்பல் கோவிலில் நடைபெறும் கோ-சம்ரட்சணத்திற்கு பயன்படுத்தப்படுகிறோம்.

2) சேவைகளில் உதவி வேண்டி விடுக்கும் கோரிக்கைகள்

இது அவ்வப்போது நாம் செய்யக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய அறப்பணிகளுக்கு. இதை நாம் அனைத்து வாசகர்களிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்தந்த சேவைகளில் இணைய விருப்பமுடைய வாசகர்களிடமிருந்து தான் எதிர்பார்க்கிறோம். அவ்வளவே. செய்யும் சேவையானது செம்மையாக செய்ய இது துணை புரியும். இதில் கிடைக்கும் தொகையை வைத்து பிரதி மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோ-சம்ரட்சணம் செய்யப்படுகிறது. (இது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.)

விருப்ப சந்தா என்பது அனைத்து வாசகர்களின் கடமை. சேவைகளில் உதவி என்பது அவரவர் சௌகரியம். இரண்டிற்கும் உதவ விரும்பினால் மிக்க மகிழ்ச்சி.

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check :

கலி தீர்க்க பிறந்தான் நம் கண்ணன் !

நம் பாஞ்சாலி பெற்ற குழந்தை ‘தேவகி’!

‘நல்ல காலம் நிச்சயம் வரும்!’

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

அறங்களில் உயர்ந்த கோ சம்ரோக்ஷனத்தின் அருமையும் பெருமையும்!

நலன்களை அள்ளித்தர இதோ நமக்கு ஒரு நந்தினி!

புண்ணியத்திலும் பெரிய புண்ணியம் !

மீனவர் வலையில் மாட்டிக்கொண்ட முனிவர்… எப்படி மீட்கப்பட்டார்?

கோமாதா சேவையும் ‘குரு’ ப்ரீதியும் – குரு பெயர்ச்சி உங்களுக்கு ஏற்றம் தர ஓர் எளிய வழி!

நம்ம துர்காவுக்கு வேலன் பொறந்தாச்சு!

எட்டிப்பார்த்து சொல்லுங்கள், இறைவன் உள்ளே இருக்கிறானா? ‘ரைட்மந்த்ரா பிரார்த்தனை கிளப்’

கோ சேவை செய்பவர்களுக்கு ஒரு கௌரவம் – ரைட்மந்த்ரா தீபாவளி கொண்டாட்டம் 2

===============================================================================

[END]

6 thoughts on “கண்ணனுடன் கொண்டாடிய குரு பெயர்ச்சி!

  1. வணக்கம் சார்.

    நீண்ட நாட்களுக்கு பின்னர் பின்னூட்டம் பதிகிறேன். பணியிடம் மாறிவிட்டபடியால் முன்பைப் போல பின்னூட்டம் பதிய முடியவில்லை. என் கணவரின் மொபைலை வாங்கி பதிவுகள் அனைத்தையும் தவறாமல் படித்து வருகிறேன். தளத்தில் நீங்கள் அளிக்கும் பல கதைகள் என் குழந்தைகளுக்கு சொல்லி வருகிறேன். மிக ஆர்வமாக கேட்கிறார்கள்.

    கண்ணன் மிக மிக அழகு. சென்னை வரும்போது அவசியம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வரவேண்டும். அப்படியே கண்ணனையும் காமாட்சியையும் தரிசிக்கவேண்டும்.

    இது போன்ற ஒவ்வொரு நிகழ்ச்சியின் பின்னேயும் நீங்கள் இதை ஆ ஆர்கனைஸ் செய்ய எத்தனை சிறப்பப்படுகிரீர்கள் என்பது புரிகிறது. மேற்படி கோ-சம்ரோக்ஷனதிற்கு வருகை தந்து சிறப்பித்த ரைட்மந்த்ரா நண்பர்களுக்கு நன்றி.

    நம் தளத்தை பார்க்க ஆரம்பித்த பிறகு, பசுமாட்டை நான் பார்க்கும் பார்வையே வேறு. அதற்கு முன்பு கூட அவற்றை நான் வணங்கி வந்தாலும் நம் தளம் பசுவை குறித்து மிக உயர்வான ஒரு பார்வையை வழங்கியிருக்கிறது.

    குரு பெயர்ச்சியும் கூட சேர்ந்து மேற்படி கோ-சம்ரோக்ஷனம் அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. எங்களுக்காக பிரார்த்தனை செய்தமைக்கு நன்றி நன்றி.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்.

  2. கண்ணனுடன் கொண்டாடிய கோ சம்ரோக்சனமும் , குரு பெயர்ச்சி விழாவும் நம் தளம் சார்பாக இனிதே நடை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. இதே போல் பல அறச் செயல்களை நம் தளம் சார்பாக செய்ய குரு வருளும் திருவருளும் கண்டிப்பாக துணை நிற்கும். இதில் கலந்து கொண்ட வாசகர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    கோ சம்ரோக்சனம் இரண்டு முறை தடை பட்டும் , குருபெயர்ச்சி அன்று நடைபெற்றது இன்னும் சிறப்பு. காரணம் இல்லாமல் காரியம் இல்லை…

    சுபெர்ப் photos

    வாழ்க .. வளமுடன் …

    நன்றி
    உமா வெங்கட்

  3. வணக்கம் சுந்தர். கடைசி படத்தில் உள்ள குழைந்தையின் புன்னகை அழகுதான், மனதை கொள்ளை கொள்கிறது.குழந்தையும்,தெய்வம் ஒன்று என்று சும்மாவா சொன்னார்கள். நன்றி

  4. டியர் சுந்தர்,

    குரு பெயர்ச்சி அன்று என்னால் எந்த கோவிலுக்கும் செல்ல முடியவில்லையே என்ற வருத்தம் தாங்கள் நம் தளம் சார்பாக காசி விஸ்வநாதர் கோவிலில் செய்த கோ சம்ப்ரோத்ஷனத்தின் மூலம் நீங்கியது. மிக்க நன்றி.

  5. அருமையான பதிவு
    புகைப்படங்கள் அனைத்தும் அருமை
    அதிலும் அனிருத் மற்றும் குட்டி கண்ணனின் படங்கள்
    நமது தளத்தின் நண்பர்கள் அவர்தம் குடும்பத்தோடு வந்து பங்கேற்றதை காணும்போது மனம் நிறைகிறது
    சுந்தர் ஜி உங்கள் தந்தைக்கு எனது வணக்கங்கள் – விரைவில் பூரண குணமடைய பிரார்த்தனைகள்
    உங்கள் முயற்ச்சிக்கு எங்கள் பாராட்டுதல்கள் – பணி சிறக்க வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன் !!!

  6. நிகழ்வில் பங்கெடுக்க முடியாமல் போனதற்கு, முதலில் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். தாங்கள் படும் பாடு புரிந்து கொண்டேன்.

    கண்ணனும் அழகு..சுட்டி “அனிருத் ” தும் அழகு..இந்த பதிவை அழகாகிய அனைத்து குட்டி குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள். நம் தளம் சார்பாக செய்த குரு பெயர்ச்சி அர்ச்சனை மிகவும் பிரசித்தி பெற்றது என்றே சொல்ல வேண்டும்(ஏனெனில் தி.நகர் சனீஸ்வரன் கோவிலில் தங்களோடு இணைந்து செய்த பிரார்த்தனை மற்றும் அர்ச்சனை) . அனைவர்க்கும் குரு அருள் கிடைத்து, வாழ்வில் வளம் பெற இறைவனை வேண்டுகிறேன் அண்ணா…

Leave a Reply to rakesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *