Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

print
ண்பர் அனுப்பிய ‘ரமண திருவிளையாடற் திரட்டு’ படித்து வருகிறோம். மிகப் பெரிய நீதியை பகவான் ரமணர் மிக அனாயசமாக ஒரு சிறு செயல் மூலமோ அல்லது தனது மௌனம் மூலமோ உணர்த்திவிடுகிறார். இது ஒரு வித்தியாசமான அனுபவம்.

தொண்டு செய்பவர்களுக்கு, அது சமூகத் தொண்டோ சமயத் தொண்டோ ஒரு கட்டத்தில் அகந்தை ஏற்பட்டுவிடும். தான் மட்டும் தான் சேவை செய்வதாகவும் மற்றவர்கள் எல்லாம் ஒன்றுக்கும் பயனில்லாமல் இருப்பதாகவும் எண்ணம் ஏற்படும். அது எத்தனை ஆபத்து என்பதை மிக அழகாக ரமணர் இதில் விளக்கியிருக்கிறார். இதை படித்தது நாம் செய்த பாக்கியம் என்று தான் கருதுகிறோம்.

எத்தனை அழகான உவமை. படியுங்கள்… நீங்களே புரிந்துகொள்வீர்கள்!

இறைவனிடம் நாம் தவறாமல் கூறும் தினசரி பிரார்த்தனையில் கீழ்கண்ட வரிகள் இடம்பெற்றிருக்கும்.

‘இறைவா எந்த சூழ்நிலையிலும் எம் மனதில் அகந்தை ஏறாமல் நீ தான் காக்கவேண்டும். இந்த வாழ்க்கை, இந்த பெயர், இந்த பிறவி, அனைத்தும் நீ இட்ட பிச்சை. போதையில் தன்னிலை மறந்து விழுந்து கிடந்தவனை கங்கை நீர் தெளித்து எழுப்பிய புண்ணியன் நீ. இதில் அடியேன் பெருமைப்பட என்ன இருக்கிறது? என்றும் எந்த சூழ்நிலையிலும் ‘தான் என்ற அகம்பாவம் தலை காட்டாது அமைய வேண்டும், வீண் பெருமை சிறிதேனும் ஒட்டிடாத மனம் வேண்டும்’!! என்று தான் உன்னிடம் இறைஞ்சுகிறேன்.

=================================================================

இதோ ரமண திருவிளையாடற் திரட்டிலிருந்து ஒரு முத்து….

அடக்கம் அமரருள் உய்க்கும்!

கும்பகோணத்திலிருந்து இரண்டு பெண்கள் பகவனைத் தரிசிக்க வந்தார்கள். ஒருவர் குரு, மற்றொருவர் சிஷ்யை. அன்று மாலையே ரயிலில் புறப்பட இருந்தார்கள். மதியம் மூன்று மணிக்கு ஓல்டு ஹால் வந்தார்கள். சிஷ்யை குருவுக்கு இருக்கை தயார் செய்து பகவான் முன்பு அமரவைத்தார். அவ்வப்போது சோபாவுக்கு அருகே சென்று பகவானிடம், “எல்லாத்துலேயும் அவங்க உங்களை மாதிரியே சுவாமி. நீங்க இருக்கிற அதே ஸ்திதியிலே அவங்களும் இருக்காங்க. எங்களை ஆசீர்வாதம் பண்ணுங்கோ!” என்றாள்.

Bhagavan Ramanar Sitting

மீண்டும் சிறிது நேரம் கழித்து, “மோட்சத்துக்கான வழி என்ன? அதை உபதேசம் செய்யனும். பந்தம்னா என்ன? மாயையிலிருந்து விடுபடுறது எப்படி?” என்று கேட்டாள்.

பகவான் பதிலேதும் கூறவில்லை. நேரம் கடந்துகொண்டே இருந்தது. மாலை நெருங்கியது. சிஷ்யை பதட்டமானாள். ‘சுவாமி! தயவு செஞ்சி உபதேசம் பண்ணுங்கோ. சீக்கிரம் தீக்ஷை கொடுங்கோ. வேகமா முடிங்கோ. உங்களுக்கே தெரியும் டிரெயினுக்கு நேரமாச்சு’ என்றாள் பதட்டமாக. பகவான் மௌனமாகவே இருந்தார்.

“சுவாமி! ஏதாவது சொல்லுங்கோ… எல்லாரும் அஞ்ஞானம்கிறா. அஞ்ஞானம்னா என்ன?” என்றாள் சிஷ்யை.

பகவான் அருகிலிருந்து முருகனாரிடம் திரும்பி, “அவளை யார் அஞ்ஞானத்திலேயே இருக்கான்னு விசாரம் பண்ணச் சொல்லுங்கோ!” என்றார்.

முருகனார் அவர்களிடம், “நீங்க போகலாம். உங்களுக்கான தீக்ஷை முடிஞ்சுது” என்று கூறினார். அவர்களும் கிளம்பினர்.

பகவான் சிறிது நேரம் கழித்து பொதுவாக பேசலானார். “எல்லாம் உடனே கிடைக்கணும். எல்லாருக்கும் ஏதாவது ஒரு ட்ரெயின் பிடிக்கிறதுக்கு இருக்கு. வரும்போதே அவசரமா வர்றது. போகும்போது மோட்சம் பார்சல்ல வேணும், எதையாவது அங்கேயும் இங்கேயுமா படிக்கவேண்டியது.

எல்லாம் தெரியும்னு நினைச்சிக்க வேண்டியது. எல்லாரும் இங்கே சிரத்தையோட சாதனை பண்ணனும்னு தான் வர்றா. வந்து சேர்ந்து இனிமே இங்கே தான் நம்ம காலம்கிறது ஏற்பட்ட உடனே அகந்தை தலைக்கு ஏறிடுறது. எதுக்கு வந்தோம்கறதே மறந்துடுறது. எனக்கு ஏதோ பெரிய சேவை பண்றதா நினைச்சுக்கறா.

தலைவணங்கினால் உள்ளே வரலாம்!
தலைவணங்கினால் உள்ளே வரலாம்!

அவா தான் லோகத்துலேயே பகவானுக்கு சேவை பண்ண பிறந்ததாகவும் மத்தவா எல்லாம் வீணா பொழுதை போக்குறதாவும் நினைக்கிறா. இந்த நினைப்போட சேவை பண்றதே அவா வந்த நோக்கத்தை கெடுத்துடும். அடக்கம்தான் அகந்தையை நாசம் பண்ணும்.

“ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா கதவோட உயரம் ரொம்பக் குறைவு. தலை வணங்கினாத்தான் உள்ளே போகமுடியும்.”

“ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா கதவோட உயரம் ரொம்பக் குறைவு. தலை வணங்கினாத்தான் உள்ளே போகமுடியும். பெருமாள் சுவாமியைவிடவா நீங்கல்லாம் எனக்கு பெரிசா சேவை செஞ்சிட முடியும்? பல வருடம் எனக்கு நிழலாகவே இருந்தார். எனக்கு பேதி கண்டப்போ தன் கையாலேயே சுத்தம் பண்ணினார். அதே பெருமாள்சுவாமி எனக்கெதிரா கோர்ட்டுக்கு போனார். விசாரணை கமிஷன் போட்டு விசாரிக்க வெச்சார்.

“மனசுல நான்தான் என்கிற எண்ணம் கொஞ்சம் இருந்தாலும் அது வேகமா பரவி வந்த நோக்கத்தையே கெடுத்துடும்!” என்றார்.

====================================================================

An appeal – Help us in our mission!

Rightmantra.com is a website that focuses on Spirituality, Self-development and True values without any commercial interest. We are running full-time. Give us your hand. Help us to serve you better. Join our ‘Voluntary Subscription’ scheme or Donate us liberally. Ask your near and dear ones to help us in our mission. We are striving to make this world a better place to live. Little Drops of Water Make the Mighty Ocean. If you don’t who else will?

Our A/c Details:

Name : Rightmantra Soul Solutions
A/c No. : 9120 2005 8482 135
Account type : Current Account
Bank : Axis Bank, Poonamallee Branch, Chennai – 600 056.
IFSC Code : UTIB0001182

நமது தளத்தின் ‘விருப்ப சந்தா’ திட்டத்தில் சேர்ந்துவிட்டீர்களா?

====================================================================

For earlier episodes…

பிள்ளையார் பழமும் அதீத சிற்றம்பலமும் – இது ரமண திருவிளையாடல்!

ரமண திருவிளையாடற் திரட்டில் கண்ட முத்துக்கள் மூன்று!

பிராப்தம் & ஆஞ்ஞை = ரமண விளையாட்டு!

====================================================================

Also Check :

ஆட்கொண்ட அருணாச்சலேஸ்வரர் – பள்ளி மாணவர்களுக்கு பாடமான நமது தளத்தின் நோட்டீஸ்!

“தன்னைப் போல பிறரை எண்ணும்  தன்மை வேண்டுமே!” .

கோ சேவை – ரமண மகரிஷி உணர்த்திய பேருண்மை!

மழை பொழியுது – பாத்திரத்தை முதல்ல நேரா வைங்க!

====================================================================

[END]

9 thoughts on “ஈசனோட கதவு எப்பவும் திறந்தே இருக்கும். ஆனா…

  1. பகவானின் மௌனம் மிகவும் அர்த்தமுள்ளது. அதை புரிந்துகொள்ள முடியாத சில அரைவேக்காட்டு மனிதர்கள் தன்னுடைய அறியாமையை அவர்கள் வாயாலேயே வெளிபடுத்திவிடுகிரார்கள். அடக்கம் இல்லாத எவரும் ஆன்மீக வழியிலே பயணம் செய்யமுடியாது.

    அகந்தை அகலும்போதுதான் இறைவனிடம் சரணாகதி அடையமுடியும்.

  2. சுந்தர் அண்ணா..

    இந்த புனித குரு நாளில், குருவின் இரண்டாம் தரிசனம். குருவே சரணம்.

    சென்ற வாரம், குரு – சிஷ்யன் பற்றி கேள்வி -பதில் தொகுப்பு. இந்த வாரம் இரண்டு குரு பதிவுகளும் – இல்லை இல்லை இரண்டும் குருவின் உடனான அனுபவங்கள்.

    மெய் சிலிர்க்க வைத்ததோடு மட்டுமின்றி, கண்ணீர் மல்க வைத்தும் விட்டது..நம் தள பதிவுகள் மூலம் ஆன்மிக உலகின் அதிசயங்களை அனுபவிக்க முடிகிறது..

    கடந்த மூன்று பதிவுகளும் அருமையோ அருமை.இது வெறும் வாய் வார்த்தை தான் அண்ணா..சொல்ல முடியாத அனுபவம் அண்ணா..

    கண்ணீர் மல்க சொல்கிறேன் “குருவே சரணம் ”

    மிக்க நன்றி அண்ணா..

  3. திரு சுந்தர் அவர்களுக்கு ,
    மிக அற்புதமான பதிவு
    எனக்குள் இருக்கும் நான் என்ற அகந்தையை அழிக்க வந்தது.
    நன்றி

  4. குருமகிமை தொடர் அற்புதம்.
    அந்த கால கோவில்களில் நான் பார்த்துள்ளேன் கருவறை உள்ளே செல்லும் போது நம் தலை குனிந்து சென்று நின்ற பிறகு தான் கற்பூர ஆரத்தி parka முடியும்.
    அங்கு vibration அதிகமாக இருக்கும்.
    குரு Valara சிறப்பு பதிவுகள் இரண்டும் அருமை .
    குருவே சரணம்.
    என்றும் அன்புடன்

  5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்

    இன்றைய பொழுது பகவானின் அருட் பார்வையுடன் ஆரம்பமாகி உள்ளது. இனி எல்லாம் சுகமே …

    பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல பகவானின் படம் அத்தனை அருமை. அவரின் அருட் பார்வையைக் காண கண் கோடி வேண்டும்

    சிவனின் சன்னதியை வைத்து அவர் கூறியிருக்கும் உதாரணம் அபாரம். மகான்களால் மட்டுமே இப்படி எல்லாம் சிந்திக்க வைக்க முடியும். எளிய உதாரணத்தின் மூலம் மிகப் பெரிய உண்மையைப் புரிய வைக்க முடியும்

    குருவே சரணம் …. குரு கடாக்ஷம் …..

    நன்றி

    உமா வெங்கட்

  6. சுந்தர்ஜி,

    நன்றாக தூங்குவதற்கும், ஒரு இலட்சியத்தை அடைவதற்கான உத்வேகத்தை பெறுவதற்குமான ஷ்லோகம், மந்திரம், செய்யுள், பதிகம் இருந்தால் அதனை ஒரு கட்டுரையாக பதியும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உதாரணத்திற்கு “இடரினும் தளரினும்” பதிகம் கவனத்தில் கொள்க.

  7. சுந்தர் சார் வணக்கம்

    கிடைபதறக்கும் காரணம் இருக்கும் கிடைக்காமல் இருபதிற்கும் காரணம் இருக்கும். மிகவும் அருமையான பதிவு சார்

    நன்றி

  8. மகான்களின் மௌனம் கூறும் அர்த்தங்கள் ஆயிரம்
    ஆயிரமாயிரம். அதனை புரிந்துகொள்ள நான் என்கின்ற அகந்தை முழுமையாக அகல வேண்டும்.

    மிக சிறப்பான பதிவு. அளித்த தாங்களும், படித்து
    நடைமுறையில் கடைபிடிக்கும் வாசகர்கள் அனைவரும் இறையருள் பெறுவது திண்ணம்

Leave a Reply to rakesh Cancel reply

Your email address will not be published. Required fields are marked *