Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, March 29, 2024
Please specify the group
Home > Featured > எறும்பீஸ்வரர் சன்னதியில் இனிதே நடைபெற்ற வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை !

எறும்பீஸ்வரர் சன்னதியில் இனிதே நடைபெற்ற வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை !

print
திருச்சியில் நாம் பங்கேற்ற ‘வள்ளுவன் பார்வை’ உறுப்பினர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மிக மிகச் சிறப்பாக நடந்தேறியது. நமது உரையும் இறைவனருளால் சிறப்பாக அமைந்தது என்றே கருதுகிறோம். அது பற்றி தனி பதிவை விரைவில் அளிக்கிறோம். இதற்கிடையே, ஞாயிறு மாலை திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற நமது பிரார்த்தனை கிளப் வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை பற்றி ஒரு சிறிய அப்டேட் இது.

Thiruverumbur Erumbeesar 39

‘வேலை வாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை பதிவு’ பற்றி நாம் பல நாட்களுக்கு முன்னரே நாம் அறிவித்தது நினைவிருக்கலாம். அப்போது பிரார்த்தனைக்கான கோரிக்கைகள் குறைவாகவே வந்தன. ஆனால், எறும்பீஸ்வரர் சன்னதியில் அர்ச்சனை செய்யப்படும் என்று நாம் அறிவித்ததை தொடர்ந்து பல வாசகர்கள் தங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பை வேண்டி அர்ச்சனை செய்யுமாறு கோரிக்கைகள் அனுப்பியிருந்தனர். அப்படி தங்கள் விபரங்களை அனுப்பிய பல வாசகர்கள் முழு விபரத்தை அனுப்பாமல் தங்கள் பெயர்களை மட்டுமே அனுப்பியிருந்தனர்.

ஒரு விஷயத்தை அனைவரும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். பிரார்த்தனை கிளப்பில் உங்கள் கோரிக்கைகளை போஸ்ட் செய்ய உங்கள், பெயர், வயது மற்றும் ஊர் ஆகியவை மட்டும் போதும். ஆனால் கோவிலில் அர்ச்சனை செய்யவேண்டும் என்றால், பெயர், ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவை அவசியம் தேவை. (கோத்திரம் தெரியாதவர்கள் தங்கள் தந்தையின் பெயரை குறிப்பிட்டால் போதும்!)

கோவிலில் அர்ச்சனை செய்யவேண்டும் என்றால் தங்கள் முழு பெயர் (சான்றிதழில் உள்ளபடி), ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவை அர்ச்சனைக்கு அவசியம்.

ஆண்டவனுக்கு செய்யப்படும் ஆறு வகை உபசாரங்களுள், அர்ச்சனையே முக்கியத்துவம் பெறுவதாக இந்து சமயம் சொல்கிறது.

ராசி என்பது ஒருவருக்கு ஊர் பெயர் தெரு பெயர் என்பது போல. நட்சத்திரம் என்பது பின்கோடு போல. இரண்டும் இல்லாவிட்டால் எப்படி கடிதம் சரியாக போய் சேரும்? நீங்கள் இறைவனுக்கு செய்யும் அர்ச்சனை சரியாக சென்று சேர்ந்து பலனைப் பெற்றுத் தரவேண்டும் என்றால், மேற்கூறிய அனைத்து தகவல்களும் அவசியம்.

Thiruverumbur Erumbeesar 44

Thiruverumbur Erumbeesar 45

Thiruverumbur Erumbeesar 42

அர்ச்சனை என்பது கடவுளிடம் நமக்கு வேண்டியதை பெறுவதற்காக என்று நினைத்து இப்பொழுது எந்த கோயிலுக்கு சென்றாலும் அர்ச்சனை செய்து வருகிறோம். உண்மை அதுவல்ல. நம்மை இன்னாரென்று கடவுள் முன் அறிமுகப்படுத்தி ‘உன்னை மனதார வணங்குகிறேன்’ என்று தான் பொருள். மாறாக எனக்கு இதைக்கொடு அதைக்கொடு என்பதற்காக அல்ல.

நீங்கள் கோவிலுக்கு செல்லாத போது, அல்லது செல்ல இயலாத போது  உங்கள் நண்பர்களோ உறவினர்களோஉங்கள் சார்பாக அர்ச்சனை செய்யலாம் தவறில்லை. இன்னாருக்காக நான் செய்கிறேன் என்று கூறிவிட்டு செய்யலாம். அந்த இன்னார் யார் என்று தெளிவாக கூறவேண்டும் அல்லவா?

சாஸ்திர சம்பிரதாயங்கள் முன்னைப் போல இப்போது இல்லை. மிகவும் எளிமையகிவிட்டன. (ஆக்கப்பட்டுவிட்டன). அதை கூட நம்மால் முழுமையாக செய்ய முடியவில்லை என்றால் எப்படி?

எனவே அடுத்த முறை நமது அர்ச்சனைக்கு பெயர்களை அனுப்பும் வாசகர்கள் தங்கள் பெயர், வயது, ராசி, நட்சத்திரம், கோத்திரம் ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்பவும். கோத்திரம் தெரியாதவர்கள் தங்கள் தந்தையின் பெயரையும் சேர்த்து அனுப்பவும்.

மின்னஞ்சல் அனுப்ப வசதியுள்ளவர்கள் அவசியம் மின்னஞ்சல் மூலம் தங்கள் தொடர்பு எண்ணுடன் மேற்கூறிய விபரங்களை editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்பு எண் இருந்தால் ஏதேனும் சந்தேகம் இருக்கும் பட்சத்தில் தொடர்புகொள்ள வசதியாக இருக்கும். மின்னஞ்சல் அனுப்ப இயலாதவர்கள் மட்டுமே குறுஞ்செய்தி (SMS) மூலம் அனுப்பவேண்டும். மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியை நினைவூட்டும் பொருட்டு ஓரிரண்டு முறை திரும்பவும் அனுப்பலாம் தவறில்ல.

Thiruverumbur Erumbeesar 50

Thiruverumbur Erumbeesar 51Thiruverumbur Erumbeesar 53முன்னதாக வேலைவாய்ப்பு சிறப்பு அர்ச்சனை + பிரார்த்தனைக்கு கோரிக்கை அனுப்பியிருந்த வாசகர்களின் பெயர், ராசி & நட்சத்திரம் விபரங்களை ஒரு பட்டியல் எடுத்து அதை பிரிண்ட் அவுட் எடுத்துச் சென்றிருந்தோம்.

பிரார்த்தனை பதிவில் அளிக்கப்பட்ட சிலர் பெயர் நமது கவனக்குறைவால் விடுப்பட்டிருந்தது. அவர்கள் பெயர்களையும் பட்டியல் எடுக்கும்போது சேர்த்துவிட்டோம். எனவே எவரும் வருந்த வேண்டாம்.

திருச்சியில் நாம் பங்கேற்ற வள்ளுவன் பார்வை நிகழ்ச்சி ஞாயிறு மதியம் சுமார் 2.00 மணியளவில் நிறைவு பெற்றுவிட்டபின்னர், கோரிக்கை அனுப்பியவர்களின் முழு பட்டியலையும் அங்கேயே லேப்டாப் உதவியுடன் தயார் செய்து சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஒரு கடையில் பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டோம்.

பின்னர் திருவெறும்பூருக்கு பஸ்ஸை பிடித்து நாம் கோவிலுக்கு செல்லும்போது மணி 4.30 இருக்கும். கீழே அடிவாரத்தில் குளக்கரையில் கை, கால்கள் அலம்பி சுத்தம் செய்துகொண்டு காத்திருந்தோம். அர்ச்சனை பொருட்கள் விற்கும் கடை திறந்த பிறகு, நமது பொருட்களை அவர்களிடம் கொடுத்து பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு, இரண்டு அர்ச்சனை தட்டுக்கள் (சுவாமிக்கு ஒன்று அம்பாளுக்கு ஒன்று) வாங்கிக்கொண்டோம். தாமரைப் பூ கிடைக்கும் இடத்தில் தாமரைப் பூ வாங்கிக்கொள்ளவேண்டும். பூக்களில் மிகச் சிறந்தது தாமரைப் பூவே.

அர்ச்சனை தட்டு வாசகர்கள் பெயர்ப் பட்டியலுடன்..
அர்ச்சனை தட்டு வாசகர்கள் பெயர்ப் பட்டியலுடன்..

கிளம்பும்போது, அங்கே சுற்றிக்கொண்டிருந்த ஒரு பெண் கன்றுக்குட்டி நம் கண்களில் பட பிரசாத கடையில் கொடுத்துவிட்டு அதனுடன் கொஞ்ச நேரம் செலவிட்டோம். “இதோ பார்… இதோ பார்…” என்று காமிராவை வைத்துக்கொண்டு கூப்பிட்டபோது, மிக அழகாக திரும்பி பார்த்து போஸ் கொடுத்தது இந்த கன்றுகுட்டி. போவோர் வருவோர் எல்லாம் இந்த போட்டோ செஷனை பார்த்து வியந்தபடியே சென்றனர்.

Thiruverumbur Erumbeesar 40

அப்போது தான் கணேச குருக்களும் வந்தார். நம்மை பார்த்தவுடன் அடையாளம் கண்டுகொண்டார்.

“நீங்கள் போங்க மாமா. நான் பின்னாடியே வர்றேன்” என்று கூறினோம்.

சிறிது நேரம் கழித்து அர்ச்சனை பொருட்களை எடுத்துக்கொண்டு படியேறினோம்.

அர்ச்சனை சீட்டுக்கள் பெற்றுக்கொண்டு சுவாமி சன்னதியில் கணேச குருக்களிடம் நமது பிரார்த்தனை கிளப் சிறப்பு பிரார்த்தனை பற்றி குறிப்பிட்டு, “இந்த பட்டியலில் உள்ளவர்கள் எல்லாம் வேலை வாய்ப்பு மற்றும் உத்தியோகம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் இருப்பவர்கள். இவர்கள் அனைவருக்கும் பிரச்சனைகள் தீர்ந்து அவர்கள் கோரிக்கை நிறைவேறவேண்டும். அனைவரிடம், கோரிக்கை நிறைவேறியவுடன் எறும்பீஸ்வரரை திருவெறும்பூர் வந்து அவசியம் நேரில் தரிசிக்க சொல்லியிருக்கிறோம். அப்படியே பாலாபிஷேகமும் செய்யச் சொல்லியிருக்கிறோம். நிச்சயம் வருவார்கள்.” என்றோம்.

(பௌர்ணமியை முன்னிட்டு பாலாபிஷேகம் ஞாயிறு காலையே நடந்துமுடிந்துவிட்டது. எனவே அடுத்த வாரம் ஞாயிறு மாலை இந்த பட்டியலில் உள்ள பெயர்களுக்கு அடுத்த வாரம் பாலாபிஷேகம் செய்து சங்கல்பம் செய்யுங்கள் என்று கூறி அதற்கு தனியாக பணம் கட்டிவிட்டோம்.)

Thiruverumbur Erumbeesar 54

Thiruverumbur Erumbeesar 52பிரார்த்தனை நிறைவேறிய வெற்றிக்கதைகள் ஒன்றிரண்டை சொல்லவேண்டும் எனக் கேட்டபோது, நிறைய உதாரணங்கள் இருக்கின்றன என்றார். பிரார்த்தனை பலித்து எறும்பீஸ்வரர் அருளால் நல்ல வேலை கிடைத்தவர்கள் இரண்டு மூன்று பேரை நம்மை தொடர்புகொள்ளச் சொல்வதாக கூறினார்.

பட்டியலை படித்து அனைவருக்கும் சங்கல்பம் செய்யப்பட்டது. பின்னர் சுவாமிக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் பெற்றுக்கொண்டு வந்தோம்.

சரியாக 5.30 மணிக்கு பிரார்த்தனை நேரம் என்றும் அது சமயம் நமக்காக பிரார்த்தனை செய்யவேண்டும் என்றும் கணேச குருக்களிடம் கேட்டுக்கொண்டோம். அம்பாளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு பட்டியலை கொண்டு வரும்படியும், சரியாக பிரார்த்தனை நேரத்தில் பட்டியலை சுவாமியிடம் வைத்துவிடுவதாகவும் சொன்னார்.

அடுத்து அம்பாள் சன்னதி வந்தோம். அம்பாளின் பெயர் தெரியுமா? நறுங்குழல் நாயகி. நறுங்குழல் நாயகிக்கு பௌர்ணமியை முன்னிட்டு சந்தனக் காப்பு அலங்காரம். இங்கு வேறு ஒரு அர்ச்சகர் இருந்தார். இங்கும் அனைவரின் பெயர்களுக்கும் மீண்டும் சங்கல்பம் செய்யப்பட்டது. அம்பாளிடம் சற்று அழுத்தம் திருத்தமாக பிரார்த்தனையை கூறியிருக்கிறோம்.

Thiruverumbur Erumbeesar 46

Thiruverumbur Erumbeesar 47
எறும்பீஸ்வரர் மலையிலிருந்து மலைக்கோட்டையும் ஸ்ரீரங்கம் ராஜ கோபுரமும் தெரியும் அற்புதமான வியூ…

அர்ச்சனை முடிந்து பிரசாதம் பெற்றுக்கொண்டு, அம்பாள் சன்னதியில் சற்று ஓரமாக உட்கார்ந்து எறும்பீஸ்வரர் பதிகத்தை அலைபேசியை பார்த்து படிக்க ஆரம்பித்தோம். படித்து முடித்து பிரகாரத்தை ஒரு முறை வலம் வந்தபோது நேரம் சரியாக 5.30 pm.

மீண்டும் எறும்பீஸ்வரரிடம் சென்று பட்டியலை சுவாமி முன்பு வைக்க குருக்களிடம் கொடுத்தோம்.

பட்டியலை பத்திரமாக எடுத்துவைத்து அடுத்த வாரம் பாலாபிஷேகம் நடக்கும்போது சங்கல்பம் செய்துவிடுவதாக கூறியிருக்கிறார்.

எனவே அடுத்த வாரமும் இதே பிரார்த்தனை தான் ரிப்பீட் செய்யப்படுகிறது. வாசகர்கள், குறிப்பாக அர்ச்சனைக்கு பெயர்களை அனுப்பியுள்ள வாசகர்கள் (26 பேர்) அவசியம் பிரார்த்தனை செய்யவேண்டும். எறும்பீஸ்வரர் பதிகத்தை  படிக்கவேண்டும்.

Thiruverumbur Erumbeesar 49

Thiruverumbur Erumbeesar 48

மீண்டும் ஒரு முறை பிரகாரத்தை வலம் வந்தோம். சுவாமிக்கு அர்ச்சனை செய்த பழங்களை அங்கிருந்த ஆடுகளுக்கு கொடுத்தோம்.

குருக்களிடம் விடைபெற்றுக்கொண்டு, சற்று நேரம் மேலே நின்றுகொண்டு திருச்சி நகரின் அழகை ரசித்துவிட்டு கீழே இறங்கினோம்.

வழியில் தென்பட்ட சில ஆடுகளிடம் அம்பாள் பிரசாதத்தை கொடுத்தோம்.

இந்த முறை நமக்கு துணையாக யாரும் இல்லை. இருப்பினும் குறித்த நேரத்திற்கு வந்து தரிசனம் + அர்ச்சனை அனைத்தும் முடிக்க முடிந்தது எறும்பீஸ்வரர் கருணை தான்.

Thiruverumbur Erumbeesar 41

நம் கடமையை குறைவற செய்துவிட்டோம். இனி வாசகர்கள் தங்கள் வெற்றிக்கதைகளை சொல்லவேண்டியது தான் பாக்கி.

* எறும்பீஸ்வரரை தரிசிக்க மாலை நேரம் 5.00 pm – 7.00 pm தான் ஏற்ற நேரம். அந்த நேரம் கோவில் அத்தனை அழகாக இருக்கும். 

* சிறிய காமிரா வாசகர்கள் துணையுடன் வாங்கப்பட்டுவிட்டது. உதவிட்ட உள்ளங்களுக்கு நன்றி! அதில் எடுத்த புகைப்படங்கள் தான் நீங்கள் இந்த பதிவில் காண்பது!!

===============================================================

வேலையில் பிரச்னை இருந்து தாமதமாக இந்த பதிவை படிப்பவர்கள் கவலைப்படவேண்டாம். தங்கள் பெயர் ராசி நட்சத்திரத்தை நமக்கு அனுப்பவும். குறித்து  வைத்துக்கொள்கிறோம். அடுத்த முறை எறும்பீஸ்வரரை தரிசிக்க செல்லும்போது உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்கிறோம். அதுவரை நீங்கள் தவறாமல் எறும்பீஸ்வரர் பதிகத்தை படித்து வரவேண்டும்! அது போதும்!!

===============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Also check :

எத்தகைய பூஜையை சிவபெருமான் ஏற்றுக்கொள்கிறார்? – Rightmantra Prayer Club

தேடும் செல்வம் ஓடிவிடும்; தெய்வம் விட்டுப் போவதில்லை! – யாமிருக்க பயமேன் ? (10)

தேடி வந்த மூன்று லட்சம் – படிக்க படிக்க பணத்தை வரவழைக்கும் பதிகம் – உண்மை சம்பவம்!

மாங்கல்யம் தந்த மங்களாம்பிகை – சிலிர்க்க வைக்கும் ஒரு நிகழ்வு!!

தீராத தோல்நோய்களை தீர்க்கும் திருத்தலம் + எருக்கன் இலை பிரசாதம்!

கலியுகத்திலும் காலனிடமிருந்து காப்பாற்றும் ஒரு அதிசய மந்திரம் – உண்மை சம்பவம்!

நமக்கென்று ஒரு சொந்த வீடு – உங்கள் கனவு இல்லத்தை வாங்க / கட்ட வழிகாட்டும் பதிகம்!

உணவும், உறக்கமும், நிம்மதியும், செல்வமும் நல்கி இறுதியில் சிவபதம் அருளும் பதிகம்!

வசிஷ்டர் அருளிய தாரித்ர்ய தஹன சிவஸ்தோத்திரம்

வாழ்வுக்கு வழிகாட்டும் 27 நட்சத்திரங்களுக்குரிய பரிகாரத் திருத்தலங்கள்!

சிவன் கோவிலில் காணக் கிடைக்காத அனுமன் சன்னதியுடன் கூடிய மூல நட்சத்திர பரிகாரத் தலம்

108 திவ்ய தேசங்களை தரிசித்த பலனைத் தரும் தவறவிடக் கூடாத ஒரு தலம்!

தவறுகளை மன்னித்து நல்வாழ்வுக்கு வழிகாட்டும் ஒரு தலம்!

=====================================================================

[END]

11 thoughts on “எறும்பீஸ்வரர் சன்னதியில் இனிதே நடைபெற்ற வேலைவாய்ப்பு சிறப்பு பிரார்த்தனை !

  1. நம் வாசகர்களுக்காக எறும்பீஸ்வரர் சன்னதியில் பிரார்த்தனை நிறைவேறியது அறிய மிக்க மகிழ்ச்சி,

    தங்கள் புது கேமரா மூலம் புராதன கோவிலை நேரில் சென்று தரிசித்து வலம் வந்தது போல் உள்ளது

    எறும்பீஸ்வரர் நம் எல்லோருக்கும் அருள் புரியட்டும்

    நன்றி
    உமா வெங்கட்

  2. கோவிலைப் பார்க்கும் போதே செல்ல வேண்டும் என்ற ஆவல் உண்டாகிறது.
    புகைப்படங்கள் அனைத்தும் மிகவும் அருமை.
    நன்றி

  3. வணக்கம் சுந்தர் சார்

    கோவில் புகைப்படம் ரொம்ப அழகு

    மிகவும் அருமையான பதிவு

    நன்றி..

  4. நன்று நன்று நன்று
    உலகையே படைத்து ஆளும் அந்த பரமனுக்கு நமக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது தெரியாதா என்று சில வருடங்களாக சன்னதியில் கடவுளின் சிலா ரூபத்தை உற்று பார்த்து பேசுவேனே தவிர என்னை பற்றி சொன்னதும் இல்லை, எதுவும் கேட்டதும் இல்லை(எனக்காக), பேர் அர்ச்சனை பெரும்பாலும் செய்ததும் இல்லை.
    எல்லாம் அவன் அருள் என்று இருந்து விட்டேன். ஆனால் ஒரு வீட்டின் முகவரி போல நம் பெயர், ராசி, நட்சத்திரம் மற்றும் கோத்ரம் அமைத்துள்ளது என்று புரிய வைத்ததற்கு நன்றி.
    எறும்பிசர் கோவில் மிகவும் அருமையாக உள்ளது.
    படங்கள் அனைத்தும் மிக மிக அருமை. உங்கள் நேச பசுக்களும் கன்றுக்குட்டியும் கொடுக்கும் போஸ் கூட அழகாக உள்ளது.
    கோவில் உள் நுழைந்த பிறகு தான் நம் மனதிற்கு ஒரு அமைதி கிடைக்கும். அந்த அமைதி இந்த கோவிலின் படங்களை பார்த்ததுடன் கிடைத்தது.
    என்றும் அன்புடன்.

  5. புகைபடங்களுக்கு மிக்க நன்றி. தயவு செய்து எறும்பீஸ்வரர் பதிகத்தின் PDF வெளிடவும்.

  6. பதிவுகளும் படங்களும் அருமை!. தங்களின் காமிரா கண்களுக்குத்தான் எத்துனை சிறப்பு. ஒரே இடத்தில் எறும்பீஸ்வரரையும், ஸ்ரீரங்கப்பெருமாளையும், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமியையும் ஒருங்கே தரிசிக்கச் செய்துவிட்டீர்கள். மிக்க நன்றி1.

  7. நன்றி சுந்தர்,

    எறும்பியூர் திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தளம்.
    (ஐந்தாம் திருமுறை – திருக்குறுந்தொகை (741 – 750))

    அனைவருக்கும் ஏறும்பீஸ்வரரின் அருள் கிட்டுவது நிச்சயம்.
    புகைப்படங்கள் அருமை.

    நன்றி!

      1. நன்றி!

        ஆமாம் முந்தைய பதிவுகள் கவனிக்க வில்லை.

        மிக்க மகிழ்ச்சி.
        தங்கள் சேவை நிறைந்த உழைப்பு நிச்சயம் நற்பலன் ஈட்டும்!

  8. சுந்தர் அண்ணா..

    எறும்பீஸ்வரர் சன்னதியில் நடைபெற்ற பிரார்த்தனை பதிவை கண்டு பெரு மகிழ்ச்சி அடைந்தேன். “வள்ளுவன் பார்வை ” விழா வும் சிறப்பாக நடந்தேறியது கண்டு இன்புறுகிறேன் அண்ணா..

    மிக விரைவில் தாங்கள் ஆற்றிய உரை பற்றியும், வள்ளுவன் பார்வை விழா பற்றியும் நம் தள பதிவில் எதிர் நோக்கி காத்து இருக்கிறோம் அண்ணா..

    “அர்ச்சனை” பற்றி இவ்ளோ தெளிவாக நான் இன்று தான் அறிந்து கொண்டேன். எறும்பீஸ்வரர் அருளால், நம் தள அன்பர்கள் அனைவரும் தொழில் / வேலையில் சிறப்பான நிலை எய்திட, நம் தலைவர் அருள் புரிவாராக..

    தென்னாடுடைய சிவனே போற்றி..
    எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி..

    மிக்க நன்றி அண்ணா..

Leave a Reply to Nithyakalyani Cancel reply

Your email address will not be published. Required fields are marked *