Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > குரு கேட்ட ‘எதற்கும் உபயோகப்படாத பொருள்’ !

குரு கேட்ட ‘எதற்கும் உபயோகப்படாத பொருள்’ !

print
ரு குருகுலத்தில் மிகவும் பணக்கார வீட்டு பிள்ளைகள் தங்கி படித்தார்கள். படிக்கும் காலத்தே பலவற்றை கற்றுக்கொண்டார்கள். படித்து முடித்து புறப்படும்போது, குருவிடம், “குருவே தங்களுக்கு தட்சணை தர பிரியப்படுகிறோம். என்ன வேண்டுமோ கேளுங்கள்… எங்களால் முடியாதது எதுவும் இல்லை” என்றனர். அவர்கள் குரு தட்சணை தர விரும்பியது தவறல்ல. ஆனால் அந்த எண்ணத்தை வெளிப்படுத்திய விதம் தான் தவறு என்பதை குரு புரிந்துகொண்டார். மேலும் அவர்களுக்கு இன்னும் பக்குவம் போதவில்லை என்பதால் பாடம் கற்பிக்க முடிவு செய்தார்.

அவர்களிடம், “மாணவர்களே நல்லது. மிக்க மகிழ்ச்சி. எனக்கு தட்சணையாக பெரிதாக எதுவும் வேண்டாம். பக்கத்தில் எங்காவது சென்று, எதற்கும் உபயோகமற்ற ஏதாவது இருந்தால் கொண்டு வந்து கொடுங்கள்” என்றார்.

என்னவோ ஏதோ கேட்கப்போகிறார் என்றல்லவா நினைத்தோம்… பூ… இவ்வளவு தானா…. என்று நினைத்தவர்கள், “இதோ சில நிமிடங்களில் வருகிறோம் குருவே!” என்று கூறிவிட்டு அருகே உள்ள கானகத்திற்குள் சென்றனர்.

அங்கு அவர்கள் சென்று பார்த்தபோது, பார்க்கும் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் உபயோகமுள்ளதாகவே தோன்றியது. கடைசியில் ஒரு மரத்தின் கீழே நிறைய சருகுகள் குவிந்து கிடந்தன. அவற்றை ஆளுக்கு கொஞ்சம் அள்ளிக்கொண்டு திரும்பினர்.
Guru Dhatchanai

குருவிடம் அதை சமர்பித்து, “இதோ குருவே ஒன்றுக்கும் உபயோகமில்லாத சருகுகள்” என்றனர்.

அப்போது அங்கே வந்த ஒரு குடியானவன், “ஐயா… இவை நான் சேமித்து வைத்தவை. இவை எனக்கு தான் சொந்தம்” என்றான்.

திடுக்கிட்ட மாணவர்கள், “காய்ந்த சருகை கொண்டு போய் நீ என்ன செய்யப்போகிறாய்?” என்று கேட்க, அதற்கு அவன், “இவைகளை எரித்து சாம்பலாக்கி, எனது நிலத்துக்கு உரமாக போடுவேன். பயிர்கள் நன்கு வளரும்!” என்றான்.

காய்ந்த சருகிற்கு இப்படி ஒரு பயனா என்று வியந்த மாணவர்கள், அவனிடம் அவனது சருகுகளை ஒப்படைத்துவிட்டு கானகத்தின் வேறு பகுதிக்கு சென்றனர்.

அங்கு கீழே கிடந்த சருகுகளை இரண்டு பெண்கள் பொறுக்கிக் கொண்டிருந்தனர். “இதை எதற்கு சேகரிக்கிறீர்கள்?” என்று அவர்களிடம் கேட்க, அவர்களுள் ஒருவள் சொன்னாள்… “இவற்றில் சற்று பெரிய இலைகளை ஒன்று சேர்த்து தைத்து அதை சந்தைக்கு கொண்டு சென்று விற்பேன். தைக்க முடியாத சிறிய இலைகளை இவள் அடுப்பெரிக்க பயன்படுத்திக்கொள்வாள்!”

அவர்கள் பதிலை கேட்டு வியந்து போன மாணவர்கள், மேலும் சற்று ஆழமாக உள்ளே சென்றனர். அங்கே ஒரு மரத்தின் கீழே இருந்த சருகை சேகரிக்க முனைந்த போது, ஒரு சிறிய பறவை, அந்த சருகில் ஒன்றை எடுத்துக்கொண்டு பறந்துச் சென்றது. பறவை என்ன செய்கிறது என்று பின்னால் சென்று பார்த்தவர்கள், அது அந்த சருகைக் கொண்டு தனது கூட்டை கட்ட பயன்படுத்துவது கண்டு மேலும் வியந்தனர்.

ஏமாற்றத்துடன் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஒரு சிறிய குட்டையில் ஒரு சருகு மிதந்து கொண்டிருந்தது. இது எதற்கும் பயன்படாது என்று கருதி அதை எடுக்க முற்பட்டபோது, அதில் சில எறும்புகள் இருந்ததை பார்த்தனர். நீரில் மூழ்காமல் அந்த ஏறும்புக்களை அந்த சருகு தான் காப்பாற்றுகிறது என்று புரிந்துகொண்டனர்.

வெறுங்கையுடன் குருகுலத்துக்கு திரும்பினர்.

“என்ன மாணவர்களே குரு தட்சணையை கொண்டு வந்துவிட்டீர்களா?”

மிகவும் தயக்கத்துடன் கானகத்தில் நடந்தவைகளை கூறி, “நீங்கள் எதற்கும் பயன்படாத பொருளை கேட்டீர்கள். ஆனால் ஒரு காய்ந்த சருகு கூட பலருக்கு பலவிதங்களில் பயன்படுகிறது குருவே!” என்றனர்.

“உலர்ந்த எதற்கு பயனற்றது என்று நீங்கள் கருதிய ஒரு சருகே பலருக்கு பலவிதங்களில் பயன்படுகிறது எனும்போது, பகுத்தறிவுள்ள மனிதர்கள் இந்த உலகிற்கு எப்படியெல்லாம் பயன்படவேண்டும், பிறருக்கு மகிழ்ச்சியை தரும் செயல்களை செய்யவேண்டும் என்று யோசித்துப் பாருங்கள்.”

“குருவே ஒன்றுக்கும் உபயோகமில்லாதது என்று நாங்கள் கருதிய சருகை வைத்தே மிகப் பெரிய பாடத்தை போதித்துவிட்டீர்கள். இனி நாங்கள் பிறருக்கு பயனுள்ள ஒரு வாழக்கையையே வாழ்வோம். அதுவே உங்களுக்கு அளிக்கக்கூடிய உண்மையான் குரு தட்சணை என்பதை புரிந்து கொண்டோம்! எங்களை மன்னியுங்கள்!!” என்றனர் சீடர்கள்.

– திரு.சுகி.சிவம் அவர்கள் ஒரு விழாவில் கூறிய கதையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது இது.

இறைவன் படைப்பில் பல சந்தர்ப்பங்களில் யாருக்கும் பயனற்று விளங்கக்கூடிய ஒரே வஸ்து மனிதன் தான். ஒரு சராசரி மனிதன் ஒரு காய்ந்த சருகுக்கு கூட ஈடாகமாட்டான் என்று மேற்கூறிய கதையின் மூலம் புரிந்திருக்கும். எனவே நாம் போட்டியிடவேண்டியது ஒரு சருகோடு தான்.

Kadavul

நமது நிலை எப்படி இருந்தாலும், எத்தகைய சூழ்நிலையில் நாம் வாழ்ந்தாலும் நம்மால் இயன்ற சேவைகளை பலனை எதிர்பாராமல் இந்த உலகிற்கு செய்வோம். அதுவே வாழும் வழி! அவன் அருளைப் பெறவும் எளிய வழி!! பிரார்த்தனை செய்பவர்களை விட சேவை செய்பவர்களே இறைனுக்கு அருகில் இருக்கிறார்கள்.

===============================================================================

ஒரு முக்கிய விஷயத்தை அனைவருக்கும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.

நம் தளத்தில் பதிவுகளின் இறுதியில் விருப்ப சந்தா குறித்த கோரிக்கை அளிக்கப்படுவது நீங்கள் அறிந்ததே. அது தவிர அவ்வப்போது நாம் செய்யக்கூடிய அறப்பணிகளுக்கும் உதவி கோரி அறிவிப்பு வெளியிடுகிறோம். அது குறித்து ஒரு சிறு விளக்கம்.

1) விருப்ப சந்தா

இது தான் நமது வாழ்வாதாரம். தளம் நடப்பது இதைக் கொண்டு தான். இதன் மூலம் தான் தளத்தின் நிர்வாக செலவுகள் செய்யப்படுகிறது. இதை அனைத்து வாசகர்களிடம் இருந்தும் – அவரவர் சக்திக்கு ஏற்ப – எதிர்பார்க்கிறோம். ஆனால் இதைக் கட்டாயப்படுத்த விரும்பவில்லை. பெயரைப் போலவே இது விருப்ப சந்தா. (VOLUNTARY SUBSCRIPTION).

நம் தளத்தின் நிர்வாகப் பணிகளில் உதவுவதே சிறந்த புண்ணிய காரியம் தான் என்றாலும் ‘விருப்ப சந்தா’ செலுத்தும் வாசகர்களுக்கு பிரதியுபகாரம் செய்யவேண்டி அதில் கிடைக்கும் தொகையில் குறிப்பிட்ட சதவீதத்தை நூம்பல் கோவிலில் நடைபெறும் கோ-சம்ரட்சணத்திற்கு பயன்படுத்தப்படுகிறோம்.

2) சேவைகளில் உதவி வேண்டி விடுக்கும் கோரிக்கைகள்

இது அவ்வப்போது நாம் செய்யக்கூடிய, ஒப்புக்கொள்ளக்கூடிய அறப்பணிகளுக்கு. இதை நாம் அனைத்து வாசகர்களிடமிருந்தும் எதிர்பார்க்கவில்லை. அந்தந்த சேவைகளில் இணைய விருப்பமுடைய வாசகர்களிடமிருந்து தான் எதிர்பார்க்கிறோம். அவ்வளவே. செய்யும் சேவையானது செம்மையாக செய்ய இது துணை புரியும். இதில் கிடைக்கும் தொகையை வைத்து பிரதி மாதம் காசி விஸ்வநாதர் கோவிலில் கோ-சம்ரட்சணம் செய்யப்படுகிறது. (இது நீண்டகாலமாக நடைபெற்று வருகிறது.)

விருப்ப சந்தா என்பது அனைத்து வாசகர்களின் கடமை. சேவைகளில் உதவி என்பது அவரவர் சௌகரியம். இரண்டிற்கும் உதவ விரும்பினால் மிக்க மகிழ்ச்சி.

===============================================================================

உங்களை நம்பி உங்களுக்காக ஒரு தளம்!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

இந்த மாத விருப்ப சந்தா செலுத்திவிட்டீர்களா?? ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

===============================================================================

Also check :

எது நிஜமான பக்தி?

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

அவிசொரிந் தாயிரம் வேட்டலின்…

கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தூரம்!

கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் ?

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா?

சலவைத் தொழிலாளி அரங்கனுக்கு சூட்டிய பெயர்! நெகிழ வைக்கும் வரலாறு!!

“எல்லாம் அவ பாத்துப்பா!”

===============================================================================

[END]

 

4 thoughts on “குரு கேட்ட ‘எதற்கும் உபயோகப்படாத பொருள்’ !

  1. குரு தட்சிணை கொண்டு ஒரு சிறந்த பாடத்தை எங்களுக்கும் போதித்து விட்டீர்கள். ஒன்றுக்கும் உதவாதவன் மனிதன் தான். அருமையான கருத்து. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  2. பிறருக்கு பயன் படும் படியான வாழ்கையை நாம் வாழ வேண்டும் என்பதை மிகச் சிறந்த குரு தட்சணை கதை மூலம் விளக்கி விட்டீர்கள்.

    புத்தேள் உலகத்தும் ஈண்டும் பெறல் அரிதே
    ஒப்புரவின் நல்ல பிற குறள் 213

    //புரிந்தவன் கடவுளை காண்கிறான் புரியாதவன் கடவுளை தேடுகிறான் //

    வைர வரிகள் .

    நன்றி
    உமா வெங்கட்

  3. வாழும் வழி பற்றியும், கடவுள் பற்றியும் ” சருகு ” மூலம் உணர்த்தியது அருமை.
    ஒவ்வொரு நாளும், நாம் எப்படியாவது, யாருக்கேனும் உதவி செய்து வாழ்ந்தால் நாம் இறைவனின் அருளை பெற முடியும் என்பதையும் சிறப்பாக கூறியதற்கு நன்றிகள் பற்பல ..

    வண்ணப்படம் மிகவும் அருமை..கோபுர தரிசனத்தில் , கடவுளின் தன்மையை சேர்த்தது மிகவும் அழகு தான்.

Leave a Reply to Rajkumar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *