Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Friday, April 19, 2024
Please specify the group
Home > Featured > நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

print
காஞ்சி ஸ்ரீ மடத்தில் கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட மகா பெரியவா செய்த பல்வேறு பூஜைகளில் உதவியாக இருந்தவரும், காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் இருபதாண்டுகளுக்கும் மேல் பூஜை செய்தவருமான பெரியவர் திரு.டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்திரிகளுடனான நமது சந்திப்பு பற்றிய குறுந்தொடர் இது.

1923 ஆண்டு, கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் அருகே உள்ள கூகூரில் பிறந்தார் திரு.டி.ஆர்.சந்திரமௌலி சாஸ்திரிகள். இந்த ஊரில் எழுந்தருளியிருக்கும் சுவாமியின் பெயர் ஆம்பரவனேஸ்வரர். அம்பாள் ஸ்ரீமங்களாம்பிகை. ஆம்பரம் என்றால் மாமரம் என்று பொருள். மாமரங்கள் நிறைந்த இடம் என்பதால் இறைவனுக்கு ஆம்பரவநேஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. பண்டவர்கள் வழிபட்ட இறைவன் இவர். அருகில் ஓடும் ஆற்றின் பெயர் திருமலை ராஜன் ஆறு.

T R Chandramouli Sastrigal 4D

இவருக்கு பத்தாவது வயதில் ஒரு கண்டம் இருந்தது. எனவே இவர் தந்தை இவருக்கு ஐந்தாவது வயதிலேயே உபநயனம் செய்துவைத்து விட்டார். பொதுவாக ஏழு வயதுக்கு மேல் தான் உபநயனம் செய்துவைப்பார்கள். ஆனால், குழந்தை சூட்டிகையாய் இருந்தால், ஐந்து வயதிலேயே பூணூல் போட்டுவிடுவார்கள். இவர் படு சூட்டிகை.

இவருக்கு தலை ஆவணி அவிட்டம் எங்கு தெரியுமா? ஸ்ரீ மடத்தில் தான். எப்பேற்ப்பட்ட பாக்கியசாலி? அப்போது பூசமலைக்குப்பத்தில் (1930) வருடத்தில் மஹா ஸ்வாமிகள் வியாஸ பூஜை, சாதுர்மாஸ விரதம் இருந்தார்கள்.

அப்போதெல்லாம் மஹா ஸ்வாமிகள் எங்கு சென்றாலும் 13 மாட்டு வண்டிகள் உடன் செல்லும். அதில் வேத பாடசாலை வண்டியும் ஒன்று. பசு, யானை என வண்டிகள் முன்னே அணிவகுத்துச் செல்வது பார்க்க கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

நண்பர் வெங்கட் திரு.சந்திரமௌலி சாஸ்திரிகளை கௌரவித்தபோது...
நண்பர் வெங்கட் திரு.சந்திரமௌலி சாஸ்திரிகளை கௌரவித்தபோது…

ஸ்ரீ மடத்தின் வேத பாடசாலையில் படித்ததோடு காஞ்சி காமாக்ஷி அம்மன் கோவிலில் 1944 முதல் 1965 வரை சுமார்  21 வருடங்கள் பூஜை செய்து வந்தவர் இவர். அதன் பிறகு பெரியவாவின் உத்தரவுக்கு இணங்க, காசி காமகோடீஸ்வரர், ஜொன்னவாடா காமாக்ஷி ஆகியோருக்கும் பூஜைகள் செய்திருக்கிறார்.

இவருக்கு இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஜெயேந்திரருக்கு சந்நியாசம் அளிக்கப்பட்டபோது, காமாக்ஷி அம்மன் கோவிலில் இருந்து இவர் தான் பிரசாதத்தை கொண்டு சென்று கொடுத்தாராம்.

ஒரு முறை பெரியவாளை ஆந்திராவில் உள்ள ஏலூரில் முகாமிட்டிருந்தபோது, அவரை சந்திக்க சென்றார் சாஸ்திரிகள். “என்ன வேண்டும்?” என்று வினவினார் மகான்.  “உங்களோட பூரண அனுக்கிரஹம் வேண்டும்” என்று கூறினார் சாஸ்திரிகள். அதற்கு காரணம் இருக்கிறது. அதை அடுத்த அத்தியாயத்தில் சொல்கிறோம்.

உடனே ஒரு மட்டைத் தேங்காயை கொண்டு வருமாறு கூறி, “இந்தாடா பூரண பலம். இதை வாங்கிக்கோ என்னுடைய அனுக்கிரகம் உனக்கு எப்போதும் உண்டு” என்று கூறி அன்று முதல் மடத்தின் பூஜை முதலான காரியங்ளுக்கு சேவை செய்யுமாறு கூறினார்.

அன்று அவர் மஹா பெரியவாளிடம் அடைந்த அந்த பூரண சரணாகதி இன்று வரை அவரின் குடும்பத்தை காப்பாற்றி வருகிறது.  பெரியவா கடாக்ஷம் இன்றி தம் வாழ்க்கையில் ஒர் அணுவும் அசையவில்லை என்று இன்றும் பெருமிதம் கொள்கிறார்.

T R Chandramouli Sastrigal 5

மாங்கல்யம் காத்திடுவார்; மகிமை பல புரிந்திடுவார்!

திரு.சந்திரமௌலி சாஸ்திரிகளுக்கு மொத்தம் 5 மகள்கள் 2 மகன்கள். ஐந்து பெண் பெற்றால் அரசனும் ஆண்டியாவன் எனும்போது, இவர் எம்மாத்திரம்? ஆனால் தன் ஐந்து மகள்களுக்கும் திருமணம் செய்ய என்றுமே கவலை அடைந்தது இல்லை என்றார். பெரியவாளின் கருணையினால் வெகு விமரிசையாக அனைவரது திருமணங்களும் நடந்தன என்றும் கூறுகிறார்.

உதாரணத்திற்கு, அவரது மூன்றாவது மகளான ஹேமலதா அவர்களின் திருமணத்திற்கு, திரு நல்லி சின்னச்சாமி செட்டியார் அவர்களும், திருமதி. M.S. சுப்புலட்சுமி அவர்களும் மேலும் பலர் பணமாகவும், பொருளாகவும் பெரியவாவின் வேண்டுகோளுக்கிணங்க உதவி அளித்துள்ளனர்.

Kanji Maganமேலும் திருமணம் நடந்த சில நாட்களுக்குள் மருமகன் நாராயணனுக்கு TB இருப்பது கண்டறியப்பட்டது. இப்போதுள்ளது போல, அப்போது சுகர், பி.பி., ஹார்ட் அட்டாக் போன்ற Non-communicative diseases எல்லாம் கிடையாது. அனைவரையும் அச்சுறுத்தி வந்தது காசநோய் எனப்படும் TB தான். யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்கிற நிலை இருந்தது. மருத்துவர்களிடம் காண்பித்த போது TB முற்றிய நிலையில் இருப்பது அனைத்து பரிசோதனைகளிலும் உறுதியானது. வேறு வழியில்லை… தாம்பரம் சானடோரியத்தில் சேர்த்து தீவிர சிகிச்சை அளிக்கவேண்டும்.

யாரால் தாங்க இயலும்? கண் கலங்கிய திரு.சந்திரமௌலி சாஸ்திரிகள் மாப்பிள்ளையை அழைத்துக் கொண்டு நேரே பெரியவா முன்னிலையில் வந்து நின்றார். “பெண்ணுக்கு பார்த்து பார்த்து கல்யாணம் செஞ்சி வெச்சேன். உங்க ஆசீர்வாதத்தினாலே எல்லாம் நல்ல படியா நடந்தது. ஆனால், மாப்பிள்ளைக்கு TB வந்திருக்கு. சானடோரியத்துல சேர்க்கப்போறேன். அதுக்கு முன்னாடி உங்களை பார்க்கனும்னு வந்தேன்!” என்றார் துக்கத்தை அடைத்துக்கொண்டு.

அனைத்தையும் கேட்டுக்கொண்ட பெரியவா தன் முன்னே இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் இட்டுக் கொண்டார். அங்கே தட்டில் இருந்த சில பழங்களைப் பிரசாதமாக அளித்தார். “போய்ட்டு வா… இந்த பழத்தை அவனை சாப்பிடச் சொல்லு. பயப்படும்படியா ஒன்னும் இருக்காது” என்று திருவாய் மலர்ந்தருளினார்.

அடுத்த நாள் காஞ்சியிலிருந்து தாம்பரம் சானடோரியத்திலுள்ள மருத்துவமனைக்கு அட்மிஷன் போடும் பொருட்டு மருமகனை அழைத்து சென்றார். பாதிப்பின் தீவிரத்தை அறிந்துகொள்ள மீண்டும் அனைத்து பரிசோதனைகளும் செய்து பார்த்துள்ளனர். அவரை பரிசோதித்த மருத்துவ குழு, “எங்க டயத்தை ஏன் இப்படி வேஸ்ட் பண்றீங்க? இவருக்கு TB இருக்குனு யார் சொன்னா?” என்றனர் சற்று கோபமாகவே.

இவருக்கு ஒரு கணம் ஒன்றுமே புரியவில்லை.

“இவருக்கு TB யெல்லாம் கிடையாது. கூட்டிகிட்டு போங்க” என்றனர் சிப்பந்திகள்.

“பெரியவா……. என் பொண்ணு மாங்கல்யத்தை காப்பாத்திட்டேள்!” என்று அங்கேயே கதறினார் சந்திரமௌலி சாஸ்திரிகள்.

திரு.சந்திரமௌலி சாஸ்திரிகளின் மருமகன் திரு.நாராயணனுக்கு தற்போது வயது 65. நாராயணன் – ஹேமலதா தம்பதிகளின் மகன் ஸ்ரீராம் தற்போது தனியார் நிறுவனம் ஒன்றில் உயரதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

(குரு தரிசனம் தொடரும்)

=====================================================================

Also check :

யாரை குருவாக ஏற்றுக்கொள்வது? உண்மையான குருவை எப்படி அடையாளம் காண்பது?

குரு என்பவர்  இறைவனை விட உயர்ந்தவரா? MUST READ

=====================================================================

மனதுக்கினிய வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் அற்புதமான ஒரு பரிகாரத் தலம் பற்றிய பதிவு இது!! கெட்டியாக பிடித்துக்கொண்டு கரை சேருங்கள்!!!

Check :

நல்லதொரு வேலை; இனியில்லை கவலை! இதோ ஒரு அருமையான பரிகாரத் தலம்!!

=====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

ரைட்மந்த்ரா தொய்வின்றி தொடர உதவிடுங்கள்!

=====================================================================

Earlies articles on Maha Periyava in Guru Darisanam series…

அலகிலா விளையாட்டுடையானின் அன்பு சாம்ராஜ்ஜியத்தில் ஒரு புதிய வரவு!  குரு தரிசனம் (33)

குரங்கை அடித்ததால் ஏற்பட்ட தோஷம்! மகா பெரியவா சொன்ன பரிகாரம்!!  குரு தரிசனம் (32)

சர்வேஸ்வரா நீ அறியாததும் உண்டோ? – குரு தரிசனம் (30)

“என்ன தாமஸ், பையன் கிடைச்சுட்டானா?” – குரு தரிசனம் (29)

“மகா பெரியவா நாவினின்று வருவது வார்த்தைகள் அல்ல. சத்திய வாக்கு!” – குரு தரிசனம் (28)

ஒரு ஏழை கனபாடிகளும் அவர் செய்த பாகவத உபன்யாசமும் – குரு தரிசனம் (27)

மகா பெரியவா அனுப்பிய உதவித் தொகை; ஒளிபெற்ற அர்ச்சகர்கள் வாழ்வு! – குரு தரிசனம் (26)

பெரியவா பிரசாதம்னா சும்மாவா? ஆப்பிள் செய்த அற்புதம்! – குரு தரிசனம் (25)

இது உங்களுக்கே நியாயமா சுவாமி? – குரு தரிசனம் (24)

ஸ்ரீ மகா பெரியவா திருவிளையாடல் – குரு தரிசனம் (23)

சொத்து வழக்குகளில் சிக்கித் தவித்தவருக்கு மகா பெரியவா சொன்ன பரிகாரம் – குரு தரிசனம் (22)

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் – குரு தரிசனம் (21)

சாமி குத்தம், தடைபட்ட திருப்பணி, முடித்து வைத்த மகா பெரியவா! – குரு தரிசனம் (20)

இது தான் பக்தி என்பதை உணர்த்திய குடும்பம் – குரு தரிசனம் (19)

பார்வையாலேயே குணப்படுத்தும் வைத்தீஸ்வரன் – குரு தரிசனம் (18)

கேட்டது ஒரு பிள்ளையார் சிலை; கிடைத்ததோ ஒரு கோவில் – குரு தரிசனம் (17)

குரு தரிசனம் தந்த பரிசு – அன்றும், இன்றும் – இரண்டு உண்மை சம்பவங்கள் – குரு தரிசனம் (16)

மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் – குரு தரிசனம் (15)

“ஏம்பா! உங்களுக்கு எப்போ பார்த்தாலும் பெரியவா சேவை தானா?” – குரு தரிசனம் (14)

வேதம் தழைக்க சென்னையில் ஓர் வேத வித்யா ஆஸ்ரமம்!

வாழைப்பழத்துக்கு பதில் மகா பெரியவா கொடுத்த நெற்பொரி. ஏன்? எங்கு? – குரு தரிசனம் (13)

“கடமைக்கே நேரமில்லை, இதுல கோவிலுக்கு எங்கே சாமி போறது?” – குரு தரிசனம் (12)

காசியில் கங்கா ஜலம் எங்கு எடுக்கவேண்டும்? – குரு தரிசனம் (11)

குரு தரிசனம் – முந்தைய பதிவுகளுக்கு ….

http://rightmantra.com/?cat=126

=====================================================================

Also check short series on Kalady & Sornaththu Manai :

சங்கரரின் காலை முதலை பற்றிய ‘முதலைக் கடவு’ – ஒரு நேரடி ரிப்போர்ட் (2)

பக்திக்கும் பாசத்திற்கும் வளைந்த பூர்ணா நதி – காலடி நோக்கி ஒரு பயணம் (1)

ஜகத்குரு ஆதிசங்கரர் வாழ்க்கை வரலாறு – ஒரு (வி)சித்திர அனுபவம்!

=====================================================================

Articles on Ramana Maharishi

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

=====================================================================

Articles about other Gurus in Rightmantra.com

‘பரப்பிரம்மம்’ நிகழ்த்திய லீலைகள் – பிரம்மேந்திரர் ஜெயந்தி ஸ்பெஷல்!!

மனித முயற்சி + குருவருள் = திருவருள்! (ஞானானந்தம்-2)

ஆனந்தத்தை அள்ளித் தரும் குருவின் மகாத்மியங்கள் – (ஞானானந்தம்-1)

நன்றி மறப்பது நன்றன்று – நகர மறுத்த திருச்செந்தூர் தேர்! உண்மை சம்பவம்!! 

“மூன்று முறை அழைத்தால் போதும், இந்தப் பிச்சைக்காரன் ஓடி வந்து உதவி செய்வான்!” – யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி SPL

“எதற்கும் கவலைப்படாதே. உன்னுடைய மேலதிகாரியால் உனக்கு எந்த விதத் தொந்தரவும் ஏற்படாது!”

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

தீராத வினைகளை தீர்க்கும் நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் – A must visit place!

பித்தனாகியும் பரமனைப் பாடிய ஸ்ரீ அப்பைய தீட்சிதர் திவ்ய சரிதம் + அதிஷ்டான தரிசனம்!

ராம நாம மகிமை & போதேந்திராள் வாழ்க்கை வரலாற்று நாடகம்! ஒரு நேரடி அனுபவம்!!

குரு அடித்தாலும் அணைத்தாலும் அது கருணை தானே? – ஸ்ரீ சேஷாத்ரி ஸ்வாமிகள் லீலை!!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

=====================================================================

Articles about Sri Ragavendra Swamy

முதல் மாணவன், முதல் வேலை, முதல் சம்பளம்…!! – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (6)

புதுவை பிருந்தாவனத்தில் காட்சி தந்த ராகவேந்திரர் – உண்மை சம்பவம் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (5)

பட்ட மரம் துளிர்த்தது; வேத சக்தி புரிந்தது – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 4

கேட்பதை தருவார், கேட்டதும் தருவார் குருராஜர் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 3

“அழைத்தால் போதும் அடுத்த கணமே நினைத்தது நடக்கும்!” – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் 2

திருவருளும் குருவருளும் – ஸ்ரீ ராகவேந்திர தரிசனம் (1)

குருராஜர் இருக்க கவலை எதற்கு? நெகிழ்ச்சியூட்டும் நிஜ அனுபவங்கள்!

நம் தளத்திற்கு கிடைத்த ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் பரிபூரண ஆசி! எங்கே… எப்படி?

ஆங்கில கவர்னருக்கு ராகவேந்திரர் காட்சியளித்த அற்புதம் – கஜெட் ஆதாரத்துடன்!

யாருக்கு தேவை தண்ணீர்?

உச்சரிப்பை விட உன்னத பக்தியே சிறந்தது!

இறைவா… பிறர் நிறைவில் பெருமிதமே தினம் காணும் குணம் வேண்டும்!

எது வந்த போதும் துணை நீயே குருராஜா – உண்மை சம்பவம்

முக்காலமும் நீ அறிவாய் குருராஜா – நம் தள வாசகரிடம் ஸ்ரீ ராகவேந்திரர் நிகழ்த்திய அற்புதம்!

‘ஸ்ரீ ராகவேந்திர தரிசனம்’ தொடர் அடுத்த வாரம் முதல் தொடர்ந்து  இடம்பெறும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.

=====================================================================

[END]

11 thoughts on “நெற்றியில் குங்குமம்; நெஞ்சில் உன் திருநாமம்! – குரு தரிசனம் (34)

  1. குருவாரத்தில் காஞ்சி மகானுடன் தொடர்புடைய திரு சந்திரமௌலி சாஸ்திரிகளைப் பற்றி தெரிந்து கொண்டேன். அவருக்கு என் பணிவான நமஸ்காரம்

    ஒவ்வொரு வாரமும் புதிது புதிதாக மகா பெரியவாவுடன் உடன் இருந்தவர்களை பற்றி படிக்க மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

    நாளை நான் விழுப்புரம் பெரியவா அவதரித்த ஸ்தலமான சங்கரமடம் எங்கள் வீட்டு family function க்குகாக செல்கிறேன். அப்படியே திருக்கோவிலூர் ஞானானந்த ஸ்வாமிகள் தபோவனம் செல்கிறேன், அங்கு சித்ரா பௌர்ணமி ஆராதனை விழா இரண்டு நாட்கள் நடை பெறுகிறது. ஒரே வாரத்தில் இரண்டு குரு தரிசனம் எனக்கு கிடைக்கப் போகிறது.

    குருவே சரணம் ….குரு கடாக்ஷம் …..

    நன்றி
    உமா வெங்கட்

  2. குரு ஆள் இருந்தால் திரு அருள் தானாக வரும்.

    நன்றியுடன்
    நாராயணன்.

  3. அருமையான பதிவு
    குரு நம்மை காக்கட்டும்

    நன்றி
    பிரியதர்சினி

  4. பதிவு படிக்க மிக்க மகிழ்ச்சி
    குருவாரத்தில் மகா பெரியவா அவர்களின் அனுகிரக நிகழ்ச்சி படித்து தன்யனனோம்.
    நம்பினோர் கெடுவதில்லை அதுபோல பெரியவா அவர்களுடன் கோரிக்கை வைத்து நடைபெற்ற அற்புதங்கள் ஏராளம். அதில் சிலவற்றை இந்த குருவாரத்தில் நம் தளத்தில் படித்து ஆனந்தம் அடைந்தோம்.
    குருவருளும் திருவருளும் சித்திக்கட்டும்.
    என்றும் அன்புடன்

  5. சுந்தர் அண்ணா..

    குருவின் மகிமைகள் ஒவ்வொன்றும் வியப்பூட்டும் வண்ணம் இருக்கிறது.படிக்க படிக்க ஆனந்தம் தருகின்றது.

    குரு தரிசனத்தில் சந்திர மௌலி சாஸ்திரிகள் பற்றியும் தெரிந்து கொண்டேன். அவருக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

    உமா அம்மா அவர்களின் குரு தரிசனம் சிறக்கவும் வாழ்த்துகிறேன்.

    நம் தள அன்பர்கள் அனைவரும் திருவருள் பெற, குருவருள் துணை புரியட்டும்.

    குருவே சரணம்.

    ஓம் பயம் சிவய வசி குரு தேவாய நமஹ..

    மிக்க நன்றி அண்ணா..

  6. சுந்தர் அண்ணா..

    மன்னிக்கவும்.

    ஓம் பிம் சிவய வசி குரு தேவாய நமஹ..

    மிக்க நன்றி அண்ணா..

  7. குருவே சரணம்……..குருவின் பெருமைகளை கேட்க கேட்க நம் செவிகள் இனிக்கின்றன…… படிக்க படிக்க மனம் குளிருகின்றது…….. குருவுக்கு சேவை செய்யும் பாக்கியம் பெற்ற சந்திரமௌலி சாஸ்திரிகளை தரிசித்ததில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம்…….

    மன்னாதி மன்னர்களாலும் தொட முடியாத பரமாச்சாரியாரின் பாதங்களுக்கு ஒருமுறை கடுக்காய் மருந்து பூசும் பாக்கியம் பெற்றிருக்கிறார் சாஸ்திரிகள்……என்னே அவர் செய்த புண்ணியம்! (இன்றுதான் தெரிந்து கொண்டோம்)…..

    அவர் பாதங்களைப் பணிந்த நம் ஆசிரியருக்கு எங்கள் வாழ்த்துக்கள்……..

  8. மஹா பெரியவா திருவடிகளே சரணம். அவரை நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைக்கவில்லை. ஆனாலும் அவருக்கு தொண்டு ஆற்றியவர்களின் அனுபவங்களை கண்டு மெய் சிலிர்க்கின்றேன். தங்கள் பணி தொடரட்டும்.

    குருவின் பாதங்களே போற்றி.

  9. வணக்கம் சுந்தர். படிக்க படிக்க திகட்டதாவை குருவின் மகிமை.குருவின் திருவடிகளுக்கு சரணம். இன்டர்நெட் வேலை செய்யாததால் படிக்க முடியவில்லை. ஒரு வாரத்திற்கு பிறகு இன்றுதான் முதல் பதிவு படிக்கிறேன்.தவறாக நினைக்க வேண்டாம். நன்றி.

Leave a Reply to viji Cancel reply

Your email address will not be published. Required fields are marked *