அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர்.
இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார். மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ”என்ன மனிதர் நீங்கள்… இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?” என்று புலம்பினார்.
ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்:
”அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு… இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!” என்றார்.
”நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?” என்றார் அமைச்சர்.
உடனே ஓஷோ, ”நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல… உங்கள் எதிர்ப்பு உணர்வு.. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால் தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை. நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும்.. நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன… பார்த்தீர்களா.. ? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!” என்றார் ஓஷோ.
‘உதவாக்கரை யோசனை!’ என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!
”ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்” என்றார் அமைச்சர்.
ஓஷோ நமக்குச் சொல்கிறார்:
”இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு.. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய்.. உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும்; அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம்.. உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது.. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்” என்கிறார். (ஞானானந்தம் வாட்ஸ் ஆப் க்ரூப்பில் படித்தது).
======================================================================
திரும்ப திரும்ப படியுங்கள். எத்தனை பெரிய உண்மையை மிக மிக அழகாக எளிமையாக விளக்கியிருக்கிறார் ஓஷோ.
நம் வாழ்வில் பல தருணங்களில் மாற்ற முடியதவைகளை பற்றியே சிந்தித்து நமது நிம்மதியை இழக்கிறோம். அவற்றை அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப்பழகினால் வாழ்க்கை எத்தனை இனிமையானதாக மாறிவிடும்…!
“இறைவா என்னால் மாற்றமுடியாததை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும், மாற்றக்கூடியதை மாற்றும் துணிவும், இவற்றைப் பாகுபடுத்தி அறிய ஞானமும் தந்தருள்வாய்” – இதுவே நம் பிரார்த்தனையாக இருக்கட்டும்.
======================================================================
Also check :
அகத்தின் அழகு முகத்தில் தெரியும், எச்சரிக்கை! MONDAY MORNING SPL 81
பராசக்தியின் உடலில் தோன்றிய கொப்புளங்கள் – MONDAY MORNING SPL 80
சிரித்தவர்களை பார்த்து சிரித்த நிஜ ஹீரோ – MONDAY MORNING SPL 79
வாழ்க்கையில் நிச்சயம் ஜெயிக்க வேண்டுமா? MONDAY MORNING SPL 78
ஒரு சிறிய பேட்ஜ் செய்த அற்புதம் – MONDAY MORNING SPL 77
மனுஷனா பிறந்துட்டு எதுக்குங்க மாட்டைப் போல உழைக்கணும்? MONDAY MORNING SPL 76
நல்ல செய்தியா கெட்ட செய்தியா எது வேண்டும்? MONDAY MORNING SPL 75
வாழ்க்கையில் உயர என்ன வழி? – MONDAY MORNING SPL 74
கடவுளிடம் நமக்காக ஒரு கேள்வி – MONDAY MORNING SPL 73
மொட்டைத் தலை சாமியார்களுக்கு சீப்பு விற்க வர்றீங்களா? – MONDAY MORNING SPL 72
பல நாள் திருடன் ஒரு நாள்… MONDAY MORNING SPL 71
ஒரு கேள்வி-பதிலில் உங்கள் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு! MONDAY MORNING SPL 70
நீங்கள் எந்தளவு ஆசீர்வதிக்கப்பட்டவர் என்று தெரியுமா? MONDAY MORNING SPL 69
திருடனிடம் கொடுக்கப்பட்ட சாவி — MONDAY MORNING SPL 68
வாழ்வின் பிரச்னைகளை எதிர்கொள்ள ஒரு சிம்பிள் டெக்னிக் — MONDAY MORNING SPL 67
பிறர் தவறுகளுக்கு நாம் நீதிபதிகளாக இருக்கலாமா? — MONDAY MORNING SPL 66
உங்கள் வாழ்க்கையை இறைவன் மதிப்பிடுவது எப்படி தெரியுமா? – MONDAY MORNING SPL 65
முன்னேற துடிப்பவர்கள் மனதில் செதுக்க வேண்டிய வைர வரிகள் — MONDAY MORNING SPL 64
முந்தைய MONDAY MORNING SPL பதிவுகளுக்கு….
http://rightmantra.com/?s=MONDAY+MORNING+SPL&x=4&y=6
======================================================================
[END]
Excellent
Good thought to start the week with… that too with Osho’s words!! Wonderful!!
Let us have a great week ahead!!
மிக மிக அருமையான பதிவு..
சுந்தர்ஜி
திங்கள் காலை ஒரு அருமையா பதிவு. ஒவ்வருவாரம் திங்கள் காலை அன்று உங்கள் சூப்பர் காலை பதிவு படித்தால் தான் அன்று ஆரம்பம் சிறப்பாக இருக்கும். இன்று ஓசோவின் எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்கவேண்டும் என்பது பற்றி மிகவும் சூப்பர் நமக்கு அளித்த சுந்தர்ஜி அவர்களுக்கு நன்றி
VERY VERY NICE STORY.
அருமையான பதிவு
இந்தவாரம் இனிய வாரமாக அமையட்டும்.
நன்றி
Superb special. Monday morning starts with good story. Thanks s lot
Regards
Uma venkat
விட்டு கொடுப்பவன் கெட்டு போவதில்லை,
கெட்டு போகிறவன் விட்டு கொடுப்பதில்லை .
– மாறன்.
வணக்கம் சுந்தர். மிகவும் அருமை கடைபிடிக்க முயற்சித்தால் கூட வாழ்கை எங்கோ சென்றுவிடும் . நன்றி . வாழ்த்துக்கள்.
Superb story. Let us have a good week ahead.
Usha
நல்ல ஒரு அருமையான பதிவு.
என்னால் மாற்ற முடியாததை ஏற்று கொள்ளும் மன பக்குவத்தை தருவாய் இறைவா. நன்றி சுந்தர் சார் மிக்க நன்றி.
அதேபோல என்னால் ஏற்று கொள்ள முடியாததை தாங்கி கொள்ளும், ஒப்பு கொள்ளும் மன உணர்வினை தருவாய் இறைவா.
Excellent Thought of the day. Monday spl Super.
Narayanan.
டியர் சுந்தர்ஜி
தாங்கள் நலமுடன் இருக்க எனது வாழ்த்துக்கள் ; உங்களது வொவ்வுரு கட்டுரைகளும் தேனாய் தித்திகின்றன ; சிந்திக்க வைக்கின்றன ; சந்தோசம்
சுந்தர் சார்,
மிக அருமை.
டியர் சுந்தர்ஜி,
சூப்பர்.. அருமையான பதிவு..
நன்றி,
ரமேஷ்
திங்கள் ஸ்பெஷல், சூப்பர் ஸ்பெஷல்.
கடைபிடிப்பது சிறிது கடினம் என்றாலும், முடியாதது அல்ல.