Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

print
து வரை நாம் படித்த கதைகளில் ONE OF THE BEST என்று இதைச் சொல்லலாம். நீங்களும் படியுங்கள். கதை கூறும் கருத்துக்களை உங்கள் ஆழ்மனதில் விதையுங்கள். உங்கள் குழந்தைகளுக்கும் இந்த கதையை சொல்லுங்கள். (குழந்தைகளிடம் கதை சொல்லும் பழக்கம் எத்தனை பேருக்கு உண்டு?)

அர்த்தமுள்ள சோதனைகள் ஆண்டவனின் போதனைகள்!

சோதனைகளையும், வேதனைகளையும் எதிர்கொள்ளாமல் சாதனைகள் புரிந்தவர்கள் என்று சரித்திரத்தில் எவருமே இல்லை. புலிகள் வாழும் அதே காட்டில்தான் புள்ளிமான்களும் வாழ்கின்றன. பூனைகள் வாழும் வீடுகளில்தான் எலிகளும் குடித்தனம் நடத்துகின்றன. சுறா மீன்கள் வாலைச் சுழற்றும் கடலில்தான் சிறுமீன்களும் நீந்திச் சுற்றுகின்றன. பாம்புகள் வாழும் வயல்களில்தான் தத்திச் செல்லும் தவளைகளும் இருக்கின்றன. ‘போராடி ஜெயிப்பதுதான் வாழ்க்கை’ என்பதை உயிரினங்கள் கூட அல்லவா நமக்கு உணர்த்துகின்றன!

விவசாயி ஒருவன் கடவுளிடம் ஒரு நாள் விவாதம் செய்தான். ‘‘கஷ்டப்பட்டு நான் பயிரிடுகிறேன். அமோக விளைச்சல் பெற அன்றாடம் பாடுபடுகிறேன். நீ என்னடா என்றால் திடீரென்று பேய் மழையைத் தருகின்றாய்! வேண்டாத சமயத்தில் வீசுகின்றாய் காற்றை! வீணான போதுகளில் வெப்பத்தைக் கொடுக்கின்றாய்! என் பொறுப்பில் காற்று, மழை, வெயில் இருந்தால் நான் எண்ணியதைச் சாதிப்பேன்’’ என்றான்.

‘‘கஷ்டப்பட்டு நான் பயிரிடுகிறேன். அமோக விளைச்சல் பெற அன்றாடம் பாடுபடுகிறேன். நீ என்னடா என்றால் திடீரென்று பேய் மழையைத் தருகின்றாய்! வேண்டாத சமயத்தில் வீசுகின்றாய் காற்றை! வீணான போதுகளில் வெப்பத்தைக் கொடுக்கின்றாய்! என் பொறுப்பில் காற்று, மழை, வெயில் இருந்தால் நான் எண்ணியதைச் சாதிப்பேன்’’

விவசாயியின் கோரிக்கைக்கு மனமிரங்கி கடவுள் சொன்னார் ‘‘சரி! இம்முறை விளைச்சலில் நான் தலையிடமாட்டேன்! உன் கட்டளையை ஏற்று காற்று வீசும், மழை பெய்யும், வெயில் வரும், போகும்! சரிதானே?’’ என்றார்.

‘‘மிக மிக சந்தோஷம்’’ என்ற விவசாயி ஏற்ற நேரத்தில் உழுதான்! விதை தூவினான்! இயற்கையே அவன் கையில் இயங்கியதால் தேவையான சமயத்தில் மழையை, வெப்பத்தை, காற்றை வரச்செய்தான்! அவன் இச்சை நிறைவேறியது! பச்சைப் பசேல் என்று கண்ணுக்கு விருந்தாக அவன் கழனி காட்சியளித்தது. அறுவடைப் பருவம் வரவே பயிர்களை அறுத்து கட்டு கட்ட எண்ணினான். நம் கட்டுப்பாட்டில் அனைத்தும் அமைந்ததால் உருண்டும், திரண்டும் தானியம் விளைந்திருக்கும் என்றுமகிழ்ந்தபடி ஒரு கதிரைப் பிரித்துப் பார்த்தான்! அதிர்ந்தே போனான் விவசாயி.

God has purpose copy

காரணம் கதிருக்குள் நெல் மணியையே காணோம். இன்னொரு கதிர், இன்னொரு கதிர் என பல கதிர்களைப் பிரித்துப் பார்த்தான். ஒரு கதிருக்குள்ளும் தானியம் உருவாகவே இல்லை. பதர்களாக கதிர்கள் எல்லாம் மாறியிருப்பது ஏன் என்று பதை பதைத்தான்.

‘‘இறைவா! ஏற்ற முறையில் இயற்கையை இயக்கி மழை, வெயில், காற்றை வரச் செய்தேனே. ஏன் இந்த சோதனை?’’ என்றான்.

புன்னகை புரிந்தபடியே கடவுள் சொன்னார்… ‘‘என் கட்டுப்பாட்டில் இயற்கை இயங்கியபோது ஏன் காற்று வேகமாக வீசியது தெரியுமா? உஷ்ணம் ஏன் உச்ச நிலைக்குச் சென்றது தெரியுமா?”

“வேகக்காற்று வீசினால்தான் பயிர் தன் வேர்களை பூமிக்குள் ஆழமாக இறக்கி வலுப்பெறும். வெப்பம் அதிகமானால்தான் தண்ணீரைத் தேடி நாலாபுறமும் வேர்கள் செல்லும். இதமாகவும், பதமாகவும் நீ இயற்கையை இயங்கச் செய்ததால் உன் பயிர்கள் ஊட்டம் அடையவில்லை. தள தளவென்று வளர்ந்ததே தவிர தானியத்தைத் தரும் தகுதி அதற்கு ஏற்படவில்லை.’’

விளக்கம் அறிந்த விவசாயி கடவுளை விழுந்து கும்பிட்டார்!

சோதனைகளும், துன்பங்களும் எதற்காக வருகின்றன என்கின்ற போதனையை கடவுள் அவன் மூலம் நமக்கும் கற்றுக் கொடுத்து விட்டார் அல்லவா!!

நன்றி : திருப்புகழ்த் திலகம் மதிவண்ணன் | ‘வாழ்வாங்கு வாழலாம் வா’ | தினகரன் ஆன்மீக மலர்

===============================================================================

ஒரு முக்கிய விஷயத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்!

நம் தளத்தில் பதிவுகளின் இறுதியில் விருப்ப சந்தா குறித்த கோரிக்கை அளிக்கப்படுவது நீங்கள் அறிந்ததே. அது தவிர அவ்வப்போது நாம் செய்யக்கூடிய அறப்பணிகளுக்கும் உதவி கோரி அறிவிப்பு வெளியிடுகிறோம். அது குறித்து ஒரு சிறு விளக்கம்.

1) விருப்ப சந்தா

இது தான் நமது வாழ்வாதாரம். தளம் நடப்பது இதைக் கொண்டு தான். இதன் மூலம் தான் தளத்தின் நிர்வாக செலவுகள் செய்யப்படுகிறது. இதை அனைத்து வாசகர்களிடம் இருந்தும் – அவரவர் சக்திக்கு ஏற்ப – எதிர்பார்க்கிறோம். ஆனால் இதைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. பெயரைப் போலவே இது விருப்ப சந்தா. (VOLUNTARY SUBSCRIPTION).

நம் தளத்தின் நிர்வாகப் பணிகளில் உதவுவதே சிறந்த புண்ணிய காரியம் தான் என்றாலும் ‘விருப்ப சந்தா’ செலுத்தும் வாசகர்களுக்கு பிரதியுபகாரம் செய்யவேண்டி அதில் கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை நூம்பல் கோவிலில் நடைபெறும் கோ-சம்ரட்சணத்திற்கு பயன்படுத்தப்படுகிறோம்.

2) சேவைகளில் உதவி வேண்டி விடுக்கும் கோரிக்கைகள்

இது அவ்வப்போது நாம் செய்யக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய அறப்பணிகளுக்கு. இதை நாம் அனைத்து வாசகர்களிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்தந்த சேவைகளில் இணைய விருப்பமுடைய வாசகர்களிடமிருந்து தான் எதிர்பார்க்கிறோம். அவ்வளவே. செய்யும் சேவையானது செம்மையாக செய்ய இது துணை புரியும். இதில் கிடைக்கும் தொகையை வைத்து பிரதி மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோ-சம்ரட்சணம் செய்யப்படுகிறது. (இது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.)

விருப்ப சந்தா என்பது அனைத்து வாசகர்களின் கடமை. சேவைகளில் உதவி என்பது அவரவர் சௌகரியம். இரண்டிற்கும் உதவ விரும்பினால் மிக்க மகிழ்ச்சி.

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check for more motivational stories :

‘எப்படி வாழ்ந்தாலும் பிரச்னைகள் வருது. எப்படித் தான் வாழ்வது?’

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க வேண்டுமா? –

வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா?

பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா?

சந்தோஷம் பொங்கிட, நிம்மதி நிலைத்திட ஒரு அதிசய மந்திரம்

மகிழ்ச்சி எங்கே இருக்கிறது தெரியுமா ?

இறைவா, என்னை ஏன் தேர்ந்தெடுத்தாய் ?

நடப்பதெல்லாம் நன்மைக்கே! நடக்காதது இன்னும் நன்மைக்கே!!

அனைத்தும் அறிந்த இறைவன் அருள் செய்ய நம்மை சோதிப்பது ஏன் ?

நினைப்பதை அடைய இதோ ஒரு சூத்திரம்!

மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா?

தவளையை கொன்றது எது?

===============================================================================

[END]

 

6 thoughts on “நாம் நினைப்பது போல எல்லாம் நடந்தால் எப்படியிருக்கும் ?

  1. மிகவும் அருமையான சிந்திக்ககூடிய பதிவு.

    ஆண்டவன் நமக்கு எதற்கு சோதனைகள் கொடுக்கிறார் என்பதை இந்த பதிவு அழகாக தெளிவு படுத்தியது

    சோதனையில் துவளாமல் இருந்தால் வெற்றி நம் பக்கம் . அந்த மனப் பக்குவம் நமக்கு வர வேண்டும்

    வாழ்க …. வளமுடன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. மிக அருமையான கதை …வாழ்க்கையில் நடப்பது
    அனைத்திற்கும் ஒரு காரணம் உண்டு என்பதை உணர்த்தும் மிக அழகிய கதை ..நன்றி சுந்தர் சார் …

  3. அருமையான பதிவு

    மிகச்செரியான தருணத்தில் இந்த பதிவினை இன்று நான் படிக்க நேர்ந்தது என் நல்ல நேரம்

    தம்பி மகள் விடுமுறைக்கு வரும்போது கதை சொல்லும் பழக்கம் உண்டு. கதை சொன்னால் தான் அவளுக்கு தூக்கமே வரும். இந்த கதையை அவசியம் பகிருவேன்.

    நன்றி

Leave a Reply to sampathkumar.j Cancel reply

Your email address will not be published. Required fields are marked *