Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தூரம்!

கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தூரம்!

print
ந்த ஊர் வானொலி ஒன்றில் வாராந்திர பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். தங்கள் கோரிக்கைகளை வானொலி நிலையத்திற்கு சொன்னால், அவர்கள் அதை அனைவருக்கும் அறிவித்து பிரார்த்தனை செய்யச் சொல்வார்கள். (நம்ம பிரார்த்தனை கிளப் போல!). அதே ஊரில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஒரு பெண் வாழ்ந்துவந்தாள். வறுமையில் வாழ்ந்தாலும் மிகுந்த கடவுள் நம்பிக்கை கொண்ட பெண் அவள்.

ஒரு நாள் அந்த வானொலி நிலையத்தை தொடர்பு கொண்டு, தனது வீட்டில் குண்டுமணி அரிசி கூட இல்லாத நிலையையும் தானும் தன் குடும்பத்தினரும் பலநாட்களாக பட்டினி கிடக்கும் அவலத்தையும் கூறி, தங்களுக்காக பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொண்டாள்.

Faith வானொலியும் அவளது நிலை பற்றி குறிப்பிட்டு, அவளுடைய பிரார்த்தனையை வெளியிட்டது.

இதை கேட்டுக்கொண்டிருந்த கடவுள் நம்பிக்கையற்ற அந்த ஊர் பெரிய மனிதன் ஒருவன், அவளது வறுமையை வைத்து அவளை ஏளனம் செய்ய விரும்பினான்.

தனது உதவியாளரை அழைத்து ஒரு வண்டி நிறைய மளிகை சாமான்களை ஏற்றிக்கொண்டு, அந்த பெண்மணியின் வீட்டில் நிறைத்துவிட்டு வரும்படியும், இதை யார் கொடுத்தனுப்பினார்கள் என்று அவள் கேட்டால், “சாத்தான் கொடுத்தனுப்பியதாக சொல்” என்று தனது உதவியாளருக்கு சொல்லியனுப்பினான்.

செல்வந்தனின் உதவியாளர், அந்த பெண்ணின் வீடு தேடிச் சென்று அனைத்து மளிகை சாமான்களையும் நிறைக்க ஆரம்பித்தான்.

கடவுளின் கருணையையும் பிரார்த்தனையின் சக்தியையும் எண்ணி எண்ணி வியந்தாள் அந்த பெண்.

அந்த பெண்ணுக்கு அந்த செல்வந்தனைப் பற்றியும் அவன் கடவுள் நம்பிக்கையற்றவன் என்பதும் தெரியும். தன்னை பரிகாசம் செய்யவே இதை செய்திருக்கிறான் என்றும் புரிந்துகொண்டாள். ஆனால் அது பற்றி அவள் அலட்டிக்கொள்ளவில்லை. அவர்கள் திட்டம் தனக்கு தெரியும் என்பது போல காட்டிக்கொள்ளவும் இல்லை. ஏதோ ஒரு வகையில் தனது கஷ்டம் தீர்ந்ததில் அவளுக்கு ஒரே சந்தோஷம்.

பொருட்களை குவித்தபிறகு இது தான் சரியான சந்தர்ப்பம் என்று கருதி, “இது யார் கொடுத்தனுப்பினார்கள் என்று நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பவில்லையா?” என்று அந்த உதவியாளர் அவளிடம் கேட்க, அவள் நிறுத்தி நிதானமாக, “தேவையேயில்லை. கடவுள் கட்டளையிட்டால் அதை சாத்தானாக இருந்தாலும் நிறைவேற்றவேண்டும் எனும்போது, இதை கொடுத்தனுப்பியவரை பற்றி நான் ஏன் தெரிந்து கொள்ளவேண்டும்?” என்றாள்.

அந்த பெண்ணின் இடத்தில ஒரு வேளை நீங்கள் இருந்து இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றால் உங்கள் ரியாக்ஷன் என்னவாக இருக்கும்?

யதார்த்தமாக சிந்தியுங்கள்… கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தூரம் புரியும்!

===============================================================

வேலை தேடுவோர் & வேலையில் பிரச்சனை உள்ளோருக்கான சிறப்பு பிரார்த்தனை பதிவு!!

முன்னரே கூறியபடி இந்த வாரம் பிரார்த்தனை கிளப் பதிவு இடம்பெறாது. சென்ற வாரம் பிரார்த்தனை செய்தவர்களுக்கே இந்த வாரமும் பிரார்த்தனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். (அருட்பார்வை பெற்றுத் தந்த கண் பார்வை – Rightmantra Prayer Club)

அடுத்த வாரம் இடம் பெறக்கூடிய பிரார்த்தனை கிளப் பதிவு சரியான வேலை கிடைக்கமால் சிரமப்படுவோருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

நல்ல வேலை வேண்டுவோர், திறமையும் தகுதியுமிருந்தும் நல்ல வேலை கிடைக்காமல் அவதிப்படுவோர், உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காமல் சிரமப்படுவோர் என அனைவரும் இதில் தங்கள கோரிக்கைகளை சமர்ப்பிக்கலாம். அடுத்த வாரம் பிரார்த்தனை கிளப்புக்கு தலைமை தாங்கக்கூடியவர் இது தொடர்பான ஒரு திருக்கோவிலில் இறைவனுக்கு பூஜை செய்யும் பாக்கியம் பெற்றுள்ளவர். எனவே நம்பிக்கையுடன் சமர்பிக்கவும்.

உங்கள் கோரிக்கைகளை சற்று விரிவாக, தமிழிலோ ஆங்கிலத்திலோ உங்கள் முழு பெயர், ஊர், வயது, மற்றும் உங்கள் பிரச்னை ஆகியவற்றை குறிப்பிட்டு editor@rightmantra.com என்கிற முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும். தமிழில் எழுத முடியாதவர்கள், ஒரு தாளில் எழுதி அதை ஸ்கேன் செய்து அனுப்பலாம். இது எதுவுமே சாத்தியமில்லை என்றால் நம்மை அலைபேசியில் தொடர்புகொள்ளலாம்.

‘ரைட்மந்த்ரா’ சுந்தர்,
ஆசிரியர், Rightmantra.com
E-mail : editor@rightmantra.com | Mobile : 9840169215

===============================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

=====================================================================

Also check… Similar stories :

தற்காலிக சோகங்களுக்காக வருந்துவானேன்? தங்கக் கதவை திறப்பதற்கே இரும்புக் கதவு மூடப்படுகிறது!

கர்வத்துக்கும் தன்னம்பிக்கைக்கும் என்ன வித்தியாசம் ?

பொருள் தெரியாமல் ஒரு ஸ்லோகத்தை உச்சரிப்பதால் பலன் உண்டா?

தாய் தந்தையரை துதியுங்கள் – உலகம் உங்கள் காலடியில்! அன்னையர் தின ஸ்பெஷல்

பார்க்க வேண்டியவர்களை அவன் பார்த்துக்கொள்வான்!

தாங்க முடியாத சுமையும் கிடைப்பதர்க்கரிய பொக்கிஷமும்!

ஹரியின் துணையோடு ஹரன் நடத்திய திருவிளையாடல் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

“எல்லாம் அவ பாத்துப்பா!”

=====================================================================

[END]

3 thoughts on “கடவுளுக்கும் உங்களுக்கும் உள்ள தூரம்!

  1. சுந்தர் அண்ணா..

    முதன் முதலாய் படித்த போது, எனக்கு சரியாக விளக்கம் கிடைக்கவில்லை. இந்த பதிவை திரும்ப,திரும்ப படித்த பின்னரே, எனக்கு பதிவின் நோக்கம் புரிந்தது.

    கடவுளின் மேலும், பிரார்த்தனையின் மேலும் நம்பிக்கை இருந்ததால் தான், கதையின் பெண்மணியால் அவ்வாறு சொல்ல முடிந்தது. இறை நம்பிக்கையின் தத்துவமும், பிரார்த்தனையின் பலனும் ஒரே கதை வாயிலாக உணர முடிந்தது அண்ணா..

    நாமும் இறை பக்தியில், இன்னும் ஆழமாய் செய்திட வேண்டும்.

    தொடர்பான செய்தி:

    நமக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் இருக்கிறது என்று ஒரு கணக்கெடுக்க வேண்டுமா? எத்தனை பொருட்களின் மீது ஆசை இருக்கிறதோ, வரிசையாக எழுதி பட்டியலிட்டால் அது இருக்கும் நீளத்தைக் கொண்டு இவ்வளவு தூரம் தான் நமக்கும் கடவுளுக்கும் இருக்கக் கூடிய தூரம்.

    பொருட்களின் மீது இருக்கக் கூடிய ஆசைகள் எவ்வளவோ, அந்த அளவுக்குக் கடவுளுக்கும், மனிதனுக்கும் உள்ள தூரம் அதிகமாகும். ஆகவே, ஆசை என்பதைச் சீரமைத்து விட்டோமேயானால், இறைவனைக் காணலாம். ஆசையை அனுமதித்துக் கொண்டே இருந்தால், அதை ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு ஆண்டும் செயலாக்கிக் கொண்டு தான் இருப்போம். அந்த வகையில் வேலை இருந்துக் கொண்டே இருக்கும். அனால் ஆசை சீரமைக்கப்பட்டது என்றால், ஒரு பளுவும் இல்லை. ஆகையினால் மனம் துல்லியமாக, நிறைவாக இருக்கும். அங்கே இறைவன் இருப்பான்.

    – தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி.
    (மனவளக்கலை மன்ற நிகழ்ச்சியில் கேட்டது மற்றும் வேதாத்திரி மகரிஷி அவர்களின் “வாழ்க்கை மலர்கள் ” நூலிலிருந்து)

    மிக்க நன்றி அண்ணா..

  2. வணக்கம் சுந்தர். நிச்சயமாக அந்த பெண் போல நினைத்து இருக்கமாட்டேன் . அவமான படுத்துகிறார் என்றே தோன்றும் . எதையும் பார்க்கும் விதத்தில்தான் என்பது புரிகிறது. நன்றி.

  3. மிகவும் அருமையான பதிவு., நம் பிரார்த்தனைக்கு கடவுள் செவி சாய்த்து விட்டார் எனது நான் மகிழ்ந்து இருப்பேன்.
    நன்றி
    உமா வெங்கட்

Leave a Reply to V UMA Cancel reply

Your email address will not be published. Required fields are marked *