Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > ஊதியத்தை குறைத்து அவமதித்த ஆங்கிலேயே அரசு – ஜகதீஷ் சந்திரபோஸ் செய்தது என்ன?

ஊதியத்தை குறைத்து அவமதித்த ஆங்கிலேயே அரசு – ஜகதீஷ் சந்திரபோஸ் செய்தது என்ன?

print
‘தாவரங்களுக்கும் உயிர் உண்டு’ என்பதை கண்டுபிடித்தவர் இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ். 1884 ஆம் இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்து இந்தியா திரும்பிய நேரம், அவரது திறமையை நன்கு அறிந்திருந்த ஒரு அதிகாரி, அவரைப் பற்றியும் ஜெகதீஷ் சந்திரபோஸின் திறமையைப் பற்றியும் ஒரு கடிதம் எழுதி, வங்கதேசத்து கல்வி இலாகாவில் ஜகதீஷ் சந்திரபோஸுக்கு ஒரு வேலை கொடுக்கும்படி அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிப்பன் பிரபுவுக்கு சிபாரிசு கடிதம் ஒன்றை தன் கைப்பட எழுதி தந்தார்.

Jagadish Chandra Boseஇதையடுத்து ஜகதீஷ் சந்திர போஸிற்கு கல்கத்தாவில் உள்ள பிரெசிடென்சி கல்லூரியில் இயற்பியல் பேராசிரியர் பணி அளிக்கப்பட்டது. அப்போதெல்லாம் ஆங்கிலேயர்க்கு முழு சம்பளமும், அதே பணியை செய்யும் இந்தியர்க்கு குறைவான சம்பளமும் தரப்படுவது வழக்கம். ஆங்கிலேயர்க்கு இணையான ஏன் அதைவிட அதிகமாகவே கல்வியும் திறமையும் பெற்றிருந்தும் ஜகதீஷ் சந்திரபோஸ் இந்தியர் என்பதால் அவருக்கும் குறைவான ஊதியமே வழங்கப்பட்டது. ஜகதீஷ் இதை பெரிய அவமரியாதையாக கருதினார். தனக்கும் ஆங்கிலேயர்களுக்கு வழங்கப்படுவது போல, முழு ஊதியமும் தரவேண்டும் என்று கல்லூரி முதல்வருக்கு கடிதம் எழுதினர். ஆனால் அவர் ஜெகதீஷின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டார்.

என்ன செய்வதென்று யோசித்த ஜகதீஷ் சந்திரபோஸ், தனது நேர்மறையான அணுகுமுறை மூலம் இதை மாற்ற முடிவு செய்தார். தனக்கு ஆங்கிலேயர்க்கு இணையான ஊதியம் தரப்படும் வரை தாம் ஊதியமே பெற்றுக்கொள்ளாமல் சிறப்பாக கல்வி பணியாற்றுவது என்று முடிவு செய்து, முன்பைவிட மிக மிக சிறப்பாக கல்விப் பணியாற்றிட உறுதி பூண்டு அப்படியே நடக்கவும் தொடங்கினார். தொடர்ந்து மூன்று வருடங்கள் ஊதியமே பெற்றுக்கொள்ளாமல் அதே சமயம் மிக சிறப்பாக பணியாற்றினார் ஜகதீஷ் சந்திரபோஸ்.

மாணவர்களிடம் ஜகதீஷ் நற்பெயர் பெற்றது மட்டுமின்றி, அவர்கள் பெற்றோர்களிடமும் நற்பெயர் பெற்றார். அவருடைய வகுப்பு மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினர். பல்கலை முழுதும் அவர் புகழ் பரவியது.

ஜகதீஷ் சந்திரபோஸ் இவ்வாறு ஊதியமே பெற்றுக்கொள்ளாத நிலையிலும் மிக மிகச் சிறப்பாக கல்விப் பணியாற்றி வருவதை கல்லூரி நிர்வாகம் கவனித்து வந்தது. ஜகதீஷ் சந்திரபோஸின் நேர்மறை போராட்டத்தின் வெம்மை தாங்க முடியாமல் ஒரு கட்டத்தில் அவருக்கு ஆங்கிலேயேப் பேராசிரியர்களுக்கு இணையான ஊதியம் அளிக்க முன்வந்தது. மேலும் அவரது பணியை நிரந்தரமாக்கவும் முடிவு செய்து, அவரை நிரந்தரமாகியது. அது மட்டுமா கூடவே மூன்றாண்டுகள் நிலுவையிலிருந்த சம்பளத் தொகையையும் வெள்ளையர்களுக்கு இணையாக உயர்த்தி மொத்தமாக வழங்கியது.

மூன்றாண்டுகள் ஊதியத்தை தியாகம் செய்யும் நிலையில் நிச்சயம் ஜகதீஷ் இருந்திருக்கமாட்டார். ஆனாலும் அப்படி ஒரு முடிவை அவர் எடுத்தார் என்றால் அதற்கு காரணம் அவரது உதிரத்தில் ஊறிய நேர்மறை சிந்தனை தான் என்பதை மறுக்க முடியாது.

எந்த ஒரு பிரச்சனையையும் நேர்மறையாக அணுகினால் வெற்றி நிச்சயம் என்பது இதன் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம்.

=================================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=================================================================================

Also check :

நீண்ட நாள் வாழ்வதற்குரிய வழி என்ன தெரியுமா?

சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – மகளிர் தின ஸ்பெஷல்!

சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

கலாம் நினைத்தார்… கடவுள் முடித்தார்!  வியக்க வைக்கும் உண்மை சம்பவம்!!

ஆளும் வளரனும் அறிவும் வளரனும் என்று முழங்கிய பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்!

சுப்பிரமணிய சிவா — வ.உ.சி. என்கிற துப்பாக்கியின் தோட்டா!

நன்றி மறவா நல்லவர் ‘நடிகர் திலகம்’, மகா பெரியவாவை சந்தித்த அந்த தருணம்…

“என்னை தூக்கிலிடவேண்டாம்… சுட்டுக்கொல்லுங்கள்!” என்று சொன்ன பகத்சிங். ஏன் ?

இவை வெறும் முகங்களில்லை… தேசத்தின் முகவரிகள்!

=================================================================================

[END]

5 thoughts on “ஊதியத்தை குறைத்து அவமதித்த ஆங்கிலேயே அரசு – ஜகதீஷ் சந்திரபோஸ் செய்தது என்ன?

  1. ஜகதீஸ் அவர்களின் அணுகுமுறை நமக்கு எல்லாம் ஒரு பாடம். இதன் மூலம் எந்த ஒரு விசயத்தையும் நேர்முறை யாக அணுகினால் வெற்றி நம் பக்கம். என் எண்ணங்களும் , நம் அணுகு முறைகளும் மாறுவதற்கு இன்னும் சிறிது நாள் ஆகும் என நினைக்கிறேன் . என்ன தான் பல energetic பதிவை படித்தாலும் சிறிது நாளில் மனம் பழையபடி மாறிவிடுகிறது.

    நம் வாசகர்களுக்காக ஒரு அழகிய செய்தியை பதிவாக அளித்ததற்கு நன்றிகள் பல

    வாழ்க …..வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. ஜகதீஷ் சந்திரபோஸ் தான் தாவரங்களுக்கு உயிர் உண்டு என்பதை கண்டுப்பிடித்தவர் என்று இப்போது தான் தெரிந்துகொள்கிறேன்.

    என் குழந்தைகளிடம் இந்த கதையை சொன்னபோது மிக ஆர்வமாக கேட்டார்கள். பெயர் ஒற்றுமை காரணமாக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் கூடப் பிறந்தவரா இவர் என்று கேட்டார்கள். இல்லை இவர் ஒரு விஞ்ஞானி என்பதை விளக்கினேன்.

    நம் தளமானது அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள வகையில் இருப்பது சிறப்பு.

    வாழ்க்கையில் எந்த சூழலிலும் நேர்மறையாக இருக்கவேண்டியதன் அவசியத்தை ஜகதீஷ் சந்திரபோஸ் மிக அழகாக உணர்த்திவிட்டார். நல்லதொரு பதிவு. நன்றிகள் பல.

    – பிரேமலதா மணிகண்டன்,
    மேட்டூர்

  3. வணக்கம் சுந்தர். நல்ல,திறமையான மனிதரை பற்றி படிகதந்தமைக்கு நன்றி. மூன்று வருடங்கள் சம்பளம் இல்லாமல் சிரமபட்ட போதும் மனுருதியோடு இருந்தந்தருக்கு கிடைத்த வெற்றி .எதிர் நீச்சல் போடுபவர்கள் வெற்றிபெறுகிறார்கள் என்பதற்கு மற்றும் ஓர் உதாரணம். நன்றி

  4. “நேர்மறை சிந்தனையை செயலில் காட்டினால் வெற்றி நிச்சயம் ” என்ற கருத்தை புரிந்து கொண்டோம். மாமனிதருடைய வாழ்வில் நடந்த சம்பவத்தை தொகுத்து அருமை.

    இப்படியெல்லாம் கூட நம் நாட்டில் வாழ்ந்தார்களா? என்று வியப்பும் தோன்றுகிறது. நேர்மறை சிந்தனையை நெஞ்சில் விதைப்போம்..
    வாழ்வில் வெற்றியை அறுவடை செய்வோம்..!

    நன்றி அண்ணா..

Leave a Reply to Kavitha Nagarajan Cancel reply

Your email address will not be published. Required fields are marked *