Oops! It appears that you have disabled your Javascript. In order for you to see this page as it is meant to appear, we ask that you please re-enable your Javascript!
Thursday, March 28, 2024
Please specify the group
Home > Featured > நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)

நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)

print
நம்பிக்கையுடனும் பக்தியுடனும் படிப்பவர்கள் வாழ்வில் ‘வேல்மாறல்’ தொடர்ந்து தனது அற்புதத்தை செய்து வருகிறது. கடந்த வாரம் ஒரு நாள், ‘வேல்மாறல்’ பற்றிய நமது முந்தைய பதிவில் இப்படி ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. படித்துவிட்டு பிரமித்துவிட்டோம். உங்கள் சௌகரியத்திற்காக அந்த பின்னூட்டத்தை மொழி பெயர்த்து தந்திருக்கிறோம்.

Velmaral Book Murugan

===============================================================

Divine job for my son because of ‘Velmaral’!

Even I wanted to share my experience with “Vel Maral”.  My son who was not getting job in US for 5 months, after I started reading “Vel Maral”, got a very Good divine job.  Here Divine job, I am specifying because whenever I use to pray for his job, i use to request God that, he should get a divine job.  And now he got into a Hospital called “Saint Mary’s Hospital”.  He will b working with the Hospital’s corporate office.

I use to pray for his friends also to get job.  My prayers were answered and they all got the job before 2months.  And my son was the only person, who was left without job.  But he helped his friends to move to other states for the job. Now I am happily telling that reading “vel maral” gave a very good divine job for my son and he will be joining on 5th of Jan (on Arudra Darshanam day).

Shashi
Mumbai

===============================================================

மொழிபெயர்ப்பு :

வேல்மாறலால் கிடைத்த ‘தெய்வீகமான’ வேலை!

‘வேல்மாறல்’ குறித்த என்னுடைய அனுபவத்தை பகிர்ந்துகொள்ள ஆசைப்படுகிறேன். என்னுடைய மகன் கடந்த ஐந்து மாதங்களாக யூ.எஸ்.ஸில் நல்ல வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தான். ஆனால் எதுவும் வொர்க் அவுட் ஆகவில்லை. இந்நிலையில் நம் தளத்தின் மூலம் வேல்மாறலைப் பற்றி கேள்விப்பட்டு ‘வேல்மாறல்’ படிக்க ஆரம்பித்தேன். என்ன அதிசயம், தெய்வீகமான ஒரு வேலை கிடைத்தது. ஏன் தெய்வீகமான என்று சொல்கிறேன் என்றால், ‘வேல்மாறல்’ படிக்க துவங்கியபோது அவனுக்கு நல்லதொரு, தெய்வீகமான வேலை கிடைக்கவேண்டும் என்று வேண்டிக்கொண்டு தான் படிக்க ஆரம்பித்தேன். நான் வேண்டிக்கொண்டது போலவே ‘செயின்ட் மேரிஸ் மருத்துவமனையில் வேலைகிடைத்தது. அந்த மருத்துவமனையின் கார்ப்பரேட் அலுவலகத்தில் அவன் பணிக்கு சேர்ந்திருக்கிறான்.

சொல்லப்போனால் அவன் நண்பர்களுக்கும் சேர்த்து அதாவது அவர்களுக்கும் வேலை கிடைக்கவேண்டும் என்று நான் வேண்டிக்கொண்டு ‘வேல்மாறல்’ படிக்க ஆரம்பித்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் அனைவருக்கும் வேலை கிடைத்துவிட்டது. ஆனால் என் மகனுக்கு மட்டும் தான் கிடைக்கவில்லை. ஆனாலும் என் மகன் அவர்கள் விரும்பிய இடங்களில் நல்லபடியாக வேலைக்கு சென்று சேர உதவிகள் செய்தான். ஆனால் இன்று நான் மகிழ்ச்சியுடன் சொல்வேன்… முருகன் அருளால் ‘வேல்மாறல்’ அற்புதத்தால் என் மகனுக்கு தெய்வீகமான ஒரு வேலை கிடைத்திருக்கிறது என்று. ஆருத்ரா தரிசனத்தன்று அதாவது ஜனவரி 5 அன்று அவன் பணியில் சேரவிருக்கிறான்.

– சசி,
மும்பை

===============================================================

மேற்படி பின்னூட்டத்தை அளித்திருக்கும் திருமதி.சசி அவர்களை கடந்த ஒரு ஆண்டாகத்தான் நமக்கு தெரியும். நேரடி தொடர்பு இல்லை என்றாலும், பதிவுகளில் அவ்வப்போது பின்னூட்டம் அளிப்பார். அவர் மும்பையில் வசிப்பவர் என்பது மட்டும் நமக்கு தெரியும். மேலும் சில தகவலால் கேட்டு அவருக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறோம். ஒருவேளை இந்த பதிவை பார்த்துவிட்டு அவர் இந்த பதிவிலோ அல்லது  மின்னஞ்சலிலோ பதில் அனுப்பினால் இந்த பதிவில் அவற்றை சேர்க்க முயற்சிகள் எடுக்கப்படும்.

ஒரு விஷயத்தை அனைவரும் கவனித்தீர்களா?

தன் மகனுக்கு மட்டும் என்றில்லாமல் அவர் மகனின் நண்பர்களுக்கும்  சேர்த்து அவர் ‘வேல்மாறல்’ படிக்க ஆரம்பித்திருக்கிறார். இதோ அவரின் வேண்டுதல் தானாக அவர் நினைத்தபடியே நிறைவேறிவிட்டது.

மகனுக்கு தெய்வீகமான வேலை கிடைக்கவேண்டும் என்று பிரார்த்திதாக இவர் கூறியது உண்மையில் சிந்திக்கவேண்டிய விஷயம். செய்யும் வேலையில் பணம் மட்டும் கிடைத்தால் போதாது. அதில் ஒரு ஆத்ம திருப்தியும் இருக்கவேண்டும். எனவே தான் அவர் அப்படி கேட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன்.

மேலும் பணம் சம்பாதிப்பது பெரிதல்ல. யார் வேண்டுமானால் அதை செய்யலாம். வினையற்ற செல்வத்தை தான் அனைவரும் விரும்பி சம்பாதிக்கவேண்டும். அதுவே உங்கள் லட்சியமாக இருக்கவேண்டும்.

அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள். (குறள் 754)

விளக்கம் : பொருளீட்டும் நல்ல வழிகளை ஆராய்ந்து எவருக்கும் தீமை தராமால் ஈட்டிய செல்வமே அறத்தையும் இன்பத்தையும் ஒருங்கே தரும்.

ஆத்ம திருப்தியுடன் நீங்கள் வேலை செய்து அதில் பெறும் வருவாய் மட்டுமே விருத்தியடையும். அதன் மூலம் தான் உங்களுக்கு வினையற்ற செல்வம்  கிடைக்கும். உங்கள் சந்ததிகளால் கட்டிக்காக்கப்படும் சொத்துக்கள் கிடைக்கும். ஆடம்பரத்துக்கும் படோடோபத்துக்கும் பெயர் பெற்ற நிறுவனங்களில் மனசாட்சிக்கு விரோதமாக, பலரின் வயிற்றெரிச்சலை கொட்டிக்கொண்டு கண்ணியமற்ற வேலை செய்து பெறப்படும் ஊதியம் மற்றும் பணம் இருப்பது போல இருந்து கடைசியில் ஒன்றுமில்லாமல் இல்லாமல் ஆகிவிடும்.

இன்று பல முன்னணி நிறுவனங்களில் CSR – Corporate Social Responsibility என்ற பெயரில் சமூக பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது வரவேற்கத்தக்க பாராட்டப்படவேண்டிய ஒரு முயற்சி. கேளிக்கை, கொண்டாட்டங்களை குறைத்துக்கொண்டு அது போன்ற பணிகளில் நீங்கள் உங்களை நிச்சயம் ஈடுபடுத்திக்கொள்ளவேண்டும். கோவிலுக்கு செல்வதைவிட அது அவசியமானது. புனிதமானது. அப்படி வாழ்வது தான் வாழ்க்கை.

அதே போல ஒரே சமயம் இரண்டு மிகப் பெரிய நிறுவனங்களில் உங்களுக்கு பணிக்கு ஆஃபர் வருகிறது என்று வைத்துகொள்வோம்… இரண்டிலும் ஒரே மாதிரியான சம்பளம் + சௌகரியங்கள்… இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்றால் CSR Activity உள்ள நிறுவனம் எதுவோ அதில் சேருங்கள். அதுவே சிறந்தது.

===============================================================

‘வேல்மாறல்’ நூலை எப்படிப் பெறுவது உள்ளிட்ட விபரங்களை முந்தைய பதிவுகளில் தெரிவித்திருக்கிறோம்.

இருப்பினும் நடைமுறை மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ‘வேல்மாறல்’ மன்றம் மூலம் அந்நூலைப் பெறமுடியாதவர்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள், முதியவர்கள் போன்றோர் சிரமப்படவேண்டாம். நம்மை தொடர்புகொள்ளவும். நாம் அனுப்பிவைக்கிறோம். நன்றி.

Sundar | www.rightmantra.com | Mobile : 9840169215 | E-mail : simplesundar@gmail.com

==============================================================

அடுத்து…

* யார் இந்த திருப்புகழ் சகோதரர்கள் ?

* திரு.சாதுராம் ஸ்வாமிகள் என்பவர் யார் ?

அடுத்த பாகத்தில் விரிவாக…. to be continued in Part 9

==============================================================

Also check :

‘வேல்மாறல் எனும் வரப்பிரசாதம்’ – உண்மை சம்பவம் – (Part 7)

‘வேல்மாறல்’ யந்திர தரிசனம் — யாமிருக்க பயமேன்? (Part 6)

நம் வாசகர் வீட்டில் ‘வேல்மாறல்’ செய்த அதிசயம் — யாமிருக்க பயமேன்? (Part 5)

கைமேல் பலனைத் தந்த ‘வேல்மாறல்’ பாராயணம் — யாமிருக்க பயமேன்? (Part 4)

இழந்த வாழ்க்கையை மீட்டுத் தந்த ‘வேல்மாறல்’ — யாமிருக்க பயமேன்? (Part 3)

வினைகளை தகர்க்கும் ‘வேல்மாறல்’ எனும் மஹாமந்த்ரம் — யாமிருக்க பயமேன்? (Part 2)

வேல் தீர்க்காத வினை உண்டா? உண்மை சம்பவம்! — யாமிருக்க பயமேன்? (Part 1)

உன்னை தொழுவதொன்றே இங்கு யான் பெற்ற இன்பம்!

முருகனின் வியர்வையும் பின்னர் பெருகிய கருணையும் – உண்மை சம்பவம்!

சிறுவனின் ஏளனம் – வாரியார் செய்தது என்ன? ஆடி கிருத்திகை சிறப்பு பதிவு!

முருகப் பெருமானை நேரில் கண்ட பாக்கியசாலிகள் – வைகாசி விசாகம் – SPL 2

ஒரு பக்தன் எப்படி இருக்க வேண்டும்?

கருவறையில் மட்டுமா இருக்கிறான் கந்தன் ? தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 2

ஏற்பது இங்கே இகழ்ச்சியல்ல!

நல்லதை நினைத்தால் போதும்… நடத்திக்கொள்ள ஆண்டவன் தயார்!

கலையழகு மிக்க குன்றத்தூர் சேக்கிழார் மணிமண்டபம்… தமிழ்ப் புத்தாண்டு ஆலய தரிசனம் PART 1

தேவாரம், திருப்புகழ் மணம் பரப்பும் வாரியாரின் வாரிசுகள் – ஒரு சந்திப்பு!

காங்கேயநல்லூர் வாரியார் சுவாமிகள் ஞானத் திருவளாகம் – ஒரு திவ்ய தரிசனம்!

ஏழை திருமணத்துக்கு உதவிய வள்ளல் & வாரியாரின் வாழ்வும் வாக்கும் – தமிழ் புத்தாண்டு SPL & வீடியோ!

காங்கேயநல்லூருக்கு பதில் காக்களூரில் கிடைத்த வாரியார் தரிசனம்!

================================================================

[END]

 

10 thoughts on “நம் வாசகியின் மகனுக்கு வேல்மாறலால் கிடைத்த வேலை! – யாமிருக்க பயமேன் ? (Part 8)

  1. வேல்மாறல் செய்த அற்புதம் அருமை. நம் வாசகி சசி அவர்களின் உயர்ந்த உள்ளத்திற்கு பாராட்டுக்கள் பல .

    அவரது மகனுக்கும் , நண்பர்களுக்கும் என் உளம் கனிந்த வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்

    திருசெந்தூர் முருகன் துணை !!!

    ஓம் ஸ்ரீ குருப்யோ நமஹ்

    நன்றி
    உமா

    1. Dear uma,

      Thx so mucchhhh for ur kind wishes for my son and all his friends.
      Because wishes and blessings ALWAYS work at the needed hour.
      This is the law of the divine world.

      sairam
      shashi

  2. வணக்கம் சுந்தர்

    மிகவும் நல்ல விசியம் ….இது எல்லோருக்கும் சென்று சேர தாங்கள் வங்கி கணக்கும் மின்னஞ்சல் முகவரியும் கொடுத்தல் மிக எளிதாக இருக்கும். நம்மை போல கணியில் வேலை செய்பவர்கள் தபால் நிலையம் செல்வது இல்லை.

    இப்படிக்கு
    செந்தில் குமார்

  3. ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். உங்கள் தளத்தை மிகவும் விரும்பி வாசிக்கும் வாசகி நான். வேல் மாறல் பதிவுகள் எல்லாம் மிகவும் அற்புதமாக இருக்கிறது. இன்று பம்பாய் வாசகியின் மகனுக்கு வேல் மாறல் படித்து கிடைத்த வேலை பற்றி வாசித்து மிகவும் மகிழ்ச்சி. அந்த தாயின் நிலையில் தான் நானும் வேல் மாறலை ஒரு மண்டலம் என்று நினைத்து படித்து வருகிறேன். மகனும் டிகிரி முடித்து நல்ல வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். இப்போ நண்பர் ஒருவருடன் சேர்ந்து பிசினஸ் செய்கிறார் அதில் முன்னேற்றம் ஒன்றுமில்லை. நான் மட்டும் தான் பிரார்த்தித்து கொண்டிருக்கிறேன். மகனுக்கு இதிலெல்லாம் அவ்வளவு நம்பிக்கை இல்லை. முருகனின் கருணையை அவருக்கு கிடைக்கும் வேலையில் அவரும் உணர வேண்டும் என்று அல்லும் பகலும் வேண்டுகிறேன், உங்கள் தள ஆக்கங்கள் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்.
    அன்புடன் வாசகி.

    1. உங்கள் மகனுக்கு நல்ல உத்தியோகம் விரைவில் கிடைக்க வாழ்த்துக்கள். நிச்சயம் நடக்கும். நடந்த பிறகு தெரியப்படுத்துங்கள்.

      மகனுக்கு நம்பிக்கையில்லையே என்று கவலைப்படவேண்டாம். இங்கு பல பிள்ளைகளை அவர்கள் பெற்றோர் செய்யும் தவம் தான் காப்பாற்றி வருகிறது. அதே போல பல ஆண்களை அவர்கள் மனைவியர் செய்யும் தவம் தான் காப்பாற்றி வருகிறது. உங்களை பொறுத்தவரை உங்கள் தவமும் பக்தியும் உங்கள் பிள்ளையை நிச்சயம் காப்பாற்றும். கவலைவேண்டாம்.

      முருகன் அருள் என்றும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உண்டு. ஆகையால் தான் ‘வேல்மாறல்’ பற்றிய விபரமே உங்களுக்கு தெரிந்திருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

    2. Dear Mrs. Sri Ranga,

      Definitely ur son will get a good divine job. Along with reading “Vel Maral”
      I was also doing following worships for getting job for my son.

      1) every day to light 9 earthen lamps to “Pillayar” with
      coconut oil.

      2) on Panchami day pray to “Varahi Annai”.

      3) offer Dakshinai (can b 10/- also) alongwith coconut, manjal, kumum, vettrilai/pakku, pazham to one old Couple.

      4) offer ur son’s vastram to the sweeper.

      5) Praying to Lord ayyappa.

      all the above I was doing it, before i started reading vel maral. But once I started reading, suddenly he got the job. May be all the above worships together with “Vel Maral” parayanam worked very fast.

      shashi

  4. வேல் மாறல் பற்றிய பதிவு அருமையாக உள்ளது.
    பம்பாய் வாசகி மாதிரி பயன் பெற்றவர்கள் எராளமாக நீங்கள் ஒரு தனி புத்தகம் போடும் அளவிற்கு அடுத்தடுத்து சாட்சி சொல்லபோகிறார்கள்
    காக்கும் கடவுள் முருகன் எப்போதும் உங்களுடன் துணை இருப்பார்.
    நன்றி

  5. sundar sairam,

    I have been visiting ur site for more than 2 yrs. also now and then giving my comments.

    I am from Mumbai and my son’s name is Sidhaarth. He is now 28. He was working in Mum and left for US 21/2 yrs ago for further studies. He did his M.Tech in Biotecnology engg from Mum. He went to US for doing MS in Health Care Mgmt. He finished by this May and frantically looking out for a job there, along with his friends. I was praying for my son and his friends too.

    Suddenly all his friends got jobs one by one xcept my son. He was also feeling very sad. But at the same time he was helping his friends to shift to another city, by taking them to the airport and dropping them. I told him that no action whether good or bad, results will be given by GOD.

    Then suddenly i saw the article by u, in ur site re: Velmaral. I was wondering that how to get the book. next day I got “sakthi Vikatan with Vel maral book”. I stood speechless. I started reading “Velmaral” and within few days he got a very good divine Job. Again I am mentioning “Divine Job” because he got into ST Marys Health Care. (THis is a hospital and he is working with their corporate office). Right from the day one, as he finished his studies, i was praying that he should get “Divine Job”.

    Now I am praying that even he should be granted Visa there and i am very much sure that he will definitely get visa to stay there. I am still continuing to read it. Once he gets visa from US, will update u accordingly.

    need ur blessings/ wishes for him.

    My blessing to u and all in ur fly. This year is going to be a very blissful and cheerful year for u. Praying GOD to get a good news for u.

    sairam

    shashi kannan

    1. ஆசிரியர் சுந்தர் அவர்களும், வாசகி சசி அவர்களும் எழுதிய பதிலுக்கு மிக்க நன்றி.உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் சொல்லும் வாக்கு பலிக்க இறைவனை வேண்டுகிறேன். சகோதரி சசி சொன்னது போல எல்லாவற்றையும் செய்கிறேன். வியாழக்கிழமை ஷீரடி பாபாவுக்கும் விரதம் இருக்கிறேன். உங்களுடைய ஆசியும் வேண்டுதலும் நிறைவேறி மிக விரைவில் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும். நன்றி. mrs sriranga

Leave a Reply to mrs.sri ranga Cancel reply

Your email address will not be published. Required fields are marked *