Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > “நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

“நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

print
கூரத்தாழ்வார் கி.பி.10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இராமானுஜரின் மாணாக்கருள் முதன்மையானவர். ஸ்ரீவத்சாங்கர் என்ற இயற்பெயர் கொண்டு மிகுந்த தனவந்தனாகவும், ஞானவானாகவும் காஞ்சிபுரத்தை அடுத்த கூரம் என்னும் ஊரில் வாழ்ந்தவர். ஞானத்தில் சிறந்த ஆண்டாள் இவரது மனைவியின் பெயர். தேசத்தின் பிறப்பகுதிகளில் இருந்து காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளை வழிபட வரும் அடியார்களுக்கு தினமும் அன்னதானம் செய்வதையே பெரும்பேறாய் செய்துவந்தவர். ஒருமுறை திருக்கச்சி நம்பிகளிடம் பெருந்தேவி தாயார் (காஞ்சிபுரத்தில் கோயில் கொண்டுள்ள வரதராசப் பெருமாளின் மனையாள் – லட்சுமிதேவி) கூரத்தாழ்வாரின் செல்வம் மற்றும் அன்னதானம் குறித்து வியப்பு மேலிட உரையாடியமைக் கேட்டு அதனால் தனக்கு அகங்காரம் உண்டாகிவிடுமோ என அஞ்சி தன்னுடைய பெருஞ்செல்வமனைத்தும் அறச்செயல்களுக்கு தானமாக வழங்கி, தன் குருவாகிய இராமானுசரையே அடிப்பணிந்தார். இராமானுசரைவிட 8 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Renganadhar

திருவரங்கத்தில் உஞ்சவிருத்தி செய்தே (யாசகம்) வாழ்ந்தனர் கூரத்தாழ்வார் தம்பதிகள். ஒரு நாள் அடைமழை பெய்ததையடுத்து அவர் உஞ்சவிருத்தி செய்ய வெளியே செல்லமுடியவில்லை. எனவே அன்று முழுக்க உணவு கிடைக்காமல் பட்டினி கிடந்தனர் தம்பதிகள். அது மட்டுமல்ல, பூஜையில் நைவேத்தியம் செய்யவும் எதுவுமில்லை.

அரங்கன் சன்னதியில் நம்பெருமாளுக்கு மேளதாளங்கள் முழங்க இரவு பூஜை நடந்துகொண்டிருந்தது. அரங்கனுக்கு அக்காரவடிசில், பாயசம் முதலியவற்றை நிவேதனம் செய்தனர்.

பசியோடிருந்த கூரத்தாழ்வாரின் மனைவி ஆண்டாள் அம்மையாருக்கு இது கண்டு பொறுக்கவில்லை. அரங்கனை நோக்கி சினத்துடன், “இங்கே உங்கள் பரமபக்தன் பட்டினி கிடக்க, நீங்கள் என்னடாவென்றால் மேளதாளம் முழங்க சாப்பிட்டுக்கொண்டிருக்கிறீரே? இது நியாயமா?” என்று நீதி கேட்டாள்.

அரங்கன் திருசெவிக்கு இது கேட்டது. அப்போது கோவிலின் தலைமை பட்டராக இருந்த உத்தமநம்பி என்பவரின் கனவில் தோன்றி, “என் அடியவன், கூரத்தாழ்வான் மழை காரணமாக உஞ்சவிருத்திக்கு செல்ல இயலாமல், பசியோடு இருக்கிறான். நீங்கள் சகல மரியாதையோடு சென்று நமக்கு படைக்கப்பட்ட பாயசம், அரவணை உள்ளிட்ட பிரசாதங்களை அவனுக்கு அளிப்பீரகளாக!” என்று ஆணையிட்டு மறைந்தார்.

கூராத்தாழ்வன் புண்ணியத்தில் தனக்கு அரங்கனின் தரிசனம் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்த உத்தமநம்பி உடனே அரங்கனின் ஆணையை செயல்படுத்தினார்.

திடீரென கூரத்தாழ்வாரின் வீட்டருகே வீதியில் வாத்தியங்களின் சத்தம் கேட்க, என்னவென்று எட்டிப்பார்த்தவர், அரங்கனின் ஆணைப்படி பிரசாதம் தனது வீட்டுக்கு தான் வருகிறது என்று தெரிந்தவுடன் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். அதை பெற்றுக்கொண்டு தனது தலைமீது வைத்து ஆனந்தக் கூத்தாடினார்.

அனைவருக்கும் நன்றி கூறி, பிரசாதத்தை பசியோடிருந்த தனது மனைவி ஆண்டாளுக்கு அளித்துவிட்டு தானும் உண்டார்.

அப்போது அவருக்கு திடீரென ஒரு சந்தேகம் தோன்றியது.

“அரங்கனிடம் நான் எதுவும் கேட்கவில்லை… நீ ஏதேனும் கேட்டாயா…???”

ஆண்டாள் அம்மை அரங்கனிடம் தான் கோபித்துக்கொண்டு நீதிகேட்டதை மறைக்காமல் ஒப்புக்கொண்டாள்.

அரங்கனுக்கு படைக்கப்படவிருந்த அமுதை நம்மையறியாமல் நாம் பறித்துக்கொண்டோமே… என்று தன் செயலுக்கு வருந்தினார் கூரத்தாழ்வார். இருப்பினும் “என் பக்தியைவிட அரங்கனிடம் உரிமையோடு கோபித்துக்கொண்ட உன் பக்தியே மேலானது” என்றார் மனைவியிடம்.

அரங்கனின் அரவணைப் பிரசாதம் என்றால் சும்மாவா? இதன் பயனாக அவருக்கு பராசர பட்டர் மற்றும் ஸ்ரீராமப்பிள்ளை என இரண்டு புத்திரன்கள் பிறந்தார்கள்.

தமது அடியவர்களின் குறைகளை கேட்டு அவற்றை களைய ஆண்டவன் எப்போதும் காத்திருக்கிறான். எனவே ஆண்டவனிடம் நாம் உரிமையுடன் பக்தி செய்தல் வேண்டும். கண்ணை மூடியிருக்கும் அறியாமை என்னும் திரையை விலக்கி பார்த்தால் புரியும்… தனது அடியவர்கள் ஒவ்வொருவருக்கும் அவன் கொடுக்கும் ஒன்லைன் மெசேஜ் இது தான் : “நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

என்ன புரிகிறதா?

=====================================================================

* நமது திருக்கோவிலூர், பத்ராவதி பயணம் இனிதே நிறைவடைந்து இன்று மதியம் சென்னை திரும்பிவிட்டோம். விரிவான தகவல்களுடன் நாளை சந்திக்கிறோம். நம்மிடம் நண்பர்கள் ஏதேனும் கேட்டு பதிலுக்கு காத்திருந்தால், பெரிய மனதுடன் மீண்டும் நமக்கு நினைவூட்டவும். நன்றி.

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also check :

ஸ்ரீராமுலுவின் பசி தீர்க்க ஓடி வந்த ஸ்ரீனிவாசன் – உண்மை சம்பவம்!!

உருவுகண்டு எள்ளாமை வேண்டும்! சமையற்காரர் படைத்த காவியம்!!

ஐந்து பெண் பெற்றவர் ஜாம் ஜாமென்று திருமணம் நடத்த உதவியது யார்?

பக்தன் கேட்க, பெருமாள் கொடுத்த சிவனின் பிரசாதம் – உண்மை சம்பவம்!

முஸ்லீம் பக்தரும் திருமலை ஆர்ஜித சேவையும் – சிலிர்க்க வைக்கும் உண்மை சம்பவம்!

அரங்கன் மீது கொண்ட காதலால் ‘துலுக்க நாச்சியார்’ ஆன சுல்தானின் மகள்! 

ஹரிஹர தரிசனமும் தாத்திரீஸ்வரர் கோவில் உழவாரப்பணியும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

=====================================================================

[END]

10 thoughts on ““நான் உனக்காக காத்திருக்கிறேன்!”

  1. கூர த்தாழ்வரின் கதையை நம் தளம் மூலம் தெரிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நம்முடைய குறைகளைக் கேட்டு நம்மை மகிழ்விக்க இறைவன் நமக்காக காத்து இருக்கும் பொழுது …. நமக்கு கவலை எதற்கு ..

    தங்கள் திருக்கோவிலூர் பத்ராவதி பயணம் இனிதே நடை பெற்றதை அறிய மிக்க மகிழ்ச்சி. பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

    நன்றி
    உமா வெங்கட்

  2. நான் உனக்காக காத்திருக்கிறேன் – தலைப்பு நன்றாக உள்ளது.
    நீங்கள் நினைப்பது எழுதுவது எல்லாம் சரியே.ஆண்டு விழா பதிவும் வள்ளலார் பதிவும் ஒரு ஆண்டு முடிந்து தான் எங்களுக்கு அந்த அனுபவம் படிக்க கிடைக்கும்.
    அதற்க்கு நாங்கள் பொறுமையாக தானே இருக்கிறோம்.
    கூரத்தாழ்வார் மனைவி கோபப்பட்டதால் அவருக்கு பிரசாதம் கிடைத்த மாதிரி நீங்கள் போட்ட இந்த பதிவிற்கு கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும்.
    சாரி சாரி சாரி.

    1. மகளீர் குழு தலைவிக்கு ஒரு பணிவனவேண்டுகோள் ?……
      தயவு கூர்ந்து கோபம் தணிந்து சாந்தமாக மிரட்டுங்கள் .சுந்தர் ஜி மிகவும் பிசியானவர் ?…
      நாம் கூட தாமதமாகத்தான் கம்மண்ட்ஸ் போடுகிறோம் .???????
      ஏன் பதிவை கூட தாமதமாக நாம் படிக்கிறோம் ???????????…

      சுந்தர்ஜி தங்களின் பேனாமுனை எழுதும் ஒரு ஒரு பதிவிற்கும் யாரோ? தங்களை இயக்குகிர்றார்கள்.

      “ஓம் சிவா சிவா ஓம் ”

      என்றும் நட்புகளுடன் .
      மனோகர் .

  3. சுந்தர்ஜி

    கூரத்தாழ்வார் வரலாறு மிக அருமை. நம் ஒவ்வருககவும் இறைவன் காத்திருக்கிறான். ஆனால் நம் ஊன கண்களுக்கு தெரியவில்லை.
    உண்மையான அன்பினாலும், அவர் அடியவருக்கு செய்யும் சேவை
    பொருத்து இறைவன் நம்மை நெருங்குகிறான்.

    நன்றி

  4. வணக்கம்…..தங்களுடைய திருக்கோவிலூர் மற்றும் பத்ராவதி பயணம் இனிதே அமைந்ததை அறிந்து மகிழ்கிறோம்………மேலும் தங்களின் இனிய அனுபவங்களை அறிய ஆவலாக உள்ளோம்…….

    கூரத்தாழ்வாரைப் போலவே நமக்கும் இறைவன் மீது உரிமையுடன் கூடிய பக்தி கைகூடினால் நன்றாக இருக்கும்…….

  5. வணக்கம் சுந்தர். மீண்டும் தூய்மையான பக்தியை பற்றிய ஒரு சம்பவம் அழகிய நடையில்,படங்களுடன்.ஆண்டவனும் உரிமையான பக்தியைத்தான் விரும்புகிறான் .சித்திக்க அவனே அருளவேண்டும்.வாழ்த்துகள். நன்றி.

  6. தலைப்பு மிகவும் அருமை.
    **
    தாமதம் தான் எனது பதிவுட்டம். இருந்தாலும் பதிகின்றேன்.
    **
    எல்லாம் வெற்றிகரம் தான் இனி.
    **
    அந்த ஒரு மகன் பட்டரின் தத்து பிள்ளை தான் ஆண்டாளோ???.
    **
    திருக்கோவிலூர் மற்றும் பத்ராவதி பயணம் இனிதே நிறைவடைந்ததில் மகிழ்ச்சி.
    **
    **சிட்டி**.

  7. “நான் உனக்காக காத்திருக்கிறேன்” – தலைப்பிலேயே புதுமை என்று தான் சொல்ல வேண்டும்.
    கூரத்தாழ்வார் பற்றியும், பக்தியின் ஆழம் பற்றியும் தெரிந்து கொண்டோம். உரிமையோடு பக்தி செய்வதுதான் பக்தியின் உச்சமோ என்று தோன்றுகிறது.

    இந்த நிலைக்கு நாம் உயர, எம் பெருமான் அருள் புரிய வேண்டுகிறேன்.

    திருகோவிலூர் மற்றும் பத்ராவதி தொடர்பான பதிவுகளை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்

    மிக்க நன்றி

Leave a Reply to manohar Cancel reply

Your email address will not be published. Required fields are marked *