Home > மாமனிதர்கள் (Page 3)

முதல்வர் பதவி ஏற்க காமராஜர் விதித்த நிபந்தனை – காமராஜர் B’DAY SPL 2

பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாள் சிறப்பு பதிவு 2 இது. பதவியால் பெருமை பெற்றவர்கள் மத்தியில் பதவிக்கே பெருமை தேடித் தந்தவர் காமராஜர். அவரை பற்றி படிக்க படிக்க பிரமிப்பு, ஆச்சரியம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி என பலவித உணர்சிகள் நம்மை ஆட்கொள்கின்றன. படிப்பறிவில்லாத ஒருவரால் இப்படியெல்லாம் கூட இந்த தேசத்தை பரிபாலனம் செய்ய முடியுமா என்று வியப்பு ஏற்படுகிறது. நிர்வாகத்தை தெரிந்துகொள்ளவேண்டும் என்றால் முதலில் காமராஜரை ஒருவர் படிக்கவேண்டும். அரசியல் நாகரீகத்தை தெரிந்துகொள்ளவேண்டும்

Read More

ஞானசூரியனும் தியாக சூரியனும் சந்தித்தபோது….! காமராஜர் B’DAY SPL 1

நமக்கு நீண்டகாலமாகவே இது பற்றி தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம் இருந்து வந்தது. பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் மகா பெரியவாவை எப்பொழுதாவது சந்தித்திருக்கிறாரா? அவரைப் பற்றி இவரது அபிப்ராயம் என்ன? என்பது தான் அது. குருக்கிருபையால் சமீபத்தில் அதற்கான பதில் கிடைத்தது. அழுத்தந்திருத்தமாகவே. கல்வெட்டில் பொறித்ததை போல...!! இன்று ஜூலை 15 பெருந்தலைவர்  காமராஜர் அவர்களின் பிறந்த நாள். அதையொட்டி இந்த சிறப்பு பதிவு அளிக்கப்படுகிறது. "எப்போவோ வந்திருக்கணும். இப்போ தான் சந்தர்ப்பம் கிடைச்சது" சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு

Read More

‘யார் எந்த உயரத்தில் இருந்தாலும் மனிதர்களை மதிக்கணும்!’

பிரபல இசையமைப்பாளர், 'மெல்லிசை மன்னர்' திரு.எம்.எஸ்.விஸ்வநாதன் இன்று இறைவனடி சேர்ந்துவிட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்த சிறப்பு பதிவை தருகிறோம். தன்னை ஆளாக்கிய தன் குரு மீது இவர் வைத்திருந்த பக்தியும் பாசமும் சிலிர்க்கவைக்கும் ஒன்று. இறுதியில் தரப்பட்டுள்ள நெகிழ வைக்கும் குறிப்புக்களில் உள்ள செய்தியை படியுங்கள் புரியும். ''அலுவலகத்தில் பியூனாக இருந்தாலும் அவரை நீங்கள், 'ஆபீஸ் பையன் அவர்களே’னு மரியாதை கொடுத்துதான் அழைப்பீர்கள் என்று என் நண்பர் சொன்னார். அப்படியா?'' எம்.எஸ்.வி.

Read More

ஊதியத்தை குறைத்து அவமதித்த ஆங்கிலேயே அரசு – ஜகதீஷ் சந்திரபோஸ் செய்தது என்ன?

'தாவரங்களுக்கும் உயிர் உண்டு' என்பதை கண்டுபிடித்தவர் இந்திய விஞ்ஞானி ஜகதீஷ் சந்திரபோஸ். 1884 ஆம் இங்கிலாந்தில் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்து இந்தியா திரும்பிய நேரம், அவரது திறமையை நன்கு அறிந்திருந்த ஒரு அதிகாரி, அவரைப் பற்றியும் ஜெகதீஷ் சந்திரபோஸின் திறமையைப் பற்றியும் ஒரு கடிதம் எழுதி, வங்கதேசத்து கல்வி இலாகாவில் ஜகதீஷ் சந்திரபோஸுக்கு ஒரு வேலை கொடுக்கும்படி அப்போது இந்தியாவின் வைஸ்ராயாக இருந்த ரிப்பன் பிரபுவுக்கு சிபாரிசு

Read More

‘உங்களை வெறுப்பவருடன் நீங்கள் ஏன் தங்கவேண்டும்?’ – விவேகானந்தர் கூறிய பதில்!

இன்று சுவாமி விவேகானந்தர் நினைவு நாள். இதே நாள் 1902 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம் தேதி நம்மை விட்டு அந்த ஞானச்சூரியன் மறைந்தது. சுவாமிஜி இந்த உலகில் வாழ்ந்தது 39 ஆண்டுகள் தான். ஆனால் அந்த குறுகிய காலத்திலேயே வாழ்வாங்கு வாழ்ந்து தனக்குப் பின்னால் இன்னும் பல நூற்றாண்டுகள் பல தலைமுறையினருக்கு வேண்டிய சக்தியையும், உத்வேகத்தையும், தன்னம்பிக்கைகளையும் விட்டுச் சென்றிருக்கிறார். சுவாமி விவேகானந்தருக்கும் நமக்கு உள்ள பந்தத்தை நீங்கள்

Read More

மொதல்ல அவரை எழுப்பு… எழுப்புடா பழனியாண்டி!

இன்று (ஜூன் 28) சாண்டோ சின்னப்பா தேவரின் பிறந்த நாள். மருதமலை முருகன் என்றால் தேவர் பெயர் நினைவுக்கு வராதவர்கள் இருக்க முடியாது. அதே போல தேவர் என்றாலும் மருதமலை ஆண்டவன் தான் நினைவுக்கு வருவார். எத்தனை பெரிய பாக்கியம் இது...! ஒரு மனிதன் வழி தவறி நடப்பதற்குரிய அத்தனை காரணிகளும் சர்வ சாதாரணமாக புழங்குமிடம் திரையுலகம். ஆனால், அதிலிருந்துகொண்டும் ஒருவர் கொள்கைக்குன்றாய் பக்திமானாய் வாழமுடியும் என்பதை நிரூபித்தவர் தேவர்.

Read More

“நடமாடும் தெய்வத்துடன் சில நிமிடங்கள்!” – மஹா பெரியவரை சந்தித்த கண்ணதாசன்!

இன்று ஜூன் 24 கவியரசர் கண்ணதாசன் பிறந்தநாள். தமிழ்த் திரையுலகின் மறக்க முடியாத பாடல்களை படைத்த கவிஞன் கண்ணதாசன்.திரைப்படக் கவிஞராக புகழ்பெற்ற கண்ணதாசன் பல கருத்துள்ள பாடல்களை இயற்றியிருக்கிறார். கம்ப ராமாயணத்திலும் பாரதியாரின் பாடல்களிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். பாரதியாரை மானசீகக் குருவாகக் கொண்டவர். பகவத் கீதைக்கு உரை எழுதியுள்ளதோடு அபிராமி பட்டரின் அபிராமி அந்தாதிக்கு விளக்கவுரையும் எழுதியுள்ளார். நாத்திகம் பேசிக்கொண்டிருந்த கண்ணதாசனை ஆத்திகத்தின் பக்கம் திருப்பிய பெருமை காஞ்சி மஹா பெரியவருக்கும்

Read More

நீண்ட நாள் வாழ்வதற்குரிய வழி என்ன தெரியுமா?

மூச்சு விட்டுக்கொண்டு பூமிக்கு பாரமாய் இருப்பதெல்லாம் வாழ்வதாகாது. எனவே பதிவின் தலைப்பை பார்த்து அனர்த்தம் பண்ணிக்கொள்ளவேண்டாம். 'வாழ்தல்' என்பதற்கு வள்ளுவர் தரும் இலக்கணமே வேறு. 'ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு' என்கிறார் வாழ்தல் குறித்து தெய்வப்புலவர். வள்ளுவர் கூற்றிற்கு ஏற்ப, காலத்தால் அழியாத ஒரு காவியத்தை மொழிபெயர்த்து, அதன் மூலம் புகழ் பெற்று, மறைந்து நூறாண்டுகள் கழிந்தும் இன்று எங்கோ உலகத்தின் மூலையில் ஒரு இணையத்தளத்தில் ஒரு பதிவாக

Read More

கீழே விழும்போதெல்லாம் நினைத்துப் பார்க்க வேண்டிய ஒரு வீரனின் கதை!

ஒரு மிகக் சிறந்த போராளி மற்றும் வெற்றிவீரனின் உண்மைக் கதை இது. விடாமுயற்சியும், மனவுறுதியும், அற்பணிப்பு உணர்வும் இருந்தால் யார் வேண்டுமானலும் என்ன வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு தலை சிறந்த எடுத்துக்காட்டு இவர் வாழ்க்கை வரலாறு. விதியை வென்று சாதனை படைத்த வீரன்! கரோலி டகாக்ஸ். நீங்கள் இதுவரை இப்படி ஒரு பெயரை கேள்விப்பட்டிருப்பீர்களா என்பது சந்தேகமே. ஆனால், ஹங்கேரி நாட்டில் இவர் ஒரு தேசிய ஹீரோ. அந்நாட்டில் அனைவருக்கும் இவரைப் பற்றியும்

Read More

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிய பெருந்தலைவர் – நெகிழ வைக்கும் உண்மை சம்பவம்!

பெருந்தலைவர் காமராஜரைப் பற்றி நாளெல்லாம் பேசிக்கொண்டே இருக்கலாம். அவரை போன்ற ஒரு தன்னலம் கருதாத தலைவரை இந்திய அரசியல் கண்டதில்லை. இனியும் காணப்போவதில்லை. பசிப்பிணி போக்கிய மருத்துவர் அவர். காமராஜர் அப்போது விருதுநகரில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிக்கு அருகே தான் காமராஜரின் வீடு. எனவே மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவது காமராஜரின் வழக்கம். வீட்டில் அம்மாவோ பாட்டியோ அவருக்கு உணவு பரிமாறுவார்கள். காமராஜரின் பாட்டிக்கு காமராஜர் என்றால் பாசம்

Read More

சொத்துக்கள் அனைத்தையும் ஏழுமலையானுக்கு எழுதி வைத்த நடிகை – மகளிர் தின ஸ்பெஷல்!

இன்று மார்ச் 8. சர்வதேச மகளிர் தினம். மகளிர் தினத்திற்கு இதைவிட ஒரு பொருத்தமான பதிவை நாம் அளிக்க முடியாது. படியுங்கள்.... உங்களுக்கே புரியும்!! 1964 ஆம் ஆண்டு. பிரபல இயக்குனர் ஸ்ரீதர் தனது புதிய படம் ஒன்றுக்காக ஹீரோயினை தேடி மும்பை போய் எதுவும் வொர்க் அவுட் ஆகாமல் தோல்வியுடன் விமானத்தில் சென்னை திரும்பிக்கொண்டிருந்தார். அந்த விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக இருந்த அந்த பெண்ணையும் அவரது பாடி லாங்குவேஜையும் அவருக்கு மிகவும்

Read More

களிமண்ணை பிசைந்த கடவுளின் தூதர்!

புராண காலம் முதல் இந்த நூற்றாண்டு வரை "பிறவா நிலையே எனக்கு வேண்டும் இறைவா!" என்று மிகப் பெரிய அருளாளர்கள் கூட  வேண்டி விரும்பிக் கேட்கும் ஒரு சூழ்நிலையில் சுவாமி விவேகானந்தர் இறைவனிடம் கேட்டது என்ன தெரியுமா? "கடைத்தேறுவதற்கு கடைசி மனிதன் இந்த உலகில் இருக்கும் வரை நான் மீண்டும் மீண்டும் பிறப்பெடுக்க ஆசைப்படுகிறேன்!" என்பது தான். எத்தனை பெரிய வார்த்தைகள்... எப்படிப்பட்ட ஒரு சிந்தனை... எத்தனை பெரிய லட்சியம். "சுவாமி விவேகானந்தர்

Read More

சுடுசோற்றையும் பழைய சோற்றையும் வைத்து என்.எஸ்.கிருஷ்ணன் விளக்கிய பேருண்மை!

இரட்டை அர்த்த ஆபாச வசனங்கள், பெற்ற தந்தையையே மகன் திட்டுவது & ஒருமையில் அழைப்பது, தெய்வமாக பாவிக்க வேண்டிய ஆசிரியர்களை கிண்டல் செய்வது, அவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டி சக மாணவர்கள் மத்தியில் அழைப்பது, பிறரின் அங்கஹீனத்தை கேலி செய்வது, திருநங்கைகளை நகைச்சுவை பொருளாக்கி அனைவர் மனத்திலும் வக்கிரத்தை விதைப்பது.... இது தான் இன்றைக்கு திரைப்படங்களில் நகைச்சுவை. நகைச்சுவை என்றால் அது இப்படித் தான் போல என்று கருதும் நிலைக்கு

Read More

சைவ சமயத்தில் தீவிர பற்று வைத்திருந்த வ.உ.சி. அனைவரிடமும் வற்புறுத்தியது என்ன தெரியுமா?

நவம்பர் 18. 'கப்பலோட்டிய தமிழன்', 'செக்கிழுத்த செம்மல்' வ.உ.சி. மறைந்த நாள் இன்று! அவரது வாழ்க்கையில் நடைபெற்ற சில நெஞ்சை உருக்கும் சம்பவங்களின் தொகுப்பை பார்ப்போம். திருநெல்வேலி சமஸ்தானத்தில் வ.உ.சியின் தந்தை வக்கீலாக பணியாற்றிக் கொண்டு இருந்தார். அதே சமஸ்தானத்தில் தான் பாரதியாரின் தந்தையும் பணியாற்றி வந்தார். இதனால் இருவரும் நட்புடன் பழகிவந்தனர். வ.உ.சி.யின் வீட்டுக்கு பாரதியாரின் தந்தை அடிக்கடி வருவது வழக்கம். அப்போது வ.உ.சி. மரியாதையுடனும், அன்புடனும் அவருடன் உரையாடுவார். ஒருசமயம் ''என்

Read More